புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Topics tagged under பாம்புக்கடி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பாம்புக்கடி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பாம்புக்கடி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
69 Posts - 36%
heezulia
Topics tagged under பாம்புக்கடி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பாம்புக்கடி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பாம்புக்கடி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
65 Posts - 34%
Dr.S.Soundarapandian
Topics tagged under பாம்புக்கடி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பாம்புக்கடி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பாம்புக்கடி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
34 Posts - 18%
T.N.Balasubramanian
Topics tagged under பாம்புக்கடி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பாம்புக்கடி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பாம்புக்கடி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
9 Posts - 5%
mohamed nizamudeen
Topics tagged under பாம்புக்கடி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பாம்புக்கடி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பாம்புக்கடி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
5 Posts - 3%
ayyamperumal
Topics tagged under பாம்புக்கடி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பாம்புக்கடி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பாம்புக்கடி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
Topics tagged under பாம்புக்கடி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பாம்புக்கடி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பாம்புக்கடி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
Topics tagged under பாம்புக்கடி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பாம்புக்கடி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பாம்புக்கடி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 1%
manikavi
Topics tagged under பாம்புக்கடி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பாம்புக்கடி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பாம்புக்கடி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 1%
prajai
Topics tagged under பாம்புக்கடி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பாம்புக்கடி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பாம்புக்கடி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
Topics tagged under பாம்புக்கடி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பாம்புக்கடி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பாம்புக்கடி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
320 Posts - 48%
heezulia
Topics tagged under பாம்புக்கடி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பாம்புக்கடி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பாம்புக்கடி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
212 Posts - 32%
Dr.S.Soundarapandian
Topics tagged under பாம்புக்கடி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பாம்புக்கடி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பாம்புக்கடி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
64 Posts - 10%
T.N.Balasubramanian
Topics tagged under பாம்புக்கடி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பாம்புக்கடி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பாம்புக்கடி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
Topics tagged under பாம்புக்கடி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பாம்புக்கடி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பாம்புக்கடி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
23 Posts - 3%
prajai
Topics tagged under பாம்புக்கடி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பாம்புக்கடி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பாம்புக்கடி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
Topics tagged under பாம்புக்கடி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பாம்புக்கடி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பாம்புக்கடி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
Topics tagged under பாம்புக்கடி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பாம்புக்கடி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பாம்புக்கடி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
Topics tagged under பாம்புக்கடி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பாம்புக்கடி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பாம்புக்கடி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
Topics tagged under பாம்புக்கடி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பாம்புக்கடி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பாம்புக்கடி on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Search found 2 matches for பாம்புக்கடி

Topics tagged under பாம்புக்கடி on ஈகரை தமிழ் களஞ்சியம் Snakebite

பாம்பு கடித்தால் உடனே நாம் என்ன செய்ய வேண்டும்? பாம்புகளால் பழிவாங்க முடியுமா? பாம்பு கடிக்கான சிகிச்சை முறைகள் என்ன?


இந்தக் கேள்விகள் நம்மில் பலருக்கும் பல்வேறு சூழ்நிலைகளில் ஏற்பட்டிருக்கும். #பாம்புகள் என்றதும் நமக்குள் கலவையான உணர்வுகள் எழுவதுண்டு. இருப்பினும் பாம்புக்கடியை நாம் இன்னும் எச்சரிக்கையின்மையுடனே அணுகுகிறோம். இது எந்த அளவுக்குச் சரி?

பாம்புக் கடியால் ஒவ்வோர் ஆண்டும் உலக அளவில் ஏற்படுகின்ற உயிரிழப்பில் பாதி எண்ணிக்கை இந்தியாவில் பதிவாகிறது.

2017ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பு, பாம்புக்கடியை புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்களின் பட்டியலில் முன்னிலைப்படுத்தியுள்ளது.

இதற்குச் சில முக்கியமான காரணங்கள் உண்டு. #பாம்புக்கடி உயிரிழப்புகளைப் பற்றிய போதுமான தரவுகள் இல்லாமை, பாம்புக்கடியால் பாதிக்கப்பட்டவர்வகள் பெரும்பாலும் கட்டுக்கதைகளை நம்பி தவறான சிகிச்சைகளை எடுப்பது, நஞ்சுமுறி மருந்துகளின் பற்றாக்குறை என பாம்புக்கடி விவகாரத்தில் இதுபோன்று பல சவால்கள் உண்டு.

இந்தியாவில் பாம்புக்கடியால் எத்தனை பேர் உயிரிழக்கின்றனர்?


ஒவ்வோர் ஆண்டும் உலகளவில் 50 லட்சம் பேர் பாம்புக்கடியை எதிர்கொள்வதாகவும் அதில் கிட்டத்தட்ட 27 லட்சம் பேர் நச்சுப்பாம்புகளின் கடியால் பாதிக்கப்படுவதாகவும் உலக சுகாதார அமைப்பு மதிப்பிட்டுள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் 81,000 முதல் 1,38,000 பேர் வரை பாம்புக்கடியால் இறப்பதாகப் பல்வேறு அறிக்கைகள் மூலமாகத் தெரிய வந்துள்ளது.

பெரும்பாலான பாம்புக்கடிகள் பதிவு செய்யப்படுவதே இல்லை. ஏனெனில் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவம் அல்லாத சிகிச்சை முறையைத் தேடி செல்கிறார்கள் அல்லது போதுமான மருத்துவ வசதிகள் அவர்களுக்குக் கிடைப்பது இல்லை.

இந்தியாவில் 2000 முதல் 2019ஆம் ஆண்டு வரை 12 லட்சம் பேர் பாம்புக்கடியால் உயிரிழந்திருப்பதாக 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியான ஓர் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. அதாவது சராசரியாக ஒவ்வோர் ஆண்டும் 58,000 உயிர்கள் பாம்புக்கடியால் பறிபோகின்றன.

பாம்புகள் பழிவாங்குமா?


பாம்புகள் பழிவாங்குவதற்காக மனிதர்களைத் தேடி வந்து கொல்லும் என்று பல இந்திய சினிமாக்களில் காட்டப்பட்டது உண்டு. இதுவொரு மோசமான கட்டுக்கதை என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முக்கியமாக ஒருவர் ஒரு நாகப்பாம்பை அடித்துக் கொன்றுவிட்டால் அந்தப் பாம்பின் துணை அடித்துக் கொன்றவரைத் தேடி வந்து பழிவாங்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே நிலவுகிறது. ஆனால் இது மோசமான கட்டுக்கதை என்கிறார் கஜ்பி. இதுபோன்ற சில மூட நம்பிக்கைகளும் நிறுவப்படாத மருத்துவ சிகிச்சைகளும் இந்தியாவின் சில பகுதிகளில் இன்னும் கடைபிடிக்கப்படுகின்றன.

கடிபட்ட இடங்களில் வாய் வைத்து உறிதல்


இந்தியாவின் சில இடங்களில் #பாம்பு கடித்தால் மருத்துவர்களைப் பார்க்காமல் மந்திரவாதிகளைப் பார்ப்பதுண்டு.

அது மட்டுமின்றி முதலுதவி செய்வதாக நினைத்து மந்திரங்களை ஓதுவது, நிறுவப்படாத மூலிகைகளைப் பயன்படுத்துவது போன்ற பழக்கங்களும் பரவலாக உண்டு.

பாம்பு கடித்த இடத்தை அறுத்துவிட்டு வாய் வைத்து உறிஞ்சி விஷத்தை எடுப்பதைப் போல் பல திரைப்படங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் நிச்சயமாக அப்படி செய்யக்கூடாது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்?


இந்தியாவில் பதிவாகும் பாம்புக்கடி எண்ணிக்கையில் 70% நஞ்சற்ற பாம்புகள், 30% நஞ்சுள்ள பாம்புகள் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பாம்பு கடித்த உடனே அருகிலுள்ள மருத்துவனைக்குச் செல்ல வேண்டும்.

மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன்னதாக வேறு ஏதேனும் உணவோ அல்லது மாற்று மருந்துகளையோ உட்கொள்ளக்கூடாது.

பாம்புக்கடிக்கு உள்ளானவர் தானாக நடந்தோ அல்லது வண்டியை ஓட்டி கொண்டோ மருத்துவமனைக்குப் போகக்கூடாது. அவசர ஊர்தியோ அல்லது வேறு விதமான வாகனத்திலோ பாதுகாப்பாகப் போகவேண்டும். பாம்பு கடிபட்ட இடத்தில் இருந்து காலனிகள், மோதிரம், நகைகள், இறுக்கமான ஆடைகள் இருந்தால் அதைக் கண்டிப்பாக அகற்ற வேண்டும்.

காயங்களைக் கழுவுதல், கீறி விடுதல், துணியை வைத்து இறுக்கமாகக் கட்டுதல், ஏதேனும் மூலிகைகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றைச் செய்வதால் ஏற்படும் நன்மைகளைவிட தீமைகள்தான் அதிகம்.

குறிப்பாக, பாம்பு கடித்த உடனே ஒரு நபர் மாற்று மருத்துவம் என்ற பெயரில் நேரத்தை வீணடிக்காமல் உடனே மருத்துவமனைக்குச் செல்வதுதான் சரியான வழிமுறை என்று நிபுணர்கள் உறுதியாகத் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவில் போதுமான நஞ்சுமுறி மருந்துகள் உள்ளனவா?


முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்று சொல்வதைப் போல் பாம்பின் நஞ்சை முறிப்பதற்கும் அதன் நஞ்சுதான் பயன்படுத்தப்படுகிறது. பாம்புகளில் இருந்து எடுக்கப்படும் நஞ்சை வைத்துதான் நஞ்சுமுறி மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.

1895ஆம் ஆண்டு, இந்திய நாகப்பாம்பின் நஞ்சுக்கு எதிராக பிரெஞ்சு மருத்துவர் ஆல்பர்ட் கால்மேட் முதல் நஞ்சுமுறி மருந்தை உருவாக்கினார்.

ஆனால், இந்தியாவில் நஞ்சுமுறி மருந்துகளைப் பயன்படுத்துவதில் இரண்டு முக்கியமான சவால்கள் இருப்பதாக மருத்துவர் ஷர்மா தெரிவிக்கிறார்.

மருந்துகள் கிடைப்பதில் தட்டுப்பாடு இருப்பதகாவும், நஞ்சுமுறி மருந்துகளை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டு போவதில் பல சிக்கல்கள் இருப்பதாகவும் மருத்துவர் ஷர்மா கூறுகிறார்.

இதுமட்டும் அல்லாமல், நோயாளிக்கு எவ்வளவு மருந்து கொடுக்கவேண்டும் என்பது போன்ற விஷயங்களில் போதுமான விழிப்புணர்வு இல்லை. மருத்துவ ஊழியர்களுக்கு முறையான பயிற்சி வழங்கப்படவில்லை என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முக்கியமான நான்கு பாம்புகள்


நீங்கள் பார்க்கும் அனைத்துப் பாம்புகளுக்கும் மனிதர்களைக் காவு வாங்கும் அளவுக்கு வீரியமிக்க நஞ்சு இருக்காது.

இந்தியாவில் கிட்டத்தட்ட 300 பாம்பு வகைகள் உள்ளன. அதில் 60 வகையான பாம்புகள் தான் நஞ்சுள்ளவை. அதில் குறிப்பாக நான்கு பாம்புகள்தான் பெரும்பாலான பாதிப்புகளுக்குக் காரணம்.


கண்ணாடி விரியன்


இந்தியாவில் காணப்படும் மிகவும் ஆபத்தான பாம்புகளில் கண்ணாடி விரியனும் ஒன்று. கண்ணாடி விரியனின் தலை முக்கோண வடிவத்தில் காணப்படும். மேலும் 'வி' வடிவத்திலான வெள்ளைநிறக் கோடும் காணப்படும். கண்ணாடி விரியன் பொதுவாக புல் மற்றும் புதர் நிறைந்த பகுதிகளில் காணப்படும்.

கட்டு விரியன்


அடுத்ததாக கட்டு விரியன் பாம்பு. இந்தப் பாம்பு பொதுவாக இரவு நேரத்தில்தான் அதிகமாகத் தென்படும். சற்று கறுமை நிறமான இதன் உடம்பில் இருக்கும் வெள்ளை நிற பட்டைகள் மூலம் இதை அடையாளப்படுத்தலாம்.

இந்திய நாகம்


#நாகப்பாம்பு வெவ்வேறு வகையான நிறங்கள் மற்றும் தகவமைப்புகளைக் கொண்டிருக்கும். காடுகள், சமவெளிகள், விவசாய நிலங்களில் இது பொதுவாகக் காணப்படும். மேலும், மக்கள் நெருக்கம் அதிகமான நகர்ப்புறங்களிலும் இதைப் பார்க்க முடியும்.

சுருட்டை விரியன்


இறுதியாக சுருட்டை விரியன். இதன் அளவு சிறியதாக இருந்தாலும் தாக்கும் திறன் மிகவும் அபாயகரமானது. விரியன் வகைப் பாம்புகளில் சுருட்டை விரியன் பொதுவாக வளர்ச்சியில் சிறிய அளவிலேயே காணப்படும். ஆனால், இதன் நஞ்சு மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

பாம்பு கடித்த உடனேயே பதற்றப்படாமல் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்வது சிறந்த முடிவாக இருக்கும். மொத்தத்தில் பாம்புகளிடம் இருந்து மக்களைக் காப்பாற்றவும் அதே நேரத்தில் பாம்புகளின் அழிவைக் கட்டுப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் தேவையாக உள்ளது.

பிபிசி தமிழ்
Topics tagged under பாம்புக்கடி on ஈகரை தமிழ் களஞ்சியம் JISUarl

முதலுதவி


விபத்து, காயம், உடல்நலக் குறைவு போன்ற பல்வேறு காரணங்களால் பாதிப்புக்குள்ளானவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்கு முன்னர் உடல்நிலையில் பின்னடைவோ, உயிரிழப்போ ஏற்படலாம். சில நேரங்களில் பாதிப்பின் தீவிரம் அதிகமாகலாம். அது போன்ற நேரங்களில் உடல்நலத்தில் ஏற்படும் பின்னடைவைத் தள்ளிப்போடவோ, தடுக்கவோ பின்பற்றப்படும் மருத்துவ உதவிதான் ‘முதலுதவி.’ தக்க தருணத்தில் செய்யப்படும் முதலுதவி, உயிரைக் காப்பாற்றும். பல நேரங்களில் தீவிர பாதிப்புகள் ஏற்படாமலும் ரத்த இழப்பு அதிகரிக்காமலும் தடுக்கும்.


ABC - A - Airway, B - Breathing, C - Circulation


உயிரைக் காப்பாற்றும் முதலுதவியில் `ஏபிசி’ என்ற கருத்தாக்கம் பின்பற்றப்படுகிறது. மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் மத்தியில் பயன்படுத்தப்படும் கருத்தாக்கம் என்றாலும், பொதுமக்களும் இதைப் பின்பற்றலாம்.


Airway: மயக்கமோ, மூச்சுத்திணறலோ ஏற்பட்டால் சம்பந்தப்பட்டவர்களைச் சுற்றி கூட்டம் போடாமல் காற்றோட்டத்தை ஏற்படுத்துவது; வீடாக இருந்தால், ஜன்னலைத் திறந்து காற்று வருவதற்கு வழிசெய்வது ‘ஏர்வே.’

Breathing: விபத்தில் அடிபட்டு, முகம் தரையில்படும் நிலையில் மயக்கத்திலிருப்பவர்கள், வாந்தியெடுத்த நிலையில் குப்புற விழுந்து மயங்கியநிலையில் இருப்பவர்களுக்கு மூச்சுக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு சுவாசிப்பதில் பிரச்னை ஏற்படும். அவர்களை ஒருக்களித்துப் படுக்கவைத்தால், மூச்சுக்குழாயில் ஏற்பட்டிருக்கும் அடைப்பு நீங்கி, இயல்பாக சுவாசிப்பார்கள். ஆஸ்துமா நோயாளிகள், இதய நோயாளிகளுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு கீழே விழும்போது அவர்கள் தலையைச் சற்று உயர்த்திப் பிடித்தால் இயல்பாக சுவாசிப்பார்கள்.

Circulation: காயம்பட்ட இடத்தில் ஏற்படும் ரத்தக்கசிவை நிறுத்துவது. விபத்துக்குள்ளாகிக் காயம்படும்போதோ, விளையாடும்போது தலை மற்றும் தாடைப் பகுதியில் அடிபடும்போதோ அல்லது கத்தி, அரிவாள்மணை கீறும்போதோ காயம் ஏற்பட்டு ரத்தப்போக்கு அதிகமாக ஏற்படும்.

முகம் மற்றும் கைகளில் இயல்பாகவே ரத்த ஓட்டம் அதிகமாகக் காணப்படுவதால், காயம்படும்போது அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்படும். அப்போது ரத்தப்போக்கு ஏற்பட்ட இடத்தில் சுத்தமான துணியை வைத்து மிதமாக அழுத்திப் பிடிக்க வேண்டும். அடிபட்ட இடத்தைச் சற்று உயர்த்திய நிலையில் வைக்க வேண்டும். இதனால் ரத்தப்போக்கு விரைவில் நிற்க வாய்ப்புள்ளது.

Cardiopulmonary Resuscitation - CPR


நின்றுபோன இதயத்துடிப்பை மீட்கச் செய்யும் முதலுதவிதான் `சி.பி.ஆர்’ எனப்படும் ‘கார்டியோபல்மோனரி ரிசசிட்டேஷன்’ (Cardiopulmonary Resuscitation - CPR). மாரடைப்பு ஏற்பட்டோ அல்லது மின்சாரம் பாய்ந்து ஷாக் அடித்தோ ஒருவர் மயங்கி விழுந்தால், முதலில் அவருக்கு சுவாசம் இருக்கிறதா என்று பரிசோதிக்க வேண்டும்.

வயிறு, நெஞ்சுப் பகுதியில் அசைவிருந்தால் மூச்சு இருக்கிறது என்று பொருள். நாடித்துடிப்பு இருக்கிறதா என்பதைக் கழுத்தின் பக்கவாட்டில் இருக்கும் பெரிய ரத்தக்குழாயில் கைவைத்துப் பரிசோதிக்க வேண்டும். இரண்டு இடங்களிலும் அசைவு, துடிப்பு இல்லையென்றால் இதயத்துடிப்பு நின்றுவிட்டது (Cardiac Arrest) என்று பொருள். அத்தகைய சூழலில் முதலுதவி செய்யாவிட்டால் அவர்கள் உயிரிழக்க வாய்ப்புள்ளது. மயங்கி விழுந்து இதயத்துடிப்பு நின்றுவிட்டால், குறுகிய நேரத்தில் இதயத்தை மீண்டும் இயங்கவைக்க முதலுதவி செய்ய வேண்டியது அவசியம்.

இந்தச் செயல்முறையைச் செய்வதற்கு முன்னர் ஆம்புலன்ஸ் சேவைக்குத் தகவல் கொடுத்துவிட வேண்டும். அதன் பிறகு மயங்கியநிலையில் இருப்பவரின் நெஞ்சுப் பகுதியில் அழுத்தம் (Chest Compression) கொடுப்பதுதான் `சி.பி.ஆர்’ செயல்முறை. நடுநெஞ்சுப் பகுதியில் உள்ளங்கைக்கு மேல் மற்றொரு கையின் உள்ளங்கையை வைத்து, உடல் 5 செ.மீ அளவு உள்ளே அழுந்துமாறு அழுத்த வேண்டும். சௌகர்யப்பட்டால், சம்பந்தப்பட்டவரின் வாயோடு வாய்வைத்தும் மூச்சைக் கொடுக்கலாம்.

30 முறை நெஞ்சுப்பகுதியை அழுத்துவது, பிறகு வாய்வழியாக மூச்சைக் கொடுப்பது என இரண்டையும் மாற்றி மாற்றிச் செய்ய வேண்டும். இரண்டு முறை இவற்றைச் செய்து முடிக்க இரண்டு நிமிடங்கள் ஆகும். அதன் பிறகு, ‘நாடித்துடிப்பு இருக்கிறதா?’ என்று மீண்டும் கழுத்தில் கை வைத்துப் பரிசோதிக்க வேண்டும். நாடித்துடிப்பு இல்லையென்றால், மீண்டும் இதே முறையைப் பின்பற்ற வேண்டும். இதைச் செய்ய ஆரம்பிக்கும்போது அருகில் இருப்பவர்களை உதவிக்கு அழைக்க வேண்டும். ஒரே நபரால் தொடர்ந்து செய்ய முடியாது என்பதால், ஆம்புலன்ஸ் வரும்வரை இன்னொருவர் உதவியுடன் செய்யலாம்.

மாரடைப்பு


மாரடைப்பு ஏற்பட்டதும் தீவிர நெஞ்சுவலி வரும். சிலருக்கு நெஞ்செரிச்சல், நெஞ்சில் நெருடுவது போன்ற உணர்வு, மூச்சுத்திணறல் உள்ளிட்ட பல்வேறு அறிகுறிகள் தோன்றலாம். ரத்த அழுத்தம், புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள், ஏற்கெனவே புகைப்பழக்கத்தை நிறுத்தியவர்கள், சர்க்கரை நோயாளிகள் ஆகியோர் ‘ஹை ரிஸ்க்’ பட்டியலில் இருப்பவர்கள்.

அவர்களுக்கு நெஞ்சுவலி தொடர்பான அறிகுறிகள் பத்து நிமிடங்களுக்கு மேல் நீடித்தால், அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். இது போன்ற உடல்நலக் குறைபாடு இருப்பவர்கள் உணர்ச்சிவசப்பட்டு யாரிடமாவது வாக்குவாதம் செய்யும்போதோ, உடற்பயிற்சியில் ஈடுபடும்போதோ நெஞ்சுவலி ஏற்பட்டால், முதலில் அந்தச் செயலை நிறுத்த வேண்டும்.

அதன் பிறகு ஆஸ்பிரின் மாத்திரை அல்லது தண்ணீரில் கரைத்துக் குடிக்கும் டிஸ்பிரின் மாத்திரையை எடுத்துக்கொள்ள வேண்டும். இது ரத்தம் உறைவதைத் தடுக்கும் பணியைச் செய்யும். அதன் பிறகு உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். எவ்வளவு சீக்கிரம் மருத்துவமனைக்குச் செல்ல முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சென்றுவிட வேண்டும். தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் இதயத்தின் தசை செயலிழந்துகொண்டேயிருக்கும். மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் செல்வது நல்லது.

அப்போதுதான் உடல்நிலையைக் கண்காணித்துக்கொண்டே மருத்துவமனைக்குச் செல்ல முடியும். ஆம்புலன்ஸில் இருக்கும் அவசரகால மருத்துவ உதவியாளர்கள் வலிக்கான சிகிச்சைகளை அளிப்பார்கள். மேற்கூறிய ஆபத்தானவர்கள் பட்டியலில் இருப்பவர்களுக்கு நெஞ்சுப்பகுதியில் ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் வலி நிவாரணக் களிம்பு பூசுவது, வாய்வுத் தொந்தரவு என நினைத்து கஷாயம்வைத்துக் குடிப்பது என நேரத்தைக் கடத்தாமல், உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.

பக்கவாதம்


மாரடைப்பு, பக்கவாதம் இரண்டும் ‘ஹை ரிஸ்க்’ பட்டியலில் இருப்பதால், இவை இரண்டுக்குமான மூல காரணங்கள் ஒன்றாகவே இருக்கும்.

85 சதவிகித பக்கவாதம், மூளையின் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படுவதால் வருகிறது. மீதமுள்ள 15 சதவிகிதம், மூளையின் ரத்தக்குழாய் வெடிப்பது, ரத்தக்குழாயில் ரத்தம் கசிவதால் ஏற்படுகிறது. 10, 15 வருடங்களுக்கு முன்னர் நவீன சிகிச்சைகள் இல்லாமலிருந்தன.

ரத்தம் உறையாமலிருக்க ஆஸ்பிரின் மாத்திரை, மேற்கொண்டு வேறு பிரச்னைகள் ஏற்படாமலிருக்க ஆதரவு சிகிச்சை, பிறகு பிசியோதெரபி பயிற்சி ஆகியவை மட்டுமே சிகிச்சையாக இருந்தன. ஆனால் இன்று, பக்கவாதத்துக்கான சிகிச்சை முறைகள் மேம்பட்டிருக்கின்றன. மூளையில் ரத்த ஓட்டத்தைச் சீர்படுத்தும் சிகிச்சை முறைகள் வந்துவிட்டன.

கைகால் இயங்காதது, மரத்துப் போவது போன்ற நிலை, முகம் கோணலாவதுபோல இருப்பது, பேசுவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். ரத்த ஓட்டம் தடைப்பட்டு ஆக்சிஜன் செல்லாமல் இருந்தால், மூளை செல்களால் நீண்ட நேரம் இயங்க முடியாமல் போனால் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

எனவே, தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் பாதிப்பு அதிகரிக்கும். மாரடைப்பு என்றால் `ஈசிஜி’ மட்டுமே எடுத்துவிட்டு, பெரும்பாலும் 15 நிமிடங்களில் சிகிச்சையைத் தொடரலாம். ஆனால், பக்கவாதத்துக்கு சி.டி ஸ்கேன் எடுத்துப் பார்த்து பாதிப்பை ஆராய்ந்த பிறகே சிகிச்சையைத் தொடங்க முடியும். இந்த நடைமுறைகளை முடிக்க எப்படியும் 45 நிமிடங்கள் ஆகிவிடும். எனவே, பக்கவாதத்தைப் பொறுத்தவரை, எவ்வளவு சீக்கிரம் நோயாளி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுகிறார் என்பதுதான் முதலுதவி.

சாலை விபத்து


பொதுவாகவே சாலை விபத்தின்போது காயங்களின் தீவிரம் குறைத்தே மதிப்பிடப்படுகிறது. ‘காலில் சுளுக்கு, தலையில் லேசான வலி’ என்று அவற்றை அலட்சியப்படுத்துவதால், பின்னாளில் பலருக்குத் தீவிர பாதிப்புகள் ஏற்படுகின்றன. காயங்களை மட்டும் வைத்து விபத்தின் தீவிரத்தை கணிக்க முடியாது. உள்ளுறுப்புகளிலும் காயம் ஏற்பட்டிருக்கலாம்.

அதனால் விபத்தில் சிக்கி, சிறிய காயங்கள் ஏற்பட்டால்கூட மருத்துவமனையில் பரிசோதிப்பது நல்லது. விபத்துகளில் சிக்கி காயமடைந்தவர்களுக்குப் பல்வேறு துறை நிபுணர்கள் இணைந்து சிகிச்சையளிக்க வேண்டியிருக்கும். அதனால் விபத்தில் சிக்கியவர்களை விபத்துகளைக் கையாளும் சரியான மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டியது அவசியம்.

விபத்தில் சிக்கியவர்களை மீட்கும்போது அவர்களை மிகவும் மென்மையாகக் கையாள வேண்டும். பொதுவாக சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் அடிபட்டவர்களின் கைகால்களை இஷ்டம்போலப் பிடித்து இழுத்து, அவர்களை மிகவும் வலிமையாகக் கையாள்வார்கள். இது மிகவும் தவறான செயல்.

சாலை விபத்தில் சிக்கியவர்களை நிதானமாகக் கையாளவில்லையென்றால், ரத்தப்போக்கு பல மடங்கு அதிகரிக்கும். குறுக்கெலும்பு உடைந்தவர்களுக்கு இரண்டு லிட்டர்வரை ரத்தம் வெளியேற வாய்ப்பிருக்கிறது.

விபத்தில் சிக்கியவர் மயங்கியநிலையில் இருந்தால், மூச்சுக்குழாயில் அடைப்பு ஏற்படாமலிருக்க, தாடைப் பகுதியை உயர்த்தி, வாயைத் திறந்தநிலையில் வைத்திருக்க வேண்டும். அடிபட்டவர்களின் தலை, கழுத்து, உடல் என மூன்றும் ஒரே நிலையில் இருக்குமாறு படுக்கவைக்க வேண்டும். கழுத்துப் பகுதியை அசைக்கக் கூடாது.

காயம்பட்ட இடத்தில் ரத்தம் அதிகமாக வெளியேறினால், கைக்குட்டை அல்லது சிறிய துணியால் அந்த இடத்தில் மிதமாக அழுத்திப் பிடிக்க வேண்டும். கைகால்களில் அடிபட்டு ரத்தம் வெளியேறினால் அதை நிறுத்த அவற்றைச் சற்று உயர்த்திப் பிடிக்கலாம். கழுத்து, கைகால் போன்ற இடங்களில் அடிபடாமல் நெஞ்சுப் பகுதியில் அடிபட்டு மூச்சுத்திணறல் ஏற்பட்டால், அவர்களை உட்காரவைக்க வேண்டும். கைகால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டால், அந்தப் பகுதி அசையாமலிருக்க அட்டை அல்லது மரக்கட்டையால் இரண்டு பக்கமும் தடுப்பு வைத்து, அவை நகராமல் கட்டுப் போட்டுவிட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

சாலை விபத்து அல்லது வேறு ஏதேனும் விபத்து ஏற்படும்போது உதவுவதற்கு யாரும் இல்லையென்றால், உடனடியாக ஆம்புலன்ஸ் சேவைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். பெரும்பாலானவர்கள் ஆம்புலன்ஸ் சேவையை அழைக்காமல் தங்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்து விஷயத்தைச் சொல்லிக்கொண்டிருப்பார்கள்.

கால் முறிவு போன்ற பிரச்னைகளின்போது அதிக வலி இருந்தால், தொடர்ந்து நடக்காமல் அதே இடத்தில் இருக்க வேண்டும். வேறு பகுதிகளில் அடிபட்டிருந்தால், அந்தப் பகுதிக்கு அதிக அசைவு கொடுக்காமல் இருக்க வேண்டும். மேலும் அடிபட வாய்ப்பிருக்கும் சூழல் நிலவினால், அந்த இடத்திலிருந்து பாதுகாப்பான பகுதிக்கு நகர்ந்து சென்றுவிட வேண்டும். அருகில் உதவிக்கு யாரேனும் இல்லையென்றால், சத்தம் எழுப்பி உதவிக்கு ஆட்களை வரவைத்துக்கொள்வது நல்லது.

தீக்காயம்


ஒருவர் உடலில் தீப்பற்றி எரிகிறது என்றால், அடர்த்தியான கம்பளி அல்லது போர்வையைப் போர்த்தி அவர்களைத் தரையில் போட்டு உருட்டி தீயை அணைக்க வேண்டும். பருத்தித் துணி அல்லாத வேறு ரக உடையை அணிந்திருந்தால் அதை அகற்றிவிட வேண்டும். காரணம், பருத்தித் துணிகளைத் தவிர பிற ரக உடைகளுக்கு வெப்பத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் தன்மை இருக்கும். நெருப்பு அணைந்தால்கூட உடையிலிருக்கும் வெப்பம் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கும்.

தீக்காயம் பெரிதாக இருந்தாலோ, முகத்தில் காயம் ஏற்பட்டாலோ உடனடியாக மருத்துவமனைக்குச் செல்வது நல்லது. காரணம், நச்சுப்புகை, தீ ஆகியவற்றால் உதடு, நாக்கு ஆகிய இடங்களில் வீக்கமோ, காயமோ ஏற்படலாம். சூடான காற்று வாய்வழியாக உள்ளே சென்று மூச்சுக்குழாயில் அடைப்பை ஏற்படுத்தலாம். இவை ‘ஹை ரிஸ்க்’ பட்டியலில் வரும் பாதிப்பு என்பதால், காயம்பட்டவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.

கைகால்களில் சிறிய காயம் ஏற்பட்டிருந்தால், குளிர்ந்த குழாய் நீரில் காயம்பட்ட பகுதியைக் கழுவ வேண்டும். அந்தப் பகுதியைச் சுத்தமான, மென்மையான பருத்தித் துணி (Gauze) அல்லது பிளாஸ்டிக் ஷீட் (Cling Film) மூலம் மூட வேண்டும். தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் நரம்புகள் வெளியே தெரிந்துகொண்டிருக்கும் என்பதால், அதில் காற்று படும்போது வலி அதிகரிக்கும். ஏனென்றால், தீக்காயம் அடைந்தவர்களுக்கு வலிதான் பெரிய பிரச்னையாக இருக்கும்.

அந்த நேரத்தில் வலிக்கு மாத்திரை சாப்பிட வேண்டும் என்று பலருக்குத் தோன்றாது. வலி அதிகமாக இருந்தால் பாராசிட்டமால் போன்ற ஏதாவது ஒரு மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம். சிறு வயதில் தடுப்பூசி போடாதவர்கள், அண்மையில் டெட்டனஸ் டாக்ஸைடு (டி.டி) தடுப்பூசி போடாதவர்கள் மருத்துவமனைக்குச் சென்று ஊசி போட்டுக்கொள்ள வேண்டும். தீக்காயம் ஏற்பட்ட இரண்டு, மூன்று நாள்களுக்குப் பிறகுதான் நோய்த்தொற்று உருவாகும் என்பதால், தீக்காயம் ஏற்பட்டதும் களிம்பு பூச வேண்டும் என்ற அவசியம் இல்லை.

பட்டாசு விபத்துகள்


பொதுவாக காயத்தின் அளவைத்தான் கவனிப்போமே தவிர, அதன் ஆழத்தைப் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டோம். பட்டாசு விபத்துகள் ஆழமான காயத்தை ஏற்படுத்தக்கூடியவை. அதனால் காயம் குணமாக, தாமதமாகும். தவிர, பட்டாசு வெடித்த சத்தத்தால் காது ஜவ்வு பாதிக்கப்படலாம். அதனால் பட்டாசு விபத்து ஏற்பட்டால், குழாய் நீரில் காயத்தைக் கழுவிவிட்டு உடனடியாக மருத்துவமனைக்குச் செல்வது நல்லது.

பட்டாசு விபத்து உட்பட தீக்காயம் பட்டவர்கள்மீது வாழை இலையைப் போர்த்துவது, காயத்தில் மஞ்சள் பூசுவது ஆகியவை மருத்துவரீதியாக நிரூபிக்கப்படாத தற்காலிக நிவாரணங்கள். எனவே, இவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும். மாவு, பேனா மை, மணல் போன்ற பொருள்களைத் தீக்காயத்தின் மீது போடக் கூடாது. இவற்றைச் செய்வதால், நோய்த்தொற்று அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.

தற்கொலை


விஷம் அருந்தியதால் மயக்கத்தில் இருப்பவர்களுக்கு மூச்சடைப்பு ஏற்படாமலிருக்க, அவர்களை ஒருக்களித்துப் படுக்கவைக்க வேண்டும். அதேநிலையிலேயே உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். வாயில் விரலைவிட்டு வாந்தியெடுக்கவைப்பது, உப்புத் தண்ணீர் அல்லது புளியை நீரில் கரைத்துக் குடிக்கக் கொடுப்பதெல்லாம் மிகவும் ஆபத்தானவை.

விஷம் அருந்தியதால் அரை மயக்கத்தில் இருப்பவர்களுக்கு இதையெல்லாம் குடிக்கக் கொடுத்தால் மூச்சடைப்பு ஏற்பட்டு உயிரிழக்க வாய்ப்பிருக்கிறது. எந்த மருந்தைக் குடித்தார்கள் என்பதைக் கண்டுபிடித்து, அந்த மருந்து பாட்டிலை கூடவே எடுத்துச் செல்வது அல்லது அந்த பாட்டிலை செல்போனில் படம் பிடித்துச் செல்வது முக்கியம். எந்த மருந்தைக் குடித்தார் என்று தெரிந்தால்தான் அதற்கேற்ற சிகிச்சைகளை உடனடியாக மருத்துவர்களால் அளிக்க முடியும்.

தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்படுபவர்களின் கழுத்து எலும்பில் முறிவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதனால் தூக்குப்போட்டநிலையில் உயிருடன் காப்பாற்றப்பட்டால், அவர்களது கழுத்து தொங்காதவாறு அவர்களைப் படுக்கவைக்க வேண்டும்.

கழுத்து பிசகியிருந்தாலோ, முறிந்திருந்தாலோ பாதிப்பு தீவிரமடையாமலிருக்க சமதளத்தில் படுக்கவைக்க வேண்டும். மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு செல்லும்போதும் கழுத்து, தலை, உடல் எல்லாம் ஒரே கோட்டில் இருக்குமாறு வைக்க வேண்டும். கழுத்துப் பகுதிக்கு அதிக இயக்கம் கொடுக்காமல் அவர்களைக் கையாள வேண்டும்.

மணிக்கட்டில் உள்ள நரம்பை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயலும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மன அழுத்தம் காரணமாக இதுபோலத் தன்னைத் தானே வருத்திக்கொள்வது அதிக அளவில் நடக்கிறது. வீட்டிலிருக்கும்போது இது போன்ற செயலில் ஈடுபட்டால், மணிக்கட்டில் இருக்கும் பெருந்தமனியையே அறுத்தாலும்கூட சுத்தமான துணியைக்கொண்டு அந்த இடத்தில் அழுத்திப் பிடித்தால், ரத்தக்கசிவை நிறுத்திவிடலாம். கையைச் சற்று உயர்த்திவைக்க வேண்டும்.

பிறகு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும். மன அழுத்தத்துக்கு ஆளாகி தற்கொலைக்கு முயல்பவர்களைத் தடுத்து, அரவணைக்கும் சூழலை ஏற்படுத்த வேண்டும். தொழில்முறை ஆலோசகர்கள் மூலம் தேவையான ஆலோசனைகளை அளிக்க வேண்டும்.

சமையலறை விபத்துகள்


சமையலறையில் கத்தி அல்லது அரிவாள்மணையைப் பயன்படுத்தும்போது விரல் வெட்டுப்பட்டுவிட்டாலோ அல்லது மிக்ஸியில் விரல் சிக்கி, காயம் ஏற்பட்டாலோ ஓடும் நீரில் காயம்பட்ட இடத்தை நன்றாகக் கழுவ வேண்டும். பிறகு சுத்தமான ஒரு துணியை காயம்பட்ட இடத்தில்வைத்து, மிதமான அழுத்தம் கொடுத்துப் பிடிக்க வேண்டும். கையைச் சற்று உயர்த்தியநிலையில் வைத்திருக்க வேண்டும்.

அப்போது அந்தப் பகுதியில் ரத்த ஓட்டம் குறைந்து, ரத்தக்கசிவு நின்றுவிடும். பிறகு தேவைப்பட்டால் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். ரத்தத்தை நிறுத்துவதற்காக சுண்ணாம்பு, காபித்தூள், மஞ்சள்தூள் போன்றவற்றைப் பூசக் கூடாது.

சமையல் செய்யும்போது எண்ணெய் தெறித்து கொப்புளங்கள் ஏற்பட்டால், காயத்தை நீரில் கழுவிவிட்டு அதில் மெல்லிய பிளாஸ்டிக் ஷீட் (Cling Film) வைத்து மூட வேண்டும். கொப்புளங்களைக் குத்தி உடைக்கக் கூடாது. சில மணி நேரத்தில் அல்லது ஒரு நாளில் அந்தக் கொப்புளங்கள் தாமாகவே அமிழ்ந்துவிடும். கொப்புளத்தின் மேல் காணப்படும் சருமம்தான் அந்தக் காயத்துக்குச் சிறந்த ‘டிரெஸ்ஸிங்’ ஆகச் செயல்படும்.

அதைக் குத்தி உடைத்துவிட்டால், நோய்த்தொற்றின் அளவு அதிகரிக்கும். பெரிய கொப்புளமாக இருந்தால் மருத்துவமனையில் மருத்துவர்கள் அதை அகற்றும் செய்முறையைச் செய்வார்கள். கொப்புளங்களில் உடனே களிம்பு எதுவும் போட வேண்டும் என்ற அவசியமில்லை. காயத்தில் நோய்த்தொற்று ஏற்பட்டால், மருத்துவரிடம் சிகிச்சை பெறலாம். சிறிய காயங்கள் என்றால் தாமாகவே ஆறிவிடும்.

நகம் பெயர்தல்


காயம் எதுவும் இல்லை, ரத்தக்கசிவு இல்லாமல் வெறும் நகம் மட்டும் பெயர்ந்திருந்தால், அந்த இடத்தில் அரைகுறையாக இருக்கும் நகத்தை நகவெட்டி மூலம் வெட்டி அகற்றிவிட்டால், நகம் மீண்டும் வளரத் தொடங்கிவிடும்.

ஆனால் நகத்துக்கு அடியில் ரத்த உறைவு இருந்தால், மருத்துவமனைக்குச் செல்வதே நல்லது. அங்கே நகத்துக்குக் கீழே உறைந்திருக்கும் ரத்தத்தை மட்டும் அகற்ற வேண்டுமா, நகத்தையும் சேர்த்து அகற்ற வேண்டுமா என்று மருத்துவர்கள் பரிசோதிப்பார்கள். நகத்துக்கு அடியில் காயம் ஏற்பட்டிருந்தால், நகத்தை அகற்றிவிட்டுத் தையல் போடுவார்கள். அதன் பிறகு பெரும்பாலும் நகம் வளரத் தொடங்கிவிடும்.

பாம்புக்கடி


பாம்பு கடித்தால் சில நேரங்களில் அது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. கடிபட்ட இடத்தை நன்றாகத் தண்ணீர் ஊற்றிக் கழுவிவிட்டு, அந்த இடத்தை அசையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

உதாரணமாக, பாம்பு காலில் கடித்திருந்தால், அந்தப் பகுதியில் ஓர் அட்டையையோ அல்லது மரக்கிளையையோ தடுப்பாகக் கொடுத்து, நகராமல் இருக்குமாறு வைத்துக் கட்ட வேண்டும். கடிபட்டதும் நடப்பது, ஓடுவது, காலை மடக்கி மடக்கி நீட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால், உடல் முழுவதும் விஷம் பரவிவிடும். கடிபட்ட இடத்துக்கு மேல் இறுக்கமாகக் கட்டுவது, அந்த இடத்தைக் கத்தியால் கீறி ரத்தத்தை உறிஞ்சித் துப்புவது போன்றவை தவறான செயல்கள்.

பூச்சிக்கடி


பூச்சிக்கடியால் மூச்சுத்திணறல், மயக்கம், உடல் முழுவதும் தடிப்பு ஏற்படுவது, அரிப்பு போன்ற அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். பூச்சிக்கடியால் ஓரிடத்தில் மட்டும் வீங்கியிருந்தால், அந்தப் பகுதியைத் தண்ணீரில் நன்றாகக் கழுவ வேண்டும். பிறகு அந்தப் பகுதியைச் சற்று உயர்த்திவைக்க வேண்டும். குளவி, வண்டு போன்றவை கடித்து, கடிவாயில் கொடுக்கு இருந்தால் அதனை எடுத்துவிட வேண்டும். வீக்கம் அதிகமாவது, கடிபட்ட பகுதி சிவந்துபோவது, வீக்கம் பரவுவது, அக்குளில் நெறிகட்டுவது மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தோன்றினால், மருத்துவரை அணுகி ஆன்டிபயாடிக் மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

தேள் கடி


பிற பூச்சிக்கடிகளைவிட தேள்கடி சற்று ஆபத்தானது. தேள் கடித்ததும் அதிகம் வியர்த்துப் போவது, மயிர்க்கூச்செறிவது, இதயத்துடிப்பு அதிகரிப்பது போன்ற அறிகுறிகள் ஏற்படும். அதனால் தாமதிக்காமல் மருத்துவமனைக்குச் செல்வது நல்லது. ‘வீட்டிலேயே பார்த்துக்கொள்ளலாம்’ என்று நேரத்தைக் கடத்தக் கூடாது. தேள் கடிக்கு மருத்துவமனையில் கண்காணிப்பில் வைத்துச் சிகிச்சையளிக்க வேண்டும்.

வாந்தி, வயிற்றுப்போக்கு, நீர்ச்சத்து இழப்பு


வாந்தி, வயிற்றுப்போக்கு அதிகமாக இருந்தால் உடலிலுள்ள நீர்ச்சத்து வெளியேறிக்கொண்டிருக்கிறது என்று பொருள். அது போன்ற சூழலில் நீர்ச்சத்தை உடலில் அதிகரிக்க வேண்டியது அவசியம். அதனால் உப்பு சர்க்கரைக் கரைசலை (ஓ.ஆர்.எஸ்) நோயாளிகளுக்குக் கொடுக்க வேண்டும்.

வாந்தி, வயிற்றுப்போக்கு தொடர்ந்தாலும், இந்தக் கரைசலை கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். ஒரே நேரத்தில் குடித்தால் மேலும் வாந்தி வர வாய்ப்பிருக்கிறது. அதனால் 50 மி.லி அளவில் பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை குடித்தால், அது உடலுக்குள் எளிதாகக் கிரகிக்கப்பட்டுவிடும். அதிக முறை வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும். வாந்தி, வயிற்றுப்போக்கை நிறுத்த, மருந்துக் கடைகளில் சுயமாக மருந்து, மாத்திரை வாங்கிச் சாப்பிடக் கூடாது. நீர்ச்சத்து இழப்புக்கும் ஓ.ஆர்.எஸ் கரைசல் சிறந்த தீர்வாக இருக்கும்.

ரத்தச் சர்க்கரை அளவு குறைதல்


சர்க்கரைநோய் இல்லாதவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்நிலை ஏற்படாது. சர்க்கரைநோயால் பாதிக்கப்படாதவர்கள், ‘காலையில் சாப்பிடவில்லை, சர்க்கரை அளவு குறைந்திருக்கும். அதனால்தான் மயக்கம் போட்டு விழுந்துவிட்டேன்’ என்று சொல்வது இயல்பானது அல்ல. வேறு ஏதோ காரணத்துக்காகத்தான் மயக்கம் போட்டிருப்பார்கள்.

ஆனாலும், சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும். மாத்திரையின் அளவை அதிகமாக எடுத்துக்கொண்டாலோ, மாத்திரை போட்டுவிட்டு சாப்பிடாமல் இருந்தாலோ, வேறு பிரச்னைகளுக்காக மாத்திரையைக் கூடுதலாக எடுத்துக்கொண்டாலோ வழக்கமாகச் சாப்பிடும் மாத்திரையை மருத்துவர் ஆலோசனையின்றி தானாகவே நிறுத்தினாலோ ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையலாம்.

அதிகமாக வியர்ப்பது, படபடப்பு, குழறிப் பேசுவது, வித்தியாசமாக நடந்துகொள்வது போன்ற அறிகுறிகள் இருக்கும். நிலைமை மோசமாகும்போது மயக்கம் அல்லது கோமாநிலைக்குச் சென்றுவிடுவார்கள். சர்க்கரை நோயாளிகள் வீட்டில் சர்க்கரையின் அளவைப் பரிசோதிக்கும் குளூக்கோமீட்டர் கருவியை வாங்கி வைத்துக்கொள்வது நல்லது. இது போன்று அடிக்கடி சர்க்கரையின் அளவு குறையும்நிலை ஏற்பட்டால் மருத்துவரை அணுகி, அவர்கள் எடுக்கும் சிகிச்சையை சரிப்படுத்த வேண்டும்.

ரத்தச் சர்க்கரையின் அளவு குறைந்து, மேற்கூறிய அறிகுறிகள் தென்பட்டால் சர்க்கரைத் தண்ணீர், சாக்லேட், இனிப்பு போன்றவற்றைக் கொடுக்கலாம். இவை சர்க்கரையின் அளவை உடனடியாக அதிகரிக்க உதவும். நோயாளி சாப்பிடும் அளவுக்குத் தெளிவாக இருந்தால் மட்டுமே கொடுக்க வேண்டும். மயக்கமானால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

குழந்தைகள், முதியோர்


குழந்தைகளுக்கு ஏதேனும் உடல்நலக் குறைவு ஏற்பட்டால், அது தீவிரமாகும்வரை வெளியே தெரியாது. தீவிர நோய்த்தொற்று ஏற்பட்டால், குழந்தைகளின் செயல்பாடுகளில் மாற்றம் தெரியும். சில குழந்தைகள் யாரிடமும் பேசாமலிருந்தாலோ, தூங்கிக்கொண்டே இருந்தாலோ, சிலருக்கு உணவு உட்கொள்வதில் பிரச்னை, வாந்தி எடுப்பது மற்றும் சிறுநீர் போகவில்லை என்றாலோ ஏதோ பிரச்னை இருக்கிறது என்று பொருள். அதனால் குழந்தைகள்நல மருத்துவர் அல்லது அவசரகால மருத்துவரிடம் உடனடியாகக் கூட்டிச் செல்வது நல்லது. வயதானவர்களும் கிட்டத்தட்ட குழந்தைகள் போன்றவர்கள்தான்.

தீவிர நோய்த்தொற்று, மாரடைப்பு, சர்க்கரை அளவு அதிகரித்தல், உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைவது போன்ற பிரச்னைகள் ஏற்படும். அதனால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் குழந்தைகள் மற்றும் முதியோரை உடனடியாக கவனித்து, அவர்களுக்குத் தேவையான முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் செல்ல வேண்டும். அதனால் எப்போதும் குழந்தைகள், முதியவர்கள்மீது பிரத்யேக கவனம் செலுத்த வேண்டும்.

ஆஸ்துமா


ஆஸ்துமா நோயாளிகளுக்குத் தங்களது பிரச்னையை அதிகரிக்கும் காரணங்கள் எவையெவை என்பது தெரிந்திருக்கும். காற்று மாசு, தீவிர உடற்பயிற்சி, விளையாட்டு, உணர்ச்சிவசப்படுதல் போன்றவை காரணங்களாக இருக்கலாம். பிரச்னைக்குக் காரணமான விஷயத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். வழக்கமாக இரண்டு முறை இன்ஹேலர் பயன்படுத்துபவர்கள், மூச்சுத்திணறல் அதிகரிக்கும்போது 4 முதல் 10வரைகூடப் பயன்படுத்தி மூச்சுத்திணறலைக் கட்டுப்படுத்தலாம்.

விளையாட்டு விபத்துகள்


விளையாட்டு வீரர்களுக்கு கைகாலில் அடிபட்டு எலும்புமுறிவு ஏற்பட்டிருந்தால், அந்த இடத்தில் மரப்பலகை, அட்டை என ஏதாவது ஒன்றைக்கொண்டு தடை ஏற்படுத்தி, அந்தப் பகுதி அசையாத வகையில் கட்டி, மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல வேண்டும். உடைந்த எலும்புகள் ஒன்றுடன் ஒன்று உரசுவது, நகர்வது போன்றவற்றால்தான் பாதிப்பு அதிகமாகி வலி அதிகரிக்கும். வலிக்கு ஏதேனும் மருந்து கொடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாம்.

வலிப்பு


நரம்பியல் பாதிப்பு மற்றும் வலிப்புநோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு, வாய்க்குள் அல்லது மலத்துவாரத்தில் வைப்பதற்கான மாத்திரைகளை மருத்துவர்கள் கொடுத்திருப்பார்கள். அது போன்ற நேரங்களில் அருகிலிருப்போர் அந்த மாத்திரையை உடனடியாகக் கொடுத்தால் வலிப்பு நின்றுவிடும். முதன்முறையாக ஒருவருக்கு வலிப்பு வருகிறது என்றால், அவரை எந்தப் பொருள்களும் இல்லாத இடத்துக்கு மாற்ற வேண்டும். அருகில் ஏதேனும் பொருள்கள் இருந்தால், அவற்றில் இடித்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

பிறகு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். வலிப்பு வந்து அவதிப்படுபவர்களுக்கு கையில் சாவிக்கொத்தைக் கொடுப்பது, உலோகங்களைக் கொடுப்பது எந்தவிதப் பயனையும் தராது.

பொன்னான நேரம்


விபத்தில் காயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற பிறகு உயிரிழப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்படலாம். அதற்குக் காரணம் ரத்த விரயம். விபத்தில் சிக்கியவர்களுக்கு ரத்தப்போக்கை நிறுத்துவதுடன் தேவையான அளவு ரத்தத்தை உடலில் செலுத்தி, மூச்சுத்திணறல் இருந்தால் விரைவாக அந்தக் குறைபாடு போக்கப்பட வேண்டும்.

இப்படி எந்த அளவுக்கு விரைவாக சிகிச்சையளிக்கப்படுகிறதோ அந்த அடிப்படையில்தான் ‘பொன்னான நேரம்’ (Golden Hour) என்ற கருத்தாக்கம் உருவாக்கப்பட்டது. எனவே பொன்னான நேரத்தை கருத்தில்கொள்வோம்... உயிர் காப்போம்!


குறிச்சொற்கள் #முதலுதவி #மாரடைப்பு #CPR #ABC #Cardiopulmonary_Resuscitation #பக்கவாதம் #சாலை_விபத்து #தீக்காயம் #பட்டாசு_விபத்துகள் #தற்கொலை #சமையலறை_விபத்துகள் #நகம்_பெயர்தல் #பாம்புக்கடி #வலிப்பு #விபத்துகள்

விகடன்

Back to top