ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

Top posting users this week
ayyasamy ram
தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு Poll_c10தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு Poll_m10தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு Poll_c10 
heezulia
தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு Poll_c10தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு Poll_m10தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு Poll_c10 
mini
தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு Poll_c10தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு Poll_m10தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு Poll_c10 
mohamed nizamudeen
தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு Poll_c10தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு Poll_m10தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு Poll_c10 
Abiraj_26
தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு Poll_c10தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு Poll_m10தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு

+2
தர்மா
soplangi
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு Empty தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு

Post by soplangi Thu Jul 04, 2013 4:39 pm

தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு Tamil_News_large_74963120130704154442

தர்மபுரி மாவட்ட கலப்பு திருமண விவகாரத்தில் சம்பந்தப்பட்ட திவ்யாவின் கணவன் இளவரசன் , ரயில் தண்டவாளத்தில் மூளை சிதறிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். அவர்தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் ‌கூறுகின்றனர்.

காதல் திருமணத்தால் கலவரம்

தர்மபுரி மாவட்டம், செல்லன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த, திவ்யாவுக்கும், நாய்க்கன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த இளவரசனுக்கும், கலப்பு திருமணம் நடந்தது. இதையடுத்து, திவ்யாவின் தந்தை, தற்கொலை செய்து கொண்டார். அதைத்தொடர்ந்து, வன்முறைச் சம்பவங்கள் நடந்தன.

இந்த சூழ்நிலையில் திவ்யாவின் தாயார் தேன்மொழி, தனது மகளை கடத்தி்ச் சென்று கட்டாய திருமணம் செய்ததாகவும் மீட்க கோரியும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் திடீர் திருப்பமாக , கணவன் இளவரசனுடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை என திவ்யா கூறியதாக தெரிகிறது. பின்னர் நேற்று இந்த வழக்கில் ஆட்கொணர்வு மனுவை தாய் தேன்மொழி வாபஸ் பெற்றார். வழக்கின் விசாரணை இன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ரயில் முன் பாய்ந்து தற்கொலை

இந்நிலையில் தருமபுரி அரசு கலைக் கல்லூரியின் பின்புறம் ரயில் தண்டவாளத்தில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். தகவலறிந்த ரயில்வே போலீசார் உடலை மீட்டனர். இன்று மதியம் தண்டவாளம் அருகே தனது பல்சர் பைக்கி்ல் வந்ததகவும், பைக்கை நிறுத்திவிட்டு மதுகுடித்ததாகவும், பின்னர் ரயில் அடிபட்டு தற்கொ‌லை செய்ததாகவும் ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் அவரது சட்டை பையில் இரு கடிதங்கள் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

-- தினமலர்
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு Empty Re: தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு

Post by soplangi Thu Jul 04, 2013 4:46 pm

தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு 2e73ba83-10eb-4492-9330-643b7c9fd38c_S_secvpf

தர்மபுரி மாவட்டம் நாயக்கன்கெட்டாய் நத்தம் காலனியை சேர்ந்தவர் இளவரசன். செல்லன் கொட்டாயை சேர்ந்தவர் திவ்யா. தீவிரமாக காதலித்து வந்த இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு ஆகஸ்டு 8-ம் தேதி ஊரைவிட்டு சென்று திருமணம் செய்துகொண்டனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.

பெண்ணின் தரப்பில் கடத்தல் என்றும், பையன் தரப்பில் காதல் என்றும் போலீஸ் நிலையத்தில் வாதிட்டனர். போலீசாரும் இளவரசனையும் திவ்யாவையும் சேர்ந்து வாழ அனுப்பி வைத்தனர். மனம் உடைந்த திவ்யாவின் தந்தை நாகராஜ் தூக்கு கயிற்றில் உயிர் துறந்தார். அதன்பிறகு தர்மபுரியில் கலவரம் ஏற்பட்டது. இந்த சாதி மோதல் வடமாவட்டங்கள் முழுவதும் பரவியதால் பெரும் பதட்டம் ஏற்பட்டது.

இந்நிலையில் பத்து மாதங்களுக்குப் பிறகு கடந்த மாதம் 4-ம் தேதி திவ்யா தனது உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறிச் சென்றார். அதன்பின்னர் திரும்பி வரவில்லை. இதையடுத்து தர்மபுரி டவுன் போலீசில் இளவரசன் புகார் செய்தார். இதற்கிடையே திவ்யாவின் தாய் தேன்மொழி சென்னை ஐகோர்ட்டில் கேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்காக சென்னை ஐகோர்ட்டிற்கு வந்திருந்த திவ்யா, தனது தாயுடன் செல்ல விரும்புவதாக கூறினார். தன்னுடன் வரும்படி இளவரசன் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தார். ஆனால் திவ்யா கண்டுகொள்ளாமல் இருந்தார்.

இதையடுத்து திவ்யாவை அவரது தாயாருடன் அனுப்பி வைத்தனர். இந்த வழக்கின் விசாரணைக்காக நேற்று தாயாருடன் வந்திருந்த திவ்யா, இனிமேல் எந்த சூழ்நிலையிலும் காதல் கணவர் இளவரசனுடன் சேர்ந்து வாழ தயாராக இல்லை என்று கூறினார்.

இந்த நிலையில், திவ்யாவின் காதல் கணவர் இளவரசன் தர்மபுரியில் இன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தர்மபுரி அரசு கல்லூரியின் பின்புறம் உள்ள தண்டவாளத்தில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அருகில் ஒரு மோட்டார் சைக்கிள், கைப்பை ஆகியவையும் கிடந்தன.

அவரது சட்டைப் பையில் இருந்து 2 கடிதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆதாரங்களைச் சேகரித்த போலீசார், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலை வாழ வைக்க ஒரு கோஷ்டியும், பிரித்து வைக்க ஒரு கோஷ்டியும் மல்லுக்கட்டி வந்த நிலையில், இளவரசனின் திடீர் மரணம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-- மாலை மலர்
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு Empty தருமபுரி கலவரம்: திவ்யாவின் கணவன் இளவரசன் மரணம்

Post by soplangi Thu Jul 04, 2013 4:47 pm

தருமபுரி காதல் ஜோடி - திவ்யா இளவரசன் காதல் விவகாரத்தில் திவ்யா இனி இளவரசனோடு சேர்ந்து வாழ்வதில்லை என்று நேற்று ஊடகங்களுக்கு பேட்டியளித்த நிலையில், இளவரசன், இன்று, தருமபுரி கலைக்கல்லூரி பின்புறம் உள்ள ரயில் தண்டவாளத்தில், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

தருமபுரியில் இரு வேறு பிரிவைச் சேர்ந்த திவ்யா - இளவரசன் ஆகியோர் காதல் திருமணம் செய்து கொண்டதால், திவ்யாவின் தந்தை தற்கொலை செய்து கொண்டார். அதை அடுத்து தருமபுரியில் மிகப்பெரிய வன்முறை வெடித்தது.

இந்த நிலையில், திவ்யாவின் தாயார் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவைத் தொடர்ந்து, திவ்யா தனது தாயாருடன் வாழ விரும்புவதாகக் கூறி தாயாருடன் தங்கியிருந்தார்.

நேற்று நீதிமன்றத்தில் ஆஜரான திவ்யா, தனது தாயாருடன் இருக்கவே விரும்புவதாகவும், கணவருடன் வாழப் போவதில்லை என்றும் கூறியிருந்தார்.

இதற்கிடையே, வியாழக்கிழமை காலை தருமபுரி அரசுக் கல்லூரி பின்புறம் ரயில் தண்டவாளத்தில் இளவரசனின் உடல் கைப்பற்றப்பட்டது. மூளை சிதறிய நிலையில், அடிபட்டு உயிரிழந்ததாகத் தெரிகிறது.

இதுகுறித்து இளவரசனின் நண்பர்கள் தெரிவிக்கையில், உறவினர்களே அவரை அடித்துக் கொன்றிருக்கக் கூடும் என்றும், விபத்து ஏற்படுத்தியது போல் காட்ட முனைந்திருக்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டினர். மேலும், கடந்த நான்கைந்து நாட்களாக பெரும் பதட்டத்தில் இளவரசன் இருந்தான் என்றும், அவனை சமுதாயத் தலைவர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை, காப்பாற்றுவதற்கும் கைதூக்கி விடுவதற்கும் முன்வரவில்லை என்றும், அதனாலேயே பெரும் மன உளைச்சலில் இருந்தான் என்றும் அங்கே கூடியிருந்த நண்பர்கள் கூறினர். மேலும் சிலர், இளவரசனின் உடலை எடுக்க விடாமல் சூழ்ந்து கொண்டனர். போலீஸார் குறைவான அளவே அங்கே இருந்ததால், பதற்றமான சூழல் தென்பட்டது.

-- தினமணி
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு Empty இளவரசன் உடலை எடுக்க விடாமல் உறவினர்கள் போராட்டம்: போக்குவரத்து நிறுத்தம்

Post by soplangi Thu Jul 04, 2013 4:48 pm

தருமபுரியில் இன்று மர்மமான முறையில் உயிரிழ்ந்து சடலமாகக் கிடந்த இளவரசன் உடலை எடுக்க விடாமல் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பக் கூடாது என்றும், தங்கள் பகுதியான நத்தம் காலனிக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் வற்புறுத்திய அவர்கள், போலீஸாரை அருகே விடவில்லை. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

இதனிடையே, பதற்றமான சூழ்நிலை கருதி, கிராமப் பகுதிகளுக்கு பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

-- தினமணி
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு Empty Re: தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு

Post by தர்மா Thu Jul 04, 2013 6:39 pm

என்ன சொல்றதுன்னே தெரியல


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு Empty Re: தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு

Post by Guest Thu Jul 04, 2013 6:40 pm

தற்கொலையா ?? கொலையா ?
avatar
Guest
Guest


Back to top Go down

தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு Empty Re: தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு

Post by பூவன் Thu Jul 04, 2013 10:58 pm

புரட்சி wrote:தற்கொலையா ?? கொலையா ?
காதல் செய்தது தற்கொலை அதனால் இவரை செய்தது கொலை ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு Empty Re: தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு

Post by கரூர் கவியன்பன் Fri Jul 05, 2013 11:51 am

மன்னிக்க வேண்டும் நண்பர்களே
தலைப்பினை ஏற்க்க நான் தயங்குகிறேன்...

இவரை காரணமாக வைத்துத் தான் கலவரம் என்று ஒன்று நடந்தேறியதே தவிர ,இவர் காரணம் அல்ல.
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு Empty Re: தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு

Post by Guest Fri Jul 05, 2013 11:53 am

கரூர் கவியன்பன் wrote:மன்னிக்க வேண்டும் நண்பர்களே
தலைப்பினை ஏற்க்க நான் தயங்குகிறேன்...

இவரை காரணமாக வைத்துத் தான் கலவரம் என்று ஒன்று நடந்தேறியதே தவிர ,இவர் காரணம் அல்ல.

நானும் கவி கருத்தில் உடன்படுகிறேன் ... கலவரத்தை இவர்தான் நாடதி முடிதது போல் சொல்வது சரியல்ல ...
avatar
Guest
Guest


Back to top Go down

தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு Empty Re: தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு

Post by கரூர் கவியன்பன் Fri Jul 05, 2013 11:55 am

புரட்சி wrote:
கரூர் கவியன்பன் wrote:மன்னிக்க வேண்டும் நண்பர்களே
தலைப்பினை ஏற்க்க நான் தயங்குகிறேன்...

இவரை காரணமாக வைத்துத் தான் கலவரம் என்று ஒன்று நடந்தேறியதே தவிர ,இவர் காரணம் அல்ல.

நானும் கவி கருத்தில் உடன்படுகிறேன் ... கலவரத்தை இவர்தான் நாடதி முடிதது போல் சொல்வது சரியல்ல ...


ம்ம்ம்........................
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு Empty Re: தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum