ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:43 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 3:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய்மொழிக்குக் குரல் கொடுக்கும் சாகித்ய அகாதெமி!

2 posters

Go down

தாய்மொழிக்குக் குரல் கொடுக்கும் சாகித்ய அகாதெமி! Empty தாய்மொழிக்குக் குரல் கொடுக்கும் சாகித்ய அகாதெமி!

Post by சாமி Mon Sep 02, 2013 6:50 am

இந்திய அரசு 1954-ஆம் ஆண்டு சாகித்ய அகாதெமியை அமைத்தது. தன்னாட்சி பெற்றது. ஒவ்வொரு மொழியில் இருந்தும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தலைவர் உண்டு. சாகித்ய அகாதெமியின் முதல் தலைவராக அன்றைய பிரதம மந்திரி ஜவகர்லால் நேரு இருந்தார். பத்தாண்டுகள் - தனது இறுதிக் காலம் வரையில் - தலைவராக இருந்த அவர் சாகித்ய அகாதெமி விருது பெறவில்லை. அகாதெமி வழியாகத் தன் நூல்களை வெளியிட்டுக் கொள்ளவில்லை.

சாகித்ய அகாதெமியின் பல இலக்கிய நோக்கங்களில் ஒன்று, ஆங்கிலம் உள்பட இந்திய மொழிகளில் எழுதப்படும் சிறந்த படைப்புகளுக்கு விருது வழங்குவது; அவற்றைப் பிற மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிடுவது. ஒவ்வொரு மொழியிலும் இருக்கும் அசலான படைப்புகளை மற்ற மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடுவது. நாடு முழுவதும் இலக்கியக் கருத்தரங்கு, கவிதை வாசிப்பு, கதை வாசிப்பு உள்பட இலக்கிய மாநாடுகள் நடத்துவது என்பதாகும்.

இலக்கியத்திற்காக இந்திய அரசு அளிக்கும் மிக உயர்ந்த விருது சாகித்ய அகாதெமி வழங்கும் விருதுதான். அது ஒரு எழுத்தாளருக்கு ஒரு முறை மட்டுமே வழங்கப்படுகிறது. சாகித்ய அகாதெமி விருது பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் அடிக்கடி குற்றம் குறை கூறப்பட்டு வருகிறது. ஆனாலும் அது தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

சிறந்த நூற்களுக்கு மட்டுமே விருது வழங்கி வந்த சாகித்ய அகாதெமி, சமீப காலமாக மொழிபெயர்ப்பு, குழந்தை இலக்கியம், இளம் படைப்பாளர் விருது என்று தன் இலக்கியப் பரப்பை விரிவாக்கி உள்ளது.

2013, ஆகஸ்டு 23-இல் சாகித்ய அகாதெமியின் செயற்குழு கூட்டம் முதல் முறையாக சென்னையில் நடைபெற்றது. அதில், தமிழ், சமஸ்கிருதம், இந்தி, மைதிலி, சந்தாவி, மலையாளம், கன்னடம் போன்ற இருபத்திரண்டு மொழியினர் கலந்து கொண்டார்கள். இளம் படைப்பாளருக்கான விருதை யுவபுரஸ்கார் என முடிவு செய்தார்கள். அதோடு தாய்மொழி படிப்புப் பற்றி ஒரு தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள்.

அது, சாகித்ய அகாதெமி என்பது விருது கொடுப்பது, புத்தகங்கள் பிரசுரம் செய்வது, கருத்தரங்குகள் நடத்துவது, வெளிநாடுகளுக்குச் சென்று வருவது போன்றவற்றை மட்டும் செய்து கொண்டிருக்கும் நிறுவனம் அல்ல. சமூகத்தின் தலையாய பிரச்னைகளைக் கூர்ந்து கவனித்து கருத்துகளைத் தைரியமாகச் சொல்லும் எழுத்தாளர்கள் கொண்டது என்பதையும் நிலைநாட்டியிருக்கிறது.

சாகித்ய அகாதெமி தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் கூடி தாய்மொழியில் படிப்பைக் கொடுங்கள் என்று மாநில அரசுகளைக் கோரியிருப்பது தற்செயலாக நடந்ததுதான். ஆனால், சரியான இடத்தில்தான் நிகழ்ந்து இருக்கிறது. மொழிகள் பற்றிய அம்சங்களில் தமிழ்நாடு எப்போதும் முன்னே இருப்பதாகும்.

தமிழ்மொழி மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகப் பேச்சு மொழியாகவும், எழுத்து மொழியாகவும் இருந்து வருகிறது. அது தனித்து இயங்கும் தன்மை கொண்ட மொழி. திராவிட மொழி குடும்பத்தின் மூத்தமொழி. அது இன்னொரு மொழியில் இருந்து கிடைத்தது அல்ல; அதன் எழுத்தும், இன்னொரு எழுத்து வடிவத்தில் இருந்து பெற்றதில்லை.

தொன்மையான அசலான படைப்பிலக்கியங்களான சங்கப் பாடல்கள், சிலப்பதிகாரம், திருக்குறள், தேவாரம், திருவாசகம், அருட்பா, பாரதியார் கவிதைகள், புதுமைப்பித்தன் கதைகள் என்று இழையறாத தொடர் படைப்பிலக்கியங்கள் கொண்டது. பழைமையின் தொடர்ச்சியாக ஜெயகாந்தன், அசோகமித்திரன் போன்றோர் எழுதி வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சிமொழியாக இருக்கிறது. ஆனால், இங்கு முப்பதாண்டு காலமாகத் தமிழ் பெருமளவில் தடைபட்டுவிட்டது. மழலையர் பள்ளியில் இருந்து கல்லூரிப் படிப்பு வரையில் தமிழ் இல்லை. தமிழ்நாட்டில் ஒரு மாணவனோ - மாணவியோ தமிழ் மொழி ஒரு எழுத்தைக்கூட படிக்காமல் முனைவர் பட்டப் படிப்பையே முடித்துக்கொண்டு விடலாம். இந்தியாவில் வேறு பல மாநிலங்களில் இது சாத்தியம் இல்லை. ஏனெனில் அவை மூன்று மொழி மாநிலங்கள். அவர்களின் படிப்பில் தாய்மொழி சேர்ந்து விடுகிறது.

எதன் பொருட்டும் மொழிவாரி மாநிலங்களின் - எந்த மொழியைத் தாய்மொழியாக, பேச்சுமொழியாக, எழுத்து மொழியாகக் கொண்டவர்கள் அதிகம் வசிக்கிறார்களோ, அந்த மாநிலங்களின் - மாநில மொழியே படிப்பில் இருந்து துரத்தப்படுவதைத்தான் சாகித்ய அகாதெமி கண்டிக்கிறது.

முதல் வகுப்பில் இருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை தாய்மொழியில் படிப்பதற்கு வசதி செய்து கொடுங்கள்; படிக்கச் செய்யுங்கள் என்கிறது அகாதெமி. அதில் மொழி திணிப்பு கிடையாது.

அசலான படிப்பு என்பது பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான அடிப்படையான படிப்புதான். அதற்கு மேலான படிப்பு என்பது பயிற்சி. படிப்பின் வழியாகப் பெறுவதுதான். படிப்பு என்பதே பயிற்சி ஆகி விட்டதால் - அதுவே படிப்பு - கல்வி என்றாகிவிட்டது.

உலகத்தின் மகத்தான விஞ்ஞானிகள், படைப்பு எழுத்தாளர்கள், கலைஞர்கள், சமூகச் சிந்தனையாளர்கள் எல்லாம் படித்து மேதையானவர்கள். அவர்களின் மேதைமையை அவர்கள் கண்டுபிடிப்புகள் - செயற்பாடுகள் - படைப்புகள் வழியாக நிலைநாட்டியிருக்கிறார்கள்.

உலகத்திலேயே மகத்தான ஞானி என்று போற்றப்படும் புத்தர் மகாதி என்ற மக்கள் மொழியில்தான் பேசினார்; அவர் ஒரு வரிகூட எழுதி வைக்கவில்லை.

சாக்ரட்டீஸ் கிரேக்க மொழியில்தான் பேசினார். மனிதர்களின் கண்டுபிடிப்புகளிலேயே உச்சமென சொல்லப்படும் மொழிகளையும் எழுத்துகளையும் அச்சிடும் முறையைக் கண்டுபிடித்த ஜோனான் கூடன்பர்க்கிற்கு ஜெர்மன் தவிர வேறு மொழியே தெரியாது.

அறிவு எந்த மொழியிலும் இல்லை. ஆனால், அறிவை எந்த மொழியின் மூலமாகவும் பெறலாம். வெளிப்படுத்தலாம். ஆனால், அதில் தாய்மொழிக்குத்தான் முதல் இடம். ஏனெனில் தாய்மொழி இயல்பானது. அது ஒருவனுடைய வாழ்க்கை, கலாசாரம், பண்பாடு ஆகியவை சார்ந்தது. பரம்பரையான அம்சங்கள் - சொல்லத் தெரிந்ததும் சொல்ல முடியாததும் சொல்லக்கூடாததும் - தாய்மொழியோடு சேர்ந்து வருகிறது.

ஆகையால்தான் உலகம் முழுவதிலும் தாய்மொழியில் படிக்க வேண்டும் என்று போராட ஆரம்பித்து இருக்கிறார்கள்.

ஒரு மனிதனிடம் இருக்கும் மகத்தான அறிவை தாய்மொழி வழியாகவே துல்லியமாகச் சொல்ல முடிந்திருக்கிறது. அதுவும் சரித்திரமாக இருக்கிறது. உலகத்தின் மகோன்னதமான படைப்பிலக்கியங்களையெல்லாம் தாய்மொழியில்தான் படைத்து இருக்கிறார்கள். அறிவியல், தத்துவக் கட்டுரைகளை தாய்மொழியில்தான் எழுதியிருக்கிறார்கள்.

அவற்றை அந்தந்த மொழியில்தான் படிக்க வேண்டும். அதற்காக, பல மொழிகள் கற்க முடியாது. தாய்மொழியில் மொழிபெயர்த்து படிப்பதுதான் இயல்பானது. மொழி பெயர்ப்பில் விட்டுப்போனதை தாய்மொழிப் படிப்பு கொடுத்து விடுகிறது.

சாகித்ய அகாதெமி சரியான நேரத்தில் எல்லாத் தாய்மொழிகளுக்கும் ஆதரவாகக் குரல் கொடுத்து இருக்கிறது. அது வேறு யார் காதில் விழுகிறதோ இல்லையோ, தமிழ் மக்களின், தமிழ்நாடு அரசின் காதில் விழ வேண்டும். ஏனென்றால், தாய்மொழிக்காகத் தொடக்கம் முதல் குரல் கொடுப்பவர்கள் நாம்தானே!

கட்டுரையாளர்: எழுத்தாளர்.சா. கந்தசாமி - நன்றி தினமணி


[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

தாய்மொழிக்குக் குரல் கொடுக்கும் சாகித்ய அகாதெமி! Empty Re: தாய்மொழிக்குக் குரல் கொடுக்கும் சாகித்ய அகாதெமி!

Post by malik Mon Sep 02, 2013 4:54 pm

தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சிமொழியாக இருக்கிறது. ஆனால், இங்கு முப்பதாண்டு காலமாகத் தமிழ் பெருமளவில் தடைபட்டுவிட்டது. மழலையர் பள்ளியில் இருந்து கல்லூரிப் படிப்பு வரையில் தமிழ் இல்லை. தமிழ்நாட்டில் ஒரு மாணவனோ - மாணவியோ தமிழ் மொழி ஒரு எழுத்தைக்கூட படிக்காமல் முனைவர் பட்டப் படிப்பையே முடித்துக்கொண்டு விடலாம். இந்தியாவில் வேறு பல மாநிலங்களில் இது சாத்தியம் இல்லை. ஏனெனில் அவை மூன்று மொழி மாநிலங்கள். அவர்களின் படிப்பில் தாய்மொழி சேர்ந்து விடுகிறது.
எதன் பொருட்டும் மொழிவாரி மாநிலங்களின் - எந்த மொழியைத் தாய்மொழியாக, பேச்சுமொழியாக, எழுத்து மொழியாகக் கொண்டவர்கள் அதிகம் வசிக்கிறார்களோ, அந்த மாநிலங்களின் - மாநில மொழியே படிப்பில் இருந்து துரத்தப்படுவதைத்தான் சாகித்ய அகாதெமி கண்டிக்கிறது.
மிகவும் மோசமான விஷயம், நம் தாய்மொழியே நம் படிப்பில் இருந்து ஒதுக்கப்படுவதுதான். தன் தாய்மொழியை மதிக்காதவர்கள் எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் அதனால் எந்த பெருமையும் இல்லை..!!


சாகித்ய அகாதெமி சரியான நேரத்தில் எல்லாத் தாய்மொழிகளுக்கும் ஆதரவாகக் குரல் கொடுத்து இருக்கிறது. அது வேறு யார் காதில் விழுகிறதோ இல்லையோ, தமிழ் மக்களின், தமிழ்நாடு அரசின் காதில் விழ வேண்டும். 
தாய்மொழிக்குக் குரல் கொடுக்கும் சாகித்ய அகாதெமி! 3838410834 
மிகவும் அருமையான கட்டுரை.. நன்றி சாமி அவர்களே..!! தாய்மொழிக்குக் குரல் கொடுக்கும் சாகித்ய அகாதெமி! 103459460
malik
malik
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழ் எழுத்தாளா் சோ. தருமன் உள்பட 24 பேருக்கு சாகித்ய அகாதெமி விருது
» உங்களது புகைப்படத்திற்கு குரல் வடிவம் கொடுக்கும் இணையம்,,,
» உரக்க குரல் கொடுக்கும் பெண்கள்: உதாசீனப்படுத்தும் பெற்றோர்
» உலகத்தில் அதிக சத்தமாக குரல் கொடுக்கும் பறவை.
» கங்கை எங்கே போகிறாள் - ஜெயகாந்தன் - சாஹித்திய அகாதெமி விருது பெற்ற நாவல் .

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum