ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
வீரமங்கை வேலு நாச்சியார்  Poll_c10வீரமங்கை வேலு நாச்சியார்  Poll_m10வீரமங்கை வேலு நாச்சியார்  Poll_c10 
VENKUSADAS
வீரமங்கை வேலு நாச்சியார்  Poll_c10வீரமங்கை வேலு நாச்சியார்  Poll_m10வீரமங்கை வேலு நாச்சியார்  Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
வீரமங்கை வேலு நாச்சியார்  Poll_c10வீரமங்கை வேலு நாச்சியார்  Poll_m10வீரமங்கை வேலு நாச்சியார்  Poll_c10 
VENKUSADAS
வீரமங்கை வேலு நாச்சியார்  Poll_c10வீரமங்கை வேலு நாச்சியார்  Poll_m10வீரமங்கை வேலு நாச்சியார்  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீரமங்கை வேலு நாச்சியார்

+2
யினியவன்
மதுமிதா
6 posters

Go down

வீரமங்கை வேலு நாச்சியார்  Empty வீரமங்கை வேலு நாச்சியார்

Post by மதுமிதா Tue Jul 23, 2013 4:18 pm

வீரமங்கை வேலு நாச்சியார்  1002778_301058410038245_1999573997_n

எத்தனையோ சாதனை மங்கைகளை தமிழ்
வரலாறு பார்த்திருக்கிறது. ஆனால் வீர
மங்கை என்றால் அவர் ஒருவர்தான்.
வேலு நாச்சியார். வீரம் என்றால் சாதாரண வீரம்
அல்ல, மாபெரும்
படைகளை எதிர்கொண்டு வீழ்த்திய வீரம்.

‘சக்கந்தி’’ இராமநாதபுரத்திற்கு அருகிலுள்ள ஊர்.
வேலுநாச்சியார் பிறந்தது இங்கேதான்.
தந்தை முத்து விஜயரகுநாதசெல்ல
த்துரை சேதுபதி. இராமநாதபுர மன்னர். தாய்
முத்தாத்தாள் நாச்சியார். இவர்களின் ஒரே பெண்
குழந்தை வேலுநாச்சியார்.

விளையும் பயிர்
முளையிலே தெரியும் என்பது இந்தக் காலத்தில்
நாம் சொல்லும் பழமொழி. ஆனால் அந்தக்
காலத்தில் அதற்கு உதாரணமாய் இருந்திருக்கிறார்
வேலுநாச்சியார்.

சிறுவயதில் வேலுநாச்சியாருக
்கு தெரிந்த ஒரே மூன்றெழுத்து வார்த்தை வீரம்.
தெரியாத மூன்றெழுத்து வார்த்தை பயம்.


வாள்வீச்சு, அம்பு விடுதல், ஈட்டி எறிதல்,
குதிரையேற்றம், யானையேற்றம்
என்று எல்லா போர்க் கலைகளையும் கற்றார்.
இவையனைத்தும் அவருக்கு பிற்காலத்தில்
உதவின.

வீர விளையாட்டுக்கள்
மட்டுமன்றி பாடங்களிலும் வேலு நாச்சியார்
கெட்டிதான். பத்து மொழிகள் தெரியும்.

மகாபாரதம்,
இராமாயணம் போன்ற இதிகாசங்கள் தெரியும்.
இப்படி வீறுகொண்டும் வேலு கொண்டும் வளர்ந்த
இளம் பெண் வேலுநாச்சியார் வாழ்க்கையில்
ஒரு திருப்பு முனை.

வேலு நாச்சியாரின் அழகிலும்
வீரத்திலும் மனதைப் பறிகொடுத்த
சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதர்,
வேலு நாச்சியாரை மணமுடித்தார். அது 1746_ம்
வருடம். வேலுநாச்சியார்
சிவகங்கைக்கு குடிபுகுந்தார்.


ஆற்காடு நவாப்பின்
பெரும்படை ஒன்று இராமநாதபுரத்தைத்
தாக்கி கைப்பற்றியது. நவாபின் அடுத்த
குறி சிவகங்கைதான். ஆசைப்பட்ட
இடங்களை அடையாமல் விட்டதில்லை நவாப்.
நேரம் பார்த்து நெருங்குவார் . சிவகங்கை மன்னர்
முத்துவடுமுகநாதரும் லேசுபட்டவர் அல்ல.
போர்க்கலைகள் தெரிந்தவர். வீரம் செறிந்தவர்.
விவேகம் பொதிந்தவர்.


முத்துவடுக நாதரின் மனைவியான
வேலு நாச்சியார் வீரனுக்கு ஏற்ற வீராங்கனையாகத்
திகழ்ந்தார். இவர்களுக்கு உறுதுணையாக
போர்ப்படை தளபதிகளாக சின்ன மருது, பெரிய
மருது சகோதரர்கள். வீரத்துக்கு பெயர்
பெற்றவர்கள்.

நேரம் பார்த்துக் கொண்டிருந்த
நவாப்புக்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைத்தது.
சிவகங்கையைத் தாக்க ஆங்கிலேயேப் படைகள்
நவாப்புக்கு உதவ முன்வந்தன. அவர்களிடம்
நவீனரக ஆயுதங்கள் இருந்தன. அவற்றைக்
கொண்டு சிவகங்கையைத் தாக்கி தன் கட்டுக்குள்
கொண்டுவரத் திட்டமிட்டார் நவாப்.

ஒரு முறை மன்னர் முத்து வடுகநாதர் காளையர்
கோயிலில் வழிபாடு செய்து கொண்டிருந்தபோது
நவாபின் படைகள் காளையர் கோயிலைச்
சுற்றி வளைத்தனர். ஆங்கிலேயர் கொடுத்த போர்ச்
சாதனங்களைக் கொண்டு தாக்கினர். வடுகநாதரும்
அவரது படைகளும் வீரப்போர் புரிந்தனர். இருந்தும்
அவர்களால் அந்தத் தாக்குதலைச் சமாளிக்க
இயலவில்லை. வடுகநாதர் இறந்தார் இளவரசியும்
கொல்லப்பட்டார்.

காளையர் கோயில்
கோட்டை நவாப்படைகளின் வசமாகியது.
இந்தச் சமயத்தில் நாச்சியாரைக் கைது செய்ய
படை ஒன்றை அனுப்பினான் நவாப். அந்தப்
படை வேலு நாச்சியாரை வழியிலேயே மடக்கியது.
ஆனால் நாச்சியார் மடங்கவில்லை. ஆவேசத்துடன்
போரிட்டார். எதிரிப்படைகளை சிதறி ஓடச் செய்தார்.


இறந்த கணவரை சென்று பார்த்துவிட
வேண்டுமென்பதுதான்
அவரது ஒரே இலக்காயிருந்தது. ஆனால்
தளபதிகளாயிருந்த மருது சகோதரர்கள்
அவருக்கு வேறு ஆலோசனை வழங்கினார்கள்.
‘கோட்டை வீழ்ந்துவிட்டது. அரசர் இறந்துவிட்டார்.
நீங்களும் போய் சிக்கிவிட்டால் நம்மால்
நவாபை பழிவாங்கமுடியாது. நாட்டைக்
கைப்பற்றவும் நாட்டின் பெருமையைக்
காப்பாற்றவும் நீங்கள் வாழ்ந்தாக வேண்டும்.
அதனால் அங்கே போகக் கூடாது’ என்றார்கள்.
ஆனால் நாச்சியார் கேட்கவில்லை. கணவரின்
உடலைக் காண காளையர் கோயில் சென்றார்.
இதற்குள் நவாப் கூட்டமும் ஆங்கிலேயப்
படைகளும் சிவகங்கைக்குள் நுழைந்துவிட்டன.
பல்லக்கு ஒன்றில் ஏறி மருது சகோதரர்களின்
பாதுகாப்போடு சிவகங்கையிலிருந்து தப்பிச்
சென்றார். விடிய விடிய குதிரையில் பயணம்
செய்து மேலூர் சென்றார்கள்.


நாவபை வீழ்த்த ஹைதர்
அலி உதவியை வேலு நாச்சியார்
நாடினார் :
வீரத்தில் மட்டுமல்ல, விவேகத்திலும் கெட்டி.
நவாபையும் ஆங்கிலேயர் படையினரையும் வீழ்த்த
மன்னர் ஹைதர்
அலி உதவியை நாடுவது என்று தீர்மானித்தார்.
ஏனென்றால் ஆங்கிலேயருக்கும் நவாப்புக்கும் பரம
எதிரி ஹைதர் அலி. தான் ஒளிந்திருந்த
காடுகளிலிருந்து ஹைதர்
அலிக்கு உதவி கேட்டு கடிதம் எழுதினார்.

அப்போது ஹைதர் அலி திண்டுக்கல்லிலிருந்தார்.
கடிதங்களை ஹைதர் அலியின் அரண்மனையின்
முன்பு மூன்று குதிரை வீரர்கள் வந்து நின்றார்கள்.
வேலு நாச்சியாரிடமிருந்து வருவதாகச்
சொன்னார்கள். ஹைதர்
அலி அவர்களை உள்ளே வரவழைத்தான்.
‘வேலு நாச்சியார் வரவில்லையா?’’ என்று ஹைதர்
அலி கேட்க, தன் தலைப்பாகையை கழற்றினான்,
ஒரு வீரன், அது வேலு நாச்சியார்.

ஹைதர்
அலியுடன் உருது மொழியை சரளமாகப் பேச
அவருக்கு மேலும் ஆச்சர்யம்.
தன் வேதனைகளையும் இலட்சியத்தையும்
ஹைதர் அலியிடம் விளக்கினார் வேலுநாச்சியார்.
அவரிடமிருந்த வீரத்தைக் கண்ட ஹைதர்
அலி தன்னுடைய கோட்டையிலேயே தங்கிக்
கொள்ள அனுமதி தந்தார். அங்கிருந்து தனது போர்ப்
படைகளைப் பெருக்கத் துவங்கினர்.
வேலு நாச்சியாரின் லட்சியம் ஆங்கிலேயப்
படையை அழிப்பது, நவாபை வீழ்த்துவது.

ஹைதர் அலி தந்த நவீன ரக ஆயுதங்களுடன்
நவாப்படைகளுடன் போர் செய்யக் கிளம்பினார்.
வேலு நாச்சியார். முதலில் காளையர் கோயிலைக்
கைப்பற்றினார். சிவகங்கையிலும் திருப்பத்தூரிலும்
நவாப்பின் படைகளும் ஆங்கிலப் படைகளும்
பரவி நின்றன. அவற்றைத் தோற்கடித்தால்தான்
சிவகங்கையை மீட்க முடியும். வேலு நாச்சியார்
தனது படைகளை இரண்டாகப்
பிரித்து ஒரு படைக்கு சின்ன
மருதை தளபதியாகவும்,
இன்னொரு படைக்கு பெரிய மருதுவுடன்
இணைந்து வேலு நாச்சியார் தலைமை வகித்தார்.

சின்னமருது தலைமையிலான படை திருப்பத்தூரில்
இருந்த வெள்ளையர் படைகளை வீழ்த்தியது.
விஜயதசமி அன்று சிவகெங்கை அரண்மனைக்குள்ள
இருக்கும் ராஜராஜேஸ்வரி தெய்வத்தை கூட்டம்,
கூட்டமாக பெண்கள் சென்று வழிபடுவது வழக்கம்.
வெளியே ஆங்கிலேயர் படை காவல் காத்துக்
கொண்டிருக்கும். வேலுநாச்சியாரும்,
அவரோடு இருந்த பெண்கள் படையும்,
ஆயுதங்களை ஆடைக்குள் மறைத்துக்
கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக
அரண்மனைக்குள் உள்ளே இருந்த கோவிலுக்குள்
சென்று திடீர் தாக்குதல் நடத்தியது.
இதை ஆங்கிலேயப் படைகள் எதிர்பார்க்கவில்லை.
வெட்டுண்டு விழுந்தார்கள். பிழைத்தவர்கள்
நாட்டைவிட்டு ஓடினார்கள்.சிவக
ங்கை கோட்டை மீது பறந்த ஆங்கிலேயரின்
கொடி இறக்கப்பட்டது. வேலு நாச்சியாரின்
அனுமன் கொடி ஏற்றப்பட்டது. அவரது சபதம்
நிறைவேறியது.

வேலு நாச்சியார் சிவகங்கையின் அரசியானார்.
அவருடைய காலம் வீரத்தின் காலமாக இருந்தது.
தனது அறுபத்தாறாவது வயதில் இறந்தார்,
வேலு நாச்சியார். அவரது வாழ்க்கை தமிழ்
மண்ணின் வீரத்துக்கு சாட்சியாக இன்றும்
இருக்கிறது.


முகநூல்


வீரமங்கை வேலு நாச்சியார்  Mவீரமங்கை வேலு நாச்சியார்  Aவீரமங்கை வேலு நாச்சியார்  Dவீரமங்கை வேலு நாச்சியார்  Hவீரமங்கை வேலு நாச்சியார்  U



வீரமங்கை வேலு நாச்சியார்  0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

வீரமங்கை வேலு நாச்சியார்  Empty Re: வீரமங்கை வேலு நாச்சியார்

Post by யினியவன் Tue Jul 23, 2013 5:06 pm

வீரமங்கையின் பகிர்வு சூப்பருங்க அதை பச்சடி மங்கை பதிந்தது அமர்க்களம் போங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வீரமங்கை வேலு நாச்சியார்  Empty Re: வீரமங்கை வேலு நாச்சியார்

Post by ஜாஹீதாபானு Tue Jul 23, 2013 5:16 pm

வீரமங்கை வேலுநாச்சியார் சூப்பர் பகிர்வுக்கு நன்றி மது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வீரமங்கை வேலு நாச்சியார்  Empty Re: வீரமங்கை வேலு நாச்சியார்

Post by மதுமிதா Tue Jul 23, 2013 5:17 pm

ஜாஹீதாபானு wrote:வீரமங்கை வேலுநாச்சியார் சூப்பர் பகிர்வுக்கு நன்றி மது
நன்றி நன்றி நன்றி அன்பு மலர் 


வீரமங்கை வேலு நாச்சியார்  Mவீரமங்கை வேலு நாச்சியார்  Aவீரமங்கை வேலு நாச்சியார்  Dவீரமங்கை வேலு நாச்சியார்  Hவீரமங்கை வேலு நாச்சியார்  U



வீரமங்கை வேலு நாச்சியார்  0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

வீரமங்கை வேலு நாச்சியார்  Empty Re: வீரமங்கை வேலு நாச்சியார்

Post by manikandan.dp Wed Jul 24, 2013 9:52 am

அருமையான பதிவு ....
எனது விருப்பம்


மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013

http://manikandan89.wordpress.com/

Back to top Go down

வீரமங்கை வேலு நாச்சியார்  Empty Re: வீரமங்கை வேலு நாச்சியார்

Post by பிரியா இராசேந்திரம் Mon Aug 19, 2013 10:34 pm

நன்றி மது...
மிகவும் பயனுள்ள பகிர்வு...
நன்றிகள் !!!
பிரியா இராசேந்திரம்
பிரியா இராசேந்திரம்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 3
இணைந்தது : 19/08/2013

Back to top Go down

வீரமங்கை வேலு நாச்சியார்  Empty Re: வீரமங்கை வேலு நாச்சியார்

Post by ராணிராஜா Mon Aug 19, 2013 10:46 pm

நன்றி மது


ராணிராஜா
ராணிராஜா
ராணிராஜா
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 18
இணைந்தது : 19/08/2013

http://www.raniraja.com

Back to top Go down

வீரமங்கை வேலு நாச்சியார்  Empty Re: வீரமங்கை வேலு நாச்சியார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum