ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை

3 posters

Go down

கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Empty கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை

Post by ரேவதி Mon Oct 21, 2013 6:04 pm


  • கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Gudiya

சினிமா திரைப்படங்களில் கூட 
சினிமா திரைப்படங்களில் கூட இப்படி ஒரு திருப்பத்தை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். அதுபோன்றதொரு நிலைமை இந்தியாவில் குடியா என்ற இளம் பெண்ணுக்கு நேரிட்டது. பிறகு அதுவே சினிமாவாகவும் எடுக்கப்பட்டது.

கார்கில் போரில் கைதான இந்திய ராணுவத்தினர் விடுதலை செய்யப்பட்ட பிறகு அதாவது 2005ஆம் ஆண்டு குடியா பற்றிய செய்திகள் பரவலாக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தன.

இந்திய எல்லையில் எத்தனையோ போர்களில் வீரர்கள் இறக்கிறார்கள். எத்தனையோ வீரர்கள் கைதிகளாக பாகிஸ்தான் ராணுவத்தால் பிடிக்கப்பட்டு சிறைகளில் வாடுகின்றனர். அதுபோன்றவை வெறும் செய்திகளாகவே நம்மை அன்றாடம் கடந்து செல்கின்றன. ஆனால், கார்கில் போரால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கதைதான் இங்கே.

கடந்த 1999ஆம் ஆண்டு சிறுமி குடியாவுக்கு ராணுவத்தில் பணியாற்றிய ஆரிப்புடன் திருமணம் நடந்தது. ஆரிப்புடன் 10 நாட்களே வாழ்ந்த நிலையில், ராணுவத்தில் இருந்து அவசர அழைப்பு வந்து ஆரிஃப் பணிக்குத் திரும்பினார்.

பாகிஸ்தான் ராணுவத்துடனான கார்கில் போரில் ஆரிப் காணாமல் போகிறார். அவர் இறந்திருக்கக் கூடும் என்று கருதப்பட்டது. அவரது குடும்பத்தாருக்கும் ஆரிப் காணாமல் போனது குறித்து செய்தி வருகிறது. அழுது புலம்பியது குடும்பம்.

சுமார் 4 ஆண்டுகள் விதவையாக ஆரிப்பின் வீட்டிலேயே இருந்த குடியா, அவரது மாமியார் காலமானதும், ஆரிப்பின் சகோதரர் மற்றும் சகோதரரின் மனைவியால் சித்ரவதைக்குள்ளாகி பிறந்த வீட்டுக்கே திரும்பினார். குடியாவின் தாய் இறந்த நிலையில், அவரது தந்தை இரண்டாவது திருமணம் செய்து கொண்டிருந்தார். பிறந்த வீட்டில் சித்தியின் கொடுமைக்கு ஆளான குடியாவை, அவரது தூரத்து உறவினர் தஃபிக்குக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்தனர். முதல் வாழ்க்கையை ஒரு கனவாக மறந்து தனது இரண்டாவது வாழ்க்கையை இனிதே துவக்கினார் குடியா. தஃபிக் வீட்டில் குடியாவை நன்கு கவனித்துக் கொண்டனர்.

கணவருடன் இல்லறம் நடத்திய குடியா கர்ப்பிணி ஆனார். அந்த சந்தோஷத்தில் குடும்பத்தார் அனைவரும் திளைத்துக் கொண்டிருக்கும் போதுதான் அவர்களுக்கு ஒரு பேரிடியாக செய்தி வந்து சேர்ந்தது.

அதாவது, போரில் இறந்ததாகக் கருதப்பட்ட ஆரிப், பாகிஸ்தான் சிறையில் சிறைக் கைதியாக அடைக்கப்பட்டு தற்போது விடுதலையாகி சொந்த நாட்டுக்குத் திரும்பினார் என்று. இதனால், ஆரிப்பின் கிராமமே விழாக் கோலம் பூண்டது.

குடியாவின் குடும்பத்தாருக்கு பிரச்னை ஏற்பட்டது. வீட்டுக்கு வந்ததும் ஆரிப் தனது மனைவியைப் பற்றி கேட்டார். அவருக்கு திருமணமானதும், தற்போது கர்ப்பிணியாக இருப்பதையும் அறிந்த ஆரிப், தனது மனைவி தன்னுடன்தான் வாழ வேண்டும் என்று வலியுறுத்தினார். பிறக்கும் குழந்தையை இரண்டாவது கணவரிடம் கொடுத்துவிட்டு தன்னுடன் குடியா வந்து வாழ வேண்டும் என்று கூறினார்.

ஆனால், குடியாவோ தனது குழந்தையை இழக்க விரும்பவில்லை. எனினும், அவளது பேச்சுக்கு அங்கே எந்த மதிப்பும் இல்லை. குடியா, முறைப்படி தனது முதல் கணவருடன் தான் வாழ வேண்டும் எனக் கூறி சில உறவினர்கள் மற்றும் ஆரிப்பின் ஊர்க்காரர்களால் வலுக்கட்டாயமாக அனுப்பி வைக்கப்பட்டார். சில மாதங்களில் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை தஃபிக்கிடம் கொடுக்கப்பட்டது. குழந்தையை பிரிந்த ஏக்கத்தில் சில காலத்திலேயே உடல்நிலை பாதிக்கப்பட்டார் குடியா. பிறகு சில கருச் சிதைவுகளால் உடல்நிலை பாதிக்கப்பட்டு உடல் உறுப்புகள் செயலிழந்து இறுதியில் மரணத்தை தழுவினார்.

ஒரு பெண்ணாகப் பிறந்து பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி, சமூகம், குடும்ப உறவுகளால் நசுக்கப்பட்டு மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடியாவைப் பற்றி 'கஹானி குடியா கி' (குடியாவின் கதை) என்ற ஹிந்தி திரைப்படமும் வெளி வந்தது.

இதுபோன்று எத்தனையோ குடியாக்கள் நம் நாட்டில் வெளிச்சத்துக்கு வராமலேயே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்கு வழி?

தினமணி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Empty Re: கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை

Post by அசுரன் Mon Oct 21, 2013 6:07 pm

கண்கள் குளமாகிவிட்டது சோகம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Empty Re: கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை

Post by ரேவதி Mon Oct 21, 2013 6:10 pm

அசுரன் wrote:கண்கள் குளமாகிவிட்டது சோகம்
 
உண்மைதான் அண்ணா சோகம்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Empty Re: கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை

Post by SajeevJino Mon Oct 21, 2013 7:24 pm

இதில் யாரை குறை சொல்ல முடியும் ..?

விதியின் கோரதாண்டவம்


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Empty Re: கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» முதலாம் உலகப் போரால் விளைந்த நன்மைகள்
» ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணின் திருமணத்திற்கு விலையுயர்ந்த பரிசளித்த அஜித் பட வில்லன்
» இறைந்து கிடக்கின்ற என் கரிய நீர்(கருப்பு பெண்ணின் கண்ணீர்)
» ஆட்டோவில் கடத்தி கழுத்து அறுக்கப்பட்டு உயிர் பிழைத்த பெண்ணின் கண்ணீர் கதை
» போரால் பேரழிவு நேராதபடி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum