Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Today at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm
» கர்மவீரரே...
by T.N.Balasubramanian Today at 7:39 pm
» வேது பிடித்தல்
by ayyasamy ram Today at 7:29 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Today at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Today at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 2:42 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am
» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am
» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm
» ஆடி சொல்லும் சேதி
by T.N.Balasubramanian Sat Jul 13, 2024 9:10 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
T.N.Balasubramanian |
| |||
kavithasankar |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
rajuselvam |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
Guna.D |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா
+15
myimamdeen
balakama
muthu86
ராணிராஜா
பூவன்
krishnaamma
ஜாஹீதாபானு
ராஜா
ராஜு சரவணன்
பார்த்திபன்
சாந்தன்
Muthumohamed
யினியவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
மதுமிதா
19 posters
Page 1 of 13
Page 1 of 13 • 1, 2, 3 ... 11, 12, 13
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா
மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றாக தேர்வு செய்யப்படவிருந்த கோவில் இது. அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோவில் தமிழகத்தின் தூங்காநகரமான மதுரை மாநகரில் அமைந்துள்ளது. இக்கோவிலின் மூலவர் சுந்தரேஸ்வரர் ஆவார். சிவபெருமானுக்கு உகந்தது சிதம்பரம் கோவில் என்றால், மீனாட்சி அம்மனுக்கு பெருமை சேர்ப்பது மதுரை.
![மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா Madurai-+Meenakshi_Amman_Temple_Tank](http://4.bp.blogspot.com/-I6WVFgYd4Fw/Tdzyca7cbUI/AAAAAAAAF-8/NZD4Vf51jBQ/s320/Madurai-+Meenakshi_Amman_Temple_Tank.jpg)
இந்தக் கோவில் 1600 ஆண்டு கால பழமை வாய்ந்தது. மேலும் சிவபெருமான் நடராஜராக நடனம் ஆடிய கோவில்களுள் இதுவும் ஒன்று. இது ரஜத(வெள்ளி) சபையாகும். இக்கோவில் நடராஜர் வெள்ளியால் செய்யப்பட்டவர். பல இடங்களில் இடது கால் தூக்கி ஆடிய சிவபெருமான், மதுரையில் பாண்டிய மன்னனுக்காக வலது கால் தூக்கி ஆடினார்.
இக்கோவிலின் தல விருட்சம் கடம்ப மரம். தீர்த்தம் பொற்றாமரை குளமும், வைகை நதியும். இக்கோவிலில் சிறப்பு வாய்ந்த முக்குருணி விநாயகர் சந்நிதியும் உள்ளது.
![மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா 91784079.uTFNzvCh.meenakshi35](https://2img.net/h/3.bp.blogspot.com/-3nIr__KiRwI/Tdz0oZ7RvqI/AAAAAAAAF_Q/OZkmf0d9HIo/s320/91784079.uTFNzvCh.meenakshi35.JPG)
(இந்த பிள்ளையார் மீனாக்ஷி அம்மன் கோவில் கட்டுவதற்காக மண் தோண்டிய இடத்தில இருந்து கண்டு எடுக்க பட்டது....... அந்த இடம் தான் மதுரை யின் மற்றொரு புகழாக விளங்கும் தெப்பக்குளம்)
தல வரலாறு:
மலயத்துவச பாண்டியனும் அவன் மனைவி காஞ்சனமாலையும் புத்திர யாகம் செய்த போது, அக்னியில் இருந்து பார்வதி தேவி குழந்தையாகத் தோன்றினாள். முன்ஜென்மத்தில் காஞ்சனமாலைக்கு செய்து கொடுத்த சத்தியத்தின் காரணமாக பார்வதி தேவி அக்னியில் இருந்து வெளிப்பட்டதாக சிலர் கூறுவர். அக்னியில் இருந்து தோன்றிய பார்வதிக்கு மூன்று மார்பகங்கள் இருந்தன, இதனைக் கண்டு அதிர்ச்சியுற்றான் பாண்டிய மன்னன். அப்போது ஒரு குரல் ஒலித்தது. அவள் எப்போது தன் கணவனை காண்கிறாளோ அப்போது அந்த மூன்றாவது மார்பு மறைந்துவிடும் என்று அந்த குரல் கூறியது. பாண்டியன் மன்னன் மனமகிழ்ச்சியுடன் அந்த குழந்தைக்கு தடாகை என்று பெயரிட்டு வளர்த்து வந்தான். அக்குழந்தை போர்க்கலை,சிற்பக்கலை, குதிரையேற்றம் முதலான ஆய கலைகள் அறுபத்து நான்கையும் கற்று வளர்ந்தாள்.
தடாகைக்கு முடிசூட்ட நினைத்தான் பாண்டிய மன்னன். அக்கால வழக்கப்படி அவள் மூவுலகிலும் எட்டுத்திசையிலும் போரிட்டால்தான் மூடிசூட்டிக்கொள்ளமுடியும். எனவே போருக்கு சென்று தடாகை, பிரம்மன் வீற்றிருக்கும் சத்தியலோகத்தையும், திருமால் வீற்றிருக்கும் வைகுந்த்தத்தையும் வென்றாள். கைலாசத்துக்கு சென்ற போது அங்கிருந்த சிவபெருமானைக் கண்டு வெட்கப்பட்டாள், அவளுடைய மூன்றாவது மார்பு மறைந்துவிட்டது. இதன் காரணத்தை அறிந்த தடாகை, தான் பார்வதியின் மறுவடிவம் என்பதை உணர்ந்து கொண்டாள். சிவபெருமானுடன் மதுரை வந்து மூடிசூட்டிக்கொண்ட பின்னர் சிவபெருமானையே மதுரையில் திருமால் தலைமையில் திருமணம் செய்துகொண்டாள்.
(மேலும் சிவ பெருமானின் பல திருவிளையாடல்கள் இத்தலத்தில் நடைபெற்றது என்ற சிறப்பும் உண்டு, அவற்றின் கதைகளை நாம் இக்கோவிலில் சுவாமி சன்னிதானத்தை சுற்றிலும் சுவரில் சிலைகளாகவும், ஓவியங்களாகவும் காணலாம், அதேப் போன்று மீனக்ஷி அம்மனின் வாழ்க்கை வரலாறை அம்மன் சந்நிதானத்தில் காணலாம், )
ஆனால் இக்கோவில் பூர்வீக கோவில் அல்ல..... மீனக்ஷி சுந்தேர்ஸ்வரர் கோவில் சிம்மகல்-ல் சிரிதாக இருக்கும்.... பிற்காலத்தில் மன்னர்கள் தங்களது கட்டிட கலை மற்றும் ஓவிய கலை போற்றும் வகையில் இக்கோவில் விரிவு படுத்த பட்டது....)
மேலும் ஆயிரங்கால் மண்டபம் 100 கால் மண்டபம், புது மண்டபம், கிளி மண்டபம், உஞ்சல் மண்டபம், கொலு மண்டபம்,கல் யானை என்ற பல இடங்கள் கோவிலுகுள்ளேயும் வெளியேயும் உள்ளன அவற்றை பற்றி அடுத்த பதிவில் கூறுகிறேன்
என்னுடைய காலேஜ் project இக்கோவில் பற்றி தான் ஆனால் இவற்றை பகிர்ந்து கொள்ளும் எண்ணம் வரவில்லை நேற்று சிவா அண்ணா தகவல் இருந்தால் பரிமாறுங்கள் என்று கேட்டு கொண்டவுடன் தான் இந்த எண்ணம் வந்தது.... (நன்றி சிவா அண்ணா)எனக்கு தெரிந்த சில விஷயங்களை பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்..... நண்பர்களுக்கும் இக்கோவில் பற்றி தெரிந்த கருத்தினை பகிர்ந்து கொண்டால் நானும் அறிந்து கொள்வேன்
ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றாக தேர்வு செய்யப்படவிருந்த கோவில் இது. அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோவில் தமிழகத்தின் தூங்காநகரமான மதுரை மாநகரில் அமைந்துள்ளது. இக்கோவிலின் மூலவர் சுந்தரேஸ்வரர் ஆவார். சிவபெருமானுக்கு உகந்தது சிதம்பரம் கோவில் என்றால், மீனாட்சி அம்மனுக்கு பெருமை சேர்ப்பது மதுரை.
![மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா Madurai-+Meenakshi_Amman_Temple_Tank](http://4.bp.blogspot.com/-I6WVFgYd4Fw/Tdzyca7cbUI/AAAAAAAAF-8/NZD4Vf51jBQ/s320/Madurai-+Meenakshi_Amman_Temple_Tank.jpg)
இந்தக் கோவில் 1600 ஆண்டு கால பழமை வாய்ந்தது. மேலும் சிவபெருமான் நடராஜராக நடனம் ஆடிய கோவில்களுள் இதுவும் ஒன்று. இது ரஜத(வெள்ளி) சபையாகும். இக்கோவில் நடராஜர் வெள்ளியால் செய்யப்பட்டவர். பல இடங்களில் இடது கால் தூக்கி ஆடிய சிவபெருமான், மதுரையில் பாண்டிய மன்னனுக்காக வலது கால் தூக்கி ஆடினார்.
இக்கோவிலின் தல விருட்சம் கடம்ப மரம். தீர்த்தம் பொற்றாமரை குளமும், வைகை நதியும். இக்கோவிலில் சிறப்பு வாய்ந்த முக்குருணி விநாயகர் சந்நிதியும் உள்ளது.
(இந்த பிள்ளையார் மீனாக்ஷி அம்மன் கோவில் கட்டுவதற்காக மண் தோண்டிய இடத்தில இருந்து கண்டு எடுக்க பட்டது....... அந்த இடம் தான் மதுரை யின் மற்றொரு புகழாக விளங்கும் தெப்பக்குளம்)
தல வரலாறு:
மலயத்துவச பாண்டியனும் அவன் மனைவி காஞ்சனமாலையும் புத்திர யாகம் செய்த போது, அக்னியில் இருந்து பார்வதி தேவி குழந்தையாகத் தோன்றினாள். முன்ஜென்மத்தில் காஞ்சனமாலைக்கு செய்து கொடுத்த சத்தியத்தின் காரணமாக பார்வதி தேவி அக்னியில் இருந்து வெளிப்பட்டதாக சிலர் கூறுவர். அக்னியில் இருந்து தோன்றிய பார்வதிக்கு மூன்று மார்பகங்கள் இருந்தன, இதனைக் கண்டு அதிர்ச்சியுற்றான் பாண்டிய மன்னன். அப்போது ஒரு குரல் ஒலித்தது. அவள் எப்போது தன் கணவனை காண்கிறாளோ அப்போது அந்த மூன்றாவது மார்பு மறைந்துவிடும் என்று அந்த குரல் கூறியது. பாண்டியன் மன்னன் மனமகிழ்ச்சியுடன் அந்த குழந்தைக்கு தடாகை என்று பெயரிட்டு வளர்த்து வந்தான். அக்குழந்தை போர்க்கலை,சிற்பக்கலை, குதிரையேற்றம் முதலான ஆய கலைகள் அறுபத்து நான்கையும் கற்று வளர்ந்தாள்.
தடாகைக்கு முடிசூட்ட நினைத்தான் பாண்டிய மன்னன். அக்கால வழக்கப்படி அவள் மூவுலகிலும் எட்டுத்திசையிலும் போரிட்டால்தான் மூடிசூட்டிக்கொள்ளமுடியும். எனவே போருக்கு சென்று தடாகை, பிரம்மன் வீற்றிருக்கும் சத்தியலோகத்தையும், திருமால் வீற்றிருக்கும் வைகுந்த்தத்தையும் வென்றாள். கைலாசத்துக்கு சென்ற போது அங்கிருந்த சிவபெருமானைக் கண்டு வெட்கப்பட்டாள், அவளுடைய மூன்றாவது மார்பு மறைந்துவிட்டது. இதன் காரணத்தை அறிந்த தடாகை, தான் பார்வதியின் மறுவடிவம் என்பதை உணர்ந்து கொண்டாள். சிவபெருமானுடன் மதுரை வந்து மூடிசூட்டிக்கொண்ட பின்னர் சிவபெருமானையே மதுரையில் திருமால் தலைமையில் திருமணம் செய்துகொண்டாள்.
(மேலும் சிவ பெருமானின் பல திருவிளையாடல்கள் இத்தலத்தில் நடைபெற்றது என்ற சிறப்பும் உண்டு, அவற்றின் கதைகளை நாம் இக்கோவிலில் சுவாமி சன்னிதானத்தை சுற்றிலும் சுவரில் சிலைகளாகவும், ஓவியங்களாகவும் காணலாம், அதேப் போன்று மீனக்ஷி அம்மனின் வாழ்க்கை வரலாறை அம்மன் சந்நிதானத்தில் காணலாம், )
ஆனால் இக்கோவில் பூர்வீக கோவில் அல்ல..... மீனக்ஷி சுந்தேர்ஸ்வரர் கோவில் சிம்மகல்-ல் சிரிதாக இருக்கும்.... பிற்காலத்தில் மன்னர்கள் தங்களது கட்டிட கலை மற்றும் ஓவிய கலை போற்றும் வகையில் இக்கோவில் விரிவு படுத்த பட்டது....)
மேலும் ஆயிரங்கால் மண்டபம் 100 கால் மண்டபம், புது மண்டபம், கிளி மண்டபம், உஞ்சல் மண்டபம், கொலு மண்டபம்,கல் யானை என்ற பல இடங்கள் கோவிலுகுள்ளேயும் வெளியேயும் உள்ளன அவற்றை பற்றி அடுத்த பதிவில் கூறுகிறேன்
என்னுடைய காலேஜ் project இக்கோவில் பற்றி தான் ஆனால் இவற்றை பகிர்ந்து கொள்ளும் எண்ணம் வரவில்லை நேற்று சிவா அண்ணா தகவல் இருந்தால் பரிமாறுங்கள் என்று கேட்டு கொண்டவுடன் தான் இந்த எண்ணம் வந்தது.... (நன்றி சிவா அண்ணா)எனக்கு தெரிந்த சில விஷயங்களை பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்..... நண்பர்களுக்கும் இக்கோவில் பற்றி தெரிந்த கருத்தினை பகிர்ந்து கொண்டால் நானும் அறிந்து கொள்வேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Last edited by MADHUMITHA on Wed Jul 24, 2013 4:15 pm; edited 1 time in total
மீனாக்ஷி அம்மன் கோவில் ...!
இத்திரியில் நான் பகிர்ந்து கொள்ளும் அனைத்து தகவல்களும் என்னுடைய கல்லூரியில் நான் பண்ணின ப்ராஜக்ட் -ளில் இருந்து எடுத்தது
மீனாக்ஷி அம்மன் கோவில் கட்டப்பட்ட ஆண்டுகள்:
1168 – 75 -> சுவாமி கோபுரம்
1216 – 38 -> ராஜ கோபுரம்
1627 – 28 -> அம்மன் சந்நிதி கோபுரம்
1315 – 47 -> மேற்கு ராஜா கோபுரம்
1372 -> சுவாமி சந்நிதி கோபுரம்
1374 -> சுவாமி சந்நிதி வெஸ்ட் கோபுரம்
1452 -> ஆறு கால் மண்டபம்
1526 -> 100 கால் மண்டபம்
1559 -> சௌத் ராஜா கோபுரம்
-> முக்குரிணி விநாயகர் கோபுரம்
1560 -> சுவாமி சந்நிதி நார்த் கோபுரம்
1562 -> தேரடி மண்டபம்
1563 -> பழைய ஊஞ்சல் மண்டபம்
-> வன்னியடி நட்ராஜர் மண்டபம்
1564 – 72 -> வடக்கு ராஜா கோபுரம்
1564-72 -> வெள்ளி அம்பல மண்டபம்
-> கொலு மண்டபம்
1569 -> சித்ர கோபுரம்
-> ஆயிராங்கால் மண்டபம்
-> 63 நாயன்மார்கள் மண்டபம்
1570 -> அம்மன் சந்நிதி மேற்கு கோபுரம்
1611 -> வீர வசந்தராயர் மண்டபம்
1613 -> இருட்டு மண்டபம்
1623 -> கிளிக்கூட்டு மண்டபம்
-> புது ஊஞ்சல் மண்டபம்
1623 – 59 -> ராயர் கோபுரம்
-> அஷ்டஷக்தி மண்டபம்
1626 -45 -> புது மண்டபம்
1635 -> நகரா மண்டபம்
1645 -> முக்குருணி விநாயகர்
1659 -> பேச்சியக்காள் மண்டபம்
1708 -> மீனாக்ஷி நாயக்கர் மண்டபம்
1975 -> சேர்வைக்காரர் மண்டபம்
மீனாக்ஷி அம்மன் கோவில் கட்டியவர்களும், அந்த கால கட்டத்தில் ஆட்சி புரிந்தவர்களும்:
குலசேகர பாண்டியன் -> 1168 – 75.
மாறவர்மன் சுந்தரபாண்டியன் -> 1216 – 38.
பாராக்ரம பாண்டியன் -> 1315 – 47.
விஸ்வநாத நாயக்கர் -> 1529 – 64.
கிருஷ்ணப்பா நாயக்கர் -> 1564 – 72.
வீரப்ப நாயக்கர் -> 1572 – 94.
கிருஷ்ணப்பா நாயக்கர் -> 1595 – 1601.
முத்துகிருஷ்ணப்பா நாயக்கர் -> 1601 – 09.
முத்து நாயக்கர் -> 1609 – 23.
திருமலை நாயக்கர் -> 1623 – 1659.
ரௌதிரபதி அம்மாள் மற்றும்
தோளிமம்மை -> 1623 – 59. (Wives of ThirumalaiNaicker )
முத்து வீரப்ப நாயக்கர் -> 1659
சொக்கநாத நாயக்கர் -> 1659 – 82.
முத்து வீரப்ப நாயக்கர் -> 1682 – 89.
விஜயரங்க சோகநாத நாயக்கர் -> 1706 – 32.
மீனாட்சி அரசி -> 1732 – 36
மீனாக்ஷி அம்மன் கோவில் கட்டப்பட்ட ஆண்டுகள்:
1168 – 75 -> சுவாமி கோபுரம்
1216 – 38 -> ராஜ கோபுரம்
1627 – 28 -> அம்மன் சந்நிதி கோபுரம்
1315 – 47 -> மேற்கு ராஜா கோபுரம்
1372 -> சுவாமி சந்நிதி கோபுரம்
1374 -> சுவாமி சந்நிதி வெஸ்ட் கோபுரம்
1452 -> ஆறு கால் மண்டபம்
1526 -> 100 கால் மண்டபம்
1559 -> சௌத் ராஜா கோபுரம்
-> முக்குரிணி விநாயகர் கோபுரம்
1560 -> சுவாமி சந்நிதி நார்த் கோபுரம்
1562 -> தேரடி மண்டபம்
1563 -> பழைய ஊஞ்சல் மண்டபம்
-> வன்னியடி நட்ராஜர் மண்டபம்
1564 – 72 -> வடக்கு ராஜா கோபுரம்
1564-72 -> வெள்ளி அம்பல மண்டபம்
-> கொலு மண்டபம்
1569 -> சித்ர கோபுரம்
-> ஆயிராங்கால் மண்டபம்
-> 63 நாயன்மார்கள் மண்டபம்
1570 -> அம்மன் சந்நிதி மேற்கு கோபுரம்
1611 -> வீர வசந்தராயர் மண்டபம்
1613 -> இருட்டு மண்டபம்
1623 -> கிளிக்கூட்டு மண்டபம்
-> புது ஊஞ்சல் மண்டபம்
1623 – 59 -> ராயர் கோபுரம்
-> அஷ்டஷக்தி மண்டபம்
1626 -45 -> புது மண்டபம்
1635 -> நகரா மண்டபம்
1645 -> முக்குருணி விநாயகர்
1659 -> பேச்சியக்காள் மண்டபம்
1708 -> மீனாக்ஷி நாயக்கர் மண்டபம்
1975 -> சேர்வைக்காரர் மண்டபம்
மீனாக்ஷி அம்மன் கோவில் கட்டியவர்களும், அந்த கால கட்டத்தில் ஆட்சி புரிந்தவர்களும்:
குலசேகர பாண்டியன் -> 1168 – 75.
மாறவர்மன் சுந்தரபாண்டியன் -> 1216 – 38.
பாராக்ரம பாண்டியன் -> 1315 – 47.
விஸ்வநாத நாயக்கர் -> 1529 – 64.
கிருஷ்ணப்பா நாயக்கர் -> 1564 – 72.
வீரப்ப நாயக்கர் -> 1572 – 94.
கிருஷ்ணப்பா நாயக்கர் -> 1595 – 1601.
முத்துகிருஷ்ணப்பா நாயக்கர் -> 1601 – 09.
முத்து நாயக்கர் -> 1609 – 23.
திருமலை நாயக்கர் -> 1623 – 1659.
ரௌதிரபதி அம்மாள் மற்றும்
தோளிமம்மை -> 1623 – 59. (Wives of ThirumalaiNaicker )
முத்து வீரப்ப நாயக்கர் -> 1659
சொக்கநாத நாயக்கர் -> 1659 – 82.
முத்து வீரப்ப நாயக்கர் -> 1682 – 89.
விஜயரங்க சோகநாத நாயக்கர் -> 1706 – 32.
மீனாட்சி அரசி -> 1732 – 36
Re: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா
![மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா X7ot](https://2img.net/r/ihimizer/img692/1964/x7ot.jpg)
ஊஞ்சல் மண்டபம்
ஊஞ்சல் மண்டபம் மீனாக்ஷி அம்மன் கோவில் தெப்பக்குளத்துக்கு மேற்கில் உள்ளது. இது 1563 ளில் செட்டியப்ப நாயக்காரல் கட்டப்பட்டது. ஒவ்வொரு வெள்ளி கிழமை அன்று மீனாக்ஷி மற்றும் சுந்தரேஸ்வரர் தங்க உருவங்களை இதில் வைத்து பாடல்கள் பாடி ஆட்டுவார்கள்.
புது ஊஞ்சல் மண்டபம்
புது ஊஞ்சல் மண்டபம், பழைய ஊஞ்சல் மண்டபத்திற்கு எதிரே உள்ளது. 1623 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 1985 ஆம் ஆண்டு கிலாஸ் ஃபைபர் கொண்டு அலங்கரிக்கப்பட்டது. இதன் மேற்கூரையில் கடவுள் முருகனின் வரைபடங்கள்(ஆறு படை வீடுகள்) வரையப்பட்டுள்ளது. கடவுளின் ஊஞ்சல் உற்சவம் இங்கு தான் நடைபெறுகின்றது..
Last edited by MADHUMITHA on Sun Jul 14, 2013 8:40 pm; edited 1 time in total
Re: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா
மீனாக்ஷி அம்மன் தெப்பக்குளம்:
இங்கு தான் கோவில் பூசாரிகள் நீராடி இறைவனை வழி படுவது. இதை பகுதியில் தான் முற்காலத்தில் தமிழ் சங்கம் கூட்டம் நடைபெறும். தெப்பக்குளத்தை சுற்றியுள்ள வரந்த வில் பல தூண்கள் உள்ளது. இதன் வலது பக்கத்தில் உள்ள இடம் சித்ரா மண்டபம், இதன் சுவர்கள் இறைவனின் திருவிளையாடுகளை ஓவியமாக தாங்கி நிற்கிறது.
பகலில் :
![மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா Nh0y](https://2img.net/r/ihimizer/img836/70/nh0y.jpg)
இரவில் மின் விளக்கின் அழகிய ஒளியில்:
![மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா Z6dg](https://2img.net/r/ihimizer/img94/4629/z6dg.jpg)
இங்கு தான் கோவில் பூசாரிகள் நீராடி இறைவனை வழி படுவது. இதை பகுதியில் தான் முற்காலத்தில் தமிழ் சங்கம் கூட்டம் நடைபெறும். தெப்பக்குளத்தை சுற்றியுள்ள வரந்த வில் பல தூண்கள் உள்ளது. இதன் வலது பக்கத்தில் உள்ள இடம் சித்ரா மண்டபம், இதன் சுவர்கள் இறைவனின் திருவிளையாடுகளை ஓவியமாக தாங்கி நிற்கிறது.
பகலில் :
![மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா Nh0y](https://2img.net/r/ihimizer/img836/70/nh0y.jpg)
இரவில் மின் விளக்கின் அழகிய ஒளியில்:
![மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா Z6dg](https://2img.net/r/ihimizer/img94/4629/z6dg.jpg)
Last edited by MADHUMITHA on Sun Jul 14, 2013 8:49 pm; edited 1 time in total
Re: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா
மிகவும் நன்று மது
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா
அஷ்டஷக்தி மண்டபம்:
கிழக்கு கோபுரம் வழியாக உள்ளே வார வேண்டும் என்றால், முதலில் நாம் அஷ்டஷக்தி மண்டபம் வழியாக தான் நுழைய வேண்டும். இது திருமலை நாயக்கரின் மனைவிமார்கள் ருத்ரபதி மற்றும் தோளிமம்மை ஆகியோரால் கட்டப்பட்டது. இங்கு தான் தூரத்தில் இருந்து வரும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.. இந்த மண்டபத்தில் உள்ள ஒவ்வொரு தூணிலும் சிவனின் திருவியாளையாடல்களும், மீனாக்ஷி அம்மானின் பிறப்பு மற்றும் அவர் மதுரையை அரசியாக ஆட்சி செய்ததும் சிலை வடிவிலும் ஓவிய வடிவத்திலும் உள்ளது.
இது 14 மீட்டர் மற்றும் 5.5 மீட்டர் அகலமும் கொண்டது.
1960-1963-ல் கோவில் சீரமைப்பு போது எட்டு அஷ்டசக்தி யின் சிலை சேர்க்கப்பட்டது அதனால் தான் இம்மண்டபம் இப்பெயர் பெற்றது.
கிழக்கு கோபுரம் வழியாக உள்ளே வார வேண்டும் என்றால், முதலில் நாம் அஷ்டஷக்தி மண்டபம் வழியாக தான் நுழைய வேண்டும். இது திருமலை நாயக்கரின் மனைவிமார்கள் ருத்ரபதி மற்றும் தோளிமம்மை ஆகியோரால் கட்டப்பட்டது. இங்கு தான் தூரத்தில் இருந்து வரும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.. இந்த மண்டபத்தில் உள்ள ஒவ்வொரு தூணிலும் சிவனின் திருவியாளையாடல்களும், மீனாக்ஷி அம்மானின் பிறப்பு மற்றும் அவர் மதுரையை அரசியாக ஆட்சி செய்ததும் சிலை வடிவிலும் ஓவிய வடிவத்திலும் உள்ளது.
இது 14 மீட்டர் மற்றும் 5.5 மீட்டர் அகலமும் கொண்டது.
1960-1963-ல் கோவில் சீரமைப்பு போது எட்டு அஷ்டசக்தி யின் சிலை சேர்க்கப்பட்டது அதனால் தான் இம்மண்டபம் இப்பெயர் பெற்றது.
Re: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா
மீனாக்ஷி நாயக்கர் மண்டபம் :
அஷ்டஷக்தி மண்டபத்திற்கு அடுத்து இருப்பது மீனாக்ஷி நாயக்கர் மண்டபம். இது 160' நீளம் உடையது. இந்த மண்டபத்தில் 110 தூண்கள் 6 வரிசையாக உள்ளது. 6.7 மீட்டர் உயரம் கொண்டது. ஒவ்வொரு தூணிலும் யாழி (புனித விலங்கு - சிங்கத்தின் உடலும் யானையின் தலையையும் கொண்டது) எனப்படும் உருவம் உள்ளது. விசேச நாட்களில் இங்கு 1008 விளக்குகள் ஏற்றப்பட்டு ஜொலிக்கும்.
அஷ்டஷக்தி மண்டபத்திற்கு அடுத்து இருப்பது மீனாக்ஷி நாயக்கர் மண்டபம். இது 160' நீளம் உடையது. இந்த மண்டபத்தில் 110 தூண்கள் 6 வரிசையாக உள்ளது. 6.7 மீட்டர் உயரம் கொண்டது. ஒவ்வொரு தூணிலும் யாழி (புனித விலங்கு - சிங்கத்தின் உடலும் யானையின் தலையையும் கொண்டது) எனப்படும் உருவம் உள்ளது. விசேச நாட்களில் இங்கு 1008 விளக்குகள் ஏற்றப்பட்டு ஜொலிக்கும்.
Re: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா
நம்பிட்டோம் நீங்க காலேஜ் வாசல் வரை போனீங்கன்னு மது ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
நல்ல பகிர்வு மது
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
நல்ல பகிர்வு மது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா
இருட்டு மண்டபம் :
இருட்டு மண்டபம், 1613 ஆம் ஆண்டு கடந்தை முதலியரால் கட்டப்பட்டது. இங்கு தெற்கு பக்கம் முனிவர் , மோஹினி, மற்றும் கடந்தை முதலியோரின் சிலைகள் உள்ளது.
இருட்டு மண்டபம், 1613 ஆம் ஆண்டு கடந்தை முதலியரால் கட்டப்பட்டது. இங்கு தெற்கு பக்கம் முனிவர் , மோஹினி, மற்றும் கடந்தை முதலியோரின் சிலைகள் உள்ளது.
Re: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா
கிளிக்கூண்டு மண்டபம் :
கிளிக்கூண்டு மண்டபம், பொற்றாமரை குலத்திற்கு மேற்கில் உள்ளது. 1623 ஆம் ஆண்டு அபிஷேக பண்டாரம் என்பவரால் கட்டப்பட்டது. இந்த மண்டபத்திலும் யாழி சிலை உள்ளது அதனால் இது யாழி மண்டபம் என்றும் அழைக்கப் படுகிறது. இதன் மற்றொரு பெயர் ஷ்ணகிலி மண்டபம். இங்கு பாண்டவர்கள் மற்றும் தௌரபதி மற்றும் சில திருவிளையாடுகள் ஓவியங்களாக உள்ளது... சித்தி விநாயகர் திருவுருவம் மற்றும் குமரனின் திருவுருவமும் உள்ளது
கிளிக்கூண்டு மண்டபம், பொற்றாமரை குலத்திற்கு மேற்கில் உள்ளது. 1623 ஆம் ஆண்டு அபிஷேக பண்டாரம் என்பவரால் கட்டப்பட்டது. இந்த மண்டபத்திலும் யாழி சிலை உள்ளது அதனால் இது யாழி மண்டபம் என்றும் அழைக்கப் படுகிறது. இதன் மற்றொரு பெயர் ஷ்ணகிலி மண்டபம். இங்கு பாண்டவர்கள் மற்றும் தௌரபதி மற்றும் சில திருவிளையாடுகள் ஓவியங்களாக உள்ளது... சித்தி விநாயகர் திருவுருவம் மற்றும் குமரனின் திருவுருவமும் உள்ளது
Page 1 of 13 • 1, 2, 3 ... 11, 12, 13
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மதுரை மீனாட்சி அம்மன் கோவில் 360° பார்க்க வேண்டுமா ??
» மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கட்டுப்பாட்டு அறையில் தீ விபத்து
» மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம்
» மதுரை மீனாட்சி அம்மன் கிளி
» மதுரை மீனாட்சி அம்மன் கோயில்
» மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கட்டுப்பாட்டு அறையில் தீ விபத்து
» மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம்
» மதுரை மீனாட்சி அம்மன் கிளி
» மதுரை மீனாட்சி அம்மன் கோயில்
Page 1 of 13
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|