ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் இப்படியானால் அப்படிச் செய்வேன், அப்படியானால் இப்படிச் செய்வேன்

Go down

நான் இப்படியானால் அப்படிச் செய்வேன், அப்படியானால் இப்படிச் செய்வேன்  Empty நான் இப்படியானால் அப்படிச் செய்வேன், அப்படியானால் இப்படிச் செய்வேன்

Post by சாமி Tue Jun 11, 2013 5:21 pm

அன்புள்ள எழில்,

உன்னுடைய தமிழ்ப் பற்றையும் தமிழ்நாட்டுப் பற்றையும் போற்றுகிறேன்; வாழ்த்துகிறேன். ஆனால், இன்றைய கடிதத்தில் நீ எழுதியது போன்ற வீண் கனவு மட்டும் வேண்டாம். மேடைப் பேச்சு நம்முடைய உணர்ச்சி வெள்ளத்திற்குப் பெரிய வாய்க்காலாக இருந்து ஆத்திரத்தைத் தணித்து வற்றச்செய்து நம்மைச் சோம்பேறிகளாக ஆக்குவது போல், இப்படிப்பட்ட வீண்கனவுகள் நம்மை வீணர்களாக ஆக்காமலிருக்க வேண்டும் என்ற எண்ணத்தால் இதைக் குறிப்பிடுகின்றேன். வேறொன்றும் தவறாக எண்ணவேண்டாம்.

"நான் சர்வாதிகாரியாக ஏற்பட்டால், திருக்குறள் ஓதாத திருமணம் தமிழ்நாட்டில் செல்லுபடி ஆகாது என்றும், தேவாரம் திருவாசகம் பிரபந்தம் முதலான தமிழ்மறை ஓதாத கோயில்கள் தமிழ்நாட்டில் திறந்திருக்கக் கூடாது என்றும், தமிழில் உத்தரவு அனுப்பத் தெரியாத பட்டதாரிகள் தமிழ்நாட்டில் அதிகாரிகளாக இருக்கக் கூடாது என்றும், தமிழ்நாட்டுக் கவர்னரும் தமிழில் கையெழுத்து இடவேண்டும் என்றும் ஆணையிடுவேன்" என்ற வீரமான எழுத்துக்களை உன் கடிதத்தில் பார்த்ததும் நானும் சோர்வு நீங்கியவனாய்த் தலநிமிர்ந்த தமிழனாய் எழுந்து உட்கார்ந்தேன். ஆனால் சிறிதுநேரம் எண்ணிப் பார்த்த பிறகுதான், உனக்கு ஏன் இந்த வீண் கனவு என்ற எண்ணம் வந்தது. மறுபடியும் சொல்கிறேன், உன் மொழிப் பற்றையும் நாட்டுப் பற்றையும் போற்றுகிறேன். ஆனால் உணர்ச்சி வெள்ளம் மட்டும் இருந்தால் போதாது. அது என்றைக்கேனும் ஒருநாள் வடிந்து வற்றிவிடும், வற்றாத ஊற்று உன் உள்ளத்தில் இருக்கட்டும்; செயல்திறன் வளரட்டும்.

நான் எதை வீண் கனவு என்று குறிப்பிடுகிறேன், தெரியுமா? திருக்குறள் ஓதியே திருமணம் நிகழவேண்டும், தமிழ்நாட்டுக் கோயில்களில் உத்தமர்களின் தமிழ்ப்பாட்டு முழங்க வேண்டும்,அதிகாரிகள் தமிழை மதிப்பவர்களாக இருக்க வேண்டும், கவர்னர் தமிழில் கையெழுத்து இட வேண்டும் என்னும் இவைகளை ஒருகாலும் வீண்கனவு என்று ஒதுக்கவே மாட்டேன். இது உனக்கே தெரியும். தமிழுக்கோ தமிழ்நாட்டுக்கோ பகைவனாக இருப்பவன் தான், இந்த நல்லெண்ணங்களை வீண் கனவு என்று குறைகூறுவான். நம் தாயை நாம் வழிபட்டு, நம் குடும்பக் கடமையை நாம் ஆர்வத்தோடு செய்யும்போது, இதைத் தவறு என்றும் குறுகிய நோக்கம் என்றும் ஒருவன் குறுக்கிடுவானானால், அவனைப் பகைவன் என்று ஒதுக்குவதே கடமையாகும்.

கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து மாணாத செய்வான் பகை. என்று நம் தலைவர் திருவள்ளுவர் ஆணையிட்டது இப்படிப்பட்ட பகைவர்களைக் கருதித்தான். அறத்துப்பால் மட்டும் எழுதினால் தமிழர்கள் வாழத் தெரியாதவர்களாய்த் திகைத்துச் சீரழிவார்கள் என்று எண்ணித்தான். திருவள்ளுவர் பொருட்பாலையும் எழுதினார்; அறத்துப்பாலை விட விரிவாக, இரண்டு மடங்கு உள்ளதாகப் பொருட்பாலை எழுதினார். 'இன்னா செய்யாமை' என்று 'அஹிம்சை'யை அறத்துப்பாலில் வற்புறுத்தியவர், 'பகைமாட்சி' 'உட்பகை' என்ற பகுதிகளைப் பொருட்பாலில் விளக்கிய காரணம் அதுதான். உலகம் எப்படிப்பட்டது என்பது திருவள்ளுவர்க்கு நன்றாகத் தெரியும். அதனால்தான் இவ்வளவு தெளிவாகப் பொருட்பாலை எழுத முடிந்தது.

தம்பி! நீ இன்னொன்று கவனித்திருப்பாய். தமிழராகிய நம்மிடம் ஒரு பெருங் குறை இருந்துவருகிறது. அது வேறொன்றும் அல்ல; பிறருடைய சொல்லால் மயங்கும் பேதைமை நமக்கு மிகுதியாக இருக்கிறது. மற்றவர்கள் இதைத் தெரிந்துகொண்டுதான், உயர்ந்த சொற்களைத் திரும்பத் திரும்பச் சொல்லித் தமிழரை ஏமாற்ற முடிகிறது. மக்களுக்குள் எந்த வகையான வேறுபாடும் வேண்டாம். கடவுள் படைப்பில் எல்லோரும் சமம் என்ற உயர்ந்த பேச்சைத் தமிழரிடம் ஒருவர் பேசட்டும்; கேட்ட தமிழர் பற்றை உடனே வெறுப்பார், துறப்பார்; எந்த வேறுபாடும் இல்லாத தூய வாழ்க்கையைத் தொடங்கிவிடுவார். காரணம் என்ன, தெரியுமா? தமிழர்நெஞ்சம் உயர்ந்த கொள்கைகளை உணர்ந்து உணர்ந்து தலைமுறை தலைமுறையாகப் பண்பட்டுவந்தது. அதனால், சொல்கிறவர் யார், உண்மையாக உணர்ந்து சொல்கிறாரா, நம்மை ஏமாற்றச் சொல்கிறாரா, அவர் எந்த வேறுபாடும் பார்க்காமல், வாழ்கிறாரா என்றெல்லாம் ஆராய்ந்துபார்க்காமல், உடனே தாம் அந்தக் கொள்கையை நம்பி உணர்ந்து வாழத் தொடங்கிவிடுவார். இது நல்லதுதான். சொல்லப்பட்ட உண்மையை எடுத்துக் கொள்வது எப்போதும் நல்லதுதான்.

(தொடரும்)
'தம்பிக்கு' மு. வ வின் கடிதங்கள் புத்தகத்தில் இருந்து ஒரு கடிதம்.
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

நான் இப்படியானால் அப்படிச் செய்வேன், அப்படியானால் இப்படிச் செய்வேன்  Empty Re: நான் இப்படியானால் அப்படிச் செய்வேன், அப்படியானால் இப்படிச் செய்வேன்

Post by சாமி Tue Jun 11, 2013 5:23 pm

ஆனால் சொன்னவர் யார், அவருடைய வாய்க்கும் வாழ்க்கைக்கும் ஏதாவது உறவு உண்டா என்பதையும் கொஞ்சம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். இல்லையானால் ஏமாந்த வாழ்வுதான் வாழவேண்டும். இந்த ஏமாந்த தன்மையைப் பகைவர்கள் பயன்படுத்திக்கொண்டு, ஒன்றில் நன்மை செய்து மற்றொன்றில் நஞ்சு ஊட்டி விடுவார்கள். சாதி வேறுபாடு முதலியவை ஒழிய வேண்டியதுதான். ஆனாலும், நமக்கு அதை எடுத்துச் சொன்னவர் சாதிப்பித்தராக இருந்தால் அதையும் ஒருவாறு நினைவில் வைத்துக்கொண்டு, வாய்க்கும் வாழ்க்கைக்கும் உறவு வைக்காமல் பற்றின்றி வாழ வல்லவர் அவர் என்பதைத் தெளிய வேண்டும். இந்தத் தெளிவு இருந்தால், அவரே மற்றொரு நாள் பொய் சொல்லி நம்மை ஏமாற்ற முடியாது. இன்றைக்குச் சாதி முதலான வேறுபாடு வேண்டாம் என்று உபதேசம் செய்தவர், மற்றொரு நாள் மெல்ல வந்து, "மொழி வேறுபாடு வேண்டாம்; தமிழ் என்றும், தமிழ்நாடு என்றும் பேசுகிற குறுகிய நோக்கம் வேண்டாம்" என்று உபதேசம் செய்வார். அதைக்கேட்ட பேதைத் தமிழர் சாதியைத் துறப்பது போலவே மொழிப்பற்றையும் நாட்டுப் பற்றையும் துறந்து நிற்பார்; உடனே அடுத்த மேடையில் ஏறி உன்னையும் என்னையுமே தூற்றத் தொடங்குவார். அந்த எழிலும் அவருடைய அண்ணனும் குறுகிய நோக்கம் உடையவர்கள் என்று நம்மைப் பற்றி எவ்வளவோ சொற்களைப் பொழிவார்; வீர முழக்கம் செய்வார்; உடனே அவருக்கு ஒரு படை திரளும். முதலில் உபதேசம் செய்தவர் இத்தனை மாறுதலையும் திண்ணைமேல் இருந்தபடியே காண்பார்; உள்ளத்தில் எக்களிப்பார்; நம் எண்ணம் நிறைவேறியது என்று மகிழ்வார். "புறமுதுகு காட்டாத தமிழராம்; இதோ என் சொல்லால் அவர்களை வீழ்த்தி விட்டேன். எதனாலும் கலங்காத தமிழரை என் சொல்லால் மயக்கிவிட்டேன். ஒற்றுமையாக இருந்தவர்களைப் பிரித்துவிட்டேன். இனிமேல் வெற்றி எனக்குத் தான். இனித் தமிழர்களே தமிழர்களை அழித்துக்கொள்வார்கள். நமக்குக் கவலை இல்லை" என்று அவர் தம் உபதேசத்தின் பயனைக் கண்டு களிப்பார்.

இப்படிப்பட்டவர்களால் தமிழர்கள் ஏமாந்து போகக் கூடாது. கொள்கை எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும், சொல்கின்றவர்கள் யார் என்ற ஆராய்ச்சியும் செய்யவேண்டும். யாழின் கொம்பு வளைவானது; அம்பு நேரானது. ஆனால் யாழை வெறுத்து அம்பைப் போற்றுவது அறியாமை அல்லவா? திருவள்ளுவர்தான் இந்த உவமையைச் சொன்னவர். வாய்ச்சொல் நேர்மையானதாக இருக்கலாம்; அதைக் கொண்டு ஒருவரை நம்பிவிடக்கூடாது; அவருடைய வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதை ஆராய்ந்த பிறகே நம்பவேண்டும். குறுகிய நோக்கம் வேண்டாம் என்று நமக்குச் சொல்கிறவர்கள் நம்மைவிடப் பரந்த நோக்கம் உடையவர்களா என்று பார்க்க வேண்டும். நாம் எவ்வளவொ பரந்த நோக்கமும் இரக்கமும் உடையவர்கள்; நம் பற்றெல்லாம் சில நல்ல நூல்களைப் பற்றி, சில பெரியோர்களின் பாடல்களைப் பற்றி, நம்மைப் பற்றி இருக்கும். அவர்களுடைய பற்று மிக மிகக் குறுகியது; தன்னலமான பல துறைகளில் அழுத்தமான பற்று அவர்களுக்கு இருப்பதை எண்ணினால் வியப்பாக இருக்கும்.

சாதி முதலிய வேறுபாடுகள் உண்மையானவை அல்ல; பொய்யானவை; அவற்றை ஒழிப்பது கடமை தான்.ஆனால் மொழி வேறுபாடும் நாட்டு வேறுபாடும் அப்படிப்பட்டவை அல்ல; பொய் அல்ல. மொழி உண்மையாக உள்ள ஒன்று; அது கண்ணுக்கும் தெரியும். காதுக்கும் தெரியும். மூளைக்கும் தெரியும். மொழியால் இனம் அமைவதும், நாகரிகம் அமைவதும், நாடு அமைவதும், நாட்டின் அமைப்புக்குத் துணையாக இருப்பதும் உலகம் அறிந்த உண்மைகள். இவற்றை எல்லாம் பொய் என்றும் வேண்டாதவை என்று உபதேசம் செய்கிறவர்கள் நம்மைப் பற்றி நல்லெண்ணம் இல்லாதவர்கள். அவர்களுக்கு வேலை நம்மிடம் இல்லை. வல்லரசுகளிடம் சென்று அவர்கள் அந்த உபதேசம் செய்யட்டும். நாட்டுப்பற்றையும் இனப்பற்றையும் பொருட்பற்றையும் வல்லரசுகள் முதலில் கைவிட்டால், உலகம் ஒரு குடும்பமாக வாழும்; குறுகிய நாட்டுப்பற்று அங்கே ஒழிந்தால், அடுத்த நொடியிலேயே தமிழன் தன் முதல் பாடத்தை, "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற பழைய பொதுப் பாடத்தை வாழ்க்கையில் வாழ்ந்து காட்டத் தயங்கமாட்டான். அதை விட்டுவிட்டு, நம்மிடம் செய்யப்படும் போலி உபதேசம் ஏமாற்றும் நோக்கம் உடையதே ஆகும். பெருஞ்செல்வன் தன்னுடைய இரும்புப் பெட்டியை ஏழெட்டுச் சாவிகளால் பூட்டி, அந்த அறையையும் சில பூட்டுக்களால் பூட்டிவிட்டு, தன் மாளிகையின் முன்புறத்தில் அகலமான திண்ணைமேல் சாய்ந்து கொண்டு, எதிர்வீட்டு ஏழையைப் பார்த்து, "டே! என்னடா! எப்போது பார்த்தாலும் அந்தப் பொத்தல் கதவை மூடியே வைத்திருக்கிறாய்! எங்கள்மேல் உனக்கு நம்பிக்கை இல்லையா?" என்று கேட்பதுபோல் இருக்கிறது இது. அந்த ஏழையும் அவருடைய பரந்த நோக்கப் பேச்சைக் கேட்டு மயங்கித் தன் குடிசைக்கு இருந்த அந்த ஒரே கதவையும் எடுத்து அப்பால் வைத்தான் என்றால், அவனைப் பேதை என்று சொல்லாமல் வேறு என்ன என்று சொல்வது? தமிழர்கள் அப்படிப்பட்ட பேதைகள் ஆகக்கூடாது என்பதுதான் என்னுடைய கவலை. உலகம் ஒரு குடும்பமாய் அன்பாக வாழக் கற்றுக்கொள்ளும் வரையில் தமிழனுக்குத் தற்காப்பு உணர்ச்சி கட்டாயம் வேண்டும்.

அதற்கு வழி இதுதான்; தமிழர்களை சிறிது நேரம் உணர்ச்சிவெள்ளத்தில் மூழ்கடித்துப் பிறகு வறண்ட பாலையில் திகைக்கவிடும் போக்கைவிட்டு, அவர்களைக் கடமைப் பற்று உடைய செயல்வீரர்களாக ஆக்க வேண்டும். உன்னுடைய எழுத்தில் அந்த உணர்ச்சிவெள்ளத்தைக் கண்ட தால்தான் நான் இதைக் குறிப்பிடுகிறேன். நீ சர்வாதிகாரியாக ஆவதுபற்றி எனக்குத் தடை இல்லை. ஆனால், அந்தப் போதையில் மயங்கி அன்றாடக் கடமையை மறந்து விடாதே; மற்றவர்களையும் மறக்கவிடாதே.

நீ சர்வாதிகாரி ஆவதையே வீண்கனவு என்று குறிப்பிட்டேன். தமிழரின் திருமணங்களில் திருக்குறள் ஓதுவது கனவு அல்ல; தமிழரின் கடமை. கோயில்களில் தேவாரம் முதலியன முழங்குவது கனவு அல்ல. அந்தக் கோயில்களைத் தமிழால் பாடி அவற்றின் பெருமையைக் காத்த சான்றோர்களுக்கு நன்றியுணர்வோடு ஆற்ற வேண்டிய கடமை அது. அதிகாரிகள் தமிழில் எழுத வேண்டியதும் கனவு அல்ல; காந்தியடிகளின் கருத்துப்படி மொழிவாரி மாகாணம் கட்டாயமாக ஏற்படும்போது கவர்னர் தமிழில் கையெழுத்து இடுவதும் கனவு அல்ல. வங்காளத்திற்குத் தொண்டுசெய்யச் சென்ற முதுமையில் எழுபத்தெட்டாம் வயதில், அந்த நாட்டு மொழியில் கையெழுத்து இடவேண்டும் என்று வங்காளி எழுத்தைக் கற்றுக் கொண்ட காந்தியடிகளின் பெருந்தன்மையான நெறி அது.

ஆகவே, இன்று தமிழர்க்கு வேண்டியது, அன்றாடக் கடமையைப் பற்றிய ஆராய்ச்சியே; மொழிப்பற்றையும் நாட்டுப் பற்றையும் செயலில் காட்டும் முறையே. நான் இப்படியானால் அப்படிச் செய்வேன், அப்படியானால் இப்படிச் செய்வேன் என்று 'ஆனால்' போட்டுப் பேசுவது இப்போது வேண்டாம். அது வெறும் போதை; உண்மை நெறி அல்ல. எண்ணிப் பார்; விளங்கும்.

உன் அன்புள்ள,
வளவன்.

'தம்பிக்கு' மு. வ வின் கடிதங்கள் புத்தகத்தில் இருந்து ஒரு கடிதம்.
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

நான் இப்படியானால் அப்படிச் செய்வேன், அப்படியானால் இப்படிச் செய்வேன்  Empty Re: நான் இப்படியானால் அப்படிச் செய்வேன், அப்படியானால் இப்படிச் செய்வேன்

Post by சாமி Tue Jun 11, 2013 5:23 pm

ஆனால் சொன்னவர் யார், அவருடைய வாய்க்கும் வாழ்க்கைக்கும் ஏதாவது உறவு உண்டா என்பதையும் கொஞ்சம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். இல்லையானால் ஏமாந்த வாழ்வுதான் வாழவேண்டும். இந்த ஏமாந்த தன்மையைப் பகைவர்கள் பயன்படுத்திக்கொண்டு, ஒன்றில் நன்மை செய்து மற்றொன்றில் நஞ்சு ஊட்டி விடுவார்கள். சாதி வேறுபாடு முதலியவை ஒழிய வேண்டியதுதான். ஆனாலும், நமக்கு அதை எடுத்துச் சொன்னவர் சாதிப்பித்தராக இருந்தால் அதையும் ஒருவாறு நினைவில் வைத்துக்கொண்டு, வாய்க்கும் வாழ்க்கைக்கும் உறவு வைக்காமல் பற்றின்றி வாழ வல்லவர் அவர் என்பதைத் தெளிய வேண்டும். இந்தத் தெளிவு இருந்தால், அவரே மற்றொரு நாள் பொய் சொல்லி நம்மை ஏமாற்ற முடியாது. இன்றைக்குச் சாதி முதலான வேறுபாடு வேண்டாம் என்று உபதேசம் செய்தவர், மற்றொரு நாள் மெல்ல வந்து, "மொழி வேறுபாடு வேண்டாம்; தமிழ் என்றும், தமிழ்நாடு என்றும் பேசுகிற குறுகிய நோக்கம் வேண்டாம்" என்று உபதேசம் செய்வார். அதைக்கேட்ட பேதைத் தமிழர் சாதியைத் துறப்பது போலவே மொழிப்பற்றையும் நாட்டுப் பற்றையும் துறந்து நிற்பார்; உடனே அடுத்த மேடையில் ஏறி உன்னையும் என்னையுமே தூற்றத் தொடங்குவார். அந்த எழிலும் அவருடைய அண்ணனும் குறுகிய நோக்கம் உடையவர்கள் என்று நம்மைப் பற்றி எவ்வளவோ சொற்களைப் பொழிவார்; வீர முழக்கம் செய்வார்; உடனே அவருக்கு ஒரு படை திரளும். முதலில் உபதேசம் செய்தவர் இத்தனை மாறுதலையும் திண்ணைமேல் இருந்தபடியே காண்பார்; உள்ளத்தில் எக்களிப்பார்; நம் எண்ணம் நிறைவேறியது என்று மகிழ்வார். "புறமுதுகு காட்டாத தமிழராம்; இதோ என் சொல்லால் அவர்களை வீழ்த்தி விட்டேன். எதனாலும் கலங்காத தமிழரை என் சொல்லால் மயக்கிவிட்டேன். ஒற்றுமையாக இருந்தவர்களைப் பிரித்துவிட்டேன். இனிமேல் வெற்றி எனக்குத் தான். இனித் தமிழர்களே தமிழர்களை அழித்துக்கொள்வார்கள். நமக்குக் கவலை இல்லை" என்று அவர் தம் உபதேசத்தின் பயனைக் கண்டு களிப்பார்.

இப்படிப்பட்டவர்களால் தமிழர்கள் ஏமாந்து போகக் கூடாது. கொள்கை எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும், சொல்கின்றவர்கள் யார் என்ற ஆராய்ச்சியும் செய்யவேண்டும். யாழின் கொம்பு வளைவானது; அம்பு நேரானது. ஆனால் யாழை வெறுத்து அம்பைப் போற்றுவது அறியாமை அல்லவா? திருவள்ளுவர்தான் இந்த உவமையைச் சொன்னவர். வாய்ச்சொல் நேர்மையானதாக இருக்கலாம்; அதைக் கொண்டு ஒருவரை நம்பிவிடக்கூடாது; அவருடைய வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதை ஆராய்ந்த பிறகே நம்பவேண்டும். குறுகிய நோக்கம் வேண்டாம் என்று நமக்குச் சொல்கிறவர்கள் நம்மைவிடப் பரந்த நோக்கம் உடையவர்களா என்று பார்க்க வேண்டும். நாம் எவ்வளவொ பரந்த நோக்கமும் இரக்கமும் உடையவர்கள்; நம் பற்றெல்லாம் சில நல்ல நூல்களைப் பற்றி, சில பெரியோர்களின் பாடல்களைப் பற்றி, நம்மைப் பற்றி இருக்கும். அவர்களுடைய பற்று மிக மிகக் குறுகியது; தன்னலமான பல துறைகளில் அழுத்தமான பற்று அவர்களுக்கு இருப்பதை எண்ணினால் வியப்பாக இருக்கும்.

சாதி முதலிய வேறுபாடுகள் உண்மையானவை அல்ல; பொய்யானவை; அவற்றை ஒழிப்பது கடமை தான்.ஆனால் மொழி வேறுபாடும் நாட்டு வேறுபாடும் அப்படிப்பட்டவை அல்ல; பொய் அல்ல. மொழி உண்மையாக உள்ள ஒன்று; அது கண்ணுக்கும் தெரியும். காதுக்கும் தெரியும். மூளைக்கும் தெரியும். மொழியால் இனம் அமைவதும், நாகரிகம் அமைவதும், நாடு அமைவதும், நாட்டின் அமைப்புக்குத் துணையாக இருப்பதும் உலகம் அறிந்த உண்மைகள். இவற்றை எல்லாம் பொய் என்றும் வேண்டாதவை என்று உபதேசம் செய்கிறவர்கள் நம்மைப் பற்றி நல்லெண்ணம் இல்லாதவர்கள். அவர்களுக்கு வேலை நம்மிடம் இல்லை. வல்லரசுகளிடம் சென்று அவர்கள் அந்த உபதேசம் செய்யட்டும். நாட்டுப்பற்றையும் இனப்பற்றையும் பொருட்பற்றையும் வல்லரசுகள் முதலில் கைவிட்டால், உலகம் ஒரு குடும்பமாக வாழும்; குறுகிய நாட்டுப்பற்று அங்கே ஒழிந்தால், அடுத்த நொடியிலேயே தமிழன் தன் முதல் பாடத்தை, "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற பழைய பொதுப் பாடத்தை வாழ்க்கையில் வாழ்ந்து காட்டத் தயங்கமாட்டான். அதை விட்டுவிட்டு, நம்மிடம் செய்யப்படும் போலி உபதேசம் ஏமாற்றும் நோக்கம் உடையதே ஆகும். பெருஞ்செல்வன் தன்னுடைய இரும்புப் பெட்டியை ஏழெட்டுச் சாவிகளால் பூட்டி, அந்த அறையையும் சில பூட்டுக்களால் பூட்டிவிட்டு, தன் மாளிகையின் முன்புறத்தில் அகலமான திண்ணைமேல் சாய்ந்து கொண்டு, எதிர்வீட்டு ஏழையைப் பார்த்து, "டே! என்னடா! எப்போது பார்த்தாலும் அந்தப் பொத்தல் கதவை மூடியே வைத்திருக்கிறாய்! எங்கள்மேல் உனக்கு நம்பிக்கை இல்லையா?" என்று கேட்பதுபோல் இருக்கிறது இது. அந்த ஏழையும் அவருடைய பரந்த நோக்கப் பேச்சைக் கேட்டு மயங்கித் தன் குடிசைக்கு இருந்த அந்த ஒரே கதவையும் எடுத்து அப்பால் வைத்தான் என்றால், அவனைப் பேதை என்று சொல்லாமல் வேறு என்ன என்று சொல்வது? தமிழர்கள் அப்படிப்பட்ட பேதைகள் ஆகக்கூடாது என்பதுதான் என்னுடைய கவலை. உலகம் ஒரு குடும்பமாய் அன்பாக வாழக் கற்றுக்கொள்ளும் வரையில் தமிழனுக்குத் தற்காப்பு உணர்ச்சி கட்டாயம் வேண்டும்.

அதற்கு வழி இதுதான்; தமிழர்களை சிறிது நேரம் உணர்ச்சிவெள்ளத்தில் மூழ்கடித்துப் பிறகு வறண்ட பாலையில் திகைக்கவிடும் போக்கைவிட்டு, அவர்களைக் கடமைப் பற்று உடைய செயல்வீரர்களாக ஆக்க வேண்டும். உன்னுடைய எழுத்தில் அந்த உணர்ச்சிவெள்ளத்தைக் கண்ட தால்தான் நான் இதைக் குறிப்பிடுகிறேன். நீ சர்வாதிகாரியாக ஆவதுபற்றி எனக்குத் தடை இல்லை. ஆனால், அந்தப் போதையில் மயங்கி அன்றாடக் கடமையை மறந்து விடாதே; மற்றவர்களையும் மறக்கவிடாதே.

நீ சர்வாதிகாரி ஆவதையே வீண்கனவு என்று குறிப்பிட்டேன். தமிழரின் திருமணங்களில் திருக்குறள் ஓதுவது கனவு அல்ல; தமிழரின் கடமை. கோயில்களில் தேவாரம் முதலியன முழங்குவது கனவு அல்ல. அந்தக் கோயில்களைத் தமிழால் பாடி அவற்றின் பெருமையைக் காத்த சான்றோர்களுக்கு நன்றியுணர்வோடு ஆற்ற வேண்டிய கடமை அது. அதிகாரிகள் தமிழில் எழுத வேண்டியதும் கனவு அல்ல; காந்தியடிகளின் கருத்துப்படி மொழிவாரி மாகாணம் கட்டாயமாக ஏற்படும்போது கவர்னர் தமிழில் கையெழுத்து இடுவதும் கனவு அல்ல. வங்காளத்திற்குத் தொண்டுசெய்யச் சென்ற முதுமையில் எழுபத்தெட்டாம் வயதில், அந்த நாட்டு மொழியில் கையெழுத்து இடவேண்டும் என்று வங்காளி எழுத்தைக் கற்றுக் கொண்ட காந்தியடிகளின் பெருந்தன்மையான நெறி அது.

ஆகவே, இன்று தமிழர்க்கு வேண்டியது, அன்றாடக் கடமையைப் பற்றிய ஆராய்ச்சியே; மொழிப்பற்றையும் நாட்டுப் பற்றையும் செயலில் காட்டும் முறையே. நான் இப்படியானால் அப்படிச் செய்வேன், அப்படியானால் இப்படிச் செய்வேன் என்று 'ஆனால்' போட்டுப் பேசுவது இப்போது வேண்டாம். அது வெறும் போதை; உண்மை நெறி அல்ல. எண்ணிப் பார்; விளங்கும்.

உன் அன்புள்ள,
வளவன்.

'தம்பிக்கு' மு. வ வின் கடிதங்கள் புத்தகத்தில் இருந்து ஒரு கடிதம்.
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

நான் இப்படியானால் அப்படிச் செய்வேன், அப்படியானால் இப்படிச் செய்வேன்  Empty Re: நான் இப்படியானால் அப்படிச் செய்வேன், அப்படியானால் இப்படிச் செய்வேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum