ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்! Poll_c10கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்! Poll_m10கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்! Poll_c10 
ayyasamy ram
கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்! Poll_c10கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்! Poll_m10கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்! Poll_c10 
mohamed nizamudeen
கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்! Poll_c10கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்! Poll_m10கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்! Poll_c10 
VENKUSADAS
கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்! Poll_c10கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்! Poll_m10கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்! Poll_c10 

Top posting users this month
heezulia
கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்! Poll_c10கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்! Poll_m10கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்! Poll_c10 
ayyasamy ram
கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்! Poll_c10கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்! Poll_m10கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்! Poll_c10 
mohamed nizamudeen
கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்! Poll_c10கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்! Poll_m10கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்! Poll_c10 
VENKUSADAS
கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்! Poll_c10கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்! Poll_m10கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்!

3 posters

Go down

கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்! Empty கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்!

Post by சாமி Mon Jul 08, 2013 4:13 pm

தமிழில் ஒன்று,இரண்டு,மூன்று...என்று எண்ணுகிறோம்.பத்து பத்தாக எண்ணும் போது எண்பதுக்கு அடுத்து ஒன்பது என்று வராமல் ஏன் தொண்ணூறு என்று வருகிறது?நூறு நூறாக எண்ணும் போது எண்ணூறுக்கு அடுத்து தொண்ணூறு வராமல் தொள்ளாயிரம் என்று ஏன் வருகிறது?ஆயிரம் ஆயிரமாக எண்ணும் போது எட்டாயிரத்துக்கு அடுத்து தொள்ளாயிரம் என்று வராமல் ஒன்பதாயிரம் என்று ஏன் வருகிறது.பத்தாயிரம் பத்தாயிரமாக எண்ணும் போது எண்பதாயிரம் அடுத்து ஒன்பதாயிரம் என்று வராமல் ஏன் தொண்ணூறாயிரம் என்று வருகிறது.ஒன்று ஒன்றாக எண்ணும் போது எட்டுக்கு அடுத்து வர வேண்டிய உண்மையான எண் எது?

தொல்காப்பிய காலத்திலேயே இந்தக் குழப்பம் நடைபெற்று முடிந்துவிட்டது. எட்டுக்குப் பின் தொண்டு, எண்பதுக்குப் பின் தொன்னூறு, எண்ணூறுக்குப் பின் தொன்னூறு, எண்ணாயிரத்திற்குப்பின் தொள்ளாயிரம் இப்படித்தான் இருந்தது. (மேற்கோள் )
5. குற்றுகர எண்ணுப்புணர்ச்சி

`ஒன்பது' என்னும சொல்

445. 1ஒன்பான் ஒகரமிசைத் தகரம் ஒற்றும்
முந்தை ஒற்றே ணகாரம் இரட்டும்
பஃதென் கிளவி யாய்தபக ரங்கெட
நிற்றல் வேண்டும் ஊகாரக் கிளவி
ஒற்றிய தகரம் றகாரம் ஆகும்.

இதுவும் இது.

ஒன்பான் ஒகர மிசை தகரம் ஒற்றும் (நிலைமொழியாகிய) ஒன்பது என்னும் சொல்லின் ஒகரத்திற்கு மேலாகத்தகரம் ஒற்றாய் மிக்கு வரும், முந்தை ஒற்று ணகாரம் இரட்டும்- முன் சொன்ன ஒகரத்தின் முன்னர் னகர ஒற்று இரண்டு ணகார ஒற்றாய் மிக்கு வரும், பத்து என் கிளவி பகரம் ஆய்தம் கெட ஊகாரக் கிளவி நிற்றல் வேண்டும் - ( வருமொழியாகிய) பத்து என்னும் சொல் தன்கண் பகரமும் ஆய்தமும் கெட ( நிலைமொழியில் இரட்டிய ணகரத்தின் பின்னர்) ஊகாரமாகிய எழுத்து நிற்றல் வேண்டும் ; ஒற்றிய தகரம் றகாரம் ஆகும். (வருமொழியாகிய பத்து என்பதன் ஈற்றதன்மேல் ஏறிய உகரம் கெடாது பிரிந்து நிற்ப) ஒன்றாய் நின்ற தகரம் றகார ஒற்றாகும் .

இஃது, ஒன்பதும் பத்தும் என நின்றால் முடியற்பால (இன்ன) வென்பது. பகர ஆய்தம் என்னாத முறையன்றிய கூற்றினான். நிலைமொழிக்கண் பகரக்கேடும் கொள்க. குற்றயலுகரமும் அஃது ஏறிய மெய்யும் முன்னர் மாட்டேற்றாற் கெட்டன.

எ - டு : தொண்ணூறு என வரும்.
(39)
1.இந்நூற்பா ஒன்பது + பஃது = தொன்னூறு என முடிக்கின்றது. இம் முடிவு எவ்வகையிலும் பொருந்தாத தொன்றாம். ஒன்பது என்னும் எண்ணுக்குப் பழம்பெயர் தொண்டு என்பது. ` தொண்டு தலையிட்ட ' (தொல். 1358) என்று ஆசிரியரும், தொண்டுபடு திவவு (மலைபடு. 21) என்று பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனாரும் கூறுதல் காண்க. தொண்டு என்னும் சொல் தொல்காப்பியர் காலத்திலேயே வழக்கற்றுப் போய் விட்டது. அவர் காலத்திற்குமுன் தொண்டு தொண்பது தொண்ணூறு தொள்ளாயிரம் என்பன முறையே, 9, 90, 900,9000 என்னும் எண்களைக் குறிக்கும் பெயர்களாயிருந்தன. தொண்டு என்னும் ஒன்றாமிடப்பெயர் வழக்கறவே, தொண்டு என்னும் பத்தாமிடப்பெயர் ஒன்றாமிடத்திற்கும் தொண்ணூறு என்னும் நூறாமிடப் பெயர் பத்தாமிடத்திற்கும் , தொள்ளாயிரம் என்னும் ஆயிரமிடாப் பெயர் நூறாமிடத்திற்குமாக வழங்கத் தலைப்பட்டன . தொண்பது என்னும் பெயர் முறையே தொன்பது ஒன்பது என மருவிற்று. ஆயிரத்தாமிடப்பெயர் நூறுமிடத்திற்கு வழங்கவே 9000 என்னும் எண்ணைக் குறிக்க ஒன்பது என்னும் பெயருடன் ஆயிரம் என்னும் பெயரைச் சேர்க்கவேண்டிய தாயிற்று. முதற் பத்து எண்ணுப்பெயர்களில் ஒன்பது என்பதைத் தவிர , மற்றவையெல்லாம் ஒரு சொல்லா யிருப்பதையும் , ஒன்பது என்பது இரு சொல்லாய்ப் பது (பத்து) என்று முடிவதையும் , தொண்ணூறு என்பது நூறு என்றும் தொள்ளாயிரம் என்பது ஆயிரம் என்றும் முடிவதையும் நோக்குக. தொண்பது என்பதின் திரிபான ஒன்பது என்னும் சொல்லுக்குப் பொருந்தப் புகலும் முறைபற்றி ஒன்று குறைந்த பத்து என்று பொருள் கூறுவர் சிலர். அதுவே அதன் பொருளாயின் தொண்ணூறு தொள்ளாயிரம் என்பனவற்றிற்கும் அப் பொருள் ஏற்கவேண்டும். அங்ஙனம் ஏலாமையின் அது போலியுரையென மறுக்க. ஆகவே தொண்டு + பத்து = தொண்பது ; தொண்டு + நூறு = தொண்ணூறு ; தொண்டு + ஆயிரம் = தொள்ளாயிரம் என்று புணர்ப்பதே முறையென்றும் , தொண்டு என்னும் எண்ணுப் பெயர் வழக்கற்றதினால் அதன்மேலிடப் பெயர்கள் மூன்றும் ஒவ்வோரிடமாய்த் தாழ்ந்துவந்து வழங்கின என்றும் அறிந்து கொள்க. (பாவாணர்.)



1991 ஆம் ஆண்டு. மதுரை திருவேடகத்தில் உள்ள விவேகானந்தா குருகுலத்தில் நான் பதினோராம் வகுப்பு படிக்கும் போது, எனது கணித ஆசிரியர் - மரியாதைக்குரிய அய்யா திரு.கிருஷ்ணன் அவர்கள் "எண்பது, ஒன்பது... எண்ணூறு, தொண்ணூறு... எட்டாயிரம், தொள்ளாயிரம்... எண்பதினாயிரம், ஒன்பதினாயிரம்... இது தானே சரி. எப்படி எல்லாம் வரிசை மாறி வருகிறது?" என ஒரு கேள்வி கேட்டார்கள். சுமார் இருபது ஆண்டுகளாக எத்தனையோ கணித ஆசிரியர்கள் சொல்லாத பதிலை, நான் சற்றும் எதிர்பாராமல் என் தாய் தமிழ் சொன்னது. சுமார் இருபது ஆண்டு தேடல் இனிதே நிறைவடைந்தது. [என் கணித ஆசிரியர் அய்யா கிருஷ்ணன் அவர்கள் இந்த பதிலால் மகிழ்ந்தது என் மகிழ்ச்சிக்கு மகிழ்வளித்தது]

தமிழக அரசின் அரசவை புலவராக இருந்த திருக்குறளில் தோய்ந்த அனுபவம் உடைய பதின் கவனகர் அய்யா திரு.பெ.இராமையா அவர்களது மேடை நிகழ்வில் கேட்கப் பட்ட கேள்விகளும் அவரது பதில்களும் அடங்கிய புத்தகத்திலிருந்து...

......பண்டைய தமிழ் எண்ணியலில் ஒன்பது என்ற சொல்லே கிடையாது. பரிபாடலிலும் வேறு சில சங்க இலக்கியங்களிலும் எட்டிற்கு அடுத்து பயன்படுத்த பெற்றுள்ள சொல் "தொண்டு" என்பதாகும். தொண்டு என்றால் துளை. அதாவது ஓட்டை. நம் உடல் ஒன்பது ஓட்டைகளை கொண்டது.

இருநிழல் படாமை மூவே ழுலகமும்
ஒருநிழல் ஆக்கிய ஏமத்தை மாதோ
பாழெனக் காலென பாகென ஒன்றென
இரண்டென மூன்றென நான்கென ஐந்தென
ஆறென ஏழென எட்டெனத "தொண்டென"
- பரிபாடல் 3 , வரி 75 -79

"தொண்டு" தலையிட்ட பத்துக்குறை எழுநூற்று...
- தொல்காப்பியம், 1358

"தொண்டு" படு திவவின் முண்டக நல்யாழ்.
- மலைபடு கடாம் - 21

இந்த சொல் எப்படியோ தன் இடத்திலிருந்து வீழ்த்தப் பெற்றுவிட்டது. இந்த 'தொண்டு' என்ற சொல்லை அதற்குரிய இடத்தில் வைத்து எண்ணியலை வரிசையாக சொல்லிப் பாருங்கள். ஒரு பெரிய குழப்பமே தெளிவாகும். அதாவது,

எட்டு
தொண்டு (சறுக்கிய சொல்)
பத்து.

எண்பது
தொண்பது (இது தான் இன்றைய ஒன்பது)
நூறு

எண்ணூறு
தொண்ணூறு
ஆயிரம்

எண்ணாயிரம்
தொள்ளாயிரம்
பத்தாயிரம்

எண்பதினாயிரம்
தொண்பதினாயிரம்
இலட்சம்.

ஆக தொண்டு என்ற ஒரு சொல் வழக்கிலிருந்து எப்படியோ வீழ்ந்ததால் அதை நிரப்ப, எண்பதுக்கு அடுத்திருந்த தொண்பது, ஒன்பது என்ற பெயர் மாற்றத்துடன் எட்டிற்கு அடுத்தாற்போல் வந்து உட்கார்ந்து கொண்டது. அதை நிரப்ப எண்ணூறுக்கு அடுத்து இருந்த தொண்ணூறு என்பதிற்கு அடுத்து வந்து உட்கார்ந்து கொண்டது. இந்த சிக்கல் எண்ணியலின் இறுதி வரை பாதித்துள்ளது.

உங்களிடம் என் அன்பான வேண்டுகோள். இனிமேலாவது நம் தமிழ் மொழியின் சொற்களை காப்பாற்றுவதில் மிக எச்சரிக்கையாக இருங்கள். முடிந்த வரை தூய தமிழில் உரையாடும் பழக்கத்தை மேற்கொள்ளுங்கள். முடிந்தால் இந்த எண்ணியல் சறுக்கலை சரி செய்ய அரசின் மொழி வளர்ச்சித்துறை மூலம் முயற்சி செய்யுங்கள்.

நன்றி:டீச்சர்ஸ்ஆப்இந்தியாஆர்ஜி


Last edited by சாமி on Mon Jul 08, 2013 4:19 pm; edited 1 time in total


[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்! Empty Re: கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்!

Post by manikandan.dp Mon Jul 08, 2013 4:18 pm

சூப்பருங்க 


மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

[You must be registered and logged in to see this link.]
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013

http://manikandan89.wordpress.com/

Back to top Go down

கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்! Empty Re: கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்!

Post by ராஜு சரவணன் Mon Jul 08, 2013 4:31 pm

தமிழின் பெருமையை சொல்லும், எண்களை அழைக்கும் விதம் பற்றிய உங்கள் கட்டுரை பகிர்வுக்கு நன்றி நண்பரே புன்னகை

ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய அவசியமான பதிவு புன்னகை

எனது விருப்பம் புன்னகை


[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்! Empty Re: கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum