ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் சொல்லித்தர வேண்டும்! - முதலிரவில் கணவனிடம் கேட்ட மனைவி

+6
ராஜு சரவணன்
யினியவன்
Muthumohamed
சிவா
krishnaamma
சாமி
10 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

தமிழ் சொல்லித்தர வேண்டும்! - முதலிரவில் கணவனிடம் கேட்ட மனைவி - Page 4 Empty தமிழ் சொல்லித்தர வேண்டும்! - முதலிரவில் கணவனிடம் கேட்ட மனைவி

Post by சாமி Wed Jun 12, 2013 9:51 am

First topic message reminder :

முதலிரவில் உனக்கு என்ன வேண்டும் என்று கணவன் கேட்டபோது மனைவி ”எனக்கு நீங்கள் தமிழ்சொல்லித்தர வேண்டும்”என்று கோரினாள். ”பொன்னையும் புடவையையும்தானே பெண்கள் கேட்பார்கள்?”என்று வியந்தார் கணவன். ”எனக்குப் பொன்னும் புடவையும் வேண்டுமளவுக்கு இருக்கிறது. மேலும் வேண்டுமென்றால் கேட்டதுமே வாங்கித்தர பெரியப்பா இருக்கிறார். என் விதிப்பயனால் தமிழறிஞராக நீங்கள் எனக்கு வாய்த்தீர்கள். எனக்குத் தமிழ்ஞானமே போதும்”என்றாள் மனைவி.

கணவன் அவருக்குத் தமிழ் கற்பிக்க ஆரம்பித்தார். ஆனால் அவரது அன்னைக்கு அது பிடிக்கவில்லை. ஆகவே இரவில் தனிமையில் சந்திக்கும்போது விரிவாக தமிழ்ப்பாடம் நடத்தலானார். முதலில் ஔவையார் பாடல்கள். பின்பு பெரியபுராணம். மனைவி இயற்கை அறிவு மிக்கவள் என்பது உடனடியாக கணவனுக்கு புரிந்தது.

‘நான் திருக்குறள் படித்தவன், ஆனால் பிடிவாதம் வன்மம் கோபம் போன்ற குணங்கள் என்னிடம் நிறைந்திருந்தன. என் குறள் கல்வி அவற்றைப் போக்கவில்லை. ஆனால் குறளைக் கற்காத மனைவி இயல்பாகவே அந்தத் தீய குணங்கள் இல்லாதவளாக இருந்தாள். அவளுக்குக் குறள் கற்பித்த எனக்கு அவளே குறளாக இருந்தாள். இல்வாழ்க்கை பற்றிக் குறள் சொல்வனவற்றை நான் அவளைக் கண்டே கற்றேன்’ என்கிறார் கணவன்.

மனைவியின் பெருமைகளைச் சொல்லிச் சொல்லிப் பூரிக்கிறார் கணவன். அவளது பொறுமை கணவனை பிரமிக்கச் செய்கிறது. அவ்வளவுபெரிய கூட்டுக்குடும்பத்தில் வந்துசேர்ந்த செல்லப்பெண் ஒருமுறை கூட சலித்துக்கொண்டதில்லை. இன்முகமன்றி எதையுமே எவருக்கும் காட்டியதில்லை. மாமியாருக்கும் அண்ணியருக்கும் அவளிடம் ஒருமுறைகூட சண்டை வந்ததில்லை. வீட்டில் இருந்த குழந்தைகள் அனைத்துமே அவளது பின்னால்தான் பூனைக்குப் பின்னால் குட்டிகள் போல சத்தம் போட்டுக்கொண்டே அலையும். அவள் இடுப்பிலும் ஒன்று உட்கார்ந்திருக்கும்.

அவர்களுக்குள் மோதல்களே நிகழவில்லை. மிகச்சில சிறு ஊடல்களே கணவனின் நினைவில் எஞ்சின. ஒருநாள் அவர் வீட்டிற்குள் நுழைந்தபோது எங்கும் இறுக்கம். என்ன நடந்தது என்று கேட்டபோது யாரும் ஒன்றும் சொல்லவில்லை. மனைவி தெரியாது என்று சொல்லிவிட்டாள். ஆனால் இரவில் தனியாக வந்தபோது தமையனாரின் மனைவிகளுக்குள் சண்டை என்றும் அதை அப்போது சொல்ல விரும்பவில்லை என்றும் சொன்னாள். நான் கேட்டால் சொல்லமாட்டாயா என்று எகிறிய கணவன் மனைவியைக் கோபத்துடன் கடிந்துவிட்டுத் திரும்பிப் படுத்துக்கொண்டார்

மறுநாள் அவர் குளிக்க அமரும்போது வெந்நீர் விடவந்த மனைவி முகம் வாடியிருந்தது. அதைக்கண்டு அவர் மனம் குழைந்தது. அவளைப் பிடித்து ”நான் செய்தது பிழை. நீ முன்மதி நான் பின்மதி ‘ என்றார். ‘ஐயோ பின்மதி [தேய்நிலவு] என்று சொல்லலாமா?’ என்று சொல்லி அவர் வாயைப்பொத்தினாள் மனைவி.

தன் மனைவியிடம் சேர்ந்து பெருங்காவியங்களைக் கற்க வேண்டுமென கணவன் விரும்பினார். கூட்டுக்குடும்பத்தில் அதற்கு வாய்ப்பில்லை என்பதனால் தனிக்குடித்தனம் செல்லலாம் என்று எண்ணி வீடுபார்த்தார். மனைவி அதை ஒப்பவேயில்லை. விட்டுப்பிரிந்தால் உறவுகள் நிலைக்காது, உறவே முக்கியம் என்று சொன்னாள். தன் பெரியப்பாவை விட்டு கணவனுக்கு அறிவுரை சொல்லி அம்முயற்சியை நிறுத்திவிட்டாள்.

மயிலாப்பூர் கபாலீச்சுவரர் கோயிலுக்கும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கும் அவ்வப்போது மனைவியுடன் செல்வது கணவரின் வழக்கம். வழிபாடு முடிந்தபின் அங்கே குளக்கரையில் அமர்ந்து இலக்கியம் பேசுவார்கள். அது தன் மனைவிக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று கண்ட கணவன் வாரந்தோறும் சனி ஞாயிறு தினங்களில் அவ்வாறு எங்கேனும் சென்றுவரலாம் என்று எண்ணினார். மனைவியின் பெரியப்பா அப்போது வண்ணாரப்பேட்டையில் குடியிருந்தார். அவரை வாரம்தோறும் சென்று பார்த்துவர எண்ணுகிறோம் என்று தன் அன்னையிடம் சொல்லி அனுமதி வாங்கினார்.

பிள்ளையில்லாது தனியாக இருக்கும் பெரியவர்கள் அல்லவா, கண்டிப்பாக சென்றுவாருங்கள் என்று அன்னை கூறி விட்டார்.
வெள்ளிக்கிழமை மாலையே வண்ணாரப்பேட்டைக்குச் சென்ற பின் அங்கே தங்கிவிட்டு மறுநாள் திருவொற்றியூர் சென்று அங்கே கோயிலிலும் கடற்கரையிலும் அமர்ந்து அரைநாள் முழுக்கப் பேசிமகிழ்வது அவர்கள் வழக்கம். சிலசமயம் ஞாயிறு காலையும் அங்கேயே தங்கி திருவொற்றியூர் செல்வதுண்டு. ஞாயிறு மாலை திருவல்லிக்கேணி சைவ சபையில் பேசவேண்டியிருப்பதனால் கணவன் மனைவியுடன் திரும்பிவிடுவார். அவ்வாறு இவர்கள் வந்துசெல்வது பெரியப்பாவுக்கும் பெரியம்மாவுக்கும் அளித்த ஆனந்தம் அளவற்றது. ஏதேனும் ஒருவழியில் பயணச்செலவைக் மனைவியிடம் கொடுத்து விடுவார்கள். ஆகவே இந்தப் பயணம் கணவனுக்கு செலவில்லாமலும் இருந்தது.

திருவொற்றியூர் கடற்கரை அக்காலத்தில் மிகமிக அழகானது என்கிறார் கணவன் மணல் மேடுகளில் உலவியும் விளையாடியும் அவர்கள் அங்கே களித்திருப்பார்கள். அன்றைய தமிழ்நாட்டில் சென்னை போன்ற ஒரு பெருநகரில் மட்டுமே இது சாத்தியமாகும். மனைவி மிகச்சிறப்பாகப் பாடுவாள். ஆனால் அவர் குரலை கணவனின் குடும்பத்தினர் கேட்டதேயில்லை. பொதுவாக ராமலிங்க சுவாமிகள் பாடிய பாடல்களில் மனைவிக்கு விருப்பம் அதிகம். அவளுக்கு தேவாரம் திருவாசகம் சிலப்பதிகாரம் போன்ற நூல்களை கணவன் அப்போது விளக்குவார்.

யார் இந்த அன்பான கணவன் மனைவி? சொல்லுங்கள் பார்க்கலாம் உறவுகளே!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down


தமிழ் சொல்லித்தர வேண்டும்! - முதலிரவில் கணவனிடம் கேட்ட மனைவி - Page 4 Empty Re: தமிழ் சொல்லித்தர வேண்டும்! - முதலிரவில் கணவனிடம் கேட்ட மனைவி

Post by கரூர் கவியன்பன் Sun Jun 16, 2013 3:43 pm

இப்பதிவு விளையாட்டு பகுதியில் பதியப்பட்டுள்ளது
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

தமிழ் சொல்லித்தர வேண்டும்! - முதலிரவில் கணவனிடம் கேட்ட மனைவி - Page 4 Empty Re: தமிழ் சொல்லித்தர வேண்டும்! - முதலிரவில் கணவனிடம் கேட்ட மனைவி

Post by யினியவன் Sun Jun 16, 2013 3:45 pm

முதலிரவே விளையாட்டுன்னு இருக்குமோ கவி?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தமிழ் சொல்லித்தர வேண்டும்! - முதலிரவில் கணவனிடம் கேட்ட மனைவி - Page 4 Empty Re: தமிழ் சொல்லித்தர வேண்டும்! - முதலிரவில் கணவனிடம் கேட்ட மனைவி

Post by Sundararajan Sun Jun 16, 2013 3:54 pm

திரு வீ  க  தம்பதி  தானே ?
avatar
Sundararajan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 30
இணைந்தது : 05/11/2008

Back to top Go down

தமிழ் சொல்லித்தர வேண்டும்! - முதலிரவில் கணவனிடம் கேட்ட மனைவி - Page 4 Empty Re: தமிழ் சொல்லித்தர வேண்டும்! - முதலிரவில் கணவனிடம் கேட்ட மனைவி

Post by கரூர் கவியன்பன் Sun Jun 16, 2013 3:58 pm

யினியவன் wrote:முதலிரவே விளையாட்டுன்னு இருக்குமோ கவி?
எனக்கு தெரியாதப்பா.............. ஆளை விடுங்க
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

தமிழ் சொல்லித்தர வேண்டும்! - முதலிரவில் கணவனிடம் கேட்ட மனைவி - Page 4 Empty Re: தமிழ் சொல்லித்தர வேண்டும்! - முதலிரவில் கணவனிடம் கேட்ட மனைவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum