Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: ஆட்சியைப் பிடித்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு.
4 posters
Page 1 of 1
இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: ஆட்சியைப் பிடித்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு.
இலங்கையில் சனிக்கிழமை நடைபெற்ற வடக்கு மாகாண கவுன்சில் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு (டி.என்.ஏ.) மொத்தம் உள்ள 38 இடங்களில் 30 இடங்களில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.
தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாணத்தில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்று, வரலாறு படைத்துள்ளது.
வடக்கு மாகாணத்தில் அதிபர் ராஜபட்சவின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்டணி (யு.பி.எஃப்.ஏ.) 7 இடங்களையும், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி (எஸ்.எம்.சி.) ஒரு இடத்தையும் கைப்பற்றியுள்ளன.
கூட்டாட்சி: வடக்கு மாகாணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதல்வராக சி.வி. விக்னேஸ்வரன் (73) பதவியேற்க உள்ளார். இவர் இலங்கை உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஆவார்.
எதிர்பார்த்த வெற்றி: வடக்கு மாகாணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி எதிர்பார்த்த ஒன்றுதான் என்று இலங்கை அரசின் செய்தித் தொடர்பாளர் கெகலிய ரம்புக்வெல்லா கூறினார். ""இந்த வாய்ப்பை அவர்கள் சரிவர பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழர்களுக்கு தன்னாட்சி உரிமை வழங்கப்படாது. இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அவர்கள் செயல்பட வேண்டும். தேவைப்பட்டால் அரசியலமைப்புச் சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ளலாம்'' என்றார் ரம்புக்வெல்லா.
அபார வெற்றி: இலங்கையின் வடக்குப் பகுதியில் போர் முடிந்து நான்கு ஆண்டுகளுக்கு பிறகு சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 67 சதவீத வாக்குகள் பதிவாகின. வடக்கு மாகாணத்துக்கு உள்பட்ட யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய பகுதிகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மொத்தம் 78.48 சதவீதம் வாக்குகள் கிடைத்தன. எதிர்த்துப் போட்டியிட்ட அதிபர் ராஜபட்சவின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணிக்கு வெறும் 18.38 சதவீதம் வாக்குகளே கிடைத்தன.
யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி மாவட்டங்களில் பதிவான வாக்குகளில் 80 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்றது. முல்லைத் தீவில் 78 சதவீதம் வாக்குகளும், மன்னார் மாவட்டங்களில் 61 சதவீத வாக்குகளும் அக்கட்சிக்குக் கிடைத்தது. தமிழர்களின் வரலாற்றுச் சிறப்பு மிக்க தலைநகரமாக திகழ்ந்த யாழ்ப்பாணத்தில் மட்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு 85 சதவீத வாக்குகள் கிடைத்தன.
மொத்தமுள்ள 38 இடங்களில், 36 இடங்களுக்கான தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட இலங்கை தமிழ் அரசுக் கட்சி 28 இடங்களில் வெற்றி பெற்றது. இலங்கை சட்டத்தின்படி வெற்றி பெறும் கட்சிக்கு 2 இடங்கள் கூடுதலாக வழங்கப்படும். அதன்படி, தமிழ் அரசுக் கட்சிக்கு மேலும் இரண்டு இடங்கள் கிடைத்துள்ளன.
ராஜபட்ச கூட்டணி வெற்றி: இலங்கையின் மத்திய, வடமேற்கு மாகாணங்களில் அதிபர் ராஜபட்சவின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. மத்திய மாகாணத்துக்கு உள்பட்ட கண்டி, மாத்தளை, நுவரேலியா மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 34 இடங்களைக் கைப்பற்றியது. ஐக்கிய தேசியக் கட்சி 12 இடங்களைப் பிடித்தது.
வடமேற்கு மாகாணத்துக்கு உள்பட்ட புத்தளம், குருநாகல் மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 36 இடங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 16 இடங்களையும் கைப்பற்றியது. இந்தப் பகுதிகளில் தமிழ்க் கட்சிகள் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தெளிவான முடிவு: தேர்தலில் மக்கள் தெளிவான முடிவை வழங்கியுள்ளனர் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். ""தமிழர்களின் அரசியல் தலைமையை நிலைநாட்ட இது சரியான தருணம் என்று மக்களிடம் கூறினோம். தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து மக்கள் அதை நிரூபித்துவிட்டனர்'' என்று அவர் தெரிவித்தார்.
அரசியல் தீர்வு: நாட்டைப் பிரிக்காமல் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதை இலங்கை அரசுக்கு வடக்கு மாகாண மக்கள் இந்த தேர்தல் முடிவின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளனர் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மூத்த எம்.பி.யான சுரேஷ் பிரேமசந்திரன் கூறினார்.
வடக்கு மாகாணம் மாவட்டங்கள்
(டி.என்.ஏ.) (யு.பி.எஃப்.ஏ.) (எஸ்.எம்.சி.)
யாழ்ப்பாணம் 14 2 -
கிளிநொச்சி 3 1 -
மன்னார் 3 1 1
வவுனியா 4 2 -
முல்லைத்தீவு 4 1 -
.
நன்றி தினமணி
தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாணத்தில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்று, வரலாறு படைத்துள்ளது.
வடக்கு மாகாணத்தில் அதிபர் ராஜபட்சவின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்டணி (யு.பி.எஃப்.ஏ.) 7 இடங்களையும், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி (எஸ்.எம்.சி.) ஒரு இடத்தையும் கைப்பற்றியுள்ளன.
கூட்டாட்சி: வடக்கு மாகாணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதல்வராக சி.வி. விக்னேஸ்வரன் (73) பதவியேற்க உள்ளார். இவர் இலங்கை உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஆவார்.
எதிர்பார்த்த வெற்றி: வடக்கு மாகாணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி எதிர்பார்த்த ஒன்றுதான் என்று இலங்கை அரசின் செய்தித் தொடர்பாளர் கெகலிய ரம்புக்வெல்லா கூறினார். ""இந்த வாய்ப்பை அவர்கள் சரிவர பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழர்களுக்கு தன்னாட்சி உரிமை வழங்கப்படாது. இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அவர்கள் செயல்பட வேண்டும். தேவைப்பட்டால் அரசியலமைப்புச் சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ளலாம்'' என்றார் ரம்புக்வெல்லா.
அபார வெற்றி: இலங்கையின் வடக்குப் பகுதியில் போர் முடிந்து நான்கு ஆண்டுகளுக்கு பிறகு சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 67 சதவீத வாக்குகள் பதிவாகின. வடக்கு மாகாணத்துக்கு உள்பட்ட யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய பகுதிகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மொத்தம் 78.48 சதவீதம் வாக்குகள் கிடைத்தன. எதிர்த்துப் போட்டியிட்ட அதிபர் ராஜபட்சவின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணிக்கு வெறும் 18.38 சதவீதம் வாக்குகளே கிடைத்தன.
யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி மாவட்டங்களில் பதிவான வாக்குகளில் 80 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்றது. முல்லைத் தீவில் 78 சதவீதம் வாக்குகளும், மன்னார் மாவட்டங்களில் 61 சதவீத வாக்குகளும் அக்கட்சிக்குக் கிடைத்தது. தமிழர்களின் வரலாற்றுச் சிறப்பு மிக்க தலைநகரமாக திகழ்ந்த யாழ்ப்பாணத்தில் மட்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு 85 சதவீத வாக்குகள் கிடைத்தன.
மொத்தமுள்ள 38 இடங்களில், 36 இடங்களுக்கான தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட இலங்கை தமிழ் அரசுக் கட்சி 28 இடங்களில் வெற்றி பெற்றது. இலங்கை சட்டத்தின்படி வெற்றி பெறும் கட்சிக்கு 2 இடங்கள் கூடுதலாக வழங்கப்படும். அதன்படி, தமிழ் அரசுக் கட்சிக்கு மேலும் இரண்டு இடங்கள் கிடைத்துள்ளன.
ராஜபட்ச கூட்டணி வெற்றி: இலங்கையின் மத்திய, வடமேற்கு மாகாணங்களில் அதிபர் ராஜபட்சவின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. மத்திய மாகாணத்துக்கு உள்பட்ட கண்டி, மாத்தளை, நுவரேலியா மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 34 இடங்களைக் கைப்பற்றியது. ஐக்கிய தேசியக் கட்சி 12 இடங்களைப் பிடித்தது.
வடமேற்கு மாகாணத்துக்கு உள்பட்ட புத்தளம், குருநாகல் மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 36 இடங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 16 இடங்களையும் கைப்பற்றியது. இந்தப் பகுதிகளில் தமிழ்க் கட்சிகள் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தெளிவான முடிவு: தேர்தலில் மக்கள் தெளிவான முடிவை வழங்கியுள்ளனர் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். ""தமிழர்களின் அரசியல் தலைமையை நிலைநாட்ட இது சரியான தருணம் என்று மக்களிடம் கூறினோம். தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து மக்கள் அதை நிரூபித்துவிட்டனர்'' என்று அவர் தெரிவித்தார்.
அரசியல் தீர்வு: நாட்டைப் பிரிக்காமல் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதை இலங்கை அரசுக்கு வடக்கு மாகாண மக்கள் இந்த தேர்தல் முடிவின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளனர் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மூத்த எம்.பி.யான சுரேஷ் பிரேமசந்திரன் கூறினார்.
வடக்கு மாகாணம் மாவட்டங்கள்
(டி.என்.ஏ.) (யு.பி.எஃப்.ஏ.) (எஸ்.எம்.சி.)
யாழ்ப்பாணம் 14 2 -
கிளிநொச்சி 3 1 -
மன்னார் 3 1 1
வவுனியா 4 2 -
முல்லைத்தீவு 4 1 -
.
நன்றி தினமணி
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
செம்மொழியான் பாண்டியன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
Re: இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: ஆட்சியைப் பிடித்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு.
இனியாவது எம் மக்கள் நிம்மதியாக இருப்பார்களா
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: ஆட்சியைப் பிடித்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு.
அவர்களுக்கு உரிய அதிகாரங்கள் தரப்பட்டு ஆள விடுவார்களா? பொறுத்திருந்து பார்க்கலாம்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: ஆட்சியைப் பிடித்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு.
something is better than nothing என்பது பழமொழி பார்ப்போம்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
செம்மொழியான் பாண்டியன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
Re: இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: ஆட்சியைப் பிடித்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு.
அதே தான் - காத்திருப்போம் நம்பிக்கையுடன்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: ஆட்சியைப் பிடித்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு.
எல்லாம் வெறும் கண் துடைப்பு நாடகம். இனி எத்தனைக் கிடுக்குப் பிடிகள் போடப் போகிறார்கள் பாருங்கள். ராஜநாகத்தைக் காட்டிலும் நச்சுத்தன்மை அதிகம் கொண்டவன் ராஜபக்சே. அனைத்தையும் மீறி நாம் சொந்தங்களுக்கு சிறிதளவாவது நல்லது நடக்க வாய்ப்பிருக்கிறதா என்று எங்க வேண்டியதாய் இருக்கிறது.
Similar topics
» இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: தமிழ் தேசிய கூட்டணி வெற்றி
» கருணாநிதியுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் சந்திப்பு
» கே.பியை வடக்கு மாகாண முதல்வராக்க முயற்சிக்கிறது ராஜபக்சே அரசு-பொன்சேகா
» இலங்கையில் வடக்கு மாகாண முதல்-மந்திரியாக விக்னேஸ்வரன் இன்று பதவி ஏற்பு
» இலங்கை வடக்கு மாகாணத்தில் 67% வாக்குப்பதிவு
» கருணாநிதியுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் சந்திப்பு
» கே.பியை வடக்கு மாகாண முதல்வராக்க முயற்சிக்கிறது ராஜபக்சே அரசு-பொன்சேகா
» இலங்கையில் வடக்கு மாகாண முதல்-மந்திரியாக விக்னேஸ்வரன் இன்று பதவி ஏற்பு
» இலங்கை வடக்கு மாகாணத்தில் 67% வாக்குப்பதிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|