ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 4:27 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 4:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 2:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 1:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உத்தரகண்ட், இமாச்சலில் இறந்தோர் எண்ணிக்கை பல ஆயிரமாக உயர்வு

Go down

உத்தரகண்ட், இமாச்சலில் இறந்தோர் எண்ணிக்கை பல ஆயிரமாக உயர்வு Empty உத்தரகண்ட், இமாச்சலில் இறந்தோர் எண்ணிக்கை பல ஆயிரமாக உயர்வு

Post by சிவா Fri Jun 21, 2013 3:31 am

டேராடூன்: உத்தரகண்ட் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களில், கடந்த வாரம் பெய்த பேய் மழை மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி, உயிரிழந்தோர் எண்ணிக்கை, பல ஆயிரத்தை தொடும் என அஞ்சப்படுகிறது. எனினும், பலியானோரைப் பற்றிக் கவலைப்படாமல், உயிருடன் தத்தளித்துக் கொண்டிருப்பவர்களை மீட்கும் பணியில், இரு மாநில அரசுகளும், ராணுவமும் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

டில்லி உட்பட நாட்டின் வட மாநிலங்களில், கடந்த, 15ம் தேதி துவங்கிய தென் மேற்கு பருவ மழை, இவ்வளவு பயங்கர சேதத்தை ஏற்படுத்தும் என, யாரும் எண்ணிப் பார்த்திருக்க மாட்டார்கள். நான்கு மாத கடும் கோடையை தணிக்கும் வகையில் பெய்த மழை, தொடர்ந்து பெய்து, பேய் மழையாக மாறி, இமயமலையில் உற்பத்தியாகும் நதிகளில் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தியது.

"இமயமலையின் சுனாமி':

"இமயமலையின் சுனாமி' என வர்ணிக்கும் வகையில், மலைகளில் இருந்து கீழ் நோக்கி இறங்கிய காட்டாறுகள், கங்கை மற்றும் அதன் துணை நதிகளில் சேர்ந்து, நதிக்கரையோரங்களை கபளீகரம் செய்து விட்டன. இந்துக்களின் புனித தலங்களான, கேதார்நாத், கங்கோத்ரி, யமுனாத்ரி, ஹரித்வார், ரிஷிகேஷ் போன்ற இடங்களுக்கு வழிபட, தமிழகம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் இருந்து சென்ற லட்சக்கணக்கானோர் இதில் சிக்கிக் கொண்டனர். அனைத்து புனிதத்தலங்களும், கங்கை மற்றும் அதன் துணை நதிகளின் கரைகளிலும், நதியின் நடுவிலும் அமைந்திருப்பதால், பாதிப்பு பயங்கரமாக இருந்தது.

கபளீகரம்:

திடீரென அதிபயங்கரமாக கிளம்பிய நதிகள், வழிபாட்டுத் தலங்களிலும், அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் தங்கியிருந்தவர்களை கபளீகரம் செய்துள்ளது. துவக்கத்தில், பலி எண்ணிக்கை, 150க்குள் தான் இருக்கும் என கூறப்பட்ட நிலையில், கடந்த இரண்டு நாட்களாக நடைபெறும் மீட்பு நடவடிக்கைகளை அடுத்து, பலியானோர் எண்ணிக்கை பல ஆயிரமாக இருக்கக் கூடும் என கூறப்படுகிறது. ஏனெனில், உத்தரகண்டில், கேதார் புனிதத் தலத்தை சுற்றி இருந்த, 90க்கும் மேற்பட்ட தங்குமிடங்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதால், அதில் தங்கியிருந்த, ஆயிரக்கணக்கானோர் கதி என்னவாயிற்று என்பது, இன்னும் தெரியவில்லை.

ஹெலிகாப்டர்களில்:

சற்று உயரமான இடங்களில் தங்கியிருந்தவர்கள், தங்கள் ஊர்களுக்கு புறப்பட்டுச் செல்ல முடியாத வகையில், வாகனங்கள், குதிரைகள் போன்றவையும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. உயரமான இடங்களுக்குச் சென்று விட்டால், ஹெலிகாப்டர்களில் வந்து மீட்டுச் செல்வர் என கருதி, வழக்கமான சாலை வழிகளை அணுகியவர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. நிலச்சரிவுகள் ஏற்பட்டதால், சாலைகள் மூடிப் போயிருந்தன. இதனால், பாதையே இல்லாத கடினமான மலையின் இண்டுஇடுக்குகள் வழியாக ஏறி, உயிர் தப்பி, உயரமான இடங்களுக்கு ஏராளமானோர் வந்து சேர்ந்துள்ளனர். அவர்களை, உத்தரகண்ட் மாநில அரசின் இரண்டு ஹெலிகாப்டர்களும், ராணுவத்தின், 12 ஹெலிகாப்டர்களும் மீட்டு, டேராடூன், சிம்லா நகரங்களுக்கு கொண்டு சேர்க்கின்றன. அங்கிருந்து, ரயில் மற்றும் பிற வாகனங்கள் மூலம் ஏராளமானோர் ஊர் திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.

கேதார்நாத்:

கடந்த இரண்டு நாட்களாக மழை இல்லாததால், மீட்புப்பணி சுறுசுறுப்படைந்துள்ளது. கேதார்நாத் புனிதத்தலம் சேதமடையாமல் அப்படியே இருக்கிறது. இது குறித்து, உத்தரகண்ட் அதிகாரிகள் கூறுகையில், "பலியானோர் எண்ணிக்கை பல ஆயிரத்தை தொடும் என அஞ்சுகிறோம்; இறந்தவர்களைப் பற்றி நாங்கள் இப்போது கவலைப்பட நேரமில்லை. தண்ணீரில் தத்தளிக்கும், மலைகளில் தங்கியிருக்கும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களை மீட்பதற்கே முன்னுரிமை கொடுக்கிறோம்' என்றனர். உத்தரகண்டின், கேதார்நாத் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில், 15 ஆயிரம் பேரும், இமாச்சல பிரதேசத்தின் பல இடங்களில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களும், இன்னமும், தண்ணீருக்குள் மரண போராட்டம் நடத்திக் கொண்டிருப்பதாக, நெஞ்சை பிழிய வைக்கும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. அவர்களில், உள்ளூர் மக்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், வயோதிக காலத்தில், புனித தலங்களுக்கு வந்தவர்கள், சிறுவர், சிறுமியர் உள்ளனர் என்பது சோகத்திலும் சோகம்.

சுணக்கம்:

கடந்த இரண்டு நாட்களாக சற்றே நின்றிருந்த மழை, நேற்று காலை முதல் மீண்டும் பெய்யத் துவங்கியுள்ளதால், மீட்புப் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. போர்க்கால அடிப்படையில், இரு மாநில அரசுகளும், துணையாக, ராணுவமும், விமானப்படையும் மீட்பு நடவடிக்கையில் மும்முரமாக இறங்கியுள்ளன. எனினும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பல ஆயிரமாக உள்ள நிலையில், மீட்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, சில நூறுகளாக இருப்பது வருத்தத்தை ஏற்படுத்துகிறது. உத்தரகண்ட் மாநிலத்தில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஜய் பகுகுணா முதல்வராக உள்ளார்; இமாச்சலிலும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வீரபத்ர சிங் முதல்வராக உள்ளார். இதனால், மத்திய அரசிடம் இருந்து உதவிகள் பெறுவது இவர்களுக்கு எளிது என நம்பப்படுகிறது.

சிக்கி தவிக்கும் 399 தமிழர்களை மீட்க முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை:

உத்தரகண்ட் மாநிலத்தில், வெள்ளத்தில் சிக்கி, தமிழகம் திரும்ப முடியாமல் தவிக்கும், தமிழகத்தைச் சேர்ந்த, 399 பேரை, பாதுகாப்பாக அழைத்து வர, அதிகாரிகள் அடங்கிய உயர்மட்டக் குழுவை, உத்தரகண்ட் மாநிலத்திற்கு செல்லும்படி, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார். உத்தரகண்ட் மாநிலத்தில், ருத்ரபிரயாக், சமோலி மாவட்டங்களில் உள்ள கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய திருத்தலங்களுக்கு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், சேலம், கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தஞ்சாவூர் மாவட்டங்களிலிருந்து, 399 பயணிகள் யாத்திரை சென்றுள்ளனர். அங்கு பெய்த பெருமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக, அவர்கள் தமிழகம் திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். அவர்களை, தமிழகத்திற்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது குறித்து, முதல்வர் ஏற்பாடு செய்துள்ளார்.

ஈரோட்டிலிருந்து சென்ற குழு:

புனித யாத்திரையாக, ஹரித்துவார் சென்ற, 32 பேர், மழை வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். ஈரோடு மாநகராட்சி, அ.தி.மு.க., கவுன்சிலர் சுப்ரமணியம். புனித யாத்திரையாக, கடந்த, 9ம் தேதி ரயிலில் டில்லி சென்றார். இவருடன், ஈரோடு பகுதியில் இருந்து, 32 பேர் சென்றனர். கனமழையில் சிக்கிக் கொண்ட இந்த குழு, தற்போது, ரிஷிகேஷில் பாதுகாப்பாக உள்ளதாக, பயண ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

டில்லியில் மழையால் கடும் பாதிப்பு:

உத்தர பிரதேசத்தில் பெய்து வரும் பலத்த பருவமழை, பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கங்கை, யமுனை, ஷாரதா, காக்ரா போன்ற நதிகளின் நீர்மட்டம், கிடுகிடுவென உயர்ந்து, அபாய மட்டத்தில் பாய்ந்து கொண்டிருக்கின்றன. அங்குள்ள மாவி சத்புதா அணை உடைந்து, தண்ணீர் வெளியேறி, ஷாம்லி மாவட்டத்தையே வெள்ளக்காடாக மாற்றியுள்ளது; தொழில் நகரமான சகரான்பூர், தண்ணீரில் மிதக்கிறது. டில்லியின் கிழக்கு பகுதியில், யமுனை நதி பெருக்கெடுத்து ஓடுவதால், அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

சுப்ரீம் கோர்ட் உத்தரவு:

பேய் மழையால் பாதிக்கப்பட்டுள்ள, உத்தரகண்ட் மாநிலத்தில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை, போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என, நேற்று உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட், தத்தளிக்கும் மக்களை காப்பாற்ற தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு கூறியுள்ளது. மீட்பு மற்றும் நிவாரண பணிகளில், போதுமான ஹெலிகாப்டர்கள் பயன்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட், எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, இம்மாதம், 25ம் தேதிக்குள், அறிக்கை தர வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

மாநில அரசுகள் சுறுசுறுப்பு:

வட மாநில புனித தலங்களுக்கு யாத்திரை சென்று, தண்ணீரில் தத்தளித்து வரும் தங்கள் மாநில மக்களை மீட்க, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், தமிழகத்தை சேர்ந்தவர்களை மீட்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். உத்தரகண்ட் மற்றும் இமாச்சலில் இருந்து மீட்கப்படுபவர்கள், டில்லி கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து விமானம் மூலம் தமிழகம் கொண்டு வரப்படுவர் என, அறிவித்துள்ளார்.

மீட்பு, நிவாரணத்திற்கு முக்கியத்துவம்:

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர், மணிஷ் திவாரி நேற்று கூறுகையில், ""வெள்ளப் பெருக்குக்கு என்ன காரணம், முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏன் எடுக்கப்படவில்லை என்பன போன்றவற்றை பின்னர் பார்த்துக் கொள்ளலாம். மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்குத் தான் இப்போது முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது,'' என்றார். மேலும் அவர் கூறுகையில், ""உத்தரகண்ட் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களுடன், மத்திய அரசு தொடர்பிலேயே உள்ளது. தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படுகின்றன,'' என்றார்.

உத்தரகண்ட் மூன்று நாள் துக்கம்:

பேய் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளில், ஆயிரக்கணக்கானோர் பலியானதற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், உத்தரகண்ட் மாநில அரசு, நேற்று முதல், மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. "அரசு அலுவலகங்கள் மற்றும் கட்டடங்களில், தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும்; அரசு விழாக்கள் ரத்து செய்யப்படும்' என, அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் ஹெலிகாப்டர் உறுதி:

""மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு, கூடுதல் ஹெலிகாப்டர்கள் அனுப்பி வைக்கப்படும்,'' என, மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறினார். இது குறித்து அவர் கூறுகையில், ""உத்தரகண்டில், மீட்புப்பணியில், 22 ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன; அவை போதாது. எனவே, கூடுதல் ஹெலிகாப்டர்களை அங்கு அனுப்பி வைக்குமாறு, பாதுகாப்புத்துறையை கேட்டுக் கொண்டுள்ளோம். எங்களுக்கு கிடைத்த தகவலின் படி, 62 ஆயிரம் பேர் தத்தளிப்பதாக தெரிய வந்துள்ளது,'' என்றார்.

தினமலர்


உத்தரகண்ட், இமாச்சலில் இறந்தோர் எண்ணிக்கை பல ஆயிரமாக உயர்வு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» உத்தரகண்ட் வெள்ளம் ; 900 பேர் தவிப்பு; பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு
» கொரோனா தொற்று உலகில் 1 கோடியைத் தாண்டியது: இறந்தோர் எண்ணிக்கை 5 லட்சம்
» அணு உலைகளை மூட திட்டம் : பூகம்ப பலி 20 ஆயிரமாக உயர்வு
» மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரமாக உயர்வு
»  சென்னையில் ஒரு லாரி மணல் விலை ரூ.60 ஆயிரமாக உயர்வு: 4 மாதத்தில் 2 மடங்கானது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum