ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழர் நாம் தமிழராகவே வாழ்வோம்.

+2
சாமி
ராஜு சரவணன்
6 posters

Go down

தமிழர் நாம் தமிழராகவே வாழ்வோம். Empty தமிழர் நாம் தமிழராகவே வாழ்வோம்.

Post by ராஜு சரவணன் Tue Jun 18, 2013 7:58 am

தமிழர் நாம் தமிழராகவே வாழ்வோம். Iq7i

இதை எழுதலாமா இல்லை அப்படியே விட்டு விடுவோமா என்ற எனக்கும் என் மனசாட்சிக்கும் இடையே ஆனா நீண்ட போராட்டத்துக்கு பிறகு எனக்கு கிடைத்த குறுகிய நேர அட்டவணையில் இதை எழுதுகிறேன்.

நேற்று இரவு 10.30 மணியளவில் நான் பணிபுரியும் நிறுவனத்தின் எதிர்பாரத வேலைத்திட்டம் ஒன்றிற்காக இலண்டனின் ஒரு நகரில் இருந்து இன்னொரு நகருக்கு தொடரூந்தில் பயணம் மேற்கொண்டிருந்தேன். வெள்ளையர்கள் அதிகம் நிறைந்திருந்த தொடரூந்தில் எனக்கு அருகில் இருந்த பெட்டியில் நான்கு பெற்றோரும் அவர்களின் ஐந்து பலதரப்பட்ட வயது நிரம்பிய பிள்ளைகளும் அமர்ந்திருந்தார்கள் பார்த்த உடனேயே கண்டிப்பாக அவர்கள் தமிழர்களாகத்தான் இருப்பார்கள் என்ற என்ஊகம் அவர்கள் இடையே ஆனா சம்பாசனையில் உறுதிப்படுத்திக்கொண்டேன்.

உறக்கம் என் கண்களை தட்டியதால் நான் படித்துகொண்டிருந்த நாளிதழை மூடிவிட்டு இவர்களையே கவனித்து கொண்டிருந்தேன். குழந்தைகள் ஆங்கிலத்திலும் பெற்றோர்கள் தம்மிடையே தூய ஈழத்து தமிழிலும் தம் குழந்தைகளிடத்து ஆங்கிலத்திலும் பேசுவதை கவனித்தேன். உற்று நோக்கிய எனக்கு என்னை அறியாத கோபமும் வெறுப்பும் ஏற்பட்டது. முற்பது நிமிடங்களுக்கு மேல் கவனித்தேன் தொடர்தும் பெற்றோர்கள் தம் பிள்ளைகளிடத்து ஆங்கிலத்தில் பேசிக்கொண்டே இருந்தார்கள்.

ஒருகட்டத்தில் பொறுமை இழந்த நான் எழுந்து சென்று எங்கு செல்கிறீர்கள் எதாவது உதவி செய்ய வேண்டுமா எனக்கேட்டேன், அதற்கு அவர்கள் சில தொடரூந்து தகவல்களை கேட்டார்கள் நானும் தகவலை வழங்கினேன். நின்று விடாத என் கோபம் பெற்றோர்கள் மீது திரும்பியது. இடையூறுக்கு மன்னிப்பு கேட்டபடி நான் பெற்றோர்களிடம் சொன்னேன் உங்கள் பிள்ளைகளிடம் எப்போதும் தமிழியே பேசுங்கள் அவர்களையும் தமிழிலேயே பேச சொல்லுங்கள், தமிழின் தொண்மை, பெருமைகளை அவர்களிடம் கற்றுக்கொடுங்கள், தமிழர்களிடம் தமிழில் மட்டுமே பேச கட்டாயப்படுத்துங்கள். ஆங்கில மொழியில் பிள்ளைகளும் நீங்களும் பேசுவைதை வைத்து பெருமை கொள்ளவேண்டாம் என்றேன், பிரித்தானியா போன்ற ஆங்கில நாடுகளில் ஆங்கிலத்தை தானாகவே எவரும் கற்றுக்கொள்வார்கள் . ஆனால் எம் தாய் மொழியை யார் கற்றுக்கொடுப்பார்கள்? எம் மொழியை இழந்த குழந்தைகள் எம் இன அடையாளங்கள் , கலாச்சாரங்களை மறந்து இலகுவாக மேலத்தேக நாகரிக, பண்பாடுகளை கற்று அவற்றை பின்பற்றி பெற்றோரை மதிக்காது இலகுவாக அழிந்து போவதற்கான காரணிகளை சுட்டிக்காட்டினேன். புலம் பெயர்ந்து எதற்காக வந்தோம் எப்படி வந்தோம் என்பதையும் ஞாபகப்படுத்தினேன் வெட்கி தலை குனிந்து அப்பாவிகளை போல் இருந்தார்கள் பெற்றோர்கள் .

எம் மொழியின் தொண்மை , பாரம்பரியம், மதிப்பு, கலாச்சாரம் , தமிழரிடையே நாம் கட்டாயம் தமிழில் தான் பேச வேண்டும் அதற்கான காரணங்களை குழந்தைகளிடம் ஆங்கிலத்தில் விளக்கி கூறினேன் மிகவும் ஆவலாக கேட்ட குழந்தைகள் நன்றி அண்ணா நாங்கள் இனி தமிழிலேயே பேசுகிறோம் என்றார்கள், எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. குழந்தைகளின் கைதட்டல் , வெள்ளையர்களின் சிருப்புடன் என் கோபம் அடங்கியது. என் தொடரூந்து மாறும் நிலையமும் வந்தது நன்றி கூறி விடை பெற்றேன்.

ஆறு மொழிகளில் சரளமாக பேச தெரிந்த எனக்கு என் தாய் மொழியை விட இனிய அழகிய மொழியை காண முடியவில்லை .ஏனோ தெரியவில்லை தமிழருக்கு மட்டும் ஏன் இந்த அவல நிலைமை, வரட்டு கௌரவம் பிரித்தானிய மகாராணி எலிசபெத் மகாராணியின் அரண்மனை பாதுகாப்பு பணியில் இருந்த இந்திய பஞ்சாப்பை பூர்வீகமாக கொண்ட சீக்கிய இனத்தவன் அவனின் தலைப்பாகையை அகற்ற வேண்டு என சட்டம் வந்த போது கொதித்தெழுந்து என் நிலை வரினும் என் அடையாளத்தை இழக்க முடியாது என்று போரிட்டு இறுதியில் வெற்றி கண்டான் இப்போதும் தலைப்பாகயுடனேயே பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறான் .
கனடா நாட்டின் உதை பந்தாட்டு அணியில் உள்ள ஒரு சீக்கியனுக்கு இதே நிலைமை வருகின்ற போது எதிர்த்து போராடுகிறான் இறுதியில் வெற்றி பெற்று தன் இன அடையாங்களோடு வாழ்கிறான்.

தமிழனை தவிர வேறு எந்த இனமும் தங்களின் இன , மொழி கலாச்சார விழுமியங்களை அடகுவைப்பதில்லை. மலையாளி எங்கு சென்றாலும் மலையாளியாகவே வாழ்கிறான், வங்காளி எங்கு சென்றாலும் வங்களியாகவே வாழ்கிறான், தமிழர் மட்டும் வாழும் நாடுகளின் காலாச்சாரங்கள் பின்பற்றி தம்மைத்தாமே அழித்து கொள்கிறார்கள். அதில் அவர்களுக்கு ஒரு வரட்டு கௌரவம் வேறு.
ஆங்கிலம் பேசும் போது எவ்வளவு கவனமாக இருக்கிறோம் அதில் ஒரு இலக்கண இலக்கிய பிழைகள் இருந்துவிடக்கூடாது என்று, ஏன் எம் தாய் மொழி பேசும் போது அவ்வாறான கவனம் செலுத்துவதில்லை?

தமிழருக்கான அடையாங்கள் என்ன அவை எல்லாம் எம்மால் பின்பற்றப்படுகின்றனவா? இத்தனை வருட போராட்ட, தியாக, விலைகொடுப்புகளும் புலம்பெயர் தமிழர்கள் எங்களால் அவசியமற்றதாக, அர்த்தமர்ரதாக்கப்பட்டு கொண்டிருக்கின்றது.
இப்படியே நிலைமை போனால் இன்னும் பத்து வருடங்களில் பொது நிறம் கொண்ட ஆங்கிலத்தமிழராக மாறி தமிழர்கள் தம் தன்மானம், அடையாளங்கள், காலாச்சாரங்கள் இழந்து கேலிப்பொருளாக உலாவருவோம் என்பது மட்டும் திண்ணம்.

யப்பானியன் யப்பானியில் கற்றான் அவனும் அவன் நாடும் வளர்ந்தது, சீனா காரன் சீன மொழில் பேசுகிறான் கற்கிறான் அவனும் வளர்ச்சி கண்டான், ஜெர்மானியன் ஜெர்மன் மொழியில் கற்கிறான், பிரான்சு நாட்டான் பிரஞ்சில் கற்கிறான், அரேபியன் அரபியில் கற்கிறான் , எல்லோரும் தத் தம் மொழி, அடையாங்களை அழியாது பேணி அசுர வளர்ச்சி கண்டார்கள் அனால் மிகவும் பாரம்பரிய தொண்மை மொழியை கொண்ட தமிழ் இனமாகிய நாம் நக்க போகிற இடமெல்லாம் அவர்தம் மொழி, கலாச்சாரம், கலப்பு மொழி படித்து எல்லா நாடுகளிலும் கேலிப்பொருளாக அடிமைகளாக வாழ்கின்றோம்.

ஒவ்வொரு பெற்றோரும், ஒவ்வொரு தமிழரும் இந்த வரட்டு கௌரவத்தை தொலைக்காத வரை நாம் எல்லாம் அடிமைகளே.
எம் மொழி, இன , பண்பாடு, கலாச்சாரங்களை பின்பற்றி பாருங்கள் என் நிலை வரினும் இழக்க மாட்டோம் என போராட்டிப்பாருங்கள் தமிழரை உலகமே போற்றும், இல்லையேல் நூறு கோடியில் கண்ணகிக்கு சிலைவைத்தாலும் சரி ஆயிரம் கோடியில் வள்ளுவனுக்கு சிலை வைத்தாலும் சரி அவை எமக்கு பெரும் சிலையாகவும், கண்ணகி, வள்ளுவனுக்கு நாம் கட்டும் சமாதியாகவே இருக்கும்.

"எவ் இழி நிலை வரினும் தமிழர் நாம் தமிழராக வாழக்கற்போம்"

பிரசாந்தன் நடராசா.
(முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது)
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

தமிழர் நாம் தமிழராகவே வாழ்வோம். Empty Re: தமிழர் நாம் தமிழராகவே வாழ்வோம்.

Post by சாமி Tue Jun 18, 2013 10:16 am

ராஜு சரவணன் wrote:
ஆறு மொழிகளில் சரளமாக பேச தெரிந்த எனக்கு என் தாய் மொழியை விட இனிய அழகிய மொழியை காண முடியவில்லை .

ஏனோ தெரியவில்லை தமிழருக்கு மட்டும் ஏன் இந்த அவல நிலைமை, வரட்டு கௌரவம் பிரித்தானிய மகாராணி எலிசபெத் மகாராணியின் அரண்மனை பாதுகாப்பு பணியில் இருந்த இந்திய பஞ்சாப்பை பூர்வீகமாக கொண்ட சீக்கிய இனத்தவன் அவனின் தலைப்பாகையை அகற்ற வேண்டு என சட்டம் வந்த போது கொதித்தெழுந்து என் நிலை வரினும் என் அடையாளத்தை இழக்க முடியாது என்று போரிட்டு இறுதியில் வெற்றி கண்டான் இப்போதும் தலைப்பாகயுடனேயே பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறான்.

கனடா நாட்டின் உதை பந்தாட்டு அணியில் உள்ள ஒரு சீக்கியனுக்கு இதே நிலைமை வருகின்ற போது எதிர்த்து போராடுகிறான் இறுதியில் வெற்றி பெற்று தன் இன அடையாங்களோடு வாழ்கிறான்.

தமிழனை தவிர வேறு எந்த இனமும் தங்களின் இன , மொழி கலாச்சார விழுமியங்களை அடகுவைப்பதில்லை. மலையாளி எங்கு சென்றாலும் மலையாளியாகவே வாழ்கிறான், வங்காளி எங்கு சென்றாலும் வங்களியாகவே வாழ்கிறான், தமிழர் மட்டும் வாழும் நாடுகளின் காலாச்சாரங்கள் பின்பற்றி தம்மைத்தாமே அழித்து கொள்கிறார்கள். அதில் அவர்களுக்கு ஒரு வரட்டு கௌரவம் வேறு.
ஆங்கிலம் பேசும் போது எவ்வளவு கவனமாக இருக்கிறோம் அதில் ஒரு இலக்கண இலக்கிய பிழைகள் இருந்துவிடக்கூடாது என்று, ஏன் எம் தாய் மொழி பேசும் போது அவ்வாறான கவனம் செலுத்துவதில்லை?

தமிழருக்கான அடையாங்கள் என்ன அவை எல்லாம் எம்மால் பின்பற்றப்படுகின்றனவா? இத்தனை வருட போராட்ட, தியாக, விலைகொடுப்புகளும் புலம்பெயர் தமிழர்கள் எங்களால் அவசியமற்றதாக, அர்த்தமர்ரதாக்கப்பட்டு கொண்டிருக்கின்றது.
இப்படியே நிலைமை போனால் இன்னும் பத்து வருடங்களில் பொது நிறம் கொண்ட ஆங்கிலத்தமிழராக மாறி தமிழர்கள் தம் தன்மானம், அடையாளங்கள், காலாச்சாரங்கள் இழந்து கேலிப்பொருளாக உலாவருவோம் என்பது மட்டும் திண்ணம்.

யப்பானியன் யப்பானியில் கற்றான் அவனும் அவன் நாடும் வளர்ந்தது,

சீனா காரன் சீன மொழில் பேசுகிறான் கற்கிறான் அவனும் வளர்ச்சி கண்டான்,

ஜெர்மானியன் ஜெர்மன் மொழியில் கற்கிறான், பிரான்சு நாட்டான் பிரஞ்சில் கற்கிறான், அரேபியன் அரபியில் கற்கிறான் , எல்லோரும் தத் தம் மொழி, அடையாங்களை அழியாது பேணி அசுர வளர்ச்சி கண்டார்கள்

அனால் மிகவும் பாரம்பரிய தொண்மை மொழியை கொண்ட தமிழ் இனமாகிய நாம் நக்க போகிற இடமெல்லாம் அவர்தம் மொழி, கலாச்சாரம், கலப்பு மொழி படித்து எல்லா நாடுகளிலும் கேலிப்பொருளாக அடிமைகளாக வாழ்கின்றோம்.

ஒவ்வொரு பெற்றோரும், ஒவ்வொரு தமிழரும் இந்த வரட்டு கௌரவத்தை தொலைக்காத வரை நாம் எல்லாம் அடிமைகளே.

எம் மொழி, இன , பண்பாடு, கலாச்சாரங்களை பின்பற்றி பாருங்கள் என் நிலை வரினும் இழக்க மாட்டோம் என போராட்டிப்பாருங்கள் தமிழரை உலகமே போற்றும், இல்லையேல் நூறு கோடியில் கண்ணகிக்கு சிலைவைத்தாலும் சரி ஆயிரம் கோடியில் வள்ளுவனுக்கு சிலை வைத்தாலும் சரி அவை எமக்கு பெரும் சிலையாகவும், கண்ணகி, வள்ளுவனுக்கு நாம் கட்டும் சமாதியாகவே இருக்கும்.

"எவ் இழி நிலை வரினும் தமிழர் நாம் தமிழராக வாழக்கற்போம்"

எவ் இழி நிலை வரினும் தமிழர் நாம் தமிழராக வாழக்கற்போம்! வாழக்கற்போம்!! வாழக்கற்போம்!!!
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

தமிழர் நாம் தமிழராகவே வாழ்வோம். Empty Re: தமிழர் நாம் தமிழராகவே வாழ்வோம்.

Post by சதாசிவம் Tue Jun 18, 2013 10:20 am

சாட்டையடி பதிவு, பகிர்வுக்கு நன்றி,,,

பிறர் கிண்டல் செய்வார்கள் என்று இந்தி கற்றுக் கொள்கின்றனர், மதிப்பெண் அதிகம் வர வேண்டும் என்று சமஸ்க்ரிதத்தில், பிரெஞ்சில் தேர்வு எழுத விழைகின்றனர், தமிழை சரியாகப் படிக்கத் தெரியாத தமிழர்கள்.....



சதாசிவம்
தமிழர் நாம் தமிழராகவே வாழ்வோம். 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

தமிழர் நாம் தமிழராகவே வாழ்வோம். Empty Re: தமிழர் நாம் தமிழராகவே வாழ்வோம்.

Post by ராஜு சரவணன் Tue Jun 18, 2013 11:19 am

சீனா , ஜப்பான், இஸ்ரேல், ஜெர்மனி,ரஷியன் போன்றவர்கள் தன் தாய்மொழியில் தான் படிக்க வேண்டும் , அப்படி மொழியில் படிப்புக்கு உகந்த வளங்கள் இல்லை என்றாலும் அந்த வளங்களை உருவாக்கி மொழியை புதிப்பித்து படிக்கவேண்டும் என்ற எண்ணம்  கொண்டவர்கள். அதனால் தான் அவர்கள் இன்று அணைத்து துறைகளிலும் புதுமைகள்,கண்டுபிடிப்புகள் என நிகழ்த்திவர காரணம்.  

நம் வீட்டில் இருக்கும் அரிசி பருப்புகளை வைத்து சமைத்து தின்ன தெரியாதவன் பக்கத்துக்கு வீட்டில் இரந்து சாப்பிடுவதற்கு சமம் இந்த பிற மொழி பித்தம். இதற்காக வருந்தாமல் இதைய பெருமையாக பீத்திகொள்வது எவ்வளவு பெரிய வருத்தம். அந்நிய மொழிகள் படியுங்கள், பேசுங்கள் வாழ்கைக்கு அவசியம் தான் மறுக்கவில்லை. ஆனால் அது தான் வாழ்கை என படித்த நாம் எண்ணுவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்.

எந்த ஒரு இனம் தனது மொழி, பாரம்பரியம், பற்று ஆகியவற்றை மறந்து அந்நிய மொழி மோகம் கொண்டு, வாத்துகள் போன்று ஒருவர் பின் ஒருவர் செல்கின்றனரோ அன்ற அவர்களின் அழிவு ஆரம்பித்துவிட்டது என்று தான் சொல்லமுடியும்.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

தமிழர் நாம் தமிழராகவே வாழ்வோம். Empty Re: தமிழர் நாம் தமிழராகவே வாழ்வோம்.

Post by பார்த்திபன் Tue Jun 18, 2013 12:43 pm

நல்லதொரு பகிர்வு.
தமிழ் நாட்டிலேயே வேலை பார்க்கும் சிலர் தங்கள் பிள்ளைகளிடம் ஆங்கிலம் மட்டுமே பேசுவதைக் கேட்க முடிகிறது. காரணம் கேட்டால் பள்ளி, கல்லூரி மற்றும் வேலை பார்க்கப் போகும் இடங்களில் பிள்ளைகளுக்கு ஆங்கிலம் ஒரு பிரச்சனையாக இருக்கக்கூடாது என்பதற்கான பயிற்சி என்கிறார்கள். அதைவிடக் கொடுமை சில தமிழ்த் தம்பதிகள், தங்களுக்குள்ளேயே எப்போதும் ஆங்கிலத்தில் பேசிக்கொள்கின்றனர். இதை எந்தக் கணக்கில் சேர்ப்பது?
இதை ஆங்கில மோகம் என்று சொல்வதைவிட ஆங்கிலத்தின் மீதான காம வெறி என்றுதான் சொல்லவேண்டும். மாற்றான் பொருளைப் பயன்படுத்துவதை அநாகரீகம் என்று விளிக்கும் இதே கூட்டம்தான் மாற்றான் மொழியைப் பேசுவதை நாகரீகம் என்கிறது. இதில் என்ன கொடுமை என்றால், இவர்களது பைத்தியக்காரத்தனத்தை புரியவைக்க முயலும் நம்மை இவர்கள் பைத்தியக்காரனாகப் பார்ப்பதுதான்! நாங்கள் என்ன மொழியில் பேசினால் உனக்கென்ன? நீ உன் வேலையைப் பார்! என்று முகத்திலடிப்பவர்களும் உள்ளனர்.
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

தமிழர் நாம் தமிழராகவே வாழ்வோம். Empty Re: தமிழர் நாம் தமிழராகவே வாழ்வோம்.

Post by யினியவன் Tue Jun 18, 2013 12:55 pm

தன் தாய் மொழியில் பேச மறுத்தால் அதைவிட போலித்தனமான வாழ்க்கை
வேறு இல்லை என்பது என் கருத்து - எந்த மொழி தாய் மொழியாக இருப்பினும்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தமிழர் நாம் தமிழராகவே வாழ்வோம். Empty Re: தமிழர் நாம் தமிழராகவே வாழ்வோம்.

Post by கரூர் கவியன்பன் Tue Jun 18, 2013 1:52 pm

சிறந்த பதிவு இனியாவது விழிக்கட்டும் தமிழ்ச் சமூகம்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

தமிழர் நாம் தமிழராகவே வாழ்வோம். Empty Re: தமிழர் நாம் தமிழராகவே வாழ்வோம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum