Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
அவசர சட்டம் திடீர் வாபஸ்; தமிழக கட்சிகள் கலக்கம்
4 posters
Page 1 of 1
அவசர சட்டம் திடீர் வாபஸ்; தமிழக கட்சிகள் கலக்கம்
குற்ற வழக்கில் தண்டனை பெற்ற, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களின் பதவி பறிப்பை தடுக்க, மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்டம், வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, வழக்குகளில் சிக்கியுள்ள, தமிழக கட்சித் தலைவர்களும், பிரமுகர்களும் கலக்கம் அடைந்து உள்ளனர்.
குற்ற வழக்கில் தண்டனை பெற்ற, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களின் பதவியை பறிக்க வேண்டும் என, சுப்ரீம் கோர்ட், அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தது. குற்ற வழக்குகளில், சிறை தண்டனை பெறும் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், குறிப்பிட்ட காலத்துக்குள், மேல் முறையீடு செய்யும்பட்சத்தில், அவர்கள் பதவியில் நீடிக்கலாம் என்ற ஷரத்து, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் இருந்தது. இதன்மூலம், தண்டனை பெற்ற அரசியல்வாதிகள், அப்பீல் செய்து விட்டு, பதவியில் தொடர்ந்து வந்தனர். சமீபத்தில், அந்த ஷரத்தை அதிரடியாக ரத்து செய்து, சுப்ரீம் கோர்ட், பரபரப்பு தீர்ப்பு கூறியது.இதையடுத்து, குற்ற வழக்கில், இரண்டு ஆண்டுகள் தண்டனை பெற்றால், எம்.பி., அல்லது, எம்.எல்.ஏ., பதவியில் நீடிக்க முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது.இந்த இக்கட்டில் இருந்து, அரசியல்வாதிகளை காப்பாற்ற வேண்டும் என்று, விரும்பிய மத்திய அரசு, உச்ச நீதிமன்ற தீர்ப்பை செல்லாததாக்க, ஒரு அவசர சட்டத்தை கொண்டு வந்தது. அதை அவசர அவசரமாக, ஜனாதிபதி ஒப்புலுக்கு அனுப்பி வைத்து விட்டு, அமெரிக்கா சென்றுவிட்டார் பிரதமர் மன்மோகன் சிங். அதற்கிடையில் நடந்த திருப்பங்கள், அவசர சட்டத்தை திரும்ப பெற வேண்டிய கட்டாயத்தை, காங்கிரஸ் அரசுக்கு ஏற்படுத்திவிட்டது.காங்கிரஸ் துணை தலைவர் ராகுல், 'அவசர சட்டத்தை கிழித்து எறிய வேண்டும்' என, பகிரங்க பேட்டி அளித்து, பரபரப்பை ஏற்படுத்தினார். லாலு போன்ற ஆதரவு தலைவர்களை காப்பாற்றவே, இந்த அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்திருப்பதாக, பத்திரிகைகளும், எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டின.அதன் விளைவுதான், ராகுலின் கோபமும் எதிர்ப்பும்.
இப்பின்னணியில், தீர்ப்பு குறித்தோ அல்லது அவசர சட்டம் குறித்தோ, தி.மு.க., இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. மாறாக, சர்ச்சை ஏற்படுத்திய ராகுல் பேட்டியும், அக்கட்சி தலைமைக்கு பிடிக்கவில்லை என்பது இப்போது தெரியவந்து உள்ளது. இந்த விவகாரத்தில், காங்கிரஸ் மிகவும் அவசரப்பட்டு விட்டது என்றும், நிதானத்துடன் இந்த பிரச்னையை அணுகியிருக்கலாம் என்றும், தி.மு.க., தலைமை கருதுவதாக தெரியவந்துள்ளது. அதன் காரணமாக, 'அப்செட்'டான தி.மு.க., தலைவர், அறிவாலயம் வராமல் வீட்டிலேயே இருந்த தகவலும், அறிவாலய வட்டாரத்தில் உலா வருகிறது.ஸ்பெக்ட்ரம் முறைகேடு விவகாரத்தில், கனிமொழியும், ராஜாவும் வழக்கை சந்தித்து வருகின்றனர். தொலைபேசி முறைகேடு தொடர்பான வழக்கில், தயாநிதியும் சிக்கியுள்ளார். மூவரும் எம்.பி.,யாக இருக்கும் நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு, அவர்களது பதவிக்கு மட்டுமல்ல; எதிர்கால அரசியலையும் கேள்விக் குறியாக்கிவிடும் என்ற கவலை, தி.மு.க., வட்டாரத்தை தொற்றி உள்ளது.
ஏற்கனவே, '2ஜி' வழக்கு விவகாரங்களில் காங்கிரசின் போக்கு பிடிக்காமல் இருந்த தி.மு.க., தலைமைக்கு, அவசர சட்டமும், அது வாபஸ் பெறப்பட்ட விதமும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது என, தி.மு.க., நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
அ.தி.மு.க.,வுக்கும் சிக்கல்:
பெங்களூரில் நடந்து வரும் சொத்து குவிப்பு வழக்கு, முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கக் கூடிய முக்கியமான வழக்கு. அதனால் தான், இந்த வழக்கின் ஒவ்வொரு அசைவையும் தி.மு.க., உன்னிப்பாக கவனித்து வருகிறது. அதன் காரணமாக, அரசியல் குறுக்கீடு, அதை முறியடிக்க நீதிமன்றத்தின் தலையீடு என அடுத்தடுத்து, திருப்பங்களை சந்தித்து வரும் வழக்காக இது மாறி இருக்கிறது.இந்நிலையில், 17 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த வழக்கு, இப்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. எந்த நேரத்திலும் தீர்ப்பு கூறப்படலாம் என்ற நிலை உள்ளது.அதன் விளைவாக, அரசு வக்கீல் திடீர் நீக்கம், பின், மீண்டும் நியமனம் என்ற பரபரப்புகளுடன் விசாரணை தொடர்கிறது. அதோடு, வழக்கை விசாரிக்கும் நீதிபதிக்கு பதவி நீட்டிப்பு கிடைக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. நேற்று முன்தினம் நடந்த விசாரணையில், வரும், 30ம் தேதி நீதிமன்றததில் ஆஜராக வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு, நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.இந்நிலையில், குற்ற வழக்கில், இரண்டு ஆண்டுக்கு மேல் தண்டனை பெற்றவரை பதவி நீக்கம் செய்ய வகை செய்யும் சுப்ரீம் கோர்ட் உத்தரவும், அதை, ரத்து செய்ய கொண்டு வந்த அவசர சட்டம் வாபஸ் பெறப்பட்டதும், பெங்களூரு வழக்கின் தீர்ப்பு மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.
மேலும், தி.மு.க., இளைஞரணி தலைவர் ஸ்டாலின் (மேம்பால ஊழல் வழக்கு - குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை), பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் (முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர் சி.வி.சண்முகம் உறவினர் கொலை சதி வழக்கு.
ஸ்டாலின், ராமதாஸ், வைகோ:
முதல் குற்றப்பத்திரிகையில் பெயர் இல்லை. ஆனாலும், சி.பி.ஐ., விசாரணை தொடர்கிறது), ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ (நிலுவையில் உள்ள பொடா சட்ட வழக்கு), முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி (மருத்துவ கல்லுாரி அனுமதி வழங்கியதில் முறைகேடு) ஆகியோர் மீதும் (இவர்கள் எந்த பதவியிலும் தற்போது இல்லை), தி.மு.க., - அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் மீதும் (வருமானத்தை மீறி சொத்து குவிப்பு) வழக்குகள் நிலுவையில் உள்ளன.இந்த வழக்குகளின் தீர்ப்பு, இப்போது அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அவசர சட்டம் திடீர் வாபஸ்; தமிழக கட்சிகள் கலக்கம்
அரசியல்வாதிகளின் மீதான வழக்குகளில்
நீதிமன்றம் தீர்ப்பு வழங்க கால நிர்ணயம்
செய்வதும் அவசியம்...
நீதிமன்றம் தீர்ப்பு வழங்க கால நிர்ணயம்
செய்வதும் அவசியம்...
Re: அவசர சட்டம் திடீர் வாபஸ்; தமிழக கட்சிகள் கலக்கம்
நல்லா கலங்கட்டும் அவர்களுக்கு
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: அவசர சட்டம் திடீர் வாபஸ்; தமிழக கட்சிகள் கலக்கம்
சரியான தீர்ப்பு!ayyasamy ram wrote:அரசியல்வாதிகளின் மீதான வழக்குகளில்
நீதிமன்றம் தீர்ப்பு வழங்க கால நிர்ணயம்
செய்வதும் அவசியம்...
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அவசர சட்டம் திடீர் வாபஸ்; தமிழக கட்சிகள் கலக்கம்
மக்களே சரியான தீர்ப்பையும் தந்துவிடலாம். அது ரொம்ப சுலபம்.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|