Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Guna.D |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Guna.D |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அம்மா தரும் பணத்தை நான் வாங்கினால் என்ன தப்பு? மக்கள் பணத்துக்கு உரிமை கொண்டாடும் கவுன்சிலரின் ஆட்கள்
4 posters
Page 1 of 1
அம்மா தரும் பணத்தை நான் வாங்கினால் என்ன தப்பு? மக்கள் பணத்துக்கு உரிமை கொண்டாடும் கவுன்சிலரின் ஆட்கள்
சமூக நலத் துறை மூலம், பல்வேறு திட்டங்களில் அளிக்கப்படும் நேரடி உதவித் தொகை பணத்திற்கு, திருவொற்றியூர் மண்டலத்தில், ஒரு சில அரசியல்வாதிகள் உரிமை கொண்டாடி வருகின்றனர். அம்மா கொடுக்கும் பணத்தை நான் வாங்கினால் என்ன தப்பு?' என்ற பாணியில் பயனாளிகளை மிரட்டி வசூல் செய்து வருவதாக புகார்கள் எழுந்து உள்ளன.
திருவொற்றியூர் மண்டலத்தில், வார்டு 1 மற்றும் 2ல் நடத்தப்பட்ட அம்மா திட்ட' சிறப்பு முகாம் மூலம், முதியோர், கணவனால் கைவிடப்பட்டோர், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் என, 1,137 பேர் உதவித்தொகை பெற அனுமதி பெற்று, பயன்அடைந்தனர்.
ஒன்றாம் வார்டை சேர்ந்தவர்களில், பெரும்பாலோர் எழுதப்படிக்க தெரியாதவர்கள் என்பதால், உதவித் தொகைக்கு விண்ணப்பிப்பது முதல், தொகையை பெற்றுத் தருவது வரை, வார்டு கவுன்சிலரின் ஆதரவாளர்கள் உதவி'யாக செய்து கொடுத்து உள்ளனர்.
தற்போது, ஒன்றாவது வார்டு கவுன்சிலர் எழிலரசியின் ஆதரவாளர்கள் என, கூறப்படும், சித்ரா (அந்த பகுதி மலிவு விலை உணவக மேற்பார்வையாளர்) மற்றும் எண்ணுார் பகுதி அ.தி.மு.க., 14வது வட்ட கழகச் செயலர் நாகபூஷணம், அவரது மனைவி குஜராத்தி ஆகியோர், தாங்கள் செய்த உதவிக்கு, 3,000 ரூபாய் கைமாறு' வேண்டும் என, கேட்டு பயனாளிகளை மிரட்டி வருவதாக புகார் எழுந்து உள்ளது.
அடி, உதை:
மொத்தமாக 3,000 ரூபாய் தர இயலாவிட்டால், மாதம் 1,000 ரூபாய் வீதம் தவணை முறையில் வசூல் நடப்பதாக பயனாளிகள் தெரிவித்தனர். முதலாவது வார்டிற்கு உட்பட்ட, சத்தியவாணி முத்து நகர், முதல் தெருவில் வசிக்கும் மகேஸ்வரி என்பவரிடம் இரண்டாவது தவணைக்கான பணம் கேட்டு உள்ளனர்.
மகேஸ்வரி பணம் தர மறுத்ததால், வட்டச் செயலர் நாகபூஷணம் மற்றும் அவரது மனைவி குஜராத்தி ஆகியோர், மகேஸ்வரியை அடித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, மகேஸ்வரி, எண்ணுார் காவல்நிலையத்தில், வட்டச் செயலர் நாகபூஷணம் மற்றும் அவரது மனைவி மீது எழுத்துப் பூர்வமாக புகார் அளித்து உள்ளார். மேலும், எண்ணுார், நெட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவர், கவுன்சிலர் எழிலரசி பணம் கேட்டு மிரட்டுவதாக, எம்-5 காவல்நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக, அந்த பகுதி அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலர், முதல்வரின் தனிப்பிரிவிற்கு புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
வீடியோவில் பதிவு:
இதுகுறித்து, கவுன்சிலர் எழிலரசியின் ஆதரவாளர் சித்ரா என்பவர் சிலரிடம் பேசிய போது, அந்த பகுதிவாசிகள், அதை வீடியோவில் பதிவு செய்து, ஆதாரமாக வைத்து உள்ளனர். அதில், நான் கட்சிக்காக அதிகம் கஷ்டப்பட்டு உள்ளேன். அதற்காகத் தான் பணம் பெற்றேன். அம்மா கொடுக்கும் பணத்தை நான் வாங்கினால் என்ன தப்பு?'' என, சித்ரா பேசியதாக பதிவாகி உள்ளது. இதேபோல், அந்த பகுதி தபால்காரர் பேசியது குறித்து பதிவாகி உள்ள வீடியோவில், சித்ரா என்பவர் வீட்டில், 25 பயனாளிகளுக்கான உதவித் தொகை பணத்தை கொடுத்தேன்,'' என, ஒப்புக் கொண்டு உள்ளார்.
செல்வாக்கு விளையாடுகிறது?
மிரட்டல் பிரச்னை குறித்து, அந்த பகுதி பயனாளிகள் சிலர் கூறியதாவது:
இந்த பகுதியில், இதுவரை, ஆயிரம் பேர், உதவித் தொகை பெற தேர்வாகி உள்ளனர். அதில் சத்தியவாணி முத்து நகர் பகுதியில், 150 பேர்; நெட்டுக் குப்பம் பகுதியில், 110 பேர், உதவித் தொகை பெற பணம் கொடுத்துள்ளோம்.
சத்தியவாணி முத்து நகர் பகுதியில் சிலரிடம், முதல் மாத தவணையாக, ஆயிரம் ரூபாய் பெற்று உள்ளனர்.
பணம் கேட்டு மிரட்டும், கவுன்சிலர் எழிலரசியின் ஆதரவாளர்கள், சித்ரா மற்றும் குஜராத்தி ஆகியோருக்கு, கட்சியில் செல்வாக்கு உள்ளதால், பலர் புகார் தெரிவிக்க மறுக்கின்றனர். இதுசம்பந்தமாக, ஏற்கனவே போலீசார் வந்து விசாரணை நடத்தினர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஏழை, எளியவர்கள், முதல்வர் அறிவிக்கும் இதுபோன்ற திட்டங்களால் பயன் அடைந்து வருகின்றனர். ஆனால், அதை நடைமுறைப்படுத்த வேண்டிய சிலர், கட்சியின் பெயரைச் சொல்லி, பயனாளிகளுக்கு கிடைக்க வேண்டிய சலுகையை, பறித்து விடுகின்றனர்.
இவ்வாறு, அந்த பகுதிவாசிகள் கூறினர்.
தினமலர்
திருவொற்றியூர் மண்டலத்தில், வார்டு 1 மற்றும் 2ல் நடத்தப்பட்ட அம்மா திட்ட' சிறப்பு முகாம் மூலம், முதியோர், கணவனால் கைவிடப்பட்டோர், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் என, 1,137 பேர் உதவித்தொகை பெற அனுமதி பெற்று, பயன்அடைந்தனர்.
ஒன்றாம் வார்டை சேர்ந்தவர்களில், பெரும்பாலோர் எழுதப்படிக்க தெரியாதவர்கள் என்பதால், உதவித் தொகைக்கு விண்ணப்பிப்பது முதல், தொகையை பெற்றுத் தருவது வரை, வார்டு கவுன்சிலரின் ஆதரவாளர்கள் உதவி'யாக செய்து கொடுத்து உள்ளனர்.
தற்போது, ஒன்றாவது வார்டு கவுன்சிலர் எழிலரசியின் ஆதரவாளர்கள் என, கூறப்படும், சித்ரா (அந்த பகுதி மலிவு விலை உணவக மேற்பார்வையாளர்) மற்றும் எண்ணுார் பகுதி அ.தி.மு.க., 14வது வட்ட கழகச் செயலர் நாகபூஷணம், அவரது மனைவி குஜராத்தி ஆகியோர், தாங்கள் செய்த உதவிக்கு, 3,000 ரூபாய் கைமாறு' வேண்டும் என, கேட்டு பயனாளிகளை மிரட்டி வருவதாக புகார் எழுந்து உள்ளது.
அடி, உதை:
மொத்தமாக 3,000 ரூபாய் தர இயலாவிட்டால், மாதம் 1,000 ரூபாய் வீதம் தவணை முறையில் வசூல் நடப்பதாக பயனாளிகள் தெரிவித்தனர். முதலாவது வார்டிற்கு உட்பட்ட, சத்தியவாணி முத்து நகர், முதல் தெருவில் வசிக்கும் மகேஸ்வரி என்பவரிடம் இரண்டாவது தவணைக்கான பணம் கேட்டு உள்ளனர்.
மகேஸ்வரி பணம் தர மறுத்ததால், வட்டச் செயலர் நாகபூஷணம் மற்றும் அவரது மனைவி குஜராத்தி ஆகியோர், மகேஸ்வரியை அடித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, மகேஸ்வரி, எண்ணுார் காவல்நிலையத்தில், வட்டச் செயலர் நாகபூஷணம் மற்றும் அவரது மனைவி மீது எழுத்துப் பூர்வமாக புகார் அளித்து உள்ளார். மேலும், எண்ணுார், நெட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவர், கவுன்சிலர் எழிலரசி பணம் கேட்டு மிரட்டுவதாக, எம்-5 காவல்நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக, அந்த பகுதி அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலர், முதல்வரின் தனிப்பிரிவிற்கு புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
வீடியோவில் பதிவு:
இதுகுறித்து, கவுன்சிலர் எழிலரசியின் ஆதரவாளர் சித்ரா என்பவர் சிலரிடம் பேசிய போது, அந்த பகுதிவாசிகள், அதை வீடியோவில் பதிவு செய்து, ஆதாரமாக வைத்து உள்ளனர். அதில், நான் கட்சிக்காக அதிகம் கஷ்டப்பட்டு உள்ளேன். அதற்காகத் தான் பணம் பெற்றேன். அம்மா கொடுக்கும் பணத்தை நான் வாங்கினால் என்ன தப்பு?'' என, சித்ரா பேசியதாக பதிவாகி உள்ளது. இதேபோல், அந்த பகுதி தபால்காரர் பேசியது குறித்து பதிவாகி உள்ள வீடியோவில், சித்ரா என்பவர் வீட்டில், 25 பயனாளிகளுக்கான உதவித் தொகை பணத்தை கொடுத்தேன்,'' என, ஒப்புக் கொண்டு உள்ளார்.
செல்வாக்கு விளையாடுகிறது?
மிரட்டல் பிரச்னை குறித்து, அந்த பகுதி பயனாளிகள் சிலர் கூறியதாவது:
இந்த பகுதியில், இதுவரை, ஆயிரம் பேர், உதவித் தொகை பெற தேர்வாகி உள்ளனர். அதில் சத்தியவாணி முத்து நகர் பகுதியில், 150 பேர்; நெட்டுக் குப்பம் பகுதியில், 110 பேர், உதவித் தொகை பெற பணம் கொடுத்துள்ளோம்.
சத்தியவாணி முத்து நகர் பகுதியில் சிலரிடம், முதல் மாத தவணையாக, ஆயிரம் ரூபாய் பெற்று உள்ளனர்.
பணம் கேட்டு மிரட்டும், கவுன்சிலர் எழிலரசியின் ஆதரவாளர்கள், சித்ரா மற்றும் குஜராத்தி ஆகியோருக்கு, கட்சியில் செல்வாக்கு உள்ளதால், பலர் புகார் தெரிவிக்க மறுக்கின்றனர். இதுசம்பந்தமாக, ஏற்கனவே போலீசார் வந்து விசாரணை நடத்தினர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஏழை, எளியவர்கள், முதல்வர் அறிவிக்கும் இதுபோன்ற திட்டங்களால் பயன் அடைந்து வருகின்றனர். ஆனால், அதை நடைமுறைப்படுத்த வேண்டிய சிலர், கட்சியின் பெயரைச் சொல்லி, பயனாளிகளுக்கு கிடைக்க வேண்டிய சலுகையை, பறித்து விடுகின்றனர்.
இவ்வாறு, அந்த பகுதிவாசிகள் கூறினர்.
தினமலர்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அம்மா தரும் பணத்தை நான் வாங்கினால் என்ன தப்பு? மக்கள் பணத்துக்கு உரிமை கொண்டாடும் கவுன்சிலரின் ஆட்கள் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அம்மா தரும் பணத்தை நான் வாங்கினால் என்ன தப்பு? மக்கள் பணத்துக்கு உரிமை கொண்டாடும் கவுன்சிலரின் ஆட்கள்
இவங்க எல்லாம் திருந்த மாட்டாங்கப்பா ![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: அம்மா தரும் பணத்தை நான் வாங்கினால் என்ன தப்பு? மக்கள் பணத்துக்கு உரிமை கொண்டாடும் கவுன்சிலரின் ஆட்கள்
தேனெடுப்பவர் புறங்கையை நக்காமல் இருக்கமாட்டார்
என்று ஒரு பழமொழி உள்ளது...!
Re: அம்மா தரும் பணத்தை நான் வாங்கினால் என்ன தப்பு? மக்கள் பணத்துக்கு உரிமை கொண்டாடும் கவுன்சிலரின் ஆட்கள்
புறங்கையை நக்க மட்டும் மற்றவர்களுக்கு கொடுத்துவிட்டு தேனை முழுசா குடிச்சிடுறாங்களேayyasamy ram wrote:
தேனெடுப்பவர் புறங்கையை நக்காமல் இருக்கமாட்டார்
என்று ஒரு பழமொழி உள்ளது...!
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: அம்மா தரும் பணத்தை நான் வாங்கினால் என்ன தப்பு? மக்கள் பணத்துக்கு உரிமை கொண்டாடும் கவுன்சிலரின் ஆட்கள்
ம்ம்ம்…எரியற வீட்ல புடுங்குறது ஆதாயம்…
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: அம்மா தரும் பணத்தை நான் வாங்கினால் என்ன தப்பு? மக்கள் பணத்துக்கு உரிமை கொண்டாடும் கவுன்சிலரின் ஆட்கள்
ஒன்னையும் புடுங்கால்ல புடிங்கிக்கறாங்க ஹா ஹாரா.ரா3275 wrote:ம்ம்ம்…எரியற வீட்ல புடுங்குறது ஆதாயம்…
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» குடிச்சா என்ன தப்பு... அடிச்சா என்ன தப்பு? - பளீர் பொளேர் விஜயகாந்த்
» நான் செய்த தப்பு மணிகண்டனை டைவர்ஸ் செய்யாமல் பிரசன்னாவை மணந்ததுதான்... சஹானாஸ்
» மக்கள் பணத்தை முறைகேடாக பயன்படுத்திய இஸ்ரேல் பிரதமரின் மனைவி குற்றவாளி என தீர்ப்பு
» ரூ.100 நிவாரண பணத்தை திருப்பி அனுப்பிய மக்கள்...: பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு வழங்க கோரிக்கை...
» தரித்திர யோகம் என்ன பலனைத் தரும்? பரிகாரங்கள் என்ன?
» நான் செய்த தப்பு மணிகண்டனை டைவர்ஸ் செய்யாமல் பிரசன்னாவை மணந்ததுதான்... சஹானாஸ்
» மக்கள் பணத்தை முறைகேடாக பயன்படுத்திய இஸ்ரேல் பிரதமரின் மனைவி குற்றவாளி என தீர்ப்பு
» ரூ.100 நிவாரண பணத்தை திருப்பி அனுப்பிய மக்கள்...: பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு வழங்க கோரிக்கை...
» தரித்திர யோகம் என்ன பலனைத் தரும்? பரிகாரங்கள் என்ன?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|