ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருவி ! கவிதை இலக்கிய காலாண்டிதழ் இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர் ந .சீனிவாசன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Go down

அருவி !  கவிதை இலக்கிய காலாண்டிதழ்    இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர்  ந .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Empty அருவி ! கவிதை இலக்கிய காலாண்டிதழ் இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர் ந .சீனிவாசன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Sat Aug 24, 2013 5:27 pm

அருவி !

கவிதை இலக்கிய காலாண்டிதழ்


இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர் ந .சீனிவாசன் !செல் 9600898806

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

தனி இதழ் 25 .ஆண்டு சந்தா 100.
14.நேரு பஜார் ,திமிரி .632512.ஆற்காடு வட்டம் ,வேலூர் மாவட்டம் .

கவிதை கவிதை கவிதை தவிர வேறொன்றுமில்லை சொல்லும் வகையில் முழுக்க முழுக்க கவிதைகள் மட்டுமே .முத்தமிழ் போல ,முப்பால் போல , முக்கனி போல மரபுக் கவிதை , புதுக் கவிதை , ஹைக்கூ கவிதை மூன்று வகைப்பாவும் உள்ளன . பாராட்டுக்கள் .ஆசிரியர் கவிஞர் காவனூர் ந .சீனிவாசன் அவர்களின் கடின உழைப்பை உணர முடிகின்றது .128 பக்கங்கள் உள்ளன .102 பக்கங்கள் கவிதைகள் . 26 பக்கங்கள் நூல் விமர்சனங்கள், மடல்கள் உள்ளன . படித்து விட்டு தூக்கிப்போடும் சராசரி இதழ் அல்ல இது .பாதுக்காப்பாக வைத்து இருந்து , கவிதையின் மீது காதல் வரும் நேரமெல்லாம் எடுத்துப் படிக்கும் நூல் இது .

.94 கவிஞர்களின் பெயர் செல் எண்ணுடன் பிரசுரம் செய்து படைப்பாளிகள் ஒருவர்க்கு ஒருவர் தொடர்பு கொள்ள வசதியாக பாலமாக உள்ள்ளார் ஆசிரியர் கவிஞர் காவனூர் ந .சீனிவாசன் .கவிதைகளைத் தேர்ந்தெடுத்து பிரசுரம் செய்து இருப்பதால் படிக்க மிகச் சுவையாக உள்ளன . நூலில் உள்ள அனைத்துக் கவிதைகளும் சிறப்பாக இருந்தாலும் பதச் சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு . நூலின் அட்டையில் உள்ள இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர் ந .சீனிவாசன் ! கவிதை மிக நன்று .

மரபுக் கவிதை மனதில் தங்கும் கவிதை .தமிழன் பெருமையை, அருமையைப் பறை சாற்றும் கவிதை

முனைவர் ஆலந்தூர் கோ .மோகனரங்கன் .

பொன்கொடுத்தால் நிறைந்திடுமா நெஞ்சம் ? கொஞ்சம்
புதுவாழ்வில் தமிழிருக்க வேண்டா மா ? சொல் !

கண்கொடுத்தால் போதாது ! சுவைப்ப தற்குக்
கரும்புதந்தால் போதாது !வையம் ஆளும்

மண்கொடுத்தால் போதாது ! வனப்புமிக்க
மாளிகையும் போதாது ! தமிழ்தான் வாழ்வில்

பெருஞ்செல்வம் என்றுணர்ந்து புரிப்போமே !

தேர்தல்அவலம் பற்றி வென்ற வேட்பாளர்களின் நிலை பற்றி உணர்த்தும் கவிதை ஒன்று மிக நன்று .

சுவாமி .இராமானுஜம் பெங்களூர்

பரிவும் பாசமும் இனிப்பாய் வரும்
தேர்தல் முடிந்த மூன்றாம் நாள்

முனியனையும் கலியனையும்
காமாட்சியையும் மீனாட்சியையும்

யார் நீ !என்று கேட்பார் .இதுதான் வழக்கம் !
இருப்பினும் அடுத்தமுறையும் வருவார்

அன்புடன் வரவேற்பது நமது பழக்கம்
மறப்பது நமது மாண்பு .
மறதி வாழ்க !

திண்ணைகள் அழிந்து வரும் காலத்தில் திண்ணையை நினைவூட்டும் கவிதை .

பாவலர் கருமலைப்பழம் நீ . சென்னை .39.

ஓரிரு கிராமங்களில் இன்றும்
ஆயிரம் கதைகளைச்
சொல்லிக் கொண்டிருக்கின்றன
திண்ணைகள் .

பிள்ளைகளின் ஆடுங்களமாய் ,
பாடுங்களமாய் ,

வெட்டிப் பேச்சுகளின் அரங்கமாய் ,
முதியோர்களுக்கு படுக்கை விரிப்பாய்

பூனைக்கும் நாய்க்கும்
இளைப்பாறல் இடமாய் ...

இன்பம் பகிந்து கொண்டால் இரட்டிப்பாகும் .துன்பம் பகிந்து கொண்டால் பாதியாகும் .இந்த உண்மை அறியாமல் பலர் துன்பத்தை பகிர்வதே இல்லை .அதனை உணர்த்தும் கவிதை .

கவிஞர் கா .ந .கல்யாணசுந்தரம் .

ஆம்
பிறரிடம் பகிரப்படாத
துன்பங்களுடன் எனது
மனமும் முன்வரிசையில்
அமர்ந்திருக்கிறது .

பாரம் சுமப்போர் போட்டியில்
கலந்துகொள்ள
தோள்களின் தோழமையோடு !

பறவைகள் பேசுவது போன்ற கவிதை மூலம் கவிஞர் நம்முடன் பேசும் கவிதை நன்று .

கவிஞர் சோ .சரவணபவா .திமிரி .

நாங்கள் வண்ணத்தோடு மட்டுமே
வாழ்கிறோம் .
வருணத்தோடு இல்லை .

சாதி சாத்திரம்
எங்களிடம் கிடையாது .

எங்கள் காதலால்
எந்த ஊரும் எரியாது .

நல்ல வேளை
நாங்கள் மனிதர்களாக
பிறக்கவில்லை .

அப்படி பிறந்திருந்தால்
விண்ணைத் தொடும் சிறகுகள்
முளைக்காமல் போயிருக்கும் ... !

மீசை மீது ஆசையில்லா ஆண் இல்லை .ஆணின் மன உணர்வை படம் பிடித்துக் காடும் கவிதை நன்று .

கவிஞர் பொன் குமார் .சேலம் .

அம்மா இறந்தபோது
காரியத்திற்காக மழிக்கப்பட்டது .
அம்மா இல்லாததை விடவும்
அதிகமாகவே கவலையளித்தது
முகத்தில் இல்லாத மீசை !

பிறந்த மண் பாசம் எல்லோருக்கும் உண்டு .பிறந்த மண்ணைப் பிரியும் வலி சொல்லில் அடங்காது .கிராமிய மொழியில் ஒரு கவிதை மிக இயல்பாக உள்ளது .

கவிஞர் பாரியன்பன் . குடியாத்தம் .

இப்ப என் மவன் மேல்படிப்புக்கு
குடும்பத்தோட எல்லோருமா டவுனுக்கு குடியிறுக்க

எம் பொண்டாட்டி சொல்றா
ஒறவைக் கூட பிரின்சிரலாம் சொந்த ஊரைப் பிரியிறது
ரொம்ப கஷ்டம்டா மவனே !

எனது ஹைக்கூ கவிதைகளும் நூலில் இடம் பெற்றுள்ளன . ஹைக்கூ கவிதைகள் யாவும் மிக நன்று . சில மட்டும் உங்கள் பார்வைக்கு .

அமுதபாரதி . சென்னை .

ஒவ்வொரு கணத்தையும்
உணர்த்துகிறது
ஓடும் கடிகாரம் !

இரா .தயாளன் .திருவாய்நல்லூர் .

எறும்புகள் தூக்கி செல்கிறது
வண்ணத்துப்பூச்சியின்
இறுதி ஊர்வலம் !

கவிஞர் ஆரிசன் கீழக் கொடுங்காலூர் .

இறந்தவர் கொடை
மரணத்திலும் உயிர்பெற்றது
கண்கள் !

நூல் முழுவதும் கவிதைகள் உள்ளன .வாசகனை சிந்திக்க வைக்கின்றன . இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர்
ந .சீனிவாசன்அவர்களுக்கு பாராட்டுக்கள் .தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் - முனைவர் நிர்மலா மோகன் இலக்கிய இணையர் நல்லிதழ் விருது .அருவிக்கு - பொதிகை மின்னல் தமிழ்ப்பணி வழங்கி சிறப்பித்துள்ளது .விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் .

.
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

Back to top

- Similar topics
» வண்டாடப் பூ மலர ! நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் !
» இலக்கிய அலைவரிசை ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ பேராசிரியர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» இலக்கிய அமுதம் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» இலக்கிய முற்றம் நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ பேராசிரியர் இரா .மோகன் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum