புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
Search found 2 matches for பாலியல்
- Fri Jul 21, 2023 5:41 pm
- Search in: மருத்துவ கட்டுரைகள்
- Topic: பெண்கள் கருத்தடை மாத்திரையை சாப்பிடுவதால் என்ன பாதிப்பு ஏற்படும்?
- Replies: 1
- Views: 612
அமெரிக்காவில், இனி பெண்கள் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமலே மருந்துக் கடைகளில் கருத்தடை மாத்திரைகளைப் பெறலாம்.
சமீபத்தில், அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை, கருத்தடை மருந்தான ‘ஓபில்’லை (OPill) அனைத்து வயதுப் பெண்களும் உட்கொள்ளலாம் என அறிவித்தது.
2024-ம் ஆண்டின் துவக்கத்தில், ஓபில் மருந்துக் கடைகளில் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
அமெரிக்கா உட்பட 100 நாடுகளில் நாடுகளில் கருத்தடை மாத்திரைகள் மருந்துக் கடைகளில் கிடைக்கும்.
இந்தியா, சீனா, மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளும் இப்பட்டியலில் சேர்ந்துள்ளன.
கருத்தடை மாத்திரைகள் கொடுத்த சுதந்திரம்
முன்னர், கருத்தடை மாத்திரைகள் குறித்து பெண்கள், குறிப்பாக பதின்பருவப் பெண்களிடையே கூச்சம், தயக்கம், பயம் போன்ற உணர்வுகள் இருந்தன என்றும், இந்த அறிவிப்புக்குப்பின் அவை விலகிவிடும் என்றும் அமெரிக்காவின் பெண்கள் ஆரோக்கியம் சார்ந்த நிபுணர்கள் கூறுகிறார்கள். இத்துடன், மகப்பேறு தொடர்பான சுகாதார சேவைகளைப் பெறுவதில் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைக் களையவும் இந்த அறிவிப்பு உதவும் என்கின்றனர்.
அமெரிக்காவின் தேசிய மருத்துவ நூலகத்தில் வெளியிடப்பட்ட தகவல்களின்படி, மருத்துவ வரலாற்றில் ஆயிரக்கணக்கான மருந்துகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், 1950-ல் கருத்தடை மருந்துகளின் வளர்ச்சிக்குப் பிறகு, ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது. கருத்தடை மருந்துகள் பெண்களுக்குச் சுதந்திரம் அளித்தது மட்டுமின்றி, அவர்களுக்கு மகப்பேறு சார்ந்த சுதந்திரத்தையும் அளித்தது.
இந்தியாவில் கருத்தடை மற்றும் குடும்பக் கட்டுப்பாட்டு முறைகள்
மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட தகவல்களின்படி, 1952-ம் ஆண்டில் தேசிய குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைத் தொடங்கிய உலகின் முதல் நாடு இந்தியா.
இத்திட்டம் துவங்கப்பட்டப் பிறகு, அது பெரிய அளவில் விரிவடைந்தது. இதன் கீழ், கருத்தடை மாத்திரைகள் மற்றும் ஆணுறைகள் அரசாங்கத்தால் சுகாதார மையங்களில் இலவசமாக வழங்கப்படுகின்றன. அதேபோல் ஆஷா ஊழியர்களும் அவற்றை மக்களுக்கு வழங்குகிறார்கள்.
மகப்பேறு மருத்துவர் டாக்டர் எஸ்.என்.பாசு கூறுகையில், “இந்தியாவில் குடும்பக் கட்டுப்பாட்டுக்கு கருத்தடை மருந்துகள் ஒரு சிறந்த முறையாகும். இம்மருந்துகளைச் சரியான முறையில் எடுத்துக் கொண்டால், அவை 100% பலனளிக்கின்றன. இம்மருந்துகள், ஒரு குழந்தைக்குப் பிறகு இன்னொரு குழந்தை எப்போது பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற சுதந்திரத்தையும் தேர்வையும் பெண்களுக்குக் கொடுத்தது,” என்கிறார்.
கருத்தடை மாத்திரைகளின் வகைகள் என்ன?
கருத்தடை மாத்திரைகளில் இரண்டு வகைகள் உள்ளன.
ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஆகிய இரண்டு ஹார்மோன்களையும் கொண்டிருக்கும் பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகள் ‘COC’ (Combined oral contraceptive) என்று அழைக்கப்படுகின்றன.
ப்ரோஜெஸ்ட்டிரோனை மட்டுமே கொண்டிருக்கும் மாத்திரைகள் ‘POP’ (Progestogen-only pill) என்று அழைக்கப்படுகின்றன.
தில்லியில் உள்ள அமிர்தா மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் பிரதிமா மிட்டல், முன்பு வாய்வழி கருத்தடைகளில் அதிக அளவு ஈஸ்ட்ரோஜன் இருந்தது, என்கிறார். அது பக்கவிளைவுகளை ஏற்படுத்தியது. ஆனால் இப்போது கருத்தடை மாத்திரைகளில் ஈஸ்ட்ரோஜென் குறைந்த அளவிலேயே உள்ளது, என்கிறார்.
மும்பையில் உள்ள மகப்பேறு மருத்துவரான சுசித்ரா டெல்வி, பெண்களின் உடலில் இயற்கயிலேயே ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்ரோன் ஹார்மோன்கள் இருப்பதாகவும், இவை பிறப்புக் கட்டுப்பாட்டில் பயன்படுத்தப்படுவதாகவும், இவை உடலில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்துவதாகவும் கூறுகிறார்.
கருத்தடை மாத்திரைகள் உடலில் என்ன விளைவுகளை ஏற்படுத்துகின்றன?
புரோஜெஸ்ட்ரோன் ஹார்மோன் உள்ள கருத்தடை மாத்திரைகளை உட்கொண்டால் குமட்டல், தலைசுற்றல், தலைவலி, மற்றும் நாள்தவறிய மாதவிடாய் ஆகிய பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன
இந்த மூன்று மருத்துவர்களின் கருத்துப்படியும், கருத்தடை மாத்திரைகளை உட்கொள்வதால் பெரிய அளவில் பக்க விளைவுகள் ஏற்படாது. ஆனாலும், உடலில் சில விளைவுகள் இருக்கவே செய்யும்.
ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் உள்ள கருத்தடை மாத்திரைகள் ரத்தம் உறைந்துபோகும் சிக்கல்கள், இருதய நோய், உயர் ரத்த அழுத்தம் ஆகிய நோய்களை கட்டுப்படுத்த உதவும் என்று இந்த மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
புரோஜெஸ்ட்ரோன் ஹார்மோன் உள்ள கருத்தடை மாத்திரைகளை உட்கொண்டால் குமட்டல், தலைசுற்றல், தலைவலி, மற்றும் நாள்தவறிய மாதவிடாய் ஆகிய பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன, என்றும் கூறுகிறார்கள்.
இந்த மருந்துகளைப் பரிந்துரைக்கும் முன் ஒரு பெண்ணுக்கு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் சார்ந்த பிரச்னைகள், புற்றுநோய் போன்ற எந்த நோய்களும் இல்லை என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.
இந்தக் கருத்தடை மருந்துகளை உட்கொள்வது பெண்களுக்கு வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
அவற்றில் முக்கியமானவை:
* உடலில் நீர் கோர்த்தல்
* உடல் கனப்பது போன்ற உணர்வு
* முகப்பரு
* மார்பகப் பகுதியில் பாரம்
* மனநிலை மாற்றங்கள் (Mood swings)
நீண்ட நாட்கள் கருத்தடை மாத்திரைகள் உட்கொண்டால் என்னவாகும்?
கருத்தடை மாத்திரைகளை நீண்ட காலம் எடுத்துக்கொள்ளலாம் என்றும், அதனால் பெரிய பக்கவிளைவுகள் இல்லை என்றும் மருத்துவர் பிரதிமா மிட்டல் கூறுகிறார்.
பெண்களின் உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளை வெளிப்படையாக எழுப்புகிறார் மருத்துவர் சுசித்ரா டெல்வி. “ஒரு பெண் புகைபிடிக்கவும் செய்து, ஈஸ்ட்ரோஜன் இருக்கும் கருத்தடை மாத்திரைகளையும் உட்கொண்டால், அது இரத்தம் உறைவதற்கு வழிவகுக்கும். அதே சமயம் மருந்தில் புரோஜெஸ்ட்ரோன் இருந்தால், அது பாதிப்பை ஏற்படுத்தாது, என்கிறார்.
அதேபோல், ஒவ்வொரு பெண்ணின் உடல்நிலைக்கும் ஏற்ப, இந்த மாத்திரைகளை உட்கொள்வதன் பயன்கள் அமைவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
கருத்தடை மாத்திரைகளின் பயன்கள் என்ன?
* எளிமையான கருத்தடை முறை
* குடும்ப திட்டமிடலுக்கு உதவுகிறது
* மாதவிடாயை சீராக்க உதவும்
* மாதவிடாயின் போது அதிக இரத்தப்போக்கைக் குறைக்க உதவுகிறது
* கருப்பை புற்றுநோயின் ஆபத்து குறைகிறது
கருத்தடை மாத்திரைகள் தொடர்பான தவறான நம்பிக்கைகள்
மருத்துவர் பிரதிமா மிட்டல், இந்தக் கருத்தடை மாத்திரைகளை உட்கொள்வது புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கிறது என்ற தவறான கருத்து உள்ளது, எனவும், ஆனால் அது தவறான கருத்து எனவும் கூறுகிறார்.
மருத்துவர் சுசித்ரா டெல்வி, இந்த மருந்துகளை தினமும் எடுத்துக் கொண்டால், இந்த ஹார்மோன்கள் உடலில் தேங்கும் என்ற கருத்து உள்ளது, ஆனால் அப்படியில்லை, மாறாக அவை கல்லீரல் வழியாக உடலில் இருந்து வெளியேறுகின்றன, என்கிறார்.
பாதுகாப்பு இல்லாத உடலுறவில் ஈடுபட்டால் 120 மணி நேரத்திற்குள் ஐபில் ‘i-Pill’ மாத்திரையை உட்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. இது கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மறுபுறம், ஐபில்லில் புரோஜெஸ்ட்ரோன் ஹார்மோன் பயன்படுத்தப்படுகிறது, அதன் அளவும் அதிகமாக உள்ளது.
கருத்தடை என்பது பெண்களுக்கு மட்டுமானதா?
கருத்தடை மாத்திரைகள் பெண்களுக்கு குழந்தை பெற்றுக்கொள்வதில் சுதந்திரம் அளித்தன என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால், அதன் பொறுப்பும் பெண்களில் மீது விழ ஆரம்பித்தது. அது இன்னும் அதிகமாகிக் கொண்டுதான் இருக்கிறது.
ஆண்களுக்குக் கருத்தடை முறைகளே இல்லை என்பதல்ல.
அரசின் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ், பெண்களுக்கான கருத்தடை மாத்திரைகளுடன், ஆண்களுக்கு ஆணுறைகளும் வழங்கப்படுகின்றன.
ஆனால், தரவுகளின்படி, ஆணுறைப் பயன்பாடு குறைவாகவே உள்ளது.
மருத்துவர்களின் கூற்றுப்படி, ஆண்களுக்கு ஆணுறை மற்றும் ‘வாஸெக்டமி’ எனப்படும் விதை நாள அறுவை ஆகிய கருத்தடை முறைகள் உள்ளன. ஆனால் இவை தொடர்பாக சில கடுக்கதைகள் உள்ளன.
ஆணுறை பயன்படுத்துவது பாலியல் இன்பத்தைக் குறைக்கிறது என்ற நம்பிக்கை உள்ளது. அதேபோல் வாஸெக்டமி செய்துகொண்டால் உடலில் பலவீனம் ஏற்படும் என்ற பயமும் உள்ளது.
இது பெண்களுக்கு எதிரான விளைவை ஏற்படுத்துகிறது.
இந்தக் கட்டுக்கதைகளை களைய அரசு சார்பில் பல விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றின்மூலம் ஆண்களின் சிந்தனையில் மாற்றம் இருந்தாலும், அதன் சதவீதம் மிகவும் குறைவு என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
குறிச்சொற்கள் #கருத்தடை #குடும்பக்_கட்டுப்பாடு #பாலியல் #ஆணுறை #பெண்கள் |
பிபிசி
- Sun May 07, 2023 9:25 pm
- Search in: மன்மத ரகசியம்
- Topic: வாய்வழி பாலுறவு கொள்வதால் தொண்டை புற்றுநோய் ஏற்படும்
- Replies: 1
- Views: 2100
மருத்துவ அறிவியலின் தொழில்நுட்பம் உலக அளவில் என்னதான் வளர்ந்து வந்தாலும், புற்றுநோயை மட்டும் நவீன மருத்துவத்தால் இன்றும் முழுமையாக வெல்ல முடியவில்லை |
மார்பக புற்றநோய், கல்லீரல் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு புற்றுநோய்களுக்கு அன்றாடம் மனித உயிர்கள் இரையாகிக் கொண்டுதான் இருக்கின்றன. இவையெல்லாம் போதாதென்று, மனித உயிரைக் காவு வாங்கும் பட்டியலில் தொண்டை புற்றுநோயும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. |
குறிப்பாக கடந்த 20 ஆண்டுகளில் அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் தொண்டை புற்றுநோய்க்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிரடியாக அதிகரித்து வருகிறது. புற்றுநோயின் இந்த அதிரடி உயர்வு காரணமாகவே சிலர் இதைத் தொற்றுநோய் என்றே கருதுகின்றனர்.
தொண்டைப் புற்றுநோயில் பல வகைகள் இருந்தாலும், oropharyngeal எனப்படும் குறிப்பிட்ட வகை புற்றுநோய்க்குத்தான் மனிதர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தொண்டையின் பின்புறம் மற்றும் டான்சிலை ( tonsils) சுற்றியுள்ள பகுதிகளைத் தான் இந்தப் புற்றுநோய் அதிகம் பாதிப்பதாக மருத்துவ பரிசோதனைகள் தெரிவிக்கின்றன.
பெரும்பாலான கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு காரணமான பாபில்லோமா வைரஸ்தான் (Human papillomavirus,HPV) oropharyngeal தொண்டைப் புற்றுநோய்க்கும் முக்கிய காரணம் என்பதுதான் இதில் அதிர்ச்சியான தகவல்.
அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் தற்போது கர்ப்பப்பைவாய் புற்றுநோயைவிட oropharyngeal தொண்டை புற்றுநோய்க்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து மருத்துவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இதேபோன்று, ஸ்பெயினில் மக்களை அதிகம் பாதிக்கும் நோய்களின் டாப் டென் பட்டியலில் இடம்பெற்றுள்ள தொண்டை புற்றுநோய்க்கு ஆண்டுக்கு சுமார் 8,000 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் தொண்டைப் புற்றுநோய் மனித உடல்நலம் சார்ந்த தீவிர பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இந்த நிலை நீடித்தால் தொண்டைப் புற்றுநோயால் இறப்போரின் எண்ணிக்கை 2030இல் 17.2% ஆக அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த வகை தொண்டைப் புற்றுநோயை உண்டாக்கும் ஹெச்.பி.வி வைரஸ் ஆண்-பெண்ணுக்கு இடையிலான பாலியல் உறவின் மூலம் பரவுகிறது என்கின்றனர் மருத்துவரகள்.
குறிப்பாக, வாய்வழியாக உடலுறவு (Oral Sex) வைத்துக் கொள்ளும் பழக்கத்தை வழக்கமாகக் கொண்டுள்ளவர்களுக்குத் தொண்டை புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம் என்று அவர்கள் எச்சரிக்கின்றனர்.
தங்களது வாழ்நாளில் ஆறு அல்லது அதற்கு மேற்பட்டவர்களுடன் வாய்வழி உடலுறவு கொள்பவர்களுக்கு, இந்தப் பழக்கம் இல்லாதவர்களுடன் ஒப்பிடும்போது, தொண்டைப் புற்றுநோய் உண்டாகும் வாய்ப்பு 8.5 மடங்கு அதிகம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
வாய்வழி உடலுறவு கொள்ளும் 80% பேர்!
உடலுறவு விஷயத்தில் மனிதனின் நடவடிக்கைகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுகள் மூலம், வாய்வழியாக உடலுறவு கொள்ளும் போக்கு மனிதர்கள் மத்தியில் அதிகரித்து வருவது தெரிய வந்துள்ளது.
பிரிட்டனில் புற்றுநோய் அல்லாத வேறு மருத்துவ காரணங்களுக்காக டான்சில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட சுமார் ஆயிரம் பேரிடம் அண்மையில் இதுதொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 80% பேர் தங்களது வாழ்நாளில் ஏதாவதொரு தருணத்தில் வாய்வழி உடலுறவு கொண்டவர்களாக இருப்பது இந்த ஆய்வில் தெரிய வந்ததுள்ளது.
இருப்பினும் அதிர்ஷ்டவசமாக இவர்களில் குறைவான பேர்தான் oropharyngeal தொண்டை புற்றுநோய்க்கு ஆளாகியுள்ளனர்.
இவர்கள் ஏன் தொண்டைப் புற்றுநோய்க்கு இலக்கு ஆகின்றனர் என்பதற்கான காரணங்கள் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், இந்தப் புற்றுநோய்க்கு ஆளாவோரில் பெரும்பாலோருக்கு ஹெச்பிவி வகை வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதும், இந்தத் தொற்றில் இருந்து விடுபடுவதற்கான சிகிச்சை முறைகள் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனாலும், ஹெச்பிவி வைரஸ் தொற்றுக்கு ஆளாகும் நபர்களில் சிலரால் தொற்றில் இருந்து மீள முடிவதில்லை. தொற்றின் விளைவாக அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியில் ஏற்படும் எதிர்மறை பாதிப்பு இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
தொற்றுக்கு ஆளாகும் இனனும் சில பேரின் உடம்புக்குள் ஹெச்பிவி வைரஸ் பல்கிப் பெருகி பெருமளவுக்கு திறன் பெற்று விடுவதாகவும், இவையே குறிப்பிட்ட கால இடைவெளியில் அந்த நோயாளியின் மரபணுக்களில் (DNA) தாக்கத்தை ஏற்படுத்தி, புற்றுநோய் உண்டாக வழிவகுத்து விடுவதாகவும் கூறுகின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
புற்றுநோய்க்கு தடுப்பூசி
கர்ப்பப்பை வாய் புற்றுநோயை வராமல் தடுக்கும் நோக்கில் பல்வேறு நாடுகளிலும் இளம்பெண்களுக்கு ஹெச்பிவி தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
oropharyngeal தொண்டைப் புற்றுநோயைத் தடுக்கும் திறனும் இந்தத் தடுப்பூசிக்கு இருக்கிறது என்பதற்கான மருத்துவ சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
இதுபோன்று 85% மேற்பட்ட பெண்களுக்கு ஹெச்பிவி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நாடுகளில், ஆண்களுக்கு மந்தை நோய் எதிர்ப்பு சக்தி (herd immunity) உருவாகியிருப்பதற்கான மருத்துவ ஆதாரங்களும் உள்ளன.
இதன் பயனாக வரும் காலங்களில் oropharyngeal புற்றுநோய்க்கு ஆளாவோரின் எண்ணிக்கை குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம் உயர்கல்வி, வேலை, தொழில் உள்ளிட்ட காரணங்களால் மனிதர்கள் சர்வதேச பயணம் மேற்கொள்வது இன்றைய நவீன உலகில் சாதாரண நிகழ்வாகிவிட்டது.
இதனால், 85 சதவீதத்துக்கும் மேலான பெண்களுக்கு HPV வைரஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ள நாடுகளில் மட்டுமே, தொண்டைப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மாறாக, குறைந்த எண்ணிக்கையிலான பெண்களுக்கு மட்டும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயைக்கான தடுப்பூசி செலுத்துப்படும் நாடுகளுக்கு இது பொருந்தாது எனவும் மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இதுபோன்ற நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும் ஒரு நபர், அந்த நாடுகளைச் சேர்ந்த இளம்பெண்களுடன் உடலுறவு வைத்துக் கொண்டால், அப்போது பாலியல்ரீதியாக அவருக்கு ஹெச்பிவி வைரஸ் பரவும் என்றும், அதன் விளைவாக அந்த நபருக்கு தொண்டைப் புற்றுநோய் வரலாம் எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
சான்றாக, 2020ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி, அமெரிக்காவில் 13 -15 வயக்கு உட்பட்ட பதின்பருவ சிறுமிகளில் 54.3% பேர் மட்டுமே இரண்டு அல்லது மூன்று டோஸ்கள் ஹெச்பிவி வைரஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
இளைஞர்களுக்கும் தடுப்பூசி
நாளுக்கு நாள் அதிகமாகிவரும் சர்வதேச பயணங்கள், இளம் பெண்களுக்கு ஹெச்பிவி தடுப்பூசி செலுத்தப்படுவதில் உலக நாடுகளுக்கு இடையே ஒரே மாதிரியான செயல் திட்டம் இல்லாதது போன்றவை ஆண்களுக்கு தொண்டைப் புற்றுநோயை உண்டாக்கும் முக்கியக் காரணிகளாக உள்ளன.
இதைக் கருத்தில் கொண்டு அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் தங்களது ஹெச்பிவி தடுப்பூசி செல்லும் திட்டத்தை இளைஞர்களுக்கும் விரிவுப்படுத்த உள்ளன. இந்நாடுகளின் தேசிய தடுப்பூசி கொள்கையில் இதற்கான பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.
ஆனால், ஆண்களுக்கு ஹெச்பிவி தடுப்பூசி செலுத்தும் பரிந்துரைக்கு உலக அளவில் எதிர்ப்பும் இருக்கதான் செய்கிறது. இதுபோன்ற தடுப்பு முறைகள் பாலியல் தொழிலை மறைமுகமாக ஊக்குவிக்கும் என்பதே இந்த எதிர்ப்புக்கு பிரதான காரணம். மேலும் ஹெச்பிவி தடுப்பூசி எந்த அளவுக்குப் பாதுகாப்பானது என்பது குறித்தும் எதிர்ப்பாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இப்படி பாலியல்ரீதியான உறவுகளால் புற்றுநோய் ஏற்படாமல் இருக்க, தடுப்பூசி செலுத்த ஒருபுறம் ஆதரவும் எதிர்ப்பும் இருந்து வருகிறது.
மறுபுறம், பிறப்புறுப்பு வழியாக உடலுறவு கொள்வதால் பாலியல் நோய்களுக்கு ஆளாவதைத் தவிர்க்கும் நோக்கில் இளைஞர்கள் வாய்வழி உறவில் ஈடுபடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்த பாலியல் உறவிலும் தொண்டைப் புற்றுநோய் உண்டாகும் அபாயம் இருப்பதை அவர்கள் அறியாமல் இருப்பதுதான் முரண்பாடு என்று கூறுகின்றன அந்த ஆய்வுகள்.
குறிச்சொற்கள் #பாலியல் #உடல்நலம் #புற்றுநோய் #தொண்டை_புற்றுநோய் |
பிபிசி தமிழ்
|
|