ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

Top posting users this week
ayyasamy ram
நீதி சொல்லும் சேதி! Poll_c10நீதி சொல்லும் சேதி! Poll_m10நீதி சொல்லும் சேதி! Poll_c10 
heezulia
நீதி சொல்லும் சேதி! Poll_c10நீதி சொல்லும் சேதி! Poll_m10நீதி சொல்லும் சேதி! Poll_c10 
mohamed nizamudeen
நீதி சொல்லும் சேதி! Poll_c10நீதி சொல்லும் சேதி! Poll_m10நீதி சொல்லும் சேதி! Poll_c10 
VENKUSADAS
நீதி சொல்லும் சேதி! Poll_c10நீதி சொல்லும் சேதி! Poll_m10நீதி சொல்லும் சேதி! Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
நீதி சொல்லும் சேதி! Poll_c10நீதி சொல்லும் சேதி! Poll_m10நீதி சொல்லும் சேதி! Poll_c10 
heezulia
நீதி சொல்லும் சேதி! Poll_c10நீதி சொல்லும் சேதி! Poll_m10நீதி சொல்லும் சேதி! Poll_c10 
mohamed nizamudeen
நீதி சொல்லும் சேதி! Poll_c10நீதி சொல்லும் சேதி! Poll_m10நீதி சொல்லும் சேதி! Poll_c10 
VENKUSADAS
நீதி சொல்லும் சேதி! Poll_c10நீதி சொல்லும் சேதி! Poll_m10நீதி சொல்லும் சேதி! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீதி சொல்லும் சேதி!

3 posters

Go down

நீதி சொல்லும் சேதி! Empty நீதி சொல்லும் சேதி!

Post by சாமி Sat Oct 05, 2013 6:45 am

நீதி சொல்லும் சேதி - எங்கே போகிறோம்? - நீதிநாயகம் சந்துரு

கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு செய்வதை சட்டம் அனுமதிப்பது இல்லை. முன்னாள் ராணுவ அதிகாரி ஹரீஷ் உப்பல் என்பவர் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் 2002-ம் ஆண்டில், நீதிமன்றப் புறக்கணிப்புகளை அனுமதிக்கவே முடியாது, அது சட்ட விரோதம் என்று அறிவித்தது. மேலும் அரிதினும் அரிதான காரணங்களுக்காக ஒருநாள் புறக்கணிப்பில் ஈடுபடுவதற்காக அலட்டிக் கொள்ளத் தேவை இல்லை; அன்று வழக்கறிஞர்கள் ஆஜராகவில்லை என்றாலும் கோப்புகளின் தன்மை அறிந்து வழக்குகளை பைசல் செய்யவும் நீதிமன்றங்களுக்கு உத்தரவிட்டது. தமது தொழில் கடமைகளைக் கருதி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்புகளைத் தீவிரமாக எதிர்க்க வேண்டும் என்றும் கூறியது.

ஆனாலும், தமிழகத்தில் ஏதோ ஒரு பிரச்சினைக்காக ஓர் ஆண்டுக்கு 30 முதல் 40 நாட்கள் வரை நீதிமன்றப் புறக்கணிப்புகள் தொடர்கின்றன. தமிழை நீதிமன்ற ஆட்சி மொழியாக்க சமீபத்தில் நடந்த புறக்கணிப்புப் போராட்டத்தில், பணிக்கு சென்ற வழக்கறிஞர் ஒருவர் நீதிபதி முன்பாகவே தாக்கப்பட்டார். தொடர்ந்து நீதிமன்றமே சுயமாக (sue moto) நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை முன்னாள் வக்கீல் சங்கத் தலைவர் மீது எடுத்தது. அந்த வழக்கு தற்போது மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்சின் விசாரணையில் உள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டிக்கப்படும் வழக்கறிஞரின் சன்னத் அல்லது உரிமத்தைப் பறிக்க வழக்கறிஞர் சட்டம் பிரிவு 34-ன் கீழ் சென்னை உயர் நீதிமன்றம் உருவாக்கிய விதிகளில் வழி உண்டு.

வி.சி.மிஸ்ரா என்ற பார் கவுன்சில் தலைவர் அலகாபாத் நீதிமன்றத்தில் ஒரு நீதிபதிக்கு எதிரே ஒழுங்கீனமாக நடந்துகொண்டார். தொடர்ந்து, உச்ச நீதிமன்றமே சுயமாக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்து, அவரை தண்டித்தது. ஆனால், அவரது தண்டனைக்கு எதிராக தொடரப்பட்ட சீராய்வு மனுவில், ஒழுங்கு நடவடிக்கை அதிகாரம் பார் கவுன்சில்களுக்கு மட்டுமே உண்டு என்று தீர்ப்பு மாற்றிக் கூறப்பட்டது.

டெல்லியில் நந்தா என்பவர் வெளிநாட்டு காரை வேகமாக ஓட்டியதில் ஏற்பட்ட விபத்தில் உயிர் இழப்புகள் ஏற்பட்டன. அந்த வழக்கில் ஆர்.கே.ஆனந்த் என்ற மூத்த வழக்கறிஞர், சாட்சிகளை பணம் கொடுத்து மாற்ற முற்படுகையில் தெஹெல்கா ஊடகம் ரகசியமாக அதை ஆவணப்படுத்தி வெளியிட்டது. அதையொட்டி தொடரப்பட்ட வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றமும்.

உச்ச நீதிமன்றமும் அந்த வழக்கறிஞரின் உரிமத்தை பறித்தன. பின்னர் அவரது சீராய்வு மனுவில் அவரது தண்டனை குறைக்கப்பட்டு 14 லட்சம் ரூபாய் அபராதமும், ஒரு ஆண்டு ஏழைகளுக்கு சட்ட உதவி வழக்குகளில் மட்டும் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டது.

2009-ம் ஆண்டின் அத் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம், அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும் வழக்கறிஞர் சட்டம் 34-வது பிரிவின்படி நீதிமன்றங்களுக்குள் தவறு இழைக்கும் வழக்கறிஞர்களைத் தண்டிக்க இரு மாதங்களுக்குள் விதிகளை வகுக்க உத்தரவிட்டது. அதன்படி 2004-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் விதிகளை வகுத்தாலும் வழக்கறிஞர்களின் எதிர்ப்பால் அவை 25 நாட்களில் திரும்பப் பெறப்பட்டது. உச்சநீதிமன்ற கெடுவுக்குப் பின்னரும் விதிகள் உருவாக்கப்பட்டு, அவை அரசிதழில் வெளியிடப்படவில்லை என்பது வேதனைக்குரியது. -தி ஹிண்டு
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

நீதி சொல்லும் சேதி! Empty Re: நீதி சொல்லும் சேதி!

Post by சாமி Sat Oct 05, 2013 6:47 am

நீதி சொல்லும் சேதி - அல்ப ஆயுசில் போன அவசரச் சட்டம் - நீதிநாயகம் சந்துரு

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சட்டமியற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கும் மாநிலங்களில் சட்டப்பேரவைகளுக்கும் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அந்த சபைகள் கூடாதபோது உடனடி நடவடிக்கை எடுக்க வும், அதற்கான சூழ்நிலை களைப் பற்றி திருப்தியடைந் தால் அவசரச் சட்டம் இயற்ற குடியரசுத் தலைவருக்கும், மாநிலங்களில் ஆளுநர்களுக் கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஐக்கிய நாட்டில் குடியரசுத் தலைவருக்கு சுயமாக செயல்பட அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இங்கு மத்திய அமைச்சரவையின் அறிவுரைப்படிதான் குடியரசுத் தலைவர் செயல்பட முடியும். ஏனெனில் நமது குடியாட்சி இங்கிலாந்து நாடாளுமன்ற அமைப்பையொத்தது. West Minster Model என்று அதை சொல்வார்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுபவரே நாட்டின் பிரதமராக முடியும். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் தனது அமைச்சரவையை அமைத்துக் கொள்ளலாம். தேர்தலுக்குப் பிறகுதான் இங்கு பிரதமர் யார் என்ற கேள்விக்குப் பதில் காணமுடியும். நாடாளுமன்றத் தேர்தலில் நிற்கும் எவரையும் பிரதமராகவிருக்கும் வேட்பாளரென்று நிறுத்த முடியாது.

2 வருடத்துக்கு மேல் சிறைத் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் நிற்க முடியாது என்று மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் கூறுகிறது. தண்டனைக்கு முன்னரே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், அவர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து 90 நாட்களில் மேல்முறையீடு செய்தால் அவர் தனது பதவியை இழக்க வேண்டாம் என்று ம.பி.சட்டப்பிரிவு 8(4) ல் கூறப்பட்டுள்ளது. இப்பிரிவு செல்லாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு, அந்த உத்தரவின் சட்ட அடிப்படையை ரத்து செய்ய மசோதா கொண்டுவரப்பட்டது. அதை நிறைவேற்றுவதற்குள் கூட்டத்தொடர் முடிந்துவிட்டது. எனவே அவசரச் சட்டம் இயற்ற குடியரசுத் தலைவருக்கு அமைச்சரவை பரிந்துரைத்து, அவரும் கடந்த செப்டம்பர் 25ம் தேதி ஒப்புதல் கொடுத்துவிட்டார். அவசரச் சட்டம் இயற்றி 7 நாட்களுக்குள் திரும்பப் பெற்றது இதுவே முதல் முறை.

அமைச்சரவையில் இல்லாத ஒருவரின் Nonsense பேச்சுக்கு இவ்வளவு சக்தியா? கொடுத்த அழுத்தத்தில் சட்டமே திரும்பப் பெற்ற நிகழ்வால், ஆட்சிக் குதிரையின் கடிவாளம் அவரால் ஆட்டப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. அது ஆபத்து விளைவிக்கும் செயல்.

ராகுலின் பாட்டியான இந்திரா காந்தி அமைச்சரவையைக் கூட்டாமலேயே அன்றைய குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமதுக்கு நெருக்கடி நிலையை அமல்படுத்த ஆலோசனை கூறவும், கோப்பின் தன்மை தெரியாமல் அவர் கையெழுத்திட்டதை நீதிபதி ஷா விசாரணை கமிஷன் கடுமையாகக் கண்டித்தது. கார்ட்டூனிஸ்ட் அபு ஆப்ரகாம் இதுபற்றி கேலிச்சித்திரம் போட்டதற்கு அவரை கைது செய்யும் முற்சிகளும் நடந்தன. அப்போது அமைச்சரவை ஒப்புதல் இல்லாத ஆலோசனையில் பிறந்தது நெருக்கடி. இப்போது அமைச்சரவைக்கு வெளியே உள்ள நபரின் ஊடகப் பேட்டியில் இறந்தது ம.பி. சட்டத்திருத்தம். இரண்டு அதிகார மையங்களுக்கும் வித்தியாசம் ஒன்றுமில்லை.

அவசர சட்டத்தை 6 மாதத்துக்கு ஒருமுறை ஆளுநர் மூலம் புதுப்பித்து சட்டப்பேரவையையே சந்திக்காத பீகார் அரசை வாத்வா என்ற வழக்கில் குட்டிய உச்ச நீதிமன்றம் அவசர சட்டம் இயற்றுவதற்கான வரையறையையும் தனது தீர்ப்பில் வழங்கியது. மாநிலங்கள்தாம் அவசர சட்டங்கள் இயற்றி அதிகார துஷ்பிரயோகம் செய்வதாகவும், மத்திய அரசு இப்படிப்பட்ட தவறுகளை செய்ததில்லை என்றும் அத்தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. உச்ச நீதிமன்றம் கொடுத்த நற்சான்றிதழை தகர்த்துவிட்டது தற்போதைய மத்திய அரசின் செயல்பாடு.
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

நீதி சொல்லும் சேதி! Empty Re: நீதி சொல்லும் சேதி!

Post by ayyasamy ram Sat Oct 05, 2013 7:16 am

தகவல் அருமை...நீதி சொல்லும் சேதி! 103459460 
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82762
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நீதி சொல்லும் சேதி! Empty Re: நீதி சொல்லும் சேதி!

Post by சாமி Sun Oct 06, 2013 6:40 am

நீதி சொல்லும் சேதி - கருப்பு கோட்டுக்கு உண்டா கவசம்?

குஜராத் மாநிலத்தில் நாடியட் மாவட்ட நீதிபதி ஒருவரின் வாயில் மதுவை ஊற்றி விலங்கிட்டு காவல்துறையினர் நடுத்தெருவில் அழைத்துச் சென்றதை அறிந்த நீதித்துறை அதிர்ந்தது. உச்ச நீதிமன்றத்தில் அந்த காவலர்களை தண்டிக்க நீதிபதிகள் சங்கம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் தீர்ப்பில் நீதித்துறை நடுவர்கள் கைது செய்யப்படும்போது அங்குள்ள மாவட்ட நீதிபதிக்கோ அல்லது உயர் நீதிமன்றத்துக்கோ முன் தகவல் அளிக்கவேண்டும் என்று உத்தரவிட்டது. அத்துமீறிய காவலர்களும் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டனர்.

அதேபோல் ஊழல் குற்றங்களுக்காக உயர் நீதிமன்ற நீதிபதிகளின் மீது கிரிமினல் வழக்கு தொடர உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் அனுமதி பெறவேண்டும் என்று முன்னாள் தலைமை நீதிபதி வீராசாமி தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. சட்டத்தில் இதுபற்றிய தெளிவுரை இல்லாவிட்டாலும் இவ்விரு வழக்குகளில் நீதித்துறையின் சுதந்திரத் தன்மையைப் பாதுகாக்க உச்ச நீதிமன்றத்தால் ஏற்படுத்திக் கொண்ட சட்டக் கவசம் இவை.

இத் தீர்ப்புகளையொட்டியே காஜியாபாத் நீதிமன்ற நடுவர்கள் மீது (பின்னர் சிலர், உயர் நீதிமன்ற நீதிபதிகளாகிவிட்டனர்) ஊழியர்கள் சேமநல நிதி முறைகேட்டுக்காக வழக்கு தொடர அனுமதி அளிக்கப்பட்டது. நிர்மல் யாதவ் என்ற பஞ்சாப் உயர் நீதிமன்ற நீதிபதியின் மீதும் ஊழல் வழக்கு தொடர இந்திய தலைமை நீதிபதி அனுமதி அளித்தார்.

சமீபத்தில் பெண் காவலரின் புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட குன்னூர் குற்றவியல் நடுவரை உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது. ஏனென்றால், அவரை கைது செய்தபோது காவல் துறையினர் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றவில்லை. ஊர் மாற்றம் செய்யப்பட்ட அவருக்கு உயர் நீதிமன்ற வளாகத்திலேயே பதவி அளிக்கப்பட்டது. காவல் அதிகாரிகள் மீதான அவமதிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது. சட்டத்தின் அடிப்படையிலும் நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையிலும் இப்படி நீதிபதிகளுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்புக் கவசம் வழக்கறிஞர்களுக்கு உண்டா?

1980-களில் சில வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டபோது, ‘வழக்கறிஞர்களும் நீதிமன்ற அலுவலர்களே; அவர்களைக் கைது செய்யும்போதும் நடுவரிடம் முன்அனுமதி பெறும் வகையில் சட்டத்தை ஏற்படுத்த வேண்டும்’ என்று சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் வேண்டுகோள் விடுத்தது. 19.2.2009 உயர் நீதிமன்ற வளாக சம்பவங்களின் பின்னணியை ஆராய தனி வழக்கு எடுக்கப்பட்டு அதனை நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது. அதில் கிரிமினல் வழக்குகளில் வழக்கறிஞர்களை கைது செய்ய நாடாளுமன்றம், சட்டமன்றங்களுக்கு உள்ளதுபோல் தடைக் காப்புரிமை (Immunity) வழங்க வேண்டும் என்கிற வழக்கறிஞர்களின் வாதத்துக்கு சட்ட ஆதாரம் இல்லை என்று நிராகரித்தது டிவிஷன் பெஞ்ச். அதேசமயம், நீதிமன்றங்கள் அரசியலமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்டவை என்பதால் அவற்றின் புனிதம் கெடாமலிருக்க, காவல் துறையினர் நீதிமன்ற வளாகங்களினுள் நடவடிக்கைகள் எடுக்கும்போது நீதிமன்றத்திடம் முன்அனுமதி பெற அறிவுறுத்தியது.

இந்த முன்னுதாரணத்தைக் சுட்டிக்காட்டியே சமீபத்தில் குற்ற வழக்கில் வழக்கறிஞர் ஒருவரை நீதிமன்ற வளாகத்துக்குள் கைது செய்வதைத் தடுத்து நிறுத்தி, காவல் அதிகாரி மீது வழக்கும் பதியப்பட்டுள்ளது. ஆனால், கிரிமினல் குற்றங்களில் ஈடுபடும் வழக்கறிஞர்களை தகுந்த ஆதாரத்துடன், முறைப்படி கைது செய்து நடவடிக்கைகள் எடுக்க சட்டத்தில் தடை ஏதும் இல்லை என்பதுதான் உண்மை.
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

நீதி சொல்லும் சேதி! Empty Re: நீதி சொல்லும் சேதி!

Post by சாமி Sun Oct 06, 2013 6:48 am

திருத்தப்பட வேண்டியது சட்டமல்ல, சமூகமே

"குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே" என்று ஒரு திரைப்படப் பாடல் உண்டு ஆனால், தற்போது நாடெங்கும் இளம் குற்றவாளிகளுக்கான தண்டனையும் அதற்கேற்ப 2000ம் ஆண்டு இளம் குற்றவாளிகளுக்கான நீதி (குழந்தைகள் கவனிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தைத் திருத்தக் கோரும் குரல்கள் எழுந்துள்ளது.

டெல்லி மாணவி வல்லுறவுக்கு உட்பட்டு மரணமடைந்த செய்தி தேசத்தின் மனசாட்சியை உலுக்கியது. சம்பவத்துக்குப் பிறகு, மாபெரும் கண்டனப் பேரணிகளால் மத்திய அரசு நீதிபதி வர்மா கமிஷனை அமைத்தது. அதன் பரிந்துரைகளின்படி சட்டத் திருத்தங்களும் கொண்டு வரப்பட்டன.

குற்றத்தில் இளம்சிறார் ஒருவனும் ஈடுபட்டிருந்தான். தீர்ப்பு வருவதற்கு முன்பு, மும்பையில் பெண் நிருபரை வல்லுறவுக்கு உட்படுத்திய கும்பலிலும் ஒரு இளம் குற்றவாளி இருந்துள்ளான். எனவே வயது வேறுபாடின்றி இளம் சிறார்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கக் கோரும் கோரிக்கைகள் வலுப்பெற்றன.

டெல்லி வழக்கில் ஈடுபட்ட ஒருவன் சிறார்களுக்கான நீதி வழங்கும் குழுமத்தின் முன்பு விசாரிக்கப்பட்டு, சீர்திருத்த இல்லத்தில் 3 ஆண்டு வைத்துப் பராமரிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த பலரும் சட்டப் பின்னணி தெரியாமல் அதை மாற்றக் கோரி முழக்கமிட்டு வருகின்றனர்.

இளம் சிறார்களுக்கான சட்டம் 2000-ல் கொண்டு வரும் முன்பாக அதேபோன்ற சட்டம் ஒன்று 1986ம் ஆண்டு முதல் இருந்து வந்தது. அச்சட்டத்தில் இளம் சிறார் குற்றவாளி (Juvenile delinquent) என்பவன் 16 வயதுக்கு மேற்படாத சிறார் என்று இருந்தது. பின்னால் ஏற்பட்ட சில சர்வதேச மாநாட்டுத் தீர்மானங்களின் அடிப்படையில் 2000ல் புதிய சட்டம் இயற்றப்பட்டது. புதிய சட்டப்படி இளம் சிறார்களை தண்டிக்கும் விசேஷ கோர்ட் நடைமுறைகளை மாற்றி சிறுவர்களின் பாதுகாப்பு பற்றிய முப்பரிமாண சட்டம் உருவானது. இந்த புதிய சட்டத்தில் இளம் சிறார் குற்றவாளிகள் என்ற வரையறையையே மாற்றி "சட்டமுரண்பட்ட இளம் சிறார்கள்" (Juvenile in conflict with law) என்றும், 18 வயதுக்கு மேற்படாதவர்களே இளம் சிறார்கள் என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது.

சட்டமுரண்பட்ட இளம் சிறார்களுக்கு தண்டனை வழங்கி மற்ற கைதிகளுடன் சிறையில் வைக்க சட்டம் இடம் தராது. இளம் குற்றவாளிகளுக்கு பயிற்சி அளித்து பெருஞ்சமூகத்துடன் இணைக்கும் சீர்திருத்தும் முயற்சியே தற்போதுள்ள சட்டத்தின் அடிப்படை.

நீதிபதி வர்மா கமிஷனும் இதற்கான பரிந்துரை எதையும் செய்யவில்லை. 1989ல் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் குழந்தைகள் உரிமைக்கான மாநாட்டுத் தீர்மானங்களை 1992ல் நம் நாடு ஏற்றுக் கொண்டுள்ளது. ஐ.நா.வின் 1985ம் வருடத்திய இளம் சிறார்கள் நீதி வழங்கும் விதிகளில் குறைந்தபட்ச நிர்வாக விதிகளையும், ஐ.நா.வின் சுதந்திரம் பறிக்கப்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பு பற்றிய 1990ம் ஆண்டு விதிகளையும் நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம். அவற்றின் அடிப்படையிலேயே புதிய சட்டம் அமலாக்கப்பட்டது. எனவே இளம் சிறார்கள் என்போர் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள். இந்தியா இந்த சர்வதேச சட்ட விதிகளை நிறைவேற்றும் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 51வது பிரிவிலும் கூறப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடந்த சட்டமுரண்பட்ட இளம் சிறார்களின் சமூக பின்புலத்தை ஆராய்ந்த கணிப்பொன்று அவர்களில் பெரும்பாலானோர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்வோர் என்று தெரிவித்துள்ளது.
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

நீதி சொல்லும் சேதி! Empty Re: நீதி சொல்லும் சேதி!

Post by அசுரன் Sun Oct 06, 2013 11:56 am

என்ன நீதித்துறை இப்படி இருக்கு. சோகம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நீதி சொல்லும் சேதி! Empty Re: நீதி சொல்லும் சேதி!

Post by சாமி Sun Oct 13, 2013 10:01 am

மாற்றுத் திறனாளிகளை ஏமாற்றும் சட்டம்

உச்ச நீதிமன்றம் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசுப் பணிகளில் வேலைவாய்ப்பு அளிக்க 3 சதவீத இடஒதுக்கீட்டை கட்டாயம் அமல்படுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு கடந்த வாரம் உத்தரவிட்டுள்ளது. அத்தீர்ப்பு புதிய உரிமை எதையும் உருவாக்கவில்லை.

1995-ம் ஆண்டின் ஊனமுற்றோர் சட்டம் அளித்த உரிமைகளை செயல்படுத்த அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அச்சட்டத்தின் 33-வது பிரிவில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அதன் 32-வது பிரிவின்படி எத்தகைய பதவிகளில் இடஒதுக்கீடு சாத்தியம் என்பதை குழு மூலம் ஆராய்ந்து, அரசுகளுக்கு உத்தரவிட சொல்கிறது. 3 சதவீத இடஒதுக்கீடு செய்து மத்திய, மாநில அரசுகள் ஏற்கெனவே அரசாணைகள் வெளியிட்டுள்ளன. உத்தரவுகளை நிறைவேற்ற தனி ஆணையர்களும் உண்டு. ஆனாலும் அதிருப்தி ஏன்? காரணங்கள் இருக்கின்றன.

மாற்றுத் திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு மறுக்கப்பட்ட பதவிகள் குறித்து பல வழக்குகள் வந்துள்ளன. இந்திய ஆட்சிப் பணித் தேர்விலும், உரிமையியல் நீதிபதிகளுக்கான தகுதித் தேர்விலும் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளும் பங்கு கொள்ளலாம் என்று உச்ச, உயர் நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன.

செவித்திறன் கேளாத மாணவர் ஒருவர் ஆரம்பக் கட்டத்தில் அதற்கான தனிப் பள்ளியில் படித்து, பின்னர் பொதுப் பள்ளி ஒன்றில் இடம் மறுக்கப்பட்டபோது அப் பள்ளியின் உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. மருத்துவக் கல்லூரிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டில் போலி சான்றிதழ்கள் மூலம் பிறர் ஊடுருவும் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக அரசு அமைத்த சான்றிதழ்கள் மறுபரிசீலனை உயர்மட்டக் குழுவுக்கும் உயர் நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது.

இந்த 3 சதவீத ஒதுக்கீட்டிலும் உடல் ஊனமுற்றோர், செவித்திறனற்றோர் மற்றும் பார்வையற்றோருக்கு தலா 1% இடஒதுக்கீடு மட்டுமே செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் அப்படிப்பட்ட வேலைவாய்ப்புகள் குறைந்து வருவதால் மாற்றுத் திறனாளிகளுக்கான பணி ஒதுக்கீடுகள் கானல் நீராகிவிட்டது. குறிப்பிட்ட சில பதவிகளில் செவி்த்திறன் கேளாத அல்லது பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு வாய்ப்பு அளிப்பதில்லை. பெரும்பாலும் உடல் ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகளே இந்த ஒதுக்கீட்டில் பணி நியமனம் பெறுகின்றனர். எத்தனை விழுக்காடு உடல் ஊனம் இருந்தால் அந்த ஒதுக்கீட்டில் அவர்களுக்கு பதவி கிடைக்கும் என்பதுப பற்றியும், அவர்கள் கொண்டுவரும் சான்றிதழ்களின் நம்பிக்கையின்மை பற்றியுமே பல வழக்குகள் நீதிமன்றத்துக்கு வந்துள்ளன.

இவர்களுக்கு தனியார் நிறுவனங்களில் பணியாற்றவும் வழி இல்லை. டால்கோ இன்ஜினீயரிங் கம்பெனி வழக்கில் இச்சட்டம் தனியார் நிறுவனங்களுக்குப் பொருந்தாது என்று 2010-ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இச்சட்டத்தை தனியாருக்கும் பொருந்தும்படி திருத்த மத்திய அரசு முன்வரவில்லை. மதுரை மாநகராட்சிக்குச் சொந்தமான கடைகள் (அ) சந்தைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு செயல் திட்டம் வகுக்கும்படி உயர் நீதிமன்றம் போட்ட உத்தரவு இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

வேலைவாய்ப்புகள் தவிர அச்சட்டத்தின் 38-வது பிரிவில் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவ பல்வேறு திட்டங்களை அரசுகள் உருவாக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. வேலைவாய்ப்புகள் குறைந்து வரும் நிலையில் மாற்றுத் திட்டங்களை அரசு உருவாக்கினால் மட்டுமே மாற்றுத்திறனாளிகளின் வருத்தத்தை ஓரளவேனும் தணிக்க முடியும். மனமிருந்தால் மார்க்கம் உண்டு! - திஹிண்டு12-10-2013
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

நீதி சொல்லும் சேதி! Empty Re: நீதி சொல்லும் சேதி!

Post by சாமி Sun Oct 13, 2013 10:05 am

சமூக வலைத்தளம் எதிர்கொள்ளும் ஆபத்து

தனி நபர் கருத்துப் பரிமாற்றங்கள் சமூக வலைத்தளங்களில் (ட்விட்டர், ஃபேஸ்புக்) பெருமளவில் நடக்கின்றன. சர்வாதிகாரிகளுக்கு எதிராக, ஆட்சி மாற்றம் கோரி பல நாடுகளில் சமூக வலைத்தளங்களின் பயன்பாட்டில் வெற்றியும் கண்டுள்ளன.

இத்தொழில்நுட்பம் தனி மனித கருத்துச் சுதந்திரத்துக்கு கிடைத்த வெற்றி எனக் கூறுவோரும் உண்டு. இவ்வலைத்தளங்களை நோக்குவோரின் எண்ணிக்கை பல லட்சங்களைத் தாண்டிவிட்டன. அரசியல் கட்சிகளும் தலைவர்களும் சமூக வலைத்தளத்துக்குள் நுழைந்து பிரச்சாரங்களை வலுப்படுத்த விழைந்துள்ளனர். பா.ஜ. கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியும் சமூக வலைத்தளப் பிரச்சாரத்துக்கென 3000 பேரை நியமித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களின் வீரியத்தை உணர்ந்து உபயோகப்படுத்தும் அரசியல் தலைவர்கள் தமது கருத்துக்களை சுதந்திரமாகப் பதிவு செய்யும் வேளையில், மாற்றுக் கருத்துக்களையும் விமர்சனங்களையும் தாங்கிக் கொள்வதில்லை. விமர்சனக் கருத்துக்களுக்கு எதிராக எதிர் விமர்சனங்களைப் பதிவு செய்யாமல் கருத்துப் பதிவுகள் செய்தவர்கள் மீதே காவல்துறையை ஏவிவிடுகின்றனர்.

சுதந்திரக் கருத்துக்களைப் பதிவு செய்வதால் ஆபத்து இல்லை என்று நினைத்த அப்பாவிகள் பலரும் சிறையில் தள்ளப்பட்டனர். கருத்து சுதந்திரத்தை இந்திய அரசியலமைப்புச் சட்டம் அடிப்படை உரிமையாக்கியுள்ளபோதும், முறையற்ற சட்டப் பிரிவுகளால் அவை நசுக்கப்படுகின்றன.

சிவசேனைக் கட்சி அமல்படுத்திய பந்த்தின் பாதிப்பால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த இரு மாணவிகள் கைது செய்யப்பட்டதோடு அதில் ஒருவரின் உறவினரது மருத்துவமனையும் தாக்குதலுக்கு உள்ளாகியது. மம்தா பானர்ஜியின் கேலிச் சித்திரத்தை வெளியிட்ட கொல்கத்தா பேராசிரியர் கைதானார். மத்திய நிதியமைச்சரின் மகனைப் பற்றி கேள்வி எழுப்பியவர் புதுச்சேரியில் கைது செய்யப்பட்டார்.

சமூக வலைத்தளத்தில் பதிவு செய்வதோடு பணி முடிந்துவிட்டது என்ற மகிழ்ச்சியில் வீடு திரும்பியோர் வீட்டுக் கதவுகள் காவலர்களால் தட்டப்படும் நிகழ்வுகள் ஏறிக்கொண்டே போகிறது. கைதுகளை நியாயப்படுத்த 2000ம் ஆண்டின் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 66-A சுட்டிக்காட்டப்படுகிறது. அதன்படி ஒருவர் தகவல் தொழில்நுட்பத்தின் மூலம், மின்னஞ்சல் அல்லது மின் செய்திகள் அனுப்பி யாருக்கேனும் எரிச்சல், சுகவீனம், ஆபத்து, தடுப்பு, நிந்தை, ஊறு மற்றும் மிரட்டல் விடுத்தால் அவர் கைது செய்யப்பட்டு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். தெளிவற்ற வரையறைகள் மூலம் இதர சட்டங்களில் இல்லாதவற்றையும் குற்றமாக்கி, கருத்து சுதந்திரத்துக்கு எதிரான மிகப் பெரும் சவாலாக இப்பிரிவு உள்ளது.

மும்பை மாணவிகள் இச்சட்டப்பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டபோது உச்ச நீதிமன்றமே தனது கசப்பை வெளிப்படுத்தியது. இச்சட்டப்பிரிவை தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்று அரசை அறிவுறுத்தியது. தனி மனித கருத்துச் சுதந்திரம் விரும்பும் அனைவரும் இச்சட்டப் பிரிவை ரத்து செய்ய ஒரே குரலில் கோரிக்கை விடுத்தும் மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்குப் பதிலாக, சட்டத்தை முறையாகப் பயன்படுத்தும்படி மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை விட்டதோடு தன் கடமை முடிந்துவிட்டதென நினைக்கிறது.

அதே நேரத்தில் வலைத்தளங்களை சமூக விரோத, சட்ட விரோத செயல்களுக்கும் பயன்படுத்தும் போக்கு கருத்து சுதந்திரவாதிகளை கவலை கொள்ள வைக்கிறது. சமீபத்தில் உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்பூர் நகரில் நடந்த வகுப்புக் கலவரப் பின்னணியில் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்ட விஷமப் பிரச்சாரங்களும் காரணம் என்று தெரியவருகிறது.

எனவே த.தொ.நு. சட்டம் திருத்தப்படும்போது சமூக வலைத்தளத்தில் தீய சக்திகளின் செயல்களை தண்டிப்பது உறுதியாக்கப்படுவதோடு நியாயமான கருத்து சுதந்திரத்தைப் பாதுகாக்கவும் அரசு முன்வர வேண்டும். - திஹிண்டு 07-10-13
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

நீதி சொல்லும் சேதி! Empty Re: நீதி சொல்லும் சேதி!

Post by சாமி Sun Oct 13, 2013 10:07 am

நொந்து நூடுல்ஸ் ஆன நூலகங்கள்

“சம்ஸ்கிரிய அறக்கட்டளை” என்ற அமைப்பு சென்ற வாரம் சில அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு புத்தகங்களை இலவசமாக வழங்கியது. அங்கு படிக்கும் பெரும்பான்மையான ஏழை மாணவர்களுடைய வாசிக்கும் திறனை வளர்க்கும் விதமாக Read-a-Way என்ற திட்டத்தையும் துவக்கியது. அறக்கட்டளையின் அறங்காவலர் சந்தியா திட்டத்தை மாணவர்களிடம் விளக்கினார். பள்ளி நூலகங்களுக்கு இலவசமாக தரப்பட்ட இந்த புத்தகங்களை மாணவர்கள் படிப்பதற்கும், வீட்டிற்கு எடுத்துச்செல்லவும், பள்ளிகள் அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இது ஒரு நல்ல முயற்சி.

இந்த வருடம் தமிழக அரசு 92 லட்சம் மாணவர்களுக்கு விலையில்லாப் பாடப்புத்தகங்களை வழங்கியுள்ளது. மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி அடையவேண்டும் என்ற கண்ணோட்டத்துடன் மட்டுமே படிக்கிறார்கள். பொது வாசிப்புத் திறன் குறைந்துள்ளது. அறிவுசார் முறையில் தம்மை வளர்த்துக் கொள்ளுவதற்கான வாய்ப்பும் அவர்களுக்கு கிடைப்பதில் தேக்கம் உள்ளது. பள்ளி மாணவர்களின் மொழி பேசும் திறனை வளர்க்கக்கூடிய மென் பொருட்கள் மற்றும் ஒளி, ஒலி நாடாக்கள் சந்தையில் கிடைக்கின்றன.ஆனாலும் அவை பள்ளி நூலகங்களுக்கு வழங்கப்படுவதில்லை.

பள்ளி நூலகங்கள் மட்டுமல்ல, பொது நூலகங்களின் செயல்பாடே சந்தி சிரிக்கிறது. மக்களிடம் வாங்கப்படும் சொத்து வரியில் ஒரு பகுதியாக கல்விச் சேவை வரி வசூலிக்கப்படுகிறது. நூலகச் சேவைக்கும் தொகை ஒதுக்கப்படுகிறது. நூலகங்களை நிர்வகிக்க நூலக ஆணைக்குழு (Local Library Authority) உருவாக்கப்பட்டுள்ளது. மாவட்ட நூலகங்கள், பொது நூலக இயக்குநர் தலைமையில் செயல்படுகின்றன. ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக, நூலக அறிவியல் பட்டம் பெற்ற அதிகாரி எவரையும் நூலக இயக்குநராக நியமிக்காததைப் பற்றி உயர்நீதிமன்றம் ஒரு வழக்கில் தமிழக அரசைக் கண்டித்தது. தகுதியில்லா பள்ளிக் கல்வி இணை இயக்குநர்கள் ஓய்வு பெறுமுன், ஊதிய உயர்வு மற்றும் அதிக ஓய்வூதியம் பெறும் வகையில் தள்ளப்படும் குப்பைக் கிடங்காக இயக்குநர் பதவி மாறி விட்டது.

நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்குவதற்கான திறமையுள்ள தேர்வுக் குழுக்களை அமைப்பதில்லை. இயந்திர ரீதியில் உருவாக்கப்படும் காகிதக் கூழ் வெளியீடுகள், அட்டைகளைப் புதுப்பித்து புதுவெளியீடாக பவனி வரும் பழைய புத்தகங்கள்தாம் பெரும்பாலும் வாங்கப்படுகின்றன. கடந்த மூன்று வருடத்திற்கான புதுப்புத்தகங்களை வாங்குவதற்கான சீரிய முயற்சிகள் இதுவரை எடுக்கப்படவில்லை. வாங்கப்படும் இதழ்களில் அரசு மையங்கள் பற்றிய விமர்சனங்கள் இருந்தால் அவற்றுக்கு உடனே தடா. “காலச்சுவடு” மாத இதழ் வெளியிட்ட அரசியல் விமர்சனத்திற்காக பொதுநூலகங்களில் அவற்றின் விநியோகம் நிறுத்தப்பட்டது. உயர்நீதிமன்றம் அச்செயலுக்கு கண்டனம் தெரிவித்து தடையை நீக்கியது. ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை.

பெரும் பொருட்செலவில் அமைக்கப்பட்ட அண்ணா நூலகத்தை அழிக்க முனைந்த அரசின் முயற்சி உயர்நீதிமன்ற தடையால் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டது. தடை விதித்தால் எமக்கென்ன? புத்தகங்கள் வாங்குவதை நிறுத்திவிட்டு நூலகத்தை பகல் நேர ஓய்வுக்கூடமாக மாற்ற விழையும் அரசின் செயல்பாட்டை புத்தக விரும்பிகள் முறியடிக்க வேண்டும்.

ஒரு மொழியை, ஒரு கலாச்சாரத்தை முறியடிக்க வேண்டுமென்றால் நூலகங்களை மூடுங்கள்! நூல்களைக் கொளுத்துங்கள்!! என்று சொல்வார்கள். சிங்களக் காடையர்களால் யாழ்ப்பாண நூலகம் கொளுத்தப்பட்டதற்கு உலகமெங்கும் கண்டனக்குரல் எழுப்பப்பட்டது. நாம் அந்த நிகழ்விற்கு எதிர்ப்பு தெரிவிக்க முற்படுமுன் நமது நூலகங்களை முறையாக பேண முற்பட வேண்டும். - திஹிண்டு 08-10-13
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

நீதி சொல்லும் சேதி! Empty Re: நீதி சொல்லும் சேதி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum