புதிய பதிவுகள்
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Today at 11:01 am

» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_c10உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_m10உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_c10 
34 Posts - 43%
heezulia
உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_c10உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_m10உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_c10 
32 Posts - 40%
Balaurushya
உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_c10உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_m10உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_c10உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_m10உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_c10உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_m10உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_c10 
2 Posts - 3%
prajai
உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_c10உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_m10உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_c10 
2 Posts - 3%
Manimegala
உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_c10உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_m10உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_c10உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_m10உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_c10உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_m10உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_c10 
1 Post - 1%
jothi64
உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_c10உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_m10உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_c10உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_m10உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_c10 
400 Posts - 49%
heezulia
உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_c10உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_m10உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_c10உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_m10உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_c10உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_m10உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_c10உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_m10உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_c10 
27 Posts - 3%
prajai
உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_c10உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_m10உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_c10உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_m10உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_c10 
5 Posts - 1%
sugumaran
உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_c10உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_m10உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_c10உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_m10உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_c10உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_m10உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிர் கொண்ட சிலை ஒன்று (கற்பனைக் கவிதைகள்)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Jun 11, 2013 12:56 pm

உயிர் கொண்ட சிலையொன்று

செந்தமிழில் இசைப்பாட்டெழுதி வைத்துச்
சித்திர மாடம் சென்றேன் - அங்கு
வண்ணம் இழைத்தநல் லோவியங்களிடை
வார்த்த சிலைகள் கண்டேன்
சுந்தரமாய்ப் பலசித்திர ரூபங்கள்
சேர்ந்த அழகிடையே - எந்தன்
சிந்தனையில் கவிகொண்ட உருவத்தை
செய்ய உளி எடுத்தேன்

சந்தமெழக் கவிசொல்லிச் சிலை செய்து
சித்திரமாடம் வைத்தேன் - அதில்
தந்த எழில்மேனி கொண்ட நங்கையவள்
தன்னை வடித்தெடுத்தேன்
விந்தை முகமதில் கொண்ட விழிகளில்
வேதனை தோன்றிடவே - அது
எந்தமுறைமையோ சந்தண மென்முகம்
குங்கும மானதென்ன

வெண்ணிலவும் குளிர் வீசும் இரவிடை
வியர்வை முத்தெழவும் - அவள்
கண்ணழகில் கருவண்டு துடிப்பெண்ணி
கைகள் கொண்டே கலைத்தேன்
எண்ண அதிசயம் அங்கவளின் இதழ்
எள்ளி நகைப்பது போல் - நல்ல
வண்ண உதடுகள்: வார்த்தையின்றி யொரு
புன்னகை பூத்ததடா

மூங்கில் வனத்திடை தீயெழுந்த வகை
மேனி எரிந்திருக்க -அவள்
தூங்கும் குழல் தனில் பூவிருந்தே எழில்
தேங்கிடச் செய்ததடா
மாங்கனிக் கன்னம் சிவந்ததனால் உயிர்
மாதெனத் தோன்றியதும் -அவள்
பூங்கை இரண்டினில் பூத்தமலர் கொண்ட
புத்தெழில் கண்டுநின்றேன்

ஆங்கே அவளென்னை அன்புடன்மேவிய
ஆந்தை விழியிரண்டால் - நல்ல
பாங்குடனே எந்தன் பக்கமணைந்திடும்
பாவனை கொண்டிருந்தாள்
வாங்கு மதியொளி வார்த்த முகமதில்
வாஞ்சையுடன் சிரித்தே - அந்த
ஏங்குமிளமதி ஏந்திழையாள் கரம்
ஏந்திய மாலையிட்டாள்

பொன்னெழிலாள் மகள் மேனி நளினமும்
பூங்கொடி தென்றல்தொட - அந்த
மன்னன் அரண்மனை மாடத்திலே மின்னும்
மாவிளக்கின் ஒளியில்
முன்னும் பின்னும் அசைந்தாடும் அழகுடன்
மோகினி ஆடிநின்றாள் - இது
என்ன விநோதமென் கண்கள் வியந்திட
எண்ணம் மயங்கி நின்றேன்

சொல்லத் தெரியவு மில்லை அவள்கொண்ட
செய்கையும் அன்பெழவே -அந்த
நல்ல மனதெழு நங்கைதனை இது
வென்னவென்றே வினவ
சில்லெனு மோடைக் குளிர்பரவ நல்ல
செந்தமிழ்ச் சொல்பவரே - இந்தக்
கல்லை கனிந்திட காணும் வகையின்னும்
சொல்லு கவிதைஎன்றாள்

நில்லாய்நீ யுமெந்தன் கையில் உருக்கொண்ட
கன்னிச் சிலையல்லவோ - இந்த
வல்லமை கொண்டுயிர் தந்தது யாரெனும்
வண்ணம் அறியவுள்ளேன்
சொல்லு என்றேன் அவள் சுந்தரியோ ஒரு
சின்ன நகைஉதிர்த்து - விந்தை
அல்ல அல்ல இந்தகல்லும் உயிர்பெரும்
நற்தமிழ் பாவிலென்றாள்

*********************


kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Jun 11, 2013 1:00 pm

உன்னை அறிவோமோ ?


அம்மையவள் அப்பனோவென் றறியேன் - எனையீந்த
ஆதாரத் தீயினுரு காணேன்
செம்மையதோ வெண்ணொளியோ தெரியேன் - அண்டமதில்
சீறியுமிழ் தீக்குழம்பின் வகையென்
இம்மைதனை இவ்வுலகில் கண்டேன் - இங்குதனும்
இருக்குமிடம் ஏதறியா தலைந்தேன்
எம்மையெது காரணியோ வைத்தாள் - இவ்வுலகில்
எல்லையற்ற பாசத்துள் பிணைத்தாள்

பெற்றவளும் தன்வயிற்றில் கொண்டே - மாதமென்ப
பத்துவரை சென்றலைந்து ஈந்தாள்
கற்றுவரக் கல்விபயில் கூடம் - காட்டியும்பின்
காணுலகில் கடமையறி வீந்தாள்
விற்றும்பல நன்மையொடு தீமை - வாங்கியதில்
வேடிக்கைகாண் விதியினோடு கூடி
உற்றதென்ன துயர்நிறைந்த வாழ்க்கை - முடிவிலிங்கு
உள்ளதென்ன வீணுழன்ற யாக்கை

மண்ணுடலில் மாயசக்தி ஏற்றம் - இறுதிவரும்
மரணமென்னும் மின்னுணர்ச்சி நீக்கம்
எண்ணமெனும் புரிந்திடாத அலைகள் - அவையுமீற்றில்
எங்குசென்று முடியுமென்னும் இருள்கள்
வண்ணம், இருள் வார்த்துசெய்த உலகம் - ஓடிக்கண்ட
வானஜோதி சூரியன் குடும்பம்
கண்ணெதிரில் கலைந்துபோகு மோர்நாள் - நாமுமங்கு
காணுபவை மீதமென்ன சூன்யம்

பெண்ணுருவாம் பிரபஞ்சத் தாயே - நீயும்வானில்
புன்னகைத்து நிற்பதெங்கு கூறேன்
உண்மைதனை வேலியிட்டு மூடி - இவ்வுலகை
உருளவைத்த மாயமென்ன கூறு
விண்ணிலொளி வீசவிட்டுப் பொய்மை - கொண்டதான
வெற்றுநீல நீள்திரையும் போட்டாய்
கண்ணெதிரே நீயிருக்கும் தோற்றம் - நாமதனைக்
காணுமொரு ஞானமதைத் தா தா

**************

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Jun 11, 2013 1:02 pm

3. இயற்கையின் காதலன்


நீலவிதானத்து மேகத்தில் பொற்துகள்
நாணிக் கண் கூசலென்ன - எழில்
கோலமுகத்துடை வெண்ணிலவு என்னைக்
கொஞ்சிக் களிக்கையிலே
காலமிட்ட விதி காற்றுவந்தே என்னைக்
கட்டித் தழுவுகையில் - இந்த
ஞாலமிட்ட சதி நள்ளிரவுக் குளிர்
நம்மைப் பிரிப்பதென்ன

ஆழியிட்ட அலை ஓடிவந்து என்னை
ஆசையுடன் தழுவி - சில
நாழிவிட்டு என்ன ஆனதுவோ மனம்
நோகவிட் டோடலென்ன
தோளைத் தொட்டு முகில் தூவும்மழை எனைத்
தொட்டு சுகம்மளிக்க - அந்த
வாளின் வெட்டு எனமின்னல்வந்து கொண்ட
வஞ்சம் பிரிப்பதென்ன

போம் வழியே எனைப்போற்றி மலர்தரு
பூக்கள் சொரிந்து நிற்க - ஒரு
பாம்புவந்தே நடுப் பாதைநின்று எனைப்
பார்த்து சினப்பதென்ன
தீம்பழங்கள் கிளை தூங்குவன எனைத்
தின்னென்று காத்திருக்க - ஒரு
பூம்பொதியாம் அணில் பொல்லா மனங்கொண்டு
போய்எச்சில் செய்வதென்ன

துள்ளும்கயல் பொழில் தூங்கும் மலர்தனைத்
தொட்டுத் திரியுமலை - இன்னும்
வெள்ளிமலை அதன் வீரமென்னும் திடம்
வைத்திருக்கும் கடுமை
தள்ளி முகில் நடைசெய்யும்வானின்வெளி
தங்கரத சுடரும் -பெரும்
கள்ளினை கொள்மலர் கன்னி இயற்கையின்
காதலன் நானேயன்றோ

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக