Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Karthikakulanthaivel | ||||
ayyamperumal |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு
+2
தர்மா
soplangi
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு
தர்மபுரி மாவட்ட கலப்பு திருமண விவகாரத்தில் சம்பந்தப்பட்ட திவ்யாவின் கணவன் இளவரசன் , ரயில் தண்டவாளத்தில் மூளை சிதறிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். அவர்தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் கூறுகின்றனர்.
காதல் திருமணத்தால் கலவரம்
தர்மபுரி மாவட்டம், செல்லன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த, திவ்யாவுக்கும், நாய்க்கன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த இளவரசனுக்கும், கலப்பு திருமணம் நடந்தது. இதையடுத்து, திவ்யாவின் தந்தை, தற்கொலை செய்து கொண்டார். அதைத்தொடர்ந்து, வன்முறைச் சம்பவங்கள் நடந்தன.
இந்த சூழ்நிலையில் திவ்யாவின் தாயார் தேன்மொழி, தனது மகளை கடத்தி்ச் சென்று கட்டாய திருமணம் செய்ததாகவும் மீட்க கோரியும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் திடீர் திருப்பமாக , கணவன் இளவரசனுடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை என திவ்யா கூறியதாக தெரிகிறது. பின்னர் நேற்று இந்த வழக்கில் ஆட்கொணர்வு மனுவை தாய் தேன்மொழி வாபஸ் பெற்றார். வழக்கின் விசாரணை இன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ரயில் முன் பாய்ந்து தற்கொலை
இந்நிலையில் தருமபுரி அரசு கலைக் கல்லூரியின் பின்புறம் ரயில் தண்டவாளத்தில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். தகவலறிந்த ரயில்வே போலீசார் உடலை மீட்டனர். இன்று மதியம் தண்டவாளம் அருகே தனது பல்சர் பைக்கி்ல் வந்ததகவும், பைக்கை நிறுத்திவிட்டு மதுகுடித்ததாகவும், பின்னர் ரயில் அடிபட்டு தற்கொலை செய்ததாகவும் ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் அவரது சட்டை பையில் இரு கடிதங்கள் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
-- தினமலர்
soplangi- இளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
Re: தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு
தர்மபுரி மாவட்டம் நாயக்கன்கெட்டாய் நத்தம் காலனியை சேர்ந்தவர் இளவரசன். செல்லன் கொட்டாயை சேர்ந்தவர் திவ்யா. தீவிரமாக காதலித்து வந்த இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு ஆகஸ்டு 8-ம் தேதி ஊரைவிட்டு சென்று திருமணம் செய்துகொண்டனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.
பெண்ணின் தரப்பில் கடத்தல் என்றும், பையன் தரப்பில் காதல் என்றும் போலீஸ் நிலையத்தில் வாதிட்டனர். போலீசாரும் இளவரசனையும் திவ்யாவையும் சேர்ந்து வாழ அனுப்பி வைத்தனர். மனம் உடைந்த திவ்யாவின் தந்தை நாகராஜ் தூக்கு கயிற்றில் உயிர் துறந்தார். அதன்பிறகு தர்மபுரியில் கலவரம் ஏற்பட்டது. இந்த சாதி மோதல் வடமாவட்டங்கள் முழுவதும் பரவியதால் பெரும் பதட்டம் ஏற்பட்டது.
இந்நிலையில் பத்து மாதங்களுக்குப் பிறகு கடந்த மாதம் 4-ம் தேதி திவ்யா தனது உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறிச் சென்றார். அதன்பின்னர் திரும்பி வரவில்லை. இதையடுத்து தர்மபுரி டவுன் போலீசில் இளவரசன் புகார் செய்தார். இதற்கிடையே திவ்யாவின் தாய் தேன்மொழி சென்னை ஐகோர்ட்டில் கேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்காக சென்னை ஐகோர்ட்டிற்கு வந்திருந்த திவ்யா, தனது தாயுடன் செல்ல விரும்புவதாக கூறினார். தன்னுடன் வரும்படி இளவரசன் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தார். ஆனால் திவ்யா கண்டுகொள்ளாமல் இருந்தார்.
இதையடுத்து திவ்யாவை அவரது தாயாருடன் அனுப்பி வைத்தனர். இந்த வழக்கின் விசாரணைக்காக நேற்று தாயாருடன் வந்திருந்த திவ்யா, இனிமேல் எந்த சூழ்நிலையிலும் காதல் கணவர் இளவரசனுடன் சேர்ந்து வாழ தயாராக இல்லை என்று கூறினார்.
இந்த நிலையில், திவ்யாவின் காதல் கணவர் இளவரசன் தர்மபுரியில் இன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தர்மபுரி அரசு கல்லூரியின் பின்புறம் உள்ள தண்டவாளத்தில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அருகில் ஒரு மோட்டார் சைக்கிள், கைப்பை ஆகியவையும் கிடந்தன.
அவரது சட்டைப் பையில் இருந்து 2 கடிதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆதாரங்களைச் சேகரித்த போலீசார், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலை வாழ வைக்க ஒரு கோஷ்டியும், பிரித்து வைக்க ஒரு கோஷ்டியும் மல்லுக்கட்டி வந்த நிலையில், இளவரசனின் திடீர் மரணம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-- மாலை மலர்
soplangi- இளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
தருமபுரி கலவரம்: திவ்யாவின் கணவன் இளவரசன் மரணம்
தருமபுரி காதல் ஜோடி - திவ்யா இளவரசன் காதல் விவகாரத்தில் திவ்யா இனி இளவரசனோடு சேர்ந்து வாழ்வதில்லை என்று நேற்று ஊடகங்களுக்கு பேட்டியளித்த நிலையில், இளவரசன், இன்று, தருமபுரி கலைக்கல்லூரி பின்புறம் உள்ள ரயில் தண்டவாளத்தில், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
தருமபுரியில் இரு வேறு பிரிவைச் சேர்ந்த திவ்யா - இளவரசன் ஆகியோர் காதல் திருமணம் செய்து கொண்டதால், திவ்யாவின் தந்தை தற்கொலை செய்து கொண்டார். அதை அடுத்து தருமபுரியில் மிகப்பெரிய வன்முறை வெடித்தது.
இந்த நிலையில், திவ்யாவின் தாயார் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவைத் தொடர்ந்து, திவ்யா தனது தாயாருடன் வாழ விரும்புவதாகக் கூறி தாயாருடன் தங்கியிருந்தார்.
நேற்று நீதிமன்றத்தில் ஆஜரான திவ்யா, தனது தாயாருடன் இருக்கவே விரும்புவதாகவும், கணவருடன் வாழப் போவதில்லை என்றும் கூறியிருந்தார்.
இதற்கிடையே, வியாழக்கிழமை காலை தருமபுரி அரசுக் கல்லூரி பின்புறம் ரயில் தண்டவாளத்தில் இளவரசனின் உடல் கைப்பற்றப்பட்டது. மூளை சிதறிய நிலையில், அடிபட்டு உயிரிழந்ததாகத் தெரிகிறது.
இதுகுறித்து இளவரசனின் நண்பர்கள் தெரிவிக்கையில், உறவினர்களே அவரை அடித்துக் கொன்றிருக்கக் கூடும் என்றும், விபத்து ஏற்படுத்தியது போல் காட்ட முனைந்திருக்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டினர். மேலும், கடந்த நான்கைந்து நாட்களாக பெரும் பதட்டத்தில் இளவரசன் இருந்தான் என்றும், அவனை சமுதாயத் தலைவர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை, காப்பாற்றுவதற்கும் கைதூக்கி விடுவதற்கும் முன்வரவில்லை என்றும், அதனாலேயே பெரும் மன உளைச்சலில் இருந்தான் என்றும் அங்கே கூடியிருந்த நண்பர்கள் கூறினர். மேலும் சிலர், இளவரசனின் உடலை எடுக்க விடாமல் சூழ்ந்து கொண்டனர். போலீஸார் குறைவான அளவே அங்கே இருந்ததால், பதற்றமான சூழல் தென்பட்டது.
-- தினமணி
தருமபுரியில் இரு வேறு பிரிவைச் சேர்ந்த திவ்யா - இளவரசன் ஆகியோர் காதல் திருமணம் செய்து கொண்டதால், திவ்யாவின் தந்தை தற்கொலை செய்து கொண்டார். அதை அடுத்து தருமபுரியில் மிகப்பெரிய வன்முறை வெடித்தது.
இந்த நிலையில், திவ்யாவின் தாயார் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவைத் தொடர்ந்து, திவ்யா தனது தாயாருடன் வாழ விரும்புவதாகக் கூறி தாயாருடன் தங்கியிருந்தார்.
நேற்று நீதிமன்றத்தில் ஆஜரான திவ்யா, தனது தாயாருடன் இருக்கவே விரும்புவதாகவும், கணவருடன் வாழப் போவதில்லை என்றும் கூறியிருந்தார்.
இதற்கிடையே, வியாழக்கிழமை காலை தருமபுரி அரசுக் கல்லூரி பின்புறம் ரயில் தண்டவாளத்தில் இளவரசனின் உடல் கைப்பற்றப்பட்டது. மூளை சிதறிய நிலையில், அடிபட்டு உயிரிழந்ததாகத் தெரிகிறது.
இதுகுறித்து இளவரசனின் நண்பர்கள் தெரிவிக்கையில், உறவினர்களே அவரை அடித்துக் கொன்றிருக்கக் கூடும் என்றும், விபத்து ஏற்படுத்தியது போல் காட்ட முனைந்திருக்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டினர். மேலும், கடந்த நான்கைந்து நாட்களாக பெரும் பதட்டத்தில் இளவரசன் இருந்தான் என்றும், அவனை சமுதாயத் தலைவர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை, காப்பாற்றுவதற்கும் கைதூக்கி விடுவதற்கும் முன்வரவில்லை என்றும், அதனாலேயே பெரும் மன உளைச்சலில் இருந்தான் என்றும் அங்கே கூடியிருந்த நண்பர்கள் கூறினர். மேலும் சிலர், இளவரசனின் உடலை எடுக்க விடாமல் சூழ்ந்து கொண்டனர். போலீஸார் குறைவான அளவே அங்கே இருந்ததால், பதற்றமான சூழல் தென்பட்டது.
-- தினமணி
soplangi- இளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
இளவரசன் உடலை எடுக்க விடாமல் உறவினர்கள் போராட்டம்: போக்குவரத்து நிறுத்தம்
தருமபுரியில் இன்று மர்மமான முறையில் உயிரிழ்ந்து சடலமாகக் கிடந்த இளவரசன் உடலை எடுக்க விடாமல் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பக் கூடாது என்றும், தங்கள் பகுதியான நத்தம் காலனிக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் வற்புறுத்திய அவர்கள், போலீஸாரை அருகே விடவில்லை. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
இதனிடையே, பதற்றமான சூழ்நிலை கருதி, கிராமப் பகுதிகளுக்கு பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
-- தினமணி
உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பக் கூடாது என்றும், தங்கள் பகுதியான நத்தம் காலனிக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் வற்புறுத்திய அவர்கள், போலீஸாரை அருகே விடவில்லை. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
இதனிடையே, பதற்றமான சூழ்நிலை கருதி, கிராமப் பகுதிகளுக்கு பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
-- தினமணி
soplangi- இளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
Re: தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு
என்ன சொல்றதுன்னே தெரியல
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
தர்மா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
Re: தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு
காதல் செய்தது தற்கொலை அதனால் இவரை செய்தது கொலை ...புரட்சி wrote:தற்கொலையா ?? கொலையா ?
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு
மன்னிக்க வேண்டும் நண்பர்களே
தலைப்பினை ஏற்க்க நான் தயங்குகிறேன்...
இவரை காரணமாக வைத்துத் தான் கலவரம் என்று ஒன்று நடந்தேறியதே தவிர ,இவர் காரணம் அல்ல.
தலைப்பினை ஏற்க்க நான் தயங்குகிறேன்...
இவரை காரணமாக வைத்துத் தான் கலவரம் என்று ஒன்று நடந்தேறியதே தவிர ,இவர் காரணம் அல்ல.
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு
கரூர் கவியன்பன் wrote:மன்னிக்க வேண்டும் நண்பர்களே
தலைப்பினை ஏற்க்க நான் தயங்குகிறேன்...
இவரை காரணமாக வைத்துத் தான் கலவரம் என்று ஒன்று நடந்தேறியதே தவிர ,இவர் காரணம் அல்ல.
நானும் கவி கருத்தில் உடன்படுகிறேன் ... கலவரத்தை இவர்தான் நாடதி முடிதது போல் சொல்வது சரியல்ல ...
Guest- Guest
Re: தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு
புரட்சி wrote:கரூர் கவியன்பன் wrote:மன்னிக்க வேண்டும் நண்பர்களே
தலைப்பினை ஏற்க்க நான் தயங்குகிறேன்...
இவரை காரணமாக வைத்துத் தான் கலவரம் என்று ஒன்று நடந்தேறியதே தவிர ,இவர் காரணம் அல்ல.
நானும் கவி கருத்தில் உடன்படுகிறேன் ... கலவரத்தை இவர்தான் நாடதி முடிதது போல் சொல்வது சரியல்ல ...
ம்ம்ம்........................
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|