Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ் சினிமாவின் ராணி டி.பி.ராஜலட்சுமி - ஸ்பெஷல் ஸ்டோரி!
3 posters
Page 1 of 1
தமிழ் சினிமாவின் ராணி டி.பி.ராஜலட்சுமி - ஸ்பெஷல் ஸ்டோரி!
![தமிழ் சினிமாவின் ராணி டி.பி.ராஜலட்சுமி - ஸ்பெஷல் ஸ்டோரி! NT_130916125446000000](https://2img.net/h/img1.dinamalar.com/cini//CNewsImages/NT_130916125446000000.jpg)
இந்திய சினிமா நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் இதே ஆண்டில்தான் தமிழ் சினிமாவின் முதல் ஹீரோயின் டி.பி.ராஜலட்சுமிக்கும் நூற்றாண்டு விழா, வருகிற 19ந் தேதி தமிழக அரசு சார்பில் டி.பி.ராஜலட்சுமியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட இருக்கிறது. அதையட்டி அவரைப் பற்றிய ஒரு ஸ்பெஷல் ஸ்டோரி...
7 வயதில் திருமணம்
தஞ்சை மாவட்டத்தில் உள்ள இசைக்கு பெயர் பெற்ற திருவையாறு தான் டி.பி.ராஜலட்சுமியின் சொந்த ஊர். ஏழை பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவர். தந்தை பஞ்சாபகேச அய்யர், தாயார் மீனாட்சி. அக்கால வழக்கப்படி டி.பி.ராஜலட்சுமிக்கு 7வது வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டது. பால்மணம் மாறாத பருவத்தில் மணமகளாக அனுப்பி வைக்கப்பட்டவர். வரதட்சணை கொடுமையால் திருப்பி அனுப்பப்பட்டார். மகளின் நிலை கண்டு வருந்திய தந்தை துக்கம் தாங்காமல் மரணம் அடைந்தார்.
வாட்டிய வறுமை
விதவை தாயும், வாழாவெட்டி மகளும் பிழைப்பு தேடி திருச்சி வந்தனர். வறுமை அவர்களை துரத்தியது. அந்த துயரம் தாங்காமல் ஒரு நாள் சாமி சிலை முன்பு உட்கார்ந்து டி.பி.ராஜலட்சுமி தந்தை கற்றுக்கொடுத்த பாடலை மனமுருக பாடினார். அதைக் கேட்ட தாய் மகிழ்ந்தார். தன் குடும்ப வறுமை நீங்க அந்த பகவான் மகளின் குரலில் அருள் அளித்திருக்கிறான் என்பதை தாய் உணர்ந்து கொண்டார். அந்த குரல்வளம்தான் அவரை உச்சத்துக்கு கொண்டு செல்லப்போகிறது என்பது அப்போது தாய்க்கும், மகளுக்கும் தெரியாது.
பசி பிரச்னை தீர்ந்தது
அப்போது திருச்சியில் நிறைய நாடக கம்பெனிகள் முகாமிட்டு நாடகம் போட்டுக்கொண்டிருந்தன. அதில் சி.எஸ்.சாம்பண்ணா நாடக குழுவும் ஒன்று. அங்கு தன் மகளை அழைத்துச் சென்ற தாயர் "என் மகள் நன்றாக பாடுவாள் உங்கள் கம்பெனியில் பாடகியாக சேர்த்துக் கொள்ளுங்கள் நான் சமையல்காரியாக வேலை செய்கிறேன்" என்றார். மனம் உருகிய சாம்பண்ணா இருவரையும் தனது நாடக கம்பெனியில் சேர்த்துக் கொண்டார். ராஜலட்சுமிக்கு மாதம் 30 ரூபாயும், அவரது அம்மாவுக்கு 20 ரூபாயும் சம்பளம் வழங்கப்பட்டது. பசி பிரச்னை தீர்ந்தது.
தொடரும்..............
Last edited by krishnaamma on Mon Sep 16, 2013 9:19 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தமிழ் சினிமாவின் ராணி டி.பி.ராஜலட்சுமி - ஸ்பெஷல் ஸ்டோரி!
ஹீரோயினாக அவதரிப்பு
முதலில் பெண் வேடத்தில் நடித்த ஆண்களுக்கு பின்னணி பாடத் தொடங்கிய ராஜலட்சுமி பிறகு சின்ன சின்ன வேடங்களில் நடிக்கவும் தொடங்கினார். பவளக்கொடி நாடகத்தில் முதன் முறையாக ஹீரோயினாக நடித்தார். அப்போது நாடகத்தில் பெண்கள் நடிப்பதில்லை, ஆண்கள்தான் பெண்வேடமிட்டு நடித்து வந்தார்கள். இந்த நிலையில் நேரடிய ஒரு பெண் நடிப்பதும், பாடுவதும் வேகமாக பரவியது. அவரது பாட்டும் நடிப்பும் எல்லைகளை தாண்டிச் சென்றது. கண்ணையா நாடக கம்பெனி ராஜலட்சுமிக்கு பெரிய சம்பளம் கொடுத்து தன் கம்பெனியில் சேர்த்துக் கொண்டது. கே.எஸ்.செல்லப்பாவின் கம்பெனி ராஜலட்சுமிக்கு மாதம் 75 ரூபாய் சம்பளம் கொடுத்து ரங்கூனுக்கு அழைத்துச் சென்று நாடகம் போட்டது. அக்கால நாடக ஹீரோ எஸ்.ஜி.கிட்டப்பாவுடன் இணைந்து நடித்ததும் அவரது புகழ் பரவத் தொடங்கியது. ராஜலட்சுமியின் தேதிக்காக நாடக ஹீரோக்கள் காத்துகிடக்கத் தொடங்கினார்கள்.
வெள்ளித்திரையின் முதல் ஹீரோயின்
நாடக உலகின் கனவு கன்னியாக ராஜலட்சுமி வலம் வந்து கொண்டிருந்தபோது தமிழ் சினிமாவில் மவுன படங்கள் அறிமுகமானது. அதிலும் முதலில் ஆண்கள்தான் நடித்தார்கள். ஏ.நாராயண அய்யர் என்பவர் ராஜலட்சுமியை சினிமாவில் அறிமுகப்படுத்தினார். 1929ம் ஆண்டு வெளிவந்த கோவலன் என்ற மவுனப்படம்தான் ராஜலட்சுமிக்கு முதல் படம். அதன் பிறகு உஷாசுந்தரி உள்பட பத்துக்கும் மேற்பட்ட ஊமைப் படங்களில் நடித்தார். அதன் பிறகு பேசும் படங்கள் வந்தது. இம்பீரியல் மூவிடோன் நிறுவனம் தமிழ், தெலுங்கில் காளிதாஸ் என்ற முதல் பேசும் படத்தை தயாரித்தது. இதில் நடிக்க ராஜலட்சுமியை தேர்வு செய்த நிறுவனம் அவரை மும்பைக்கு அழைத்துச் சென்று குரல் வளம் மற்றும் மேக்அப் டெஸ்ட் நடத்தி ஓகே சொன்னது.
1931ம் ஆண்டு அக்டோபர் 31ந் தேதி சென்னை செண்ட்ரல் தியேட்டரில் காளிதாஸ் ரிலீசானது. தமிழ் சினிமாவின் முதல் ஹீரோயின் திரையில் தோன்றினார். அந்தப் படத்தில் டி.பி.ராஜலட்சுமி பாடி, ஆடிய "மன்மத பாணமடா மாரில் பாயுதடா" என்ற பாடல் அப்போது தமிழ்நாடே கொண்டாடிய துள்ளல் பாடல் (குத்து சாங்). அதைத் தொடர்ந்து சாவித்ரி, வள்ளி திருமணம், திரௌபதி, வஸ்திரா பரிணயம், குலசேகரா உள்பட பல படங்களில் நடித்தார். அப்போது நம்பர் ஒன் ஹீரோவாக இருந்த வி.ஏ.செல்லப்பாவும், ராஜலட்சுமியும் இணைந்து நடித்த படங்கள் சூப்பர் ஹிட்டானது. தமிழ் சினிமாவின் முதல் மேட் ஃபார் ஈச் அதர் ஜோடி இவர்கள்தான்.
தொடரும்.............
முதலில் பெண் வேடத்தில் நடித்த ஆண்களுக்கு பின்னணி பாடத் தொடங்கிய ராஜலட்சுமி பிறகு சின்ன சின்ன வேடங்களில் நடிக்கவும் தொடங்கினார். பவளக்கொடி நாடகத்தில் முதன் முறையாக ஹீரோயினாக நடித்தார். அப்போது நாடகத்தில் பெண்கள் நடிப்பதில்லை, ஆண்கள்தான் பெண்வேடமிட்டு நடித்து வந்தார்கள். இந்த நிலையில் நேரடிய ஒரு பெண் நடிப்பதும், பாடுவதும் வேகமாக பரவியது. அவரது பாட்டும் நடிப்பும் எல்லைகளை தாண்டிச் சென்றது. கண்ணையா நாடக கம்பெனி ராஜலட்சுமிக்கு பெரிய சம்பளம் கொடுத்து தன் கம்பெனியில் சேர்த்துக் கொண்டது. கே.எஸ்.செல்லப்பாவின் கம்பெனி ராஜலட்சுமிக்கு மாதம் 75 ரூபாய் சம்பளம் கொடுத்து ரங்கூனுக்கு அழைத்துச் சென்று நாடகம் போட்டது. அக்கால நாடக ஹீரோ எஸ்.ஜி.கிட்டப்பாவுடன் இணைந்து நடித்ததும் அவரது புகழ் பரவத் தொடங்கியது. ராஜலட்சுமியின் தேதிக்காக நாடக ஹீரோக்கள் காத்துகிடக்கத் தொடங்கினார்கள்.
வெள்ளித்திரையின் முதல் ஹீரோயின்
நாடக உலகின் கனவு கன்னியாக ராஜலட்சுமி வலம் வந்து கொண்டிருந்தபோது தமிழ் சினிமாவில் மவுன படங்கள் அறிமுகமானது. அதிலும் முதலில் ஆண்கள்தான் நடித்தார்கள். ஏ.நாராயண அய்யர் என்பவர் ராஜலட்சுமியை சினிமாவில் அறிமுகப்படுத்தினார். 1929ம் ஆண்டு வெளிவந்த கோவலன் என்ற மவுனப்படம்தான் ராஜலட்சுமிக்கு முதல் படம். அதன் பிறகு உஷாசுந்தரி உள்பட பத்துக்கும் மேற்பட்ட ஊமைப் படங்களில் நடித்தார். அதன் பிறகு பேசும் படங்கள் வந்தது. இம்பீரியல் மூவிடோன் நிறுவனம் தமிழ், தெலுங்கில் காளிதாஸ் என்ற முதல் பேசும் படத்தை தயாரித்தது. இதில் நடிக்க ராஜலட்சுமியை தேர்வு செய்த நிறுவனம் அவரை மும்பைக்கு அழைத்துச் சென்று குரல் வளம் மற்றும் மேக்அப் டெஸ்ட் நடத்தி ஓகே சொன்னது.
1931ம் ஆண்டு அக்டோபர் 31ந் தேதி சென்னை செண்ட்ரல் தியேட்டரில் காளிதாஸ் ரிலீசானது. தமிழ் சினிமாவின் முதல் ஹீரோயின் திரையில் தோன்றினார். அந்தப் படத்தில் டி.பி.ராஜலட்சுமி பாடி, ஆடிய "மன்மத பாணமடா மாரில் பாயுதடா" என்ற பாடல் அப்போது தமிழ்நாடே கொண்டாடிய துள்ளல் பாடல் (குத்து சாங்). அதைத் தொடர்ந்து சாவித்ரி, வள்ளி திருமணம், திரௌபதி, வஸ்திரா பரிணயம், குலசேகரா உள்பட பல படங்களில் நடித்தார். அப்போது நம்பர் ஒன் ஹீரோவாக இருந்த வி.ஏ.செல்லப்பாவும், ராஜலட்சுமியும் இணைந்து நடித்த படங்கள் சூப்பர் ஹிட்டானது. தமிழ் சினிமாவின் முதல் மேட் ஃபார் ஈச் அதர் ஜோடி இவர்கள்தான்.
தொடரும்.............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தமிழ் சினிமாவின் ராணி டி.பி.ராஜலட்சுமி - ஸ்பெஷல் ஸ்டோரி!
தமிழ் சினிமாவின் ராணி
நடிகையாக வாழ்க்கையை தொடங்கினாலும், தயாரிப்பாளர், இயக்குனர். நாவலாசிரியர், திரையரங்கு உரிமையாளர் என பல்வேறு தளங்களில் 20 ஆண்டுகள் ராஜலட்சுமி வலம் வந்தார். அந்த வகையில் தமிழ் சினிமாவின் முதல் பெண் தயாரிப்பாளர், பெண் இயக்குனரும் அவர்தான். மிஸ்கமலா, இந்திய தாய், மதுரை வீரன் (எம்.ஜி.ஆர் நடித்த படம் அல்ல), உள்பட சில படங்களை இயக்கினார். வள்ளி திருமணம் படத்தில் நடித்தபோது அதில் தனக்கு ஜோடியாக நடித்த டி.வி.சுந்தரம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஒரு பெண் குழந்தைக்கும் தாயானார்.
சினிமாவில் சம்பாதித்த பணத்தை சினிமாவிலேயே முதலீடு செய்தார் ராஜலட்சுமி. சொந்த பட தயாரிப்பில் பெரும் பொருளை இழந்த ராஜலட்சுமி அதைப் பற்றி கலங்காமல் தொடர்ந்து சினிமாவுக்கே தன் வாழ்க்கையை அர்ப்பணித்தார். அதனால் அந்தக் காலத்திலேயே அவர் சினிமா ராணி என்ற சிறப்பு பெயரில் அழைக்கப்பட்டார். அவரது நூற்றாண்டு விழாவை கொண்டாடுவது அரசின் கடமை மட்டுமல்ல ஒவ்வொரு சினிமா ரசிகனின் கடமையாகும்.
நன்றி : தினமலர்
நடிகையாக வாழ்க்கையை தொடங்கினாலும், தயாரிப்பாளர், இயக்குனர். நாவலாசிரியர், திரையரங்கு உரிமையாளர் என பல்வேறு தளங்களில் 20 ஆண்டுகள் ராஜலட்சுமி வலம் வந்தார். அந்த வகையில் தமிழ் சினிமாவின் முதல் பெண் தயாரிப்பாளர், பெண் இயக்குனரும் அவர்தான். மிஸ்கமலா, இந்திய தாய், மதுரை வீரன் (எம்.ஜி.ஆர் நடித்த படம் அல்ல), உள்பட சில படங்களை இயக்கினார். வள்ளி திருமணம் படத்தில் நடித்தபோது அதில் தனக்கு ஜோடியாக நடித்த டி.வி.சுந்தரம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஒரு பெண் குழந்தைக்கும் தாயானார்.
சினிமாவில் சம்பாதித்த பணத்தை சினிமாவிலேயே முதலீடு செய்தார் ராஜலட்சுமி. சொந்த பட தயாரிப்பில் பெரும் பொருளை இழந்த ராஜலட்சுமி அதைப் பற்றி கலங்காமல் தொடர்ந்து சினிமாவுக்கே தன் வாழ்க்கையை அர்ப்பணித்தார். அதனால் அந்தக் காலத்திலேயே அவர் சினிமா ராணி என்ற சிறப்பு பெயரில் அழைக்கப்பட்டார். அவரது நூற்றாண்டு விழாவை கொண்டாடுவது அரசின் கடமை மட்டுமல்ல ஒவ்வொரு சினிமா ரசிகனின் கடமையாகும்.
நன்றி : தினமலர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த போலீஸ் ஸ்டோரி திரைப்படம்
» ‘தமிழ் சினிமாவின் கதை’ நுாலிலிருந்து:
» விஜய்யின் டுவென்டி-20: ஸ்பெஷல் ஸ்டோரி!!
» திரும்பிய பக்கமெல்லாம் திகில் படங்கள் - ஸ்பெஷல் ஸ்டோரி!
» சிவாஜி ரசிகனின் கண்ணீர் கடிதம் - ஸ்பெஷல் ஸ்டோரி!
» ‘தமிழ் சினிமாவின் கதை’ நுாலிலிருந்து:
» விஜய்யின் டுவென்டி-20: ஸ்பெஷல் ஸ்டோரி!!
» திரும்பிய பக்கமெல்லாம் திகில் படங்கள் - ஸ்பெஷல் ஸ்டோரி!
» சிவாஜி ரசிகனின் கண்ணீர் கடிதம் - ஸ்பெஷல் ஸ்டோரி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|