Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
கனிமொழியின் வெற்றிக்கு ஜெயலலிதா மறைமுக ஆதரவு: விஜயகாந்த் குற்றச்சாட்டு
2 posters
Page 1 of 1
கனிமொழியின் வெற்றிக்கு ஜெயலலிதா மறைமுக ஆதரவு: விஜயகாந்த் குற்றச்சாட்டு
கனிமொழியில் வெற்றிக்கு ஜெயலலிதா மறைமுகமாக ஆதரவு அளித்துள்ளார் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
மாநிலங்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து விஜயகாந்த் இன்று வெளியிட்ட அறிக்கையில்,
நடந்து முடிந்த மாநிலங்களவை தேர்தலில் தேமுதிக பல வகைகளில் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. ஏனெனில் இந்தத் தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை விட, யார் தோல்வியடைய வேண்டும் என்பதில்தான் ஆளும் அ.தி.மு.க. அரசு அதிக ஆர்வம் காட்டியது. அ.தி.மு.க. முதலில் 5 வேட்பாளர்களை அறிவித்து விட்டு, பின் தி.மு.க. சார்பில் கனிமொழி வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் அ.தி.மு.க. தனது வேட்பாளரை வாபஸ் பெற செய்து, அந்த ஒரு இடத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு விட்டுக் கொடுத்ததன் மூலம் மறைமுகமாக தி.மு.க.வை ஆளும் அ.தி.மு.க. அரசு வெற்றி பெறச் செய்யவா? என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்துள்ளது.
ஆளும் அ.தி.மு.க. அரசு நினைத்திருந்தால் தன்னுடைய வாக்குகள் மற்றும் அவர்கள் கூட்டணிக் கட்சிகளின் வாக்குகள் மூலம் வெகு சுலபமாக தி.மு.க.வை தோல்வியடையச் செய்திருக்க முடியும். தி.மு.க. வெற்றியின் மூலம் தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு கட்சிகளும் வெளியில் தங்களை எதிரிகளைப் போல் காட்டிக் கொண்டாலும், தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அ.தி.மு.க. செய்த தவறுகளை கண்டு கொள்ளாமலும், அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தி.மு.க. செய்த தவறுகளை கண்டும், காணாததும் போல் இருப்பதும் மறைமுகமாக இரண்டு கட்சிகளுக்கும் இரகசிய உடன்பாடு கொண்டு உள்ளனவோ என்ற சந்தேகம் வலுப்பெறவே வழி செய்கிறது.
2ஜி வழக்கில் 1,76,000 கோடி ஊழல் நடந்தபோது கடுமையாக கனிமொழியையும், தி.மு.க.வையும் விமர்ச்சித்த ஜெயலலிதா மறைமுகமாக கனிமொழியின் வெற்றிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது ஏன்? ஒருவேளை தன் மீதும் ஊழல் வழக்கு பெங்களூரு நீதிமன்றத்தில் 14 ஆண்டுகளாக நடப்பதன் எதிரொலியாக இருக்குமோ என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்தத் தேர்தலின் மூலம் பலரின் முகத்திரை கிழிக்கப்பட்டு, உண்மை சுயரூபம் வெளிப்பட்டுள்ளது. தொகுதியின் மேம்பாட்டிற்கும், தொகுதி மக்களின் நலன் கருதிதான் முதல்வரை சந்தித்தோம் என்று கூறியவர்களின் நாடகம் முடிவுக்கு வந்துள்ளது. அதேபோல் தொகுதி பிரச்சினைகளுக்காகத்தான் அந்த எம்.எல்.ஏ.க்களை சந்தித்தேன் என்ற முதல்வரின் உள்நோக்கம் தமிழ்நாட்டு மக்களுக்கு வெளிச்சம் போட்டு காண்பித்துள்ளது. இத்தனை நாள் தங்கள் சுய லாபத்திற்காக தொகுதியையும், தொகுதி மக்களையும் தங்கள் பதவியின் பாதுகாப்பு அரணாக பயன்படுத்தியவர்களின் வஞ்சக எண்ணத்தையும், குறுகிய மனப்பான்மையையும் கொண்டு, பசுத்தோல் போர்த்திய புலிகளாக வலம் வந்தவர்களை இப்பொழுது அந்த தொகுதிகளின் மக்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
தங்களுக்கு அரசியலில் முகவரி கொடுத்து, அடையாளம் காண்பித்த தன் கட்சிக்கும், தலைமைக்கும் துரோகம் செய்து விட்டு, மாற்றுக் கட்சிகளுக்கு வாக்களித்ததன் மூலம் தமிழக அரசியல் வரலாற்றில் மன்னிக்க முடியாத துரோகிகள் இவர்கள் என்பதனை வருங்காலம் உணர்த்தும். தாங்கள் ஏதோ சாதனை செய்து விட்டதைப் போல் இறுமாப்புடன் இருக்கும் இவர்களுக்கு, இது சாதனை அல்ல, சந்தி சிரிக்கும் செயல் என்று அவர்களின் தொகுதி மக்களே வெகு விரைவில் பாடம் புகட்டுவார்கள். முதல்வரை சந்தித்த பின், தங்கள் தொகுதிகளில் பல கோடி ரூபாய்க்கு பல திட்டங்கள் நடைபெறுவதாக இவர்கள் கூறியதை மக்கள் யாரும் மறந்து விடவில்லை. உண்மையில் அந்த தொகுதிகளுக்கு எல்லா திட்டங்களும் நிறைவேறுகிறது என்றால், உண்மையில் சந்தோஷப்படும் முதல் கட்சி தே.மு.தி.க.வாகத்தான் இருக்க முடியும். அப்படி இல்லாமல் வெறும் சுய விளம்பரத்திற்காக கூறப்பட்டவை என்றால் அவர்களோடு சேர்த்து ஆளும் அ.தி.மு.க. அரசுக்கும் நீக்க முடியாத கரும்புள்ளியை மக்கள் தருவார்கள் என்று கூறிக் கொள்கிறேன்.
தேமுதிகவை பொறுத்த வரையில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட்டதன் மூலமாக 17 ஆண்டுகளுக்கு பிறகு மாநிலங்களவை தேர்தல் ஜனநாயக ரீதியாக நடத்தப்பட்டு, சில சட்டமன்ற உறுப்பினர்களை தவிர, மற்ற அனைவரும் முதன் முறையாக மாநிலங்களவை தேர்தலில் வாக்களிக்க வைத்ததே, எங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி. 2006ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தொடங்கி இந்த எட்டு ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெற்ற எல்லா தேர்தல்களிலும் வெற்றி, தோல்விகளை பற்றி கவலைப்படாமல் தனது ஜனநாயக கடமையை தனக்கே உரிய பாணியில் கம்பீரத்தோடு எதிர்கொண்டு பணத்திற்கோ, பாசாங்கிற்கோ இடமளிக்காமல் மக்கள் பணி ஒன்றே எங்கள் கொள்கை, எங்கள் லட்சியம் என்ற உயர்ந்த நோக்கத்தோடு செயல்படும் எங்களுக்கு இந்த ஒரு மாநிலங்களவை தேர்தல் தே.மு.தி.க.வை எந்த விதத்திலும் பாதிக்காது என்பதை தெரிவித்துக் கொண்டு, வாக்களித்த 22 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தே.மு.தி.க. தன் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
அதே நேரத்தில் அரசியலில் ஏற்படும் சூழ்ச்சிகளை கண்டு சற்றும் கவலைப்படாமல் அதை முறியடிக்கும் சக்தி கொண்டது தே.மு.தி.க. என்பதை வருங்காலத்தில் தமிழக மக்களோடு சேர்ந்து தனது வெற்றியை நிலை நிறுத்தும் தே.மு.தி.க. ஆரம்பிக்கப்பட்டதன் உயரிய நோக்கம் நிறைவேறும் வரை தனது அரசியல் பயணத்தில் சற்றும் சளைக்காமல், தலைவர் மீதும், கட்சி தலைமையின் மீதும் மாறாத பற்றும், உண்மையான விசுவாசமும், நம்பிக்கையும் உடைய தொண்டர்களின் பலத்தோடும், பொதுமக்களின் ஆதரவோடும் சோதனைகளை, சாதனைகளாக்கிக் காட்டுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
- இவ்வாறு விஜயகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்
மாநிலங்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து விஜயகாந்த் இன்று வெளியிட்ட அறிக்கையில்,
நடந்து முடிந்த மாநிலங்களவை தேர்தலில் தேமுதிக பல வகைகளில் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. ஏனெனில் இந்தத் தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை விட, யார் தோல்வியடைய வேண்டும் என்பதில்தான் ஆளும் அ.தி.மு.க. அரசு அதிக ஆர்வம் காட்டியது. அ.தி.மு.க. முதலில் 5 வேட்பாளர்களை அறிவித்து விட்டு, பின் தி.மு.க. சார்பில் கனிமொழி வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் அ.தி.மு.க. தனது வேட்பாளரை வாபஸ் பெற செய்து, அந்த ஒரு இடத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு விட்டுக் கொடுத்ததன் மூலம் மறைமுகமாக தி.மு.க.வை ஆளும் அ.தி.மு.க. அரசு வெற்றி பெறச் செய்யவா? என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்துள்ளது.
ஆளும் அ.தி.மு.க. அரசு நினைத்திருந்தால் தன்னுடைய வாக்குகள் மற்றும் அவர்கள் கூட்டணிக் கட்சிகளின் வாக்குகள் மூலம் வெகு சுலபமாக தி.மு.க.வை தோல்வியடையச் செய்திருக்க முடியும். தி.மு.க. வெற்றியின் மூலம் தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு கட்சிகளும் வெளியில் தங்களை எதிரிகளைப் போல் காட்டிக் கொண்டாலும், தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அ.தி.மு.க. செய்த தவறுகளை கண்டு கொள்ளாமலும், அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தி.மு.க. செய்த தவறுகளை கண்டும், காணாததும் போல் இருப்பதும் மறைமுகமாக இரண்டு கட்சிகளுக்கும் இரகசிய உடன்பாடு கொண்டு உள்ளனவோ என்ற சந்தேகம் வலுப்பெறவே வழி செய்கிறது.
2ஜி வழக்கில் 1,76,000 கோடி ஊழல் நடந்தபோது கடுமையாக கனிமொழியையும், தி.மு.க.வையும் விமர்ச்சித்த ஜெயலலிதா மறைமுகமாக கனிமொழியின் வெற்றிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது ஏன்? ஒருவேளை தன் மீதும் ஊழல் வழக்கு பெங்களூரு நீதிமன்றத்தில் 14 ஆண்டுகளாக நடப்பதன் எதிரொலியாக இருக்குமோ என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்தத் தேர்தலின் மூலம் பலரின் முகத்திரை கிழிக்கப்பட்டு, உண்மை சுயரூபம் வெளிப்பட்டுள்ளது. தொகுதியின் மேம்பாட்டிற்கும், தொகுதி மக்களின் நலன் கருதிதான் முதல்வரை சந்தித்தோம் என்று கூறியவர்களின் நாடகம் முடிவுக்கு வந்துள்ளது. அதேபோல் தொகுதி பிரச்சினைகளுக்காகத்தான் அந்த எம்.எல்.ஏ.க்களை சந்தித்தேன் என்ற முதல்வரின் உள்நோக்கம் தமிழ்நாட்டு மக்களுக்கு வெளிச்சம் போட்டு காண்பித்துள்ளது. இத்தனை நாள் தங்கள் சுய லாபத்திற்காக தொகுதியையும், தொகுதி மக்களையும் தங்கள் பதவியின் பாதுகாப்பு அரணாக பயன்படுத்தியவர்களின் வஞ்சக எண்ணத்தையும், குறுகிய மனப்பான்மையையும் கொண்டு, பசுத்தோல் போர்த்திய புலிகளாக வலம் வந்தவர்களை இப்பொழுது அந்த தொகுதிகளின் மக்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
தங்களுக்கு அரசியலில் முகவரி கொடுத்து, அடையாளம் காண்பித்த தன் கட்சிக்கும், தலைமைக்கும் துரோகம் செய்து விட்டு, மாற்றுக் கட்சிகளுக்கு வாக்களித்ததன் மூலம் தமிழக அரசியல் வரலாற்றில் மன்னிக்க முடியாத துரோகிகள் இவர்கள் என்பதனை வருங்காலம் உணர்த்தும். தாங்கள் ஏதோ சாதனை செய்து விட்டதைப் போல் இறுமாப்புடன் இருக்கும் இவர்களுக்கு, இது சாதனை அல்ல, சந்தி சிரிக்கும் செயல் என்று அவர்களின் தொகுதி மக்களே வெகு விரைவில் பாடம் புகட்டுவார்கள். முதல்வரை சந்தித்த பின், தங்கள் தொகுதிகளில் பல கோடி ரூபாய்க்கு பல திட்டங்கள் நடைபெறுவதாக இவர்கள் கூறியதை மக்கள் யாரும் மறந்து விடவில்லை. உண்மையில் அந்த தொகுதிகளுக்கு எல்லா திட்டங்களும் நிறைவேறுகிறது என்றால், உண்மையில் சந்தோஷப்படும் முதல் கட்சி தே.மு.தி.க.வாகத்தான் இருக்க முடியும். அப்படி இல்லாமல் வெறும் சுய விளம்பரத்திற்காக கூறப்பட்டவை என்றால் அவர்களோடு சேர்த்து ஆளும் அ.தி.மு.க. அரசுக்கும் நீக்க முடியாத கரும்புள்ளியை மக்கள் தருவார்கள் என்று கூறிக் கொள்கிறேன்.
தேமுதிகவை பொறுத்த வரையில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட்டதன் மூலமாக 17 ஆண்டுகளுக்கு பிறகு மாநிலங்களவை தேர்தல் ஜனநாயக ரீதியாக நடத்தப்பட்டு, சில சட்டமன்ற உறுப்பினர்களை தவிர, மற்ற அனைவரும் முதன் முறையாக மாநிலங்களவை தேர்தலில் வாக்களிக்க வைத்ததே, எங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி. 2006ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தொடங்கி இந்த எட்டு ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெற்ற எல்லா தேர்தல்களிலும் வெற்றி, தோல்விகளை பற்றி கவலைப்படாமல் தனது ஜனநாயக கடமையை தனக்கே உரிய பாணியில் கம்பீரத்தோடு எதிர்கொண்டு பணத்திற்கோ, பாசாங்கிற்கோ இடமளிக்காமல் மக்கள் பணி ஒன்றே எங்கள் கொள்கை, எங்கள் லட்சியம் என்ற உயர்ந்த நோக்கத்தோடு செயல்படும் எங்களுக்கு இந்த ஒரு மாநிலங்களவை தேர்தல் தே.மு.தி.க.வை எந்த விதத்திலும் பாதிக்காது என்பதை தெரிவித்துக் கொண்டு, வாக்களித்த 22 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தே.மு.தி.க. தன் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
அதே நேரத்தில் அரசியலில் ஏற்படும் சூழ்ச்சிகளை கண்டு சற்றும் கவலைப்படாமல் அதை முறியடிக்கும் சக்தி கொண்டது தே.மு.தி.க. என்பதை வருங்காலத்தில் தமிழக மக்களோடு சேர்ந்து தனது வெற்றியை நிலை நிறுத்தும் தே.மு.தி.க. ஆரம்பிக்கப்பட்டதன் உயரிய நோக்கம் நிறைவேறும் வரை தனது அரசியல் பயணத்தில் சற்றும் சளைக்காமல், தலைவர் மீதும், கட்சி தலைமையின் மீதும் மாறாத பற்றும், உண்மையான விசுவாசமும், நம்பிக்கையும் உடைய தொண்டர்களின் பலத்தோடும், பொதுமக்களின் ஆதரவோடும் சோதனைகளை, சாதனைகளாக்கிக் காட்டுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
- இவ்வாறு விஜயகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்
டார்வின்- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
Re: கனிமொழியின் வெற்றிக்கு ஜெயலலிதா மறைமுக ஆதரவு: விஜயகாந்த் குற்றச்சாட்டு
கேப்டன் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. இந்த இரண்டு திருட்டு முன்னேற்ற கலகங்களும் அடித்த கொள்ளைகள் எண்ணிலடங்காவை. கேப்டன் சிறு வயது முதல் தனது சொந்த உழைப்பில் படிக்க வைத்திருக்கிறார். ஏழை எளியொருக்கு தனது சென்னை வீட்டில் உணவு அளிப்பது வழக்கம். இதெல்லாம் அரசியலுக்கு வருவதற்க்கு முன்னரே செய்துள்ளார். மேலும் நொடித்துபோன நடிகர் சங்கத்தை வளப்படுத்தினார் ஆனால் இப்போது சரத்குமார் ராதாரவியால் திரும்பவும் பழய நிலைமைக்கே போய்விட்டது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
தர்மா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கனிமொழியின் வெற்றிக்கு கை கொடுக்கப் போகும் ஜெயலலிதா?
» திமுகவின் வெற்றிக்கு துணை போகிறார் விஜயகாந்த்: பாஜக குற்றச்சாட்டு
» கனிமொழியின் சேவை தொடர வேண்டும் - அழகிரிக்கு கருணாநிதி மறைமுக பதில்
» விஜயகாந்த் முயற்சி: தலைவர்கள் ஆதரவு
» தமிழின படுகொலைக்கு கருணாநிதி காரணம்: விஜயகாந்த் குற்றச்சாட்டு
» திமுகவின் வெற்றிக்கு துணை போகிறார் விஜயகாந்த்: பாஜக குற்றச்சாட்டு
» கனிமொழியின் சேவை தொடர வேண்டும் - அழகிரிக்கு கருணாநிதி மறைமுக பதில்
» விஜயகாந்த் முயற்சி: தலைவர்கள் ஆதரவு
» தமிழின படுகொலைக்கு கருணாநிதி காரணம்: விஜயகாந்த் குற்றச்சாட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|