ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறகு முளைத்த பூக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் கவிவாணன் ! நூல் விமர்சனம் . கவிஞர் இரா .இரவி !

3 posters

Go down

சிறகு முளைத்த பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கவிவாணன் !  நூல் விமர்சனம் . கவிஞர்  இரா .இரவி ! Empty சிறகு முளைத்த பூக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் கவிவாணன் ! நூல் விமர்சனம் . கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Thu Aug 15, 2013 8:23 am

சிறகு முளைத்த பூக்கள் !
நூல் ஆசிரியர் கவிஞர் கவிவாணன் !செல் 9965039935.

நூல் விமர்சனம் . கவிஞர் இரா .இரவி !

ஓவியா பதிப்பகம் .17-16-5எ .கே .கே .நகர் .வத்தலக்குண்டு .642202.
செல் 7667557114.

இனிய நண்பர் கவிஞர் வதிலை பிரபா அவர்களின் பதிப்புரை நன்று .அட்டைப்படங்கள், உள் ஓவியங்கள், அச்சு அனைத்தும் மிக நன்று .பாராட்டுக்கள் .வளரும் கவிஞர்களைத் தட்டிக் கொடுத்து வளர்த்து விடும் தாயுள்ளம் கொண்ட தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களின் அணிந்துரை நூலிற்கு மணிமகுடமாக உள்ளது .ஓவியக் கவிஞர் ஸ்ரீரசா அவர்களின் அணிந்துரையும் நன்று .முனைவர் ச .சரவண ஜோதி வாழ்த்துக் கவிதை நன்று .ஆசிரியர் கவிஞர் கவிவாணன் சிற்றிதழ்களில் தொடர்ந்து எழுதி வரும் படைப்பாளி . ஓய்வறியா உழைப்பாளி . கவிதைகளை பிரசுரம் செய்த இதழ்களின் பெயரை மறக்காமல்எழுதி நன்றியைப் பதிவு செய்தது சிறப்பு .இந்த நூலினை அவரது அன்னை அ.அசரபுன்னிசா அவர்களுக்கும் ஹைக்கூ ஆய்வாளர் கவிஞர் அமரன் அவர்களுக்கும் காணிக்கை ஆக்கி உள்ளார் .
.
இலக்கியத்தில் இனிமையானது கவிதை .கவிதைகளில் பரவலாக பலரால் விரும்பப்படும் வடிவம் ஹைக்கூ .ஆரம்ப காலத்தில் ஹைக்கூ கவிதையை குறை சொன்னவர்களும் ஹைக்கூ வளர்ச்சி எழுச்சி கண்டு பிரமித்து விட்டனர் .1997 முதல் இன்று வரை எழுதிய ஹைக்கூ கவிதைகள் ,ஹைக்கூ அந்தாதி ,ஹைபுன் கவிதைகளின் தொகுப்பு இந்த நூல் .சிறகு முளைத்த பூக்கள் ! நூலில் தலைப்பே கவித்துவமாக உள்ளது .வித்தியாசமாக உள்ளது .பூக்களை ஒட்டி உள்ள இலைகளை சிறகுகளாகப் பார்க்கும் கவி மனம் நன்று .பாராட்டுக்கள் . நூலைப் படிக்கும் வாசகனுக்கும் சிந்தனை சிறகு முளைக்கும் விதமாக ஹைக்கூ உள்ளன .சிந்திக்க வைக்கின்றன .சிற்பி சிலை வடிக்கும் நுட்பத்துடன் ஹைக்கூ வடித்துள்ளார் .இனிய நண்பர் நூல் ஆசிரியர் கவிஞர் கவிவாணன் வேலை கிடைக்காது வருந்தும் இளைஞன் வேதனையை மிக நுட்பமாக வடித்துள்ளார் .

கரும்பும் வேம்பும் ஒன்று
கற்றவனுக்கு
வேலை தராத அரசு !

மொட்டுகளைக் கருக்கும் விதமாக பிஞ்சுக் குழந்தைகளுக்கு புத்தகம் என்ற பெயரில் பொதி சுமக்க வைக்கும் அவலத்தை சாடும் விதமாக உள்ள ஹைக்கூ நன்று .

சிலுவை சுமந்த எசுவாய்
குனிதே
பள்ளி செல்லும் பையன் !

இயேசு கூட உயிர்த்து எழுத்தாகச் சொல்வார்கள் .வாடிடும் குழந்தைகள் மீண்டிட வழியே இல்லையா எண்டு சிந்திக்க வைக்கின்றது .

கவிதை எழுதும் படைப்பாளியின் வறுமையைக் காட்சிப் படுத்தி வெற்றி பெறுகின்றார் .

தபால் செலவில் தடுக்கி
அலமாரி இடுக்கில் விழுந்தது
மீண்டும் மீண்டும் கவிதை !

கவிதைக்கு கற்பனை அழகு .கற்பனையும் கவிதைக்கு அழகு என்பதை உணர்த்தும் ஹைக்கூ மிக நன்று .

தவறி விழுந்த
நட்சத்திரங்களா ?
இருள் பள்ளத்தில் மின்மினிகள் !

கடவுளின் பெயரால் மதத்தின் பெயரால் மோதிக் கொள்ளும் ,மோதிக் கொல்லும் அவலத்தை ,பகுத்தறிவைப் பயன்படுத்தாமல் வன்முறை விதைக்கும் மூடத்தனத்தை சாடும் விதமான ஹைக்கூ நன்று .

அன்பு வழி மதம்
கடவுள் சிலையில்
மனித இரத்தம் !

குஜராத்தில் நடந்த வன்முறையை கலவரத்தை யாராலும் எளிதில் மறந்து விட முடியாது .அதனை நினைவூட்டும் விதமாக உள்ள ஹைக்கூ ஒன்று .

தீபகற்ப இந்தியாவில்
கர்ப்பிணி வயிற்றில் தீ
குஜராத் !

.காதலர்களின் மனதை படம் பிடித்துக் காட்டும் விதமாக ஹைக்கூ .

நிறையப் பேச
நினைக்கிறது மனசு
பிரிவின் கணத்தில் !

அன்று வெள்ளையனே வெளியேறு என்றோம் .இன்று வெள்ளையனே வருக கொளையடிக்க வருக என்று ரத்தினக் கம்பளம் விரிக்கின்றனர் அரசியல்வாதிகளின் முகத்திரை கிழிக்கும் வண்ணம் உள்ள ஹைக்கூ .

சில்லறை வணிகம்
அன்னிய முதலீடு
சில்லறையான அரசு !

காதலியைப் பற்றி ஒரு கவிஞனால் எழுதாமல் இருக்க முடியாது .

தாஜ்மகால்
அழகுதான்
உன்னை விடவா ?

காட்சிப்படுத்தும் நுட்பம் உணர்ந்து வடித்த ஹைக்கூ மிக நன்று .

புல்லாங்குழலில்
வண்ணத்துப் பூச்சி
இசைக்குமோ ?

ஹைபுன் கவிதைகள் ,ஹைக்கூ அந்தாதி புதிய முயற்சி பாராட்டுக்கள் .நூல் விமர்சனத்தில் நூலில் உள்ள அனைத்தையும் குறிப்பிட முடியாது என்பதால் இத்துடன் முடிக்கிறேன் .மற்றவை வெள்ளித் திரையில் காண்க என்பதைப் போன்று மற்றவை நூல் வாங்கிப் படித்துக் காண்க !நூல் ஆசிரியர் கவிஞர் கவிவாணன்அவர்களுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் .
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1818
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

சிறகு முளைத்த பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கவிவாணன் !  நூல் விமர்சனம் . கவிஞர்  இரா .இரவி ! Empty Re: சிறகு முளைத்த பூக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் கவிவாணன் ! நூல் விமர்சனம் . கவிஞர் இரா .இரவி !

Post by பூவன் Thu Aug 15, 2013 9:54 pm


கடவுளின் பெயரால் மதத்தின் பெயரால் மோதிக் கொள்ளும் ,மோதிக் கொல்லும் அவலத்தை ,பகுத்தறிவைப் பயன்படுத்தாமல் வன்முறை விதைக்கும் மூடத்தனத்தை சாடும் விதமான ஹைக்கூ நன்று .
அன்பு வழி மதம்
கடவுள் சிலையில்
மனித இரத்தம் !

காதலர்களின் மனதை படம் பிடித்துக் காட்டும் விதமாக ஹைக்கூ .

நிறையப் பேச
நினைக்கிறது மனசு
பிரிவின் கணத்தில் !
நூலின் தரத்தை சொல்லும் விதமாக நல்ல விமர்சனம் ஐயா , விம்ரசனம் நூலை படிக்க தூண்டும் விதமாக உள்ளது சூப்பருங்க 
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

சிறகு முளைத்த பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கவிவாணன் !  நூல் விமர்சனம் . கவிஞர்  இரா .இரவி ! Empty Re: சிறகு முளைத்த பூக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் கவிவாணன் ! நூல் விமர்சனம் . கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Fri Aug 16, 2013 8:17 am


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !


eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1818
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

சிறகு முளைத்த பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கவிவாணன் !  நூல் விமர்சனம் . கவிஞர்  இரா .இரவி ! Empty Re: சிறகு முளைத்த பூக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் கவிவாணன் ! நூல் விமர்சனம் . கவிஞர் இரா .இரவி !

Post by பார்த்திபன் Fri Aug 16, 2013 12:20 pm

வழக்கம்போல அருமையான விமர்சனம்.மகிழ்ச்சி 
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

சிறகு முளைத்த பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கவிவாணன் !  நூல் விமர்சனம் . கவிஞர்  இரா .இரவி ! Empty Re: சிறகு முளைத்த பூக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் கவிவாணன் ! நூல் விமர்சனம் . கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Fri Aug 16, 2013 7:03 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1818
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

சிறகு முளைத்த பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கவிவாணன் !  நூல் விமர்சனம் . கவிஞர்  இரா .இரவி ! Empty Re: சிறகு முளைத்த பூக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் கவிவாணன் ! நூல் விமர்சனம் . கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Fri Aug 16, 2013 7:05 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1818
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

சிறகு முளைத்த பூக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் கவிவாணன் !  நூல் விமர்சனம் . கவிஞர்  இரா .இரவி ! Empty Re: சிறகு முளைத்த பூக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் கவிவாணன் ! நூல் விமர்சனம் . கவிஞர் இரா .இரவி !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» விரியும் உலகு ! நூல் ஆசிரியர் கவிஞர் கவிவாணன் .நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» சுட்டும் விழி நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி நூல் விமர்சனம் கவிஞர் கவிவாணன்
» ஒரு வானம் இரு சிறகு ! நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» கால் முளைத்த கனவுகள்! நூல் ஆசிரியர் : பாவலர் கருமலைத் தமிழாழன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.!
» சின்னச் சின்னப் பூக்கள் நூல் ஆசிரியர் கவிஞர் பூ.வைத்தியலிங்கம் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum