ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கரூருக்கு மீண்டும் வரக்கூடாது!

5 posters

Go down

கரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Empty கரூருக்கு மீண்டும் வரக்கூடாது!

Post by சாமி Sun Jul 28, 2013 10:26 am

கருவூருக்கு மீண்டும் வரக்கூடாது!
கரூரில் வாரியார் சுவாமிகள் தொடர் சொற்பொழிவு முடிவடையும் நாள். பாராட்டு விழா! பாராட்டிப் பேசிய அன்பர் ஒருவர், "மீண்டும் வாரியார் சுவாமிகளின் பேச்சை எப்போது கேட்போமோ...' என்ற ஏக்கத்தோடு, ""மீண்டும் கரூருக்கு எப்போது வருவீர்கள்?'' என்று ஆதங்கத்துடன் கேட்டார். அதற்கு வாரியார் சுவாமிகள், ""கரூருக்கா? கருவூருக்கு மீண்டும் வரக்கூடாது என்பதற்காகத்தானே இத்தனை ஆண்டுகள் இறைவனை வேண்டி பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன். என்னை மீண்டும் கருவூருக்கு வாருங்கள் என்று சொல்கிறீர்களே...!'' என்றாரே பார்க்கலாம். அரங்கம் கையொலியால் அதிர்ந்தது!
(ஆதாரம் - "பெரிய மனிதர்கள் அரிய செய்திகள்')

உள்ளத்தில் நல்ல உள்ளம்!
"சத்தியவான் சாவித்திரி’ நாடகத்தில் எமன் வேஷத்தில் நடிக்க வேண்டியவர் வராததால் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவ்வேடத்தில் நடித்தார்.
நள்ளிரவு 12 மணிக்கு எமன் வருவார். விடியற்காலை 5 மணி வரை சாவித்திரி கதறி அழுத பிறகு எமன் சத்தியவான் உயிரைத் திருப்பிக் கொடுப்பார்.
ஆனால் வழக்கத்துக்கு மாறாக எமன் வேடத்தில் நடித்த என்.எஸ்.கிருஷ்ணன், சாவித்திரி கதறியழுத மறுநிமிடமே சத்தியவானை உயிரோடு கொடுத்துவிட்டார்.
நாடகத் தயாரிப்பாளர் என்.எஸ்.கிருஷ்ணனை இதற்காக மிகவும் கடிந்து கொண்டார்.
அதற்கு என்.எஸ்.கிருஷ்ணன் சொன்ன பதில் இது:
""கணவனை இழந்த ஒரு பெண் கதறியழும்போது அதைப் பார்த்துக் கொண்டு என்னால் எப்படி சும்மா இருக்க முடியும்?’’
நடிப்புக்காகக் கூட இன்னொருவர் துன்பத்தைக் காணச் சகியாத கிருஷ்ணனின் நல்ல உள்ளத்தை அறிந்து தயாரிப்பாளர் சமாதானமானார்.
("என்.எஸ்.கிருஷ்ணன்’ -நூலிலிருந்து)

கொஞ்சி விளையாடிய "தமிழ்'!
1977 முதல் 1980 வரை அ.தி.மு.க ஆளுங்கட்சியாக இருந்த சமயம், முதலமைச்சராக எம்.ஜி.ஆரும், நிதி அமைச்சர் மற்றும் அவை முன்னவராக நாஞ்சில் மனோகரனும் இருந்தார்கள். சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் கலைஞர் கருணாநிதி. சட்டசபையில் முதல்வர் எம்.ஜி.ஆர். தாக்கல் செய்யவேண்டிய அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்படாமல் தள்ளிக்கொண்டே போனது. எம்.ஜி.ஆரும் சபைக்கு வரவில்லை. இதுபற்றி எதிர்க்கட்சித் தலைவர் கருணாநிதி மன்றத்தில் எழுந்து, ""முதல்வர் ஏன் இன்னும் அறிக்கை தாக்கல் செய்யவில்லை?'' என்று வினவினார். உடனே அவை முன்னவர் நாஞ்சில் மனோகரன் எழுந்து, ""முதல்வருக்கு உடல் நலமில்லை. அவர் சபைக்கு திங்கட்கிழமை வந்து அறிக்கை தாக்கல் செய்வார்'' என்றார். திங்களும் வந்தது. எம்.ஜி.ஆர். சபைக்கு வரவில்லை. அறிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை. அன்று கருணாநிதி சபையில் மீண்டும் எழுந்து, ""ஏன் இன்னும் அறிக்கை தாக்கலாகவில்லை?'' என்றார்.
நாஞ்சில் மனோகரன் எழுந்து, ""நாளை செவ்வாய்க்கிழமை. நிச்சயம் அறிக்கை தாக்கல் செய்யப்படும்...'' என்றார்.
உடனே கருணாநிதி, ""செவ்வாய் வெறும் வாய் ஆகிவிடக்கூடாது...'' என்றார்.
நாஞ்சில் மனோகரன் எழுந்து, ""மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவரை நான் ஒருமையில் அழைப்பதற்காக வருத்தப்படக் கூடாது. செவ்வாயில் நீ வெல்வாய்...'' என்றார்.
உடனே கருணாநிதி எழுந்து, ""அடிக்கடி நீ இப்படித்தான் சொல்வாய்..!'' என்றார்.
(உடனே அவையில் பலத்த கைதட்டல் எழும்பியது)
ஆதாரம்: கம்பம் செல்வேந்திரன் எழுதிய "சட்டமன்ற நகைச்சுவைகள்'.
நன்றி-ஞாயிறுமணி
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

கரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Empty Re: கரூருக்கு மீண்டும் வரக்கூடாது!

Post by krishnaamma Sun Jul 28, 2013 3:43 pm

ரசித்து படித்தேன் சாமி, பகிர்வுக்கு ரொம்ப நன்றி நன்றி அன்பு மலர் வாரியார் ரொம்ப அற்புதம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Empty Re: கரூருக்கு மீண்டும் வரக்கூடாது!

Post by சந்தோஷ் Sun Jul 28, 2013 4:01 pm

கலைஞரின் சமயோசிதம் பேச்சு .. ரொம்ப பிரபலம்.. பகிர்ந்தமைக்கு நன்றி.. சாமி.. இன்னுன் கொஞ்சம் இது போல காமி!! புன்னகை புன்னகை புன்னகை அருமையிருக்கு
சந்தோஷ்
சந்தோஷ்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 16
இணைந்தது : 30/06/2013

http://www.svarasmt.weebly.com

Back to top Go down

கரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Empty Re: கரூருக்கு மீண்டும் வரக்கூடாது!

Post by Muthumohamed Sun Jul 28, 2013 11:44 pm

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு 



கரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Mகரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Uகரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Tகரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Hகரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Uகரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Mகரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Oகரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Hகரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Aகரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Mகரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Eகரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Empty Re: கரூருக்கு மீண்டும் வரக்கூடாது!

Post by யினியவன் Mon Jul 29, 2013 12:13 am

சொல் விளையாட்டு அருமை - தமிழின் சிறப்பு அதுவே



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Empty Re: கரூருக்கு மீண்டும் வரக்கூடாது!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum