ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயற்கை விவசாயத்தை நம்பும் பட்டதாரி

3 posters

Go down

இயற்கை விவசாயத்தை நம்பும் பட்டதாரி Empty இயற்கை விவசாயத்தை நம்பும் பட்டதாரி

Post by பார்த்திபன் Mon Aug 12, 2013 1:08 pm

மனிதனின் ஆயுட்காலம் குறைந்து கொண்டே செல்கிறது. அதற்கு காரணமாக இருப்பது, ஆடு, மாடுகளின் சாணங்கள், வேப்பிலை உள்ளிட்ட இயற்கை உரங்களினால் விளைந்த உணவு பொருட்களுக்கு பதில், நச்சு தன்மை கொண்ட ரசாயன உரம் மற்றும் பூச்சி மருந்துகளால் விளையும் உணவு பொருட்களை உட்கொள்ள வேண்டிய சூழலுக்கு நாம் தள்ளப்பட்டுள்ளது தான்.

இந்த நிலையில், ரசாயன உரம் மற்றும் பூச்சி மருந்துகளால், மாயமான மண் வளத்தையும், விவசாயத்தினை நம்பியுள்ளகிராமப்புறங்களை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கிலும், பட்டதாரி இளைஞர்கள் 13 பேர், ‘நல்ல சந்தை’ விவசாய பொருள் உற்பத்தியாளர்கள் சங்கம் என்ற அமைப்பினை துவங்கி நடத்தி வருகின்றனர்.அவர்கள் திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூரை அடுத்த பாக்கம் கிராமத்தில், ‘நல்ல கீரை’ என்ற பெயரில் இயற்கை விவசாயம் மேற்கொண்டு வருவதோடு, அந்த விவசாயத்தை மக்களிடம் கொண்டு செல்லும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

10ஆண்டுகளாக...:
இதுகுறித்து, ‘நல்ல சந்தை’யின் முக்கிய நிர்வாகியான ஜெகநாதன் கூறியதாவது:திருவள்ளூர் மாவட்டம், பாலவேடு ஊராட்சிக்கு உட்பட்ட மேலப்பேடு கிராமத்தினை சேர்ந்தவன் நான். கிராமப்புற முன்னேற்றத்திற்காக உழைக்க வேண்டும் என்பதே என் நீண்ட கால விருப்பம்.அதை நிறைவேற்ற, முதல் கட்டமாக, எங்கள் கிராமத்தில், ‘சிறகு’ என்ற பெயரில் சர்வதேச தரத்திலான உயர்நிலை பள்ளியை, கடந்த 10 ஆண்டுகளாக நடத்தி, கிராமப்புற சிறுவர்களுக்கு இலவச கல்வி வழங்கி வருகிறேன். விவசாயிகளின் வறுமை நிலை தொடர்பாக, 10 ஆண்டுகளுக்கு முன், மேலப்பேடு கிராமத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டதில், விவசாயிகளின் வருமானத்தில், 60 சதவீதம்,ரசாயன உரம் மற்றும் பூச்சி மருந்து, மருத்துவம், ஆல்கஹால் ஆகியவைக்கு செல்வது தெரிய வந்தது.அந்த செலவை கட்டுப்படுத்தினால் கிராம முன்னேற்றம் சாத்தியமாகும் என்பதையும், அதை இயற்கை விவசாயத்தால் சாத்தியமாக்கலாம் என்பதையும் உணர்ந்தேன். காரணம், இயற்கை விவசாயத்தால், ரசாயன உரம், பூச்சி மருந்து செலவு ஏற்படாது.இயற்கை விவசாயத்தால் விளையும் உணவு பொருட்களால் உடல்நலத்திற்கு தீங்கு ஏற்படாது. எனவே, மருத்துவ செலவிற்கு வாய்ப்பில்லை. ஆல்கஹால் செலவை தவிர்க்க, மதுவிலக்கை அமல்படுத்த,எங்கள் கிராமத்தில் மது, புகையிலை தீண்டா இளைஞர்கள் சங்கத்தினை நண்பர்களோடு இணைந்து நடத்தி வருகிறேன்.இயற்கை விவசாயத்தினை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள தென்மாநிலங்கள் முழுவதும் சுற்றி, சாதனை படைத்த இயற்கை விவசாயிகளோடு தங்கி அவர்களின் அனுபவத்தை பாடமாக பெற்றுள்ளேன்.

அதிக லாபம்:
ரசாயன உரம், பூச்சி கொல்லிகளை தெளித்து மேற்கொள்ளும் விவசாயத்தில், ஓராண்டில், ஒரு ஏக்கருக்கு 25 மூட்டை நெல்தான் கிடைக்கும். இயற்கை விவசாயத்தில் 80 மூட்டை நெல் கிடைக்கும். அதே போல், கரும்பு சாகுபடியிலும், பூச்சி கொல்லி விவசாயத்தில் ஏக்கருக்கு 40 டன் முதல் 60 டன் வரை தான் கரும்புகிட்டும். இயற்கை விவசாயத்தில் 100 டன் கரும்பு கிட்டும்.தமிழகத்தில் பெருமளவிலுள்ள குறுவிவசாயிகள், அந்த 2 ஆண்டுகாலம் ஏற்படும் பொருளாதார இழப்பை சுமக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.ஆனால், விவசாயிகள் மண்ணை வளப்படுத்த, இழப்பை சுமக்க வேண்டிய அவசியம் இல்லை. தங்கள் நிலத்தின் சிறு பகுதியில் இயற்கை விவசாயம் மூலம் கீரையை பயிரிட்டு, அதிக லாபத்தை பெறலாம். பெரும் பகுதியை வளப்படுத்தலாம்.காரணம், 5 ஏக்கரில் நெல் சாகுபடி செய்தால்தான், 25 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கும். ஆனால், அரை ஏக்கரில் கீரையை பயிரிட்டு, 25 ஆயிரம் ரூபாயை பெற முடியும்.இந்த விஷயங்களை எல்லாம் மக்களிடம் கொண்டு சென்று, இயற்கை விவசாயத்தை வளர்த்தெடுக்க, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், ‘நல்ல சந்தை’ அமைப்பு, பட்டதாரி இளைஞர்களான, வில்லிவாக்கம், திருநின்றவூர், நங்கநல்லூர், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ராதாகிருஷ்ணன், சரவணன், சிவகுமார், திருமலை, புனிதா, விசு, ராமு,அறிவுக்கரசன், கவுதம், சியாம், சலோமி ஏசுதாஸ் ஆகிய என் நண்பர்கள் மற்றும் இயற்கைவிவசாயத்தில் ஆர்வம் கொண்டவர்கள் என, 13 பேரோடு துவங்கப்பட்டது.

30 ஏக்கர்:
எங்கள் அமைப்பின் ஒரு பிரிவான, ‘நல்ல கீரை’என்ற அமைப்பு மூலம், பாக்கம் கிராமத்தில் 6 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, இயற்கை விவசாயம் செய்து வருகிறோம். அரிதான நெல் வகைகள், காய்கறி வகைகளை பயிரிட்டு வருகிறோம்.தினசரி, 1,500 கீரைக்கட்டுகளை திருவான்மியூர், அம்பத்துார், அடையாறு, வளசரவாக்கம்,அண்ணா நகர், கோடம்பாக்கம், வடபழனி உள்ளிட்ட பகுதிகளில், எங்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் மூலம் விற்று வருகிறோம்.எங்கள் அமைப்பு மூலம், ஊத்துக்கோட்டையில் இருளர் மக்கள், 30 ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்து வருகின்றனர். மேலும், சமீபகாலமாக, மேலப்பேடு கிராமத்தில் இயங்கும் எங்கள் அலுவலகத்தில், விவசாயிகளுக்கு, இயற்கை விவசாயம் குறித்து பயிற்சிகள் வழங்கி வருகிறோம்.இயற்கை விவசாயம் மூலம் கிராமப்புறங்களை முன்னேற்றும் பணியிலும், பொதுமக்களுக்கு ஆரோக்கியமான உணவு பொருட்கள் கிடைப்பதற்கான நடவடிக்கைகளிலும், ‘நல்ல சந்தை’ மற்றும் ‘நல்ல கீரை’ அமைப்புகள் தொடர்ந்து இயங்கும்.இவ்வாறு, ஜெகநாதன் கூறினார்.

நாங்கள் எங்கள் நிலத்திலுள்ள அரை ஏக்கர் நிலத்தில், சிறுகீரை, காசினி கீரை, புளிச்ச கீரை, தண்டு கீரை, பொன்னாங்கண்ணி, வல்லாரை, கரிசலாங்கண்ணி, அகத்திக் கீரை உள்ளிட்ட 30 வகையான கீரைகளை பயிரிட்டு, அறுவடை செய்து வருகிறோம்.

ஜெகநாதன், ‘நல்ல சந்தை’யின் நிர்வாகி
நன்றி: http://tamil.yahoo.com
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

இயற்கை விவசாயத்தை நம்பும் பட்டதாரி Empty Re: இயற்கை விவசாயத்தை நம்பும் பட்டதாரி

Post by யினியவன் Mon Aug 12, 2013 1:17 pm

சூப்பருங்க 

நல்ல பகிர்வு பார்த்திபன் - சிறக்கட்டும் இவர்கள் முயற்சி.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இயற்கை விவசாயத்தை நம்பும் பட்டதாரி Empty Re: இயற்கை விவசாயத்தை நம்பும் பட்டதாரி

Post by ராஜா Mon Aug 12, 2013 1:25 pm

சூப்பருங்க நன்றி சிறந்த பகிர்வு , நல்ல முயற்சி தோழர்களே.

எனக்கும் விவசாயத்தில் ஈடுபடவேண்டுமென்ற ஆசை உள்ளது , கணினி துறை போரடித்துவிட்டது விரைவில் தொடர்பு கொள்ளுகிறேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இயற்கை விவசாயத்தை நம்பும் பட்டதாரி Empty Re: இயற்கை விவசாயத்தை நம்பும் பட்டதாரி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum