ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி!

+3
செம்மொழியான் பாண்டியன்
ராஜு சரவணன்
சாமி
7 posters

Go down

மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி! Empty மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி!

Post by சாமி Sun Sep 22, 2013 8:41 pm

மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி! Zunv

பேச வேண்டிய உண்மைகளைப் பேசாமல் தவிர்ப்பதும், காலம் தாழ்த்துவதும் கூட ஒரு வகையில் குற்றம்தான்.

இத்தனை காலமும் இந்தச்சமூகம் பேச, தொட, விவாதிக்கத் தயங்கிய ஒரு உண்மை குறித்து பேச முனைந்த இயக்குனர் கீதா இளங்கோவன் அவர்களுக்கு முதல்ப் பாராட்டுகள்.

தினந்தோறும் உடலைச் சுத்திகரிக்க உருவாகும் மலம், சிறுநீர் போல், ஒவ்வொருவரையும் தன்னுள்ளே தாங்கி, உருவம் கொடுத்து, வளர்த்து உலகுக்குத் தந்த கர்ப்பப்பை தன்னை ஒரு சுழற்சியில் சுத்தப்படுத்திக்கொள்ள, தகுதிப்படுத்திக்கொள்ள வெளியேற்றும் உதிரம் ஏன் ”தீட்டு” என்று கட்டமைக்கப்பட்டது. இரத்தத்தை மாற்றி தாய்ப் பாலைத் தருவதைப் புனிதமாக கருதும் சமூகம், அதே பெண் தன் கர்ப்பப்பையை சுத்திகரித்து வெளியேற்றும் உதிரத்தை ஒரு தீண்டத்தகாத பொருளாக, மறைக்க வேண்டிய சங்கடமாக, தீட்டாக பாவிப்பது எந்த வகையில் நியாயம் என்பது புரியவில்லை.

என் வாழ்வுலகம் சார்ந்த பெண்கள், இந்த மாத சுழற்சியில் உதிரம் கழியும் செயலில் உடல் ரீதியாகத் துவண்டு, தளர்ந்து, பொறுக்க முடியாமல் வலி பொறுத்துக் கடப்பதை உணர்ந்திருக்கிறேன், அதேநேரம் அவர்களுக்கு அந்த நிகழ்வை சமூக ரீதியாகக் கடப்பதில் இருக்கும் இடர்பாடுகள், உலகம் கட்டமைத்திருக்கும் பொய்மை விலங்குகளில் அடைபட்டிருக்கும் அவலம் குறித்து செவிட்டில் அறைந்து வலி தெறிக்கத் தெறிக்கத் தருகிறது மாதவிடாய் ஆவணப்படம்.

மாதவிடாய் என்றால் என்ன என்பது கூட, அதை மாதந்தோறும் சந்தித்துவரும் பெண்களுக்கு அறிவியல் ரீதியாக மிகத்தெளிவாக விளக்க வாய்ப்பளிக்காத கல்விச்சூழலும் இருக்கும் சமூகத்தில் இதை யார் எப்படி யாருக்கு புகட்டுவது?

சாதி, மதம், ஏழை பணக்காரன், உயரிய பதவி, மாற்றுதிறனாளிகள் என எந்தப் பாகுபாடும் இன்றி எல்லோருமே ஏதாவது ஒரு வகையில் இந்த மாதவிடாய் நேரங்களில் தங்கள் ஆரோக்கியத்திற்காகவும், தகுந்த சூழலுக்காகவும் மிகுந்த துன்பப்பபடுவதைப் பார்க்கும்போது, அடிப்படைத் தேவைகளில் கூட விழிப்புணர்வு ஏற்படுத்தாத, கவனம் செலுத்தாத ஒரு தேசம் எப்படி வல்லரசாகும் எனும் கேள்வி இயல்பாகவே எழுகிறது.

இன்னும் மதுரை தேனி மாவட்ட கிராமங்களில் மாதவிடாய் காலத்தில் தனிமைப்படுத்தபட்டு தள்ளிவைக்க ”முட்டு வீடு” எனும் கட்டிடமும், மாதவிடாய் காலத்தில் உபயோகிக்க தனிப் பாத்திரங்களும் இருப்பதைக் கண்டு கிராமத்தைச் சபிக்கவே தோன்றுகிறது. சாதியைச் சொல்லி உருவாக்கப்பட்டிருக்கும் தீண்டாமைச் சுவர்களைவிடவும் சம்பிரதாயங்களைச் சொல்லி இன்னும் கடைபிடிக்கும் ”முட்டு வீடு” மிகமிகக் கொடியது. இது தன் தாய்க்கு, தன் சகோதரிக்கு, தன் இணைக்கு, தன் மகளுக்கு எதிராக நிகழ்த்தப்படும் ஆகக் கொடும் வன்முறை என்பதை ஒவ்வொருவரும் உணரவேண்டும்.

நூறு ரூபா கூலிக்கு வேகாத வெயிலில் காலை முதல் மாலை வரை பணிபுரியும் விவசாயக் கூலிப் பெண் மாதவிடாய் சமயங்களில் காலையில் வைத்த துணியை மாலை வரை மாற்ற முடியாத சூழலில் இருப்பதுபோல், பல்வேறு துறையில் பணியாற்றும் பலரும் இதற்கான ’நாப்கின்’னை மாற்ற வாய்ப்பற்று இதே போன்ற சூழலை அனுபவித்து வருவதைக் காணத் துன்பமே மிகுகிறது.

பயன்படுத்திய நாப்கின்களை முறையாக அழிக்க வெகு அரிதாக, சில இடங்களில் மட்டுமே பொருத்தமான இயந்திரங்கள், வாய்ப்புகள் கொண்ட சூழல் அமைந்திருக்கின்றன. பொதுக் கழிப்பிடங்களில், வேறுவழியின்றி தூக்கிவீசப்படும் பயன்படுத்திய நாப்கின்களை சுத்த செய்ய அங்கு பணியில் இருக்கும் பெண்கள் படும் துன்பமும் கொடியதாக இருக்கின்றது.

சமூக நலன் கருதி இதைத் தயாரித்த தென்னக ரயில்வே நிர்வாகத்தின் துணைப்பொதுமேலாளர் திரு. இளங்கோவன் (geetaiis@gmail.com) அவர்களுக்கும், இயக்கிய திருமதி கீதா இளங்கோவன் அவர்களுக்கும், உறுதுணையாக இருந்த ஒவ்வொருவருக்கும் நாம் ஒவ்வொருவரும் மிகுந்த கடமைப்பட்டுள்ளோம். இந்தப்படத்தின் குறுந்தகடு இலவசமாக தரப்படுவதாகவும் அறிகிறேன்.

பல தரப்பட்ட சூழல், பலதரப்பட்ட, பல நிலைப்பெண்கள் என மிகுந்த உழைப்பில், அருமையான திட்டமிடலில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ஆவணப்படத்தை ஒவ்வொருவரும் மிக நிச்சயமாகக் காணவேண்டும்.

இந்த உலகின் பெரும்பாலான முடிவுகளை எடுக்கும் ஆண் சமூகம், உடனடியாக தன் தாய், தன் சகோதரி, தன் மனைவி, தன் மகள், தன் தோழிக்கு, இயற்கையான ஒரு நிகழ்வைக் கடக்க எளிய, ஆரோக்கியமான ஒரு சூழலை ஏற்படுத்தித் தரவேண்டும்.

இது ஆணுக்கான பெண்களின் படம் என அடித்தலைப்பு சூட்டப்பட்டிகிறது, நான் இது குடும்பத்திற்கான படம் என்றே பார்க்கிறேன். படத்தை அவர்கள் கொடுத்துவிட்டார்கள். கொண்டு சேர்க்க வேண்டியது என், உங்களின் கடமை. சேர்க்க முடியும், சேர்ப்போம்.

- எழுதியது ஈரோடு கதிர்.maaruthal.blogspot.
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி! Empty Re: மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி!

Post by ராஜு சரவணன் Mon Sep 23, 2013 12:06 am

மாதவிடாய் காலத்தில் பெண்மையின் வலி தெரிந்தது நம் தமிழ் சமூகம்.அவர்களை அக்காலங்களில் ஒதுக்கி வைப்பதை குறையாக கருத தேவையில்லை.

அப்படி ஒதுக்கி வைப்பதற்கு (ஓய்வு கொடுப்பது) காரணம் அந்த வலி கொண்ட காலங்களில் அவர்களுக்கு மேலும் வலியை உண்டாக்கமல் அன்றாட வீட்டு வேளைகளில் இருந்து ஒய்வு கொடுக்க வேண்டியே அன்றி வேறொன்றும் இல்லை. பொதுவாக பெண்களை ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னால் நிச்சயம் கேட்டமாட்டார்கள். உடம்பே சரியில்லை என்றாலும் மணம் கேட்காமல் பணிவிடை செய்ய முயலும் அவர்களை கட்டி போடவே இந்த தீட்டு எனும் காரணம்.மற்றபடி பெண்மைக்கு முழு மதிப்பை தருவது நமது சமூகம்.

இன்றும் என் வீட்டில் இதுபோன்ற சமயங்களில் வீட்டூ வேலைகளையும் சமையல் வேலைகளையும் நான் தான் செய்வேன்.இந்த பழக்கத்தை எனக்கு சொல்லிக்கொடுத்தவர்கள என் முன்னோர்கள். இது நாம் பெண்களுக்கு செய்யும் ஒரு உதவிதான். அதற்கு போய் தீண்டாமை எனும் வாசகம் கொண்டு பழமையை பலி பேசாதீர்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி! Empty Re: மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி!

Post by செம்மொழியான் பாண்டியன் Mon Sep 23, 2013 11:22 am

ராஜு சரவணன் wrote:மாதவிடாய் காலத்தில் பெண்மையின் வலி தெரிந்தது நம் தமிழ் சமூகம்.அவர்களை அக்காலங்களில் ஒதுக்கி வைப்பதை குறையாக கருத தேவையில்லை.

அப்படி ஒதுக்கி வைப்பதற்கு (ஓய்வு கொடுப்பது) காரணம் அந்த வலி கொண்ட காலங்களில் அவர்களுக்கு மேலும் வலியை உண்டாக்கமல் அன்றாட வீட்டு வேளைகளில் இருந்து ஒய்வு கொடுக்க வேண்டியே அன்றி வேறொன்றும் இல்லை. பொதுவாக பெண்களை ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னால் நிச்சயம் கேட்டமாட்டார்கள். உடம்பே சரியில்லை என்றாலும் மணம் கேட்காமல் பணிவிடை செய்ய முயலும் அவர்களை கட்டி போடவே இந்த தீட்டு எனும் காரணம்.மற்றபடி பெண்மைக்கு முழு மதிப்பை தருவது நமது சமூகம்.

இன்றும் என் வீட்டில் இதுபோன்ற சமயங்களில் வீட்டூ வேலைகளையும் சமையல் வேலைகளையும் நான் தான் செய்வேன்.இந்த பழக்கத்தை எனக்கு சொல்லிக்கொடுத்தவர்கள என் முன்னோர்கள். இது நாம் பெண்களுக்கு செய்யும் ஒரு உதவிதான். அதற்கு போய் தீண்டாமை எனும் வாசகம் கொண்டு பழமையை பலி பேசாதீர்
என் கருத்தும் 100% இதுவேதான்
எப்படி சரவணன் நாம் இருவரும் ஒரே அலைவரிசையாக இருக்கிறோம் ?மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி! 3838410834 


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி! Empty Re: மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி!

Post by பார்த்திபன் Mon Sep 23, 2013 1:20 pm

நல்ல முயற்ச்சி. ஆனால் சில பழமை வாதிகளுக்கு இது செவிடன் காதில் ஊதிய சங்கு போலத்தான்.
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி! Empty Re: மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி!

Post by mbalasaravanan Mon Sep 23, 2013 4:12 pm

ராஜு சரவணன் wrote:மாதவிடாய் காலத்தில் பெண்மையின் வலி தெரிந்தது நம் தமிழ் சமூகம்.அவர்களை அக்காலங்களில் ஒதுக்கி வைப்பதை குறையாக கருத தேவையில்லை.

அப்படி ஒதுக்கி வைப்பதற்கு (ஓய்வு கொடுப்பது) காரணம் அந்த வலி கொண்ட காலங்களில் அவர்களுக்கு மேலும் வலியை உண்டாக்கமல் அன்றாட வீட்டு வேளைகளில் இருந்து ஒய்வு கொடுக்க வேண்டியே அன்றி வேறொன்றும் இல்லை. பொதுவாக பெண்களை ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னால் நிச்சயம் கேட்டமாட்டார்கள். உடம்பே சரியில்லை என்றாலும் மணம் கேட்காமல் பணிவிடை செய்ய முயலும் அவர்களை கட்டி போடவே இந்த தீட்டு எனும் காரணம்.மற்றபடி பெண்மைக்கு முழு மதிப்பை தருவது நமது சமூகம்.

இன்றும் என் வீட்டில் இதுபோன்ற சமயங்களில் வீட்டூ வேலைகளையும் சமையல் வேலைகளையும் நான் தான் செய்வேன்.இந்த பழக்கத்தை எனக்கு சொல்லிக்கொடுத்தவர்கள என் முன்னோர்கள். இது நாம் பெண்களுக்கு செய்யும் ஒரு உதவிதான். அதற்கு போய் தீண்டாமை எனும் வாசகம் கொண்டு பழமையை பலி பேசாதீர்
சரியாக சொனீர்கள்
ஆனால் எல்லா நாளும் நீங்க தான் வீடு வேலை எல்லாம் செய்றதா ஒரு பேசு அடி படுது சரி சரி சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி! Empty Re: மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி!

Post by ராஜு சரவணன் Mon Sep 23, 2013 4:21 pm

சரியாக சொனீர்கள்
ஆனால் எல்லா நாளும் நீங்க தான் வீடு வேலை எல்லாம் செய்றதா ஒரு பேசு அடி படுது சரி சரி
பரவாயில்ல ஒரு ஆணின் புலம்பல் ஒரு ஆணுக்கு தான் தெரியும்.. புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி! Empty Re: மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி!

Post by mbalasaravanan Mon Sep 23, 2013 5:10 pm

ராஜு சரவணன் wrote:
சரியாக சொனீர்கள்
ஆனால் எல்லா நாளும் நீங்க தான் வீடு வேலை எல்லாம் செய்றதா ஒரு பேசு அடி படுது சரி சரி
பரவாயில்ல ஒரு ஆணின் புலம்பல் ஒரு ஆணுக்கு தான் தெரியும்.. புன்னகை
சரி விடுங்க விடுங்க
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி! Empty Re: மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி!

Post by krishnaamma Mon Sep 23, 2013 5:16 pm

என்னிடம் நான் அவர்களிடமிருந்து போஸ்ட் il பெற்ற CD இருக்கிறது, கஷ்டப்பட்டு எடுத்திருக்கிறார்கள் புன்னகை பாராட்ட வேண்டிய விஷயம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி! Empty Re: மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி!

Post by ஜாஹீதாபானு Mon Sep 23, 2013 5:23 pm

பகிர்வுக்கு நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி! Empty Re: மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum