ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
காதல் வரும் வீதி  Poll_c10காதல் வரும் வீதி  Poll_m10காதல் வரும் வீதி  Poll_c10 
VENKUSADAS
காதல் வரும் வீதி  Poll_c10காதல் வரும் வீதி  Poll_m10காதல் வரும் வீதி  Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
காதல் வரும் வீதி  Poll_c10காதல் வரும் வீதி  Poll_m10காதல் வரும் வீதி  Poll_c10 
VENKUSADAS
காதல் வரும் வீதி  Poll_c10காதல் வரும் வீதி  Poll_m10காதல் வரும் வீதி  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் வரும் வீதி

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

காதல் வரும் வீதி  Empty காதல் வரும் வீதி

Post by மதுமிதா Tue Jul 09, 2013 7:30 pm

விடிகிற வேலையை முடித்து விட்டு புதியதொரு நாளை ஆரம்பித்துக் கொண்டிருந்த ஒரு காலை வேளையில் முதல் முறையாக உன்னை பார்த்தேன். உன் தந்தையோடு இந்த வீதியில்.


உன்னை பார்ப்பதற்கு பல மாதங்களுக்கு முன்னரே இந்த வீதியை நான் பார்த்துவிட்டேன். முதல் முறையாகப் பார்த்த போதே எனக்குப் பிடித்துப் போன வீதி இது. எனக்கான வீதி இதுதான் என்று மனது சொல்ல, இந்த வீதியிலயே ஒரு வீடெடுத்து தங்கிவிட்டேன். என்றாலும், யென் எனக்கு இந்த வீதியை பிடித்துப் போனது என்பதற்கான காரணத்தை மற்றும் அறியாமலையே இருந்தேன்.


ஆனால், உன்னை இந்த வீதியில் பார்த்த பிறகு, நீ ஒரு வருடமாக இந்த வீதியில் தான் உன் தந்தையோட போயி கொண்டு இருக்கிறாய் என்பதை அறிந்த பிறகு.... ஏன் இந்த வீதி எனக்கு பிடித்துப் போனது என்றும், ஏன் இந்த வீதி இவ்வளவு அழகாக இருக்கிறது என்றும் விளங்கியது எனக்கு.

அப்போதே, முடிவு செய்து விட்டேன், உன் அழகால், நீ கடந்து போகும் வீதியை அழகாக்கி விடும் உன்னை.. உன்னை தான் காதலிப்பது என்று.....



இக்கதையின் புகழ் -> ஐ லவ் யூ தபூஷங்கர் ஐ லவ் யூ 

தொடரும்


காதல் வரும் வீதி  Mகாதல் வரும் வீதி  Aகாதல் வரும் வீதி  Dகாதல் வரும் வீதி  Hகாதல் வரும் வீதி  U



காதல் வரும் வீதி  0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

காதல் வரும் வீதி  Empty Re: காதல் வரும் வீதி

Post by மதுமிதா Tue Jul 09, 2013 7:51 pm

வேலைக்கு போக நானும், கல்லூரிக்கு போக என் மகளும் வீட்டிலிருந்து ஒன்றாகக் கிளம்பி ரயில் நிலையத்துக்கு நடந்து போகும் வழியில் வரும் வீதியில்... என் மகளைப் பார்ப்பதற்காக தினமும் நிற்கிறான் அவன்.


அவனை கடந்து போகிற வரை என் பெண்ணையே பார்த்துக் கொண்டிருப்பான். அவ்வப்போது என்னையும் பார்த்துக் கொள்வான். அதில், அப்பாவின் கண் முன்னரே பெண்ணைப் பார்க்கிறோமே என்கிற தயக்கம் துளி கூட இருக்காது


அவன் மீது எனக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் வந்ததில்லை. அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, அவனது பார்வை நாகரிகமான பார்வை. மற்றொன்று, அவந்து பார்வையை என் பெண் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டாள் என்கிற நம்பிக்கை.

"அப்பா... அவன் என்னையே பார்க்கிறான்" என்று பதற்றத்துடன் ஒரே ஒரு முறை சொல்லியிருந்தால் கூட அவன் பார்வை என் மகளை ஏதோ செய்திருக்கிறது என்று நான் முடிவு செய்திருப்பேன். ஆனால், என் மகளோ அப்படி ஒரு போதும் சொல்லியதே இல்லை. அவனைப் பற்றி அவள் எதுவும் பேசியதில்லை. அப்படிப் பேசாமல் இருப்பதுதான் சரி என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.

ஆனால், வழக்கத்துக்கு மாறாக அவன் என் மகளுக்காக காத்திருக்காத நாள் ஒன்று வந்தது. " என்ன இன்னிக்கு அவனை காணோம்" என்ற பாவனையில் நானும் என் மகளும் ஒரே நேரத்தில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட அன்று தான்.... யாரோ என் பின்னந்தலையில் ஓங்கி அடித்ததைப் போன்று உணர்ந்தபோதுதான்.... நான் நினைத்துக் கொண்டிருப்பது சரியில்லை என்று தோன்றியது எனக்கு.

என்ன செய்யலாம் என்ற கேள்வியோடு போய், அதே கேள்வியோடு வந்த அடுத்த நாளில்... வீட்டிலிருந்து நாங்கள் இருவரும் கிளம்பி வரும் வழியில்..."அப்பா.. இனி மேல் இந்த வீதியில் போகலாம்" என்று என் மகள் சொன்ன பொது என் பின்னந்தலையில் நிகழ்ந்தது அடியா ஒத்தடமா என்று தெரியவில்லை எனக்கு.

'அவன் பார்வை என் மகளைக் கவர்ந்து விட்டது. ஆனால், எனக்காக அவனைத் தவிர்க்கிறாள்' என்று மட்டுமே அப்போது என்னால் நினைக்கத் தோன்றியது. இந்த நினைப்பு சரியா தவறா என்பது என் மகளுக்கே வெளிச்சம்.

ஆனால், ஒரு நிம்மதி எனக்கு... வீதி மாறிய பிறகு அவன் என் கண்ணில் பட்டதே இல்லை. என் மகளின் கண்ணில் பட்டிருக்கிறானா என்பது எனக்குத் தெரியாது. அதை என் மகளிடம் கேட்பதில் விருப்பமில்லை எனக்கு.


இக்கதையின் புகழ் -> ஐ லவ் யூ  தபூஷங்கர் ஐ லவ் யூ 

தொடரும்


காதல் வரும் வீதி  Mகாதல் வரும் வீதி  Aகாதல் வரும் வீதி  Dகாதல் வரும் வீதி  Hகாதல் வரும் வீதி  U



காதல் வரும் வீதி  0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

காதல் வரும் வீதி  Empty Re: காதல் வரும் வீதி

Post by யினியவன் Tue Jul 09, 2013 8:11 pm

வீதி வழி விதி விளையாடுது புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

காதல் வரும் வீதி  Empty Re: காதல் வரும் வீதி

Post by Muthumohamed Wed Jul 10, 2013 6:43 am

யினியவன் wrote:வீதி வழி விதி விளையாடுது புன்னகை

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 



காதல் வரும் வீதி  Mகாதல் வரும் வீதி  Uகாதல் வரும் வீதி  Tகாதல் வரும் வீதி  Hகாதல் வரும் வீதி  Uகாதல் வரும் வீதி  Mகாதல் வரும் வீதி  Oகாதல் வரும் வீதி  Hகாதல் வரும் வீதி  Aகாதல் வரும் வீதி  Mகாதல் வரும் வீதி  Eகாதல் வரும் வீதி  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

காதல் வரும் வீதி  Empty Re: காதல் வரும் வீதி

Post by மதுமிதா Wed Jul 10, 2013 6:26 pm

தினமும் எனக்காக காத்திருந்து, என் அப்பாவின் கண் முன்னரே என்னை கண் கொட்டாமல் பார்க்கும் அவனை நினைத்தால் எனக்கு ஆச்சரியாமாக இருக்கும் 'என்ன தைரியம் இவனுக்கு!' என்று மனசு வியக்கும். ஆனால், அதற்கு மேல் நான் அவனது பார்வையை பெரிதாக நினைத்ததில்லை. 'யாரிவன்' என்கிற கேள்வியோடும் 'யாரோ....' என்கிற பதிளோடும் அவனைக் கடந்து போய்க் கொண்டுருந்தேன் தினமும் நான், என் அப்பாவின் மகளாகவே......

ஆனால்... எனக்காக அவன் காத்திருக்காத அந்த நாளுக்கும், அதன்பிறகு நானும் என் தந்தையும் வேறு வீதியில் நடந்து சென்ற நாட்களுக்குப் பிறகும் வந்த ஒரு நாளில்.... நான் மட்டும் கல்லூரிக்குத் தனியாகக் கிளம்பி வந்த ஒரு நாளில், அவன் வீட்டிருக்கும் வழியாகப் பினேன். அவன் காத்திருந்தான், நீ வந்தாலும் வராமல் போனாலும் உனக்காக நான் இங்கே காத்திருப்பேன் என்கிற பார்வையோடு.

ஏனோ அந்தப் பார்வையிலிருந்து என் கண்களை சட்டென்று விளக்கிக் கொள்ள முடியவில்லை. என்றாலும் என்னுடன் வராத என் அப்பா, என் இருபுறமும் வருவது போல் தோன்ற... அவனது பார்வையிலிருந்து என்னை இழுத்துக் கொண்டு நகர்ந்தேன். அப்பாடா, இன்னும் நான் என் அப்பாவின் மகள்தான் என்கிற நிம்மதியோடு.

ஆனால்... அண்ணல்... நானும் என் தந்தையும் ரயிலில் போய்க்கொண்டிருந்த ஒரு நாளில்.. என் அப்பா அவரது இடத்தில் இறங்கிய போது... அதே வாசல் வழியே ஏறி வந்து என் எதிரே அமர்ந்த போது திடுக்கிட்டுப் போனேன் நான். அவன் ஏறியதை என் அப்பா பார்த்திருப்பரோ என்கிற பதற்றம் வேறு.

என் எதிரே அமர்ந்திருக்க்ம் அவனோ, " என்ன.. நான் வந்ததை உன் அப்பா பார்த்திருப்பரோ என்று பதற்றமா? கவலைப்படாதே. நான் வந்ததை உன் அப்பா நன்றாகவே பார்த்தார்" என்றான்.

'அடப்பாவி' என்று அடித்துக் கொண்டது மனசு.

"அவருக்குத் தெரியாமல் உன்னைப் பார்ப்பதில் எனக்கு விருப்பமில்லை. உன்னை எனக்கு பிடிக்கிறது எனபதை உனக்கு உணர்த்தும் வேளையிலேயே உன் தந்தைக்கும் உணர்த்திவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன் நான்" என்று சொல்லிவிட்டு, நகரும் ரயிலில் இருந்து இறங்கிப் போய்விட்டான்.

அவனை என்ன செய்வதென்று எனக்கு ஒன்றும் தெரியவில்லை .அவன் வந்து இப்படி பேசியதை விட, அவன் வந்ததைப் பார்த்துவிட்டு போன என் அப்பா என்ன மனநிலையில் இருப்பாரோ என்கிற கவலை தான்என்னை ரொம்ப படுத்தியது.

அப்பா வந்து என்ன கேட்பரோ என்கிற கலக்கத்தோடு மாலை நான் வீட்டுக்குள் நுழைகையில்...... அங்கே அப்பா உட்கார்ந்திருப்பதைப் பார்த்ததும் அப்படியே நின்று விட்டேன் நான். இதுவரை நான் கண்டிராத இந்த படு அவஸ்தையான தருணத்திலிருந்து என்னைக் காப்பாற்றிக் கொள்ள ஒரே வழி, என் அப்பாவின் மகளாக அவரிடம் சரணாகதி அடைவது தான் என்று தோன்ற... ஓடிப்போய் அவர் முன்னே மண்டியிட்டு அவரை காட்டிக் கொண்டு ஒரு குழந்தையாகி என்னையே நான் காப்பாற்றிக் கொண்டேன். என் கவலை எல்லாம் பறந்தோடியது.

"என்னடா..... அவன் உன்னை ரொம்ப தொல்லை செய்யுறானா?" எனறார் என் தலையை வருடியப்படி.

"இல்லையப்பா" என்றேன்.

"தெரியும்" என்றார் அப்பா.

சட்டென்று முகத்தைத் தூக்கி அவரை பார்த்தேன்.

"நீ என் குழந்தைடா" என்றார் அப்பா. எனக்கு அழுகை வந்துவிட்டது.

இக்கதையின் புகழ் -> ஐ லவ் யூ  தபூஷங்கர் ஐ லவ் யூ 

தொடரும்


காதல் வரும் வீதி  Mகாதல் வரும் வீதி  Aகாதல் வரும் வீதி  Dகாதல் வரும் வீதி  Hகாதல் வரும் வீதி  U



காதல் வரும் வீதி  0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

காதல் வரும் வீதி  Empty Re: காதல் வரும் வீதி

Post by மதுமிதா Wed Jul 10, 2013 6:42 pm

அன்பான அப்பா. அழகான மகள். இருவருக்கும் நடுவே இப்படி விளையாடும் அவன் மீது, உங்களில் யார்க்கேனும் கோபம் வந்தால், அதை அவன் மீது காட்டாதீர்கள் என் மீது காட்டுங்கள். ஏன் என்றால் அவனை அப்படி விளையாட விட்டதே நான் தான். எனக்கு இது தான் வேலை.

என் அடுத்த வேலை அந்த மூன்று இதயங்களுக்கும் எந்த சேதாரமும் இன்றி, அவளை அவள் தந்தையே அவன் கையில் சேர்க்க வைப்பது தான். அதை எப்படி நான் செய்வேன் என்கிற கவலையே உங்களுக்கு வேண்டாம்.

அந்த அழகான வீதியிலே வெகு விரைவில் மூவரும் பேசி நடப்பார்கள். அப்போது அந்த வீதி முன்னேபோதையும் விடவும் முக அழகாக மாறிவிடும்.
அதை நான் நிச்சயம் செய்வேன். என்னை நீங்கள் நம்பலாம்.

'அதெல்லாம் இருக்கட்டும். அந்த மூவருக்கும் நடுவே புதிதாக நீ யார்?' என்று என்னைப் பார்த்து நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது.

என் பெயர் வேறொன்றுமில்லை............................ காதல்!

இக்கதையின் புகழ் ->   ஐ லவ் யூ  தபூஷங்கர் ஐ லவ் யூ   

முற்றும்


உங்கள்
வீதியில் மரங்கள்
அசையவில்லை என்றால்
அங்கு
எங்கோ ஒரு மூலையில்
காதல்
புழங்கி கொண்டிருக்கிறது
என்று அர்த்தம் ..!


காதல் வரும் வீதி  Mகாதல் வரும் வீதி  Aகாதல் வரும் வீதி  Dகாதல் வரும் வீதி  Hகாதல் வரும் வீதி  U



காதல் வரும் வீதி  0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

காதல் வரும் வீதி  Empty Re: காதல் வரும் வீதி

Post by manikandan.dp Tue Jul 16, 2013 12:10 pm

அருமையான பதிவு ........சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 
எப்படி இப்படி யோசிக்கிறிங்க ....நன்றி நன்றி நன்றி 
எல்லா தந்தையும் இப்படி இருபருகள் என்பது சந்தேகத்தான்.........


மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013

http://manikandan89.wordpress.com/

Back to top Go down

காதல் வரும் வீதி  Empty Re: காதல் வரும் வீதி

Post by மதுமிதா Tue Jul 16, 2013 12:19 pm

manikandan.dp wrote:அருமையான பதிவு ........சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 
எப்படி இப்படி யோசிக்கிறிங்க ....நன்றி நன்றி நன்றி 
எல்லா தந்தையும் இப்படி இருபருகள் என்பது சந்தேகத்தான்.........
தபு ஷங்கர் கற்பனை யாருக்கும் எட்டாதது தான் புன்னகை


காதல் வரும் வீதி  Mகாதல் வரும் வீதி  Aகாதல் வரும் வீதி  Dகாதல் வரும் வீதி  Hகாதல் வரும் வீதி  U



காதல் வரும் வீதி  0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

காதல் வரும் வீதி  Empty Re: காதல் வரும் வீதி

Post by யினியவன் Tue Jul 16, 2013 12:25 pm

ஈபிள் டவர் மேல இருக்காறா மது? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

காதல் வரும் வீதி  Empty Re: காதல் வரும் வீதி

Post by manikandan.dp Tue Jul 16, 2013 12:34 pm

யினியவன் wrote:ஈபிள் டவர் மேல இருக்காறா மது? புன்னகை

சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது 


மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013

http://manikandan89.wordpress.com/

Back to top Go down

காதல் வரும் வீதி  Empty Re: காதல் வரும் வீதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum