ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமைச்சர் வைகை செல்வன் மீண்டும் மீண்டும் "சொதப்பல்!

Go down

அமைச்சர் வைகை செல்வன் மீண்டும் மீண்டும் "சொதப்பல்! Empty அமைச்சர் வைகை செல்வன் மீண்டும் மீண்டும் "சொதப்பல்!

Post by சிவா Thu Jun 20, 2013 12:34 am

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், மாநில அளவில், இரண்டாம் இடம் மற்றும் மூன்றாம் இடம் பெற்ற மாணவர்கள், 189 பேருக்கு, பள்ளி கல்வி அமைச்சர் வைகை செல்வன், பரிசுகளையும், முதல்வரின் பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கும் நிகழ்ச்சி, சண்டை, சச்சரவு, குழப்பங்களுடன் முடிந்தது.

முதல்வர் கையால் பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்படும் என, மாநிலம் முழுவதிலும் இருந்து, மாணவர்களை அழைத்து வந்து, கடைசியில், அமைச்சர் வழங்குவார் என, அதிகாரிகள் மாற்றி அறிவித்தனர். அமைச்சருக்காக, மாலை, 4:00 மணி வரை காத்திருந்த பெற்றோர், கோபம் அடைந்து, அதிகாரிகளுடன் சண்டை போட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பல பெற்றோர், "பரிசும் வேண்டாம்; ஒண்ணும் வேண்டாம்' எனக் கூறி, பிள்ளைகளை அழைத்துச் சென்றனர்.பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வில், தமிழை முதல் பாடமாகப் படித்து, மாநில அளவில், முதல், மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவ, மாணவியருக்கு, ரொக்கப்பரிசு வழங்குவதுடன், அவர்களின் உயர்கல்வி செலவையும், தமிழக அரசே ஏற்கிறது. இந்த நிகழ்ச்சி, ஒவ்வொரு ஆண்டும் நடக்கும்.சாதித்த மாணவ, மாணவியரை, கோட்டைக்கு அழைத்து, முதல்வர், பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்குவார்.

எண்ணிக்கை அதிகரிப்பு :

வழக்கமாக, இரு தேர்வுகளையும் சேர்த்து, மூன்று இடங்களைப் பெறும் மாணவர் எண்ணிக்கை, 20 முதல், 25க்குள் இருக்கும். அதனால், எந்தப் பிரச்னையும் இல்லாமல், முதல்வர் அலுவலகத்திலேயே, இந்த நிகழ்ச்சி நடக்கும். இந்த ஆண்டு, 10ம் வகுப்பு தேர்வில், 198 மாணவர்கள், முதல், மூன்று இடங்களைப் பிடித்தனர். பிளஸ் 2 தேர்வில், 13 மாணவர்கள், முதல், மூன்று இடங்களைப் பிடித்தனர்.இரு தேர்வுகளையும் சேர்த்து, 211 மாணவர்கள், முதல், மூன்று இடங்களைப் பிடித்ததால், இவ்வளவு பேருக்கும், முதல்வர், பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்குவாரா என்பது, கேள்விக்குறியாக இருந்தது. இதுகுறித்த செய்தி, ஏற்கனவே, "தினமலர்' நாளிதழில் வெளியானது.

பெற்றோருக்கு தகவல்:

இந்நிலையில், "211 மாணவர்களுக்கும், முதல்வர் பரிசு வழங்குகிறார்; அனைவரும், 19ம் தேதி காலை, 8:00 மணிக்குள், சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் ஆஜராக வேண்டும்' என, முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம், பெற்றோருக்கு, கல்வித் துறை அதிகாரிகள் தகவல் கொடுத்தனர்.அதன்படி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி என, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 211 மாணவர்களும், பெற்றோருடன், பஸ், ரயில் மூலம், நேற்று காலை, 5:00 மணியில் இருந்து, 7:00 மணிக்குள், டி.பி.ஐ., வளாகத்தில் ஆஜராகினர்.

காலை விழா ரத்து:

காலை, 10:00 மணிக்கு, முதல்வர், பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடக்கும் என, அகிகாரிகள் தெரிவித்திருந்தனர். கடைசியில், அது ரத்தானது தெரிந்தும், பரிசு பெற வந்தோர் ஏமாற்றம் அடைந்தனர்.பின், பிளஸ் 2 தேர்வில், முதல், மூன்று இடங்களைப் பெற்ற மாணவர், 13 பேர், 10ம் வகுப்பு தேர்வில், முதலிடம் பெற்ற, ஒன்பது மாணவர்கள் என, 22 பேருக்கு மட்டும், பிற்பகல், 2:30 மணிக்கு, முதல்வர் ஜெயலலிதா, பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார். 10ம் வகுப்பு தேர்வில், இரண்டாம் இடம் பிடித்த, 52 மாணவர்கள், மூன்றாம் இடம் பிடித்த, 137 மாணவர்கள் என, 189 பேருக்கு, பள்ளி கல்வி அமைச்சர் வைகை செல்வன், டி.பி.ஐ., வளாகத்தில், சான்றிதழ்களை வழங்குவார் என, அதிகாரிகள் அறிவித்தனர்.

வராத அமைச்சர்:

மாணவர்கள் அனைவரையும், ஒரு அரங்கில் உட்கார வைத்தனர்; பெற்றோர் அனைவரையும், வெளிப்புறத்தில் உட்கார வைத்தனர். "அமைச்சர் இதோ வருகிறார்... வந்து கொண்டே இருக்கிறார்...' என, அதிகாரிகள் கூறியபடி இருந்தனர். மாலை, 4:00 மணி வரை அமைச்சர் வராததால், பெற்றோர் கொதிப்படைந்தனர். தென் மாவட்டங்களில் இருந்து வந்த பெற்றோர், மாலை, 6:00 மணியில் இருந்து திரும்பிச் செல்ல, ரயில்களில் டிக்கெட் பெற்றிருந்தனர்.நேரம் ஆனதால், அதிகாரிகளுடன், கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பெற்றோர் ஆவேசமாக இருந்ததால், அதிகாரிகள் அனைவரும், விழா நடக்கும் அரங்கிற்குள் இருந்து கொண்டு, கதவை பூட்டி விட்டனர்.

பெற்றோர் ஆவேசம்:

ஊழியர்கள் சிலர் மட்டும், பெற்றோரை சமாதானப்படுத்த முயன்றனர். ஒரு கட்டத்தில், தள்ளு முள்ளு நடந்தது. மாணவர்களுக்கு, குடிக்க தண்ணீர் கூட கொடுக்கவில்லை என, தெரிந்து, பெற்றோர், மேலும் ஆவேசம் அடைந்தனர்.மாலை, 4:30 மணி அளவில், பல பெற்றோர், கதவை திறந்து, "பரிசும் வேண்டாம்; ஒண்ணும் வேண்டாம்' என, தெரிவித்து, பிள்ளைகளை அழைத்துச் சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், இனியும் தாமதித்தால், மாணவர்கள் அனைவரும் வெளியேறி விடுவர் என, பயந்து, மத்திய இடைநிலைக்கல்வி திட்ட இயக்குனர் இளங்கோவன் மூலம், அவசரம் அவசரமாக, சான்றிதழ்களை கொடுத்தனர்.

மாணவர்கள் ஏமாற்றம் :

முதல்வர் கையால் சான்றிதழ்களையும், பரிசையும் பெறுவோம் என, கனவுகளுடன் வந்த மாணவர்கள், பின், அமைச்சரிடமாவது, பரிசைப் பெறுவோம் என, நினைத்தனர். அமைச்சர் வைகை செல்வன் மற்றும் உயர் அதிகாரிகளின், "சொதப்பல்' நடவடிக்கை காரணமாக, மாணவர்கள், சோகத்துடன் வெளியேறினர்.

தினமலர்


அமைச்சர் வைகை செல்வன் மீண்டும் மீண்டும் "சொதப்பல்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum