ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெய்வீக தென்றல் தெரசா!

3 posters

Go down

தெய்வீக தென்றல் தெரசா! Empty தெய்வீக தென்றல் தெரசா!

Post by சிவா Sun Sep 01, 2013 8:42 am



கல்கத்தாவில் ஆதரவற்ற பிள்ளைகளை வளர்த்து வரும் சிசுபவன். ஒரு சிறுவனுக்கு ஆதரவாக யாரும் இல்லை. அவனை வளர்த்த மூதாட்டி தனது முடியாத நிலையில் சிசு பவனுக்கு அழைத்து வந்தார். அங்கே இருந்த சகோதரிகள் அவன் படித்து இருக்கிறான் என்பதை தெரிந்து கொண்டனர். அவனைப் பார்த்து “நீ வளர்ந்து பெரியவனான பிறகு என்னவாக விரும்புகிறாய்’ என்று கேட்டனர்.

அவன் சொன்னான்:

"நான் அன்னை தெரசாவாகப் போகிறேன்' என்று. அவனால் அதுபோன்று பின்னாளில் ஆக முடியவில்லை. ஆனால், அவன் இப்போது பாதிரியாராகப் பணிபுரிகிறார். அன்னை தெரசா போன்றும், பலருக்கும் உதவி செய்து வருகிறார். டாக்டர், இன்ஜினியர், அரசுப் பணி இப்படி எவ்வளவோ இருக்க அவன் தொண்டு பணி செய்ய தூண்டுதலாய் அமைந்ததற்கு "அன்னை தெரசா'தானே காரணம்.

உண்மையான தொண்டு உலகத்தையே உலுக்கி விட்டபோது, இந்த சிறுவன் எம்மாத் திரம். ஆனால், வயதில் குறைந்த சிறுவனையே கவர வேண்டும் என்றால் அன்னையின் அன்பு பணி அளவிட முடியாததாக இருந்திருக்க வேண்டும். நடிப்பு, போலி, விளம்பரம், எதுவு மில்லாத அன்னை தெரசாவின் தியாகத் தொண்டு அளப்பரியதன்றோ!

அன்னையின் பிறப்பு!

"ஸ்கோப்ஜே' அல்பேனிய அரசின் சிறு பகுதி. அமைதியின் சரணாலயம். அன்பின் எழில் நகரம். 25 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட தடாகத்தில்தான் அன்னை தெரசாள் என்ற ஆன்மீகத் தொண்டுமலர் பூத்தது.

யுகோஸ்லேவியா, ஏட்ரியாடிக் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள நாடு. யுகோஸ்லேவியாவிற்கு வடக்கே டினாரிக்ஸ், தெற்கே வளைகுடா மலையடி வாரத்தில் பெரிய பெரிய மரங்கள். அண்ணாந்து பார்த்தால், மரங்களின் உச்சியை பார்க்கக் கூட முடியாது அவ்வளவு உயரமான மரங்கள். புவியியல் ரீதியாக அழகான இந்த நாட்டில் தான் புவி முழுவதும் தன் சேவையால் அன்பின் அழகினை பரப்பி புகழ் பெற்ற அந்த பெண் பிறந்தாள்.

அந்த பெண்ணுக்கு அப்பா; நிக்கோலாஸ், அம்மா; டிரனாபில் பெர்னாய்.

ஆக்னஸ் கோன்ஷா பேஜாகியூ என்று அப்பெண்ணுக்கு பெயரிட்டனர் பெற்றோர். ஆக்னஸ் கோன்ஷா என்றால் அல்பேனிய மொழியில் "மலர் மொட்டு' என்று பொருள். பேஜாகியூ என்பது அவர்களது குடும்ப பெயர். ஆக்னஸ் கடைக்குட்டி, பெற்றவர் களுக்கு அவளே செல்லக்குட்டி, ஆக்னஸ் படிப்பிலோ படுச்சுட்டி. ஆக்னஸ் அப்பா சிறிய அளவில் மளிகை கடை ஒன்று நடத்தி வந்தார்.

ஆக்னஸ் 1910ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 26ம் தேதி பிறந்தார். ஆக்னஸின் அம்மா மிகுந்த இறைப்பற்று கொண்டவர். கிறிஸ்துவ சமயத்தை சேர்ந்த இக்குடும்பம் இயேசுநாதரின் போதனைகளின் படி வாழ்ந்து வந்த குடும்பம். அம்மா தன் மூன்று குழந்தைகளுக்கும் பைபிள் கற்று கொடுத்தார். தினமும் மாதாகோவில் சென்று பிரார்த்தனை செய்ய சொல்லி கொடுத்தார்.

ஆக்னஸின் அம்மா அறுசுவை உணவு அளித்தார். அதோடு, "பிறரை நேசி' என்ற ஆன்மீக உணர்வையும் ஊட்டினார்.

ஆக்னஸ் அன்னையானதற்கு காரணமான அவரின் அம்மா!

1914ம் ஆண்டு, "முதல் உலகப்போர் மூண்டது. போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளுள் ஒன்று யுகோஸ்லேவியா. பஞ்சமும், பிணியும், பசியும் தலைவிரித்து ஆடின.

ஆக்னஸின் பெற்றோரும் அவதிப்பட்டனர். அதன் பின்னர் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு ஆக்னஸின் தந்தை மறைந்தார்.

குடும்பம் கடுமையாக தத்தளித்தது. ஆனாலும் அம்மாவின் உழைப்பினாலும், மன உறுதியினாலும் அவர்கள் குடும்பம் ஓரளவு உயிர் பெற்றது. அம்மா தினமும் தன் குழந்தைகளுடன் பிரார்த்தனையில் ஈடுபடுவார்.

அம்மா துணிக்கடை ஒன்றை தொடங்கி நடத்தினார். பூ வேலைகளை அழகாக துணிகளில் செய்து பார்ப்போரை பரவசப் படுத்தினார். பூவேலைகளுடன் கூடிய ஆடைகள் ஆக்னஸை கவர்ந்தன. தினமும் ஒரு புத்தாடை அணிந்து மகிழ ஆக்னஸ் ஆர்வம் காட்டினாள். அப்பா இல்லாத குறை தெரியாமல் பிள்ளைகளை வளர்த்தார் அம்மா. பள்ளிக்கூடங்கள் என்பது தாய்ப்பால் போல் உரமும், உறுதியும் தரக் கூடியது. அதோடு முக்கியமாய் பாடங்களையும், ஒழுக்கங்களையும் கற்று தருவது. அவற்றை தொடர்ந்து இல்லங்களிலும் இப்பயிற்சி தொடரப்பட வேண்டும். இதை நன்கு தெரிந்து வைத்திருந்தார் ஆக்னஸின் அம்மா.

ஆக்னஸ் பண்பாடும், ஒழுக்கமும் நிரம்பப் பெற்றவளாக வளர்ந்தாள். ஆக்னஸின் ஒவ்வொரு செயலையும் உன்னிப்பாக கவனித்து வந்தார் அவள் அம்மா. ஆக்னஸ் தன்னுடன் படிக்கும் தோழிகள் அனைவரிடமும் சிரித்து பேசி நட்பாய் பழகி வந்தாள். தீயவர்களின் நட்பை நீக்க வேண்டும் நல்லவர்களின் நட்பை நாட வேண்டும் என்ற அம்மாவின் அறிவுரைப்படி ஆக்னஸ் நல்ல தோழிகளுடன் மட்டுமே உரையாடினாள், உறவாடினாள்.

பள்ளிப்பருவம் கற்பனை உலகில் பவனிவரும் பருவம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும் லட்சியம் இருக்கும். எழுத்து, பேச்சு, ஆடல், பாடல், கலை, விளையாட்டு என பல்வேறு துறைகளில் மாணவர்களுக்கு ஆர்வம் ஏற்படும். ஆக்னஸின் லட்சியம் சற்று வித்தியாசமாக விளங்கியது. அம்மா சொல்லி தந்த பண்பாடு, அடுத்தவருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற திசையில் அவளை திருப்பிற்று. துன்பம், வறுமை முதலியவற்றின் கொடுமைகளை கண்டு ஆக்னஸ் மனம் வருந்தினாள். எனவே, ஏழை எளியவர்களுக்கு என்றும் சேவை செய்வதே தனது லட்சியம் என கொண்டாள்.

பன்னிரண்டு வயதில் பளிச்சென்று இப்படி ஓர் உயரிய நோக்கு வர காரணம் இருந்தது. அது ஆக்னஸின் அம்மாவின் வளர்ப்பு. அன்னை தெரசாவின் அன்பு பணியை நாமும் செய்ய முயல்வோம்!

தினமலர்


தெய்வீக தென்றல் தெரசா! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தெய்வீக தென்றல் தெரசா! Empty Re: தெய்வீக தென்றல் தெரசா!

Post by அசுரன் Sun Sep 01, 2013 3:39 pm

அன்னையின் பணி மகத்தானது. அவர் நாடு மதம் இறைவன் அனைவரையும் கடந்தவர்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

தெய்வீக தென்றல் தெரசா! Empty Re: தெய்வீக தென்றல் தெரசா!

Post by Muthumohamed Mon Sep 02, 2013 11:17 am

பன்னிரண்டு வயதில் பளிச்சென்று இப்படி ஓர் உயரிய நோக்கு வர காரணம் இருந்தது. அது ஆக்னஸின் அம்மாவின் வளர்ப்பு. அன்னை தெரசாவின் அன்பு பணியை நாமும் செய்ய முயல்வோம்!

கண்டிப்பாக அவரளவில் முடியாவிட்டாலும் நமக்கு முடிந்த அலைவிலாவது அன்பு பணியை செய்ய முயற்சிக்க வேண்டும்



தெய்வீக தென்றல் தெரசா! Mதெய்வீக தென்றல் தெரசா! Uதெய்வீக தென்றல் தெரசா! Tதெய்வீக தென்றல் தெரசா! Hதெய்வீக தென்றல் தெரசா! Uதெய்வீக தென்றல் தெரசா! Mதெய்வீக தென்றல் தெரசா! Oதெய்வீக தென்றல் தெரசா! Hதெய்வீக தென்றல் தெரசா! Aதெய்வீக தென்றல் தெரசா! Mதெய்வீக தென்றல் தெரசா! Eதெய்வீக தென்றல் தெரசா! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

தெய்வீக தென்றல் தெரசா! Empty Re: தெய்வீக தென்றல் தெரசா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum