ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா.

3 posters

Go down

இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Empty இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா.

Post by சாமி Sat Oct 05, 2013 6:36 am

நாகர்கோவில் முல்லை பெரியாறு அணை, நெய்யாறு அணை என கேரளாவுக்கும் தமிழகத்துக்கும் பல்வேறு கருத்து முரண்பாடுகள் இருந்தாலும், இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக இருக்கிறது நவராத்திரி விழா.

குமரி மாவட்டம் தென் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்தபோது திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகரமாக பத்மநாபபுரம் இருந்தது. பத்மநாபபுரம் அரண்மனையில், ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி விழா வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படும். காலப்போக்கில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகரம் திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டது. திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவுக்கு, கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் அரண்மனையில் உள்ள தேவாரக்கட்டு சரஸ்வதி சிலை, சுசீந்திரத்தில் உள்ள முன்னுதித்த நங்கையம்மன் சிலை, வேலிமலை குமாரசுவாமி கோவில் முருகன் சிலை ஆகியவற்றை எடுத்துச் செல்வது வழக்கம். குமரி மாவட்டம், தமிழகத்தோடு இணைந்த பிறகும் இந்த வழக்கம் தொடர்கிறது.

இதற்காக, புதன்கிழமை பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து சாமி சிலைகள் ஊர்வலமாக திருவனந்தபுரம் கொண்டு செல்லப்படுகின்றன. பத்மநாபபுரம் அரண்மனையில் உள்ள உப்பரிகை மாளிகையில், திருவிதாங்கூர் மன்னர் பயன்படுத்திய உடைவாள் இருக்கிறது. நவராத்திரி விழாவின்போது இந்த உடைவாள் கைமாறும் நிகழ்ச்சியும் நடைபெறும். கேரள அரசின் பிரதிநிதிகள், பத்மநாபபுரம் அரண்மனைக்கு வந்து, தமிழக அறநிலையத்துறை அதிகாரிகளிடம் உடைவாள் எடுத்துக் கொடுப்பது வழக்கம். இந்த ஆண்டு புதன்கிழமை நடைபெறும் உடைவாள் எடுத்துக் கொடுக்கும் நிகழ்ச்சியில், கேரள முதல்வர் உம்மன் சாண்டி, கேரள கலாசாரத் துறை அமைச்சர் கே.சி.ஜோசப் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

இதையொட்டி, முன்னுதித்த நங்கையம்மன் விக்கிரகம் புறப்பாடு, சுசீந்திரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அம்மனுக்கு காலை முதலே பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து பல்லக்கு வாகனத்தில் முன்னுதித்த நங்கையம்மன் எழுந்தருளினார். அப்போது தமிழக மற்றும் கேரள போலீஸார் துப்பாக்கி ஏந்தி, சல்யூட் அடித்து, அம்மனுக்கு அணிவகுப்பு மரியாதை செய்தனர். இரு மாநில போலீஸாரின் இசைக்குழுவினரின் பாண்ட் வாத்தியம் இசைக்க, முன்னுதித்த நங்கை அம்மன் சுசீந்திரம் ரதவீதிகளில் ஊர்வலமாக வந்து, பின்னர் திருவனந்தபுரத்துக்கு புறப்பட்டார்.

செவ்வாய்க்கிழமை மாலை பத்மநாபபுரம் நீலகண்ட சுவாமி கோவிலை, அம்மன் வந்தடைந்தார்.

புதன்கிழமை காலை 7 மணிக்கு உடைவாள் கைமாறும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு முன்னுதித்த நங்கை அம்மன் மற்றும் முருகன் ஸ்வாமி சிலைகள், பல்லக்கிலும், சரஸ்வதி அம்மன் சிலை யானை மீதும், திருவனந்தபுரம் கொண்டு செல்லப்படுகிறது. வரும் 4-ம் தேதி திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலை சென்றடைகிறது.

சுசீந்திரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில், குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

திருவனந்தபுரம் நவராத்தி விழாவுக்கு போலீஸ் மரியாதையுடன் புறப்பட்ட அம்மன்.

இதுதான் பயண விவரம்!

பத்மநாபபுரத்தில் இருந்து புதன்கிழமை கிளம்பும் விக்கிரகங்கள் இரவு குழித்துறையிலும், 3-ம் தேதி இரவு நெய்யாற்றங்கரையிலும் தங்கி, 4-ம் தேதி மாலை திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலை சென்றடையும். பத்து நாள் நவராத்திரி விழாக்காலத்தின்போது, சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் - திருவனந்தபுரம் செந்திட்டை அம்மன் கோவிலிலும், தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் - பூஜைபுரை கோவிலிலும், வேலி மலை முருகனுக்கு - ஆரிய சாலை சிவன் கோவிலிலும் வைத்து பூஜைகள் நடக்கும். வரும் 18-ம் தேதி குமரி மாவட்டத்துக்கு ஸ்வாமி சிலைகள் வந்தடையும்.
-திஹிண்டு
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Empty Re: இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா.

Post by ayyasamy ram Sat Oct 05, 2013 7:32 am

பயனுள்ள தகவல் பகிர்வு...இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. 103459460 
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Empty Re: இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா.

Post by சிவா Sat Oct 05, 2013 7:53 am

இதுபோல் அனைத்திலும் ஒற்றுமையாக இருந்தால் சிறப்பாக இருக்கும். சிறந்த கட்டுரைப் பகிர்விற்கு நன்றி சாமி.


இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா. Empty Re: இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum