Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
60 ஆண்டு சேவையில் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை உயர்தர சிகிச்சை தருவதால் அபார வளர்ச்சி!
2 posters
Page 1 of 1
60 ஆண்டு சேவையில் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை உயர்தர சிகிச்சை தருவதால் அபார வளர்ச்சி!
புற்றுநோய் சிகிச்சைக்கு, பல லட்சம் ரூபாய் செலவாகும் இன்றைய சூழலில், இந்நோய்க்கு சிறந்த முறையில் சிகிச்சை அளித்து வரும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை, 1 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆரம்பிக்கப்பட்டது என்றால், நம்புவதற்கு இப்போது சற்று கடினமாகத் தான் இருக்கும். இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான முத்துலெட்சுமி ரெட்டி, 75 ஆண்டுகளுக்கு முன், சென்னையில், புற்றுநோய் சிகிச்சைக்கென பிரத்தியேக மருத்துவமனையை அமைக்க முயன்றபோது, அவரின் முயற்சிக்கு, அப்போது அரசின் ஆதரவு கிடைக்கவில்லை.
12 படுக்கைகள்
பலகட்ட முயற்சிக்கு பின், இந்திய பெண்கள் சங்கத்திடம் இருந்து, 1 லட்சம் ரூபாய் நிதி பெற்று, அடையாறு, காந்தி நகர், "கெனால் பேங்க்' சாலையில், 12 படுக்கைகள் கொண்ட, அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை துவக்கினார். 1952ம் ஆண்டு, அக்டோபர், 10ம் தேதி, அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேருவால், அடிக்கல் நாட்டப்பட்டு, 1954ம் ஆண்டு, ஜூன், 18ம் தேதி முதல், இம்மருத்துவமனை செயல்படத் துவங்கியது. டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டியின் மகன் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, டாக்டர் சாந்தா ஆகியோரின் விடாமுயற்சி, அயராத உழைப்பு, செல்வந்தர்கள் அளித்து வரும் நன்கொடை ஆகியவற்றால், உள்கட்டமைப்பு, நவீன சிகிச்சை வசதி என, நாளுக்கு நாள் இம்மருத்துவமனை வளர்ச்சி பெற்றது.
1982ம் ஆண்டு, அடையாறு, சர்தார் படேல் சாலையில் துவங்கப்பட்ட, கிளை மருத்துவ மனை, 2009ம் ஆண்டு முதல், 44 படுக்கை வசதியுடன் செயல்பட்டு வரும், குழந்தைகள் புற்றுநோய் சிகிச்சை மையம் உள்ளிட்டவற்றுடன் சேர்த்து, 450 படுக்கை வசதியுடன், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை, இன்று, பிரமாண்ட வளர்ச்சி பெற்றுள்ளது.
சேவை உணர்வு
அரை நூற்றாண்டிற்கும் மேலாக, புற்றுநோய் மருத்துவத்தில் சேவை உணர்வுடன் பணியாற்றி வரும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை முதல்வர் சாந்தா கூறியதாவது: எங்கள் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளில், அவர்களின் வருமானத்திற்கேற்ப, 60 சதவீதம் பேருக்கு இலவசமாகவும், 40 சதவீதம் பேருக்கு, குறைந்த கட்டணத்திலும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. எங்களை நாடி வருவோருக்கு, தரமான சிகிச்சை வழங்குவதில், நாங்கள் எந்த சமரசமும் செய்து கொள்வதில்லை. கதிர்வீச்சு, மருந்து, அறுவை என, புற்றுநோய்க்கான அனைத்து சிகிச்சை முறைகளிலும், "கார்ப்பரேட்' மருத்துவமனைகளுக்கு இணையான சிகிச்சை வழங்கி வருகிறோம்.ஆண்டிற்கு சராசரியாக, 1.2 லட்சம் பேர், இம்மருத்துவமனையில், உள் மற்றும் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். தமிழக அரசு, எங்கள் மருத்துவமனைக்கு வழங்கி வந்த, 1.3 கோடி ரூபாய் ஆண்டு நிதியை, சமீபத்தில், 2.5 கோடியாக உயர்த்தியது. இதேபோன்று, மத்திய அரசின் நிதியுதவியும், விரைவில் உயர்த்தப்படும் என, எதிர்பார்க்கிறோம். கடந்த, 15 ஆண்டுகளாக, வாய், தொண்டை, உணவுக்குழாய், நுரையீரல் புற்றுநோய்கள் அதிகரித்து வருவது, வருத்தம் அளிக்கிறது. இதை தடுக்க, சிகரெட், பான்பராக் போன்ற புகையிலை பழக்கத்தில் இருந்து, இளைய தலைமுறை விடுபட வேண்டும்.இவ்வாறு சாந்தா கூறினார். புற்றுநோய் சிகிச்சை மட்டுமின்றி, புற்றுநோய் மருத்துவம் தொடர்பான உயர்படிப்புகளையும், இம்மருத்துவமனை வழங்கி வருகிறது.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவப்பல்கலை, சென்னை பல்கலை ஆகியவற்றின் கீழ் இயங்கும், டாக்டர் முத்துலெட்சுமி கல்லூரி, எம்.சிஎச்., (புற்றுநோய் அறுவை சிகிச்சை) - டி.எம்., (மருந்து சிகிச்சை) - எம்.டி., மற்றும் டி.எம்.ஆர்.டி., (கதிரியக்க சிகிச்சை), எம்.எஸ்சி., (மருத்துவ இயற்பியல்), பிஎச்.டி., உள்ளிட்ட படிப்புகளை வழங்கி வருகிறது.
புற்றுநோய் சிகிச்சை, புற்றுநோய் மருத்துவம் ஆகியவற்றுடன், இந்நோய் தடுப்புக்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளையும், இம்மருத்துவமனை நிர்வாகம், தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.பள்ளி, கல்லூரி, பொது இடங்களில், புகையிலைக்கு எதிரான பிரசாரங்கள் அவ்வப்போது மேற்கொள்ளப்படுகின்றன. இளைஞர்கள் மத்தியில், உடல் ஆரோக்கியத்தின்
முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், இம்மருத்துவமனை சார்பில், ஆண்டுதோறும், "இளைஞர் உடல்நலத் திருவிழா' நடத்தப்படுகிறது.
தைரியம் தரும் பண்பாளர்
சென்னை, முகப்பேர் பகுதியைச் சேர்ந்த சர்புதீன், 68, என்பவர், கடந்த, 1999ம் ஆண்டு, அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில், தொண்டை புற்றுநோய்க்கு, அறுவை சிகிச்சை செய்து கொண்டு குணமடைந்தார். தன் உயிரை காப்பாற்றியதற்கு நன்றிக்கடனாக, அவர் தற்போது, இம்மருத்துவமனை வளாகத்தில், புகை இலைக்கு எதிரான பிரசாரத்தை மேற்கொண்டு வருவதுடன், புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ள பயப்படுவோருக்கு, தைரியமும் அளித்து வருகிறார். நற்சான்று தன்னார்வத்துடன் இவர் மேற் கொண்டு வரும் பணி, அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் சேவைக்கு நற்சான்றாக விளங்குகிறது. அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில், 50 ஆண்டு களுக்கும் மேலாக, செவிலியராக பணிபுரிந்து வரும் ஜானகி கூறுகையில், ""புற்றுநோய் சிகிச்சையில், உலகளவில் பெயர் பெற்று விளங்கும் இம்மருத்துவமனையில் பணிபுரிவதில் பெருமை அடைகிறேன். டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, டாக்டர் சாந்தா ஆகியோர், அரும்பாடுபட்டு வளர்த்த மருத்துவமனை, இன்று வைர விழா கொண்டாடுகிறது என்பதை நினைக்கும் போது, மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது,'' என்றார்.
சாதனை பயணத்தின் சிறப்புகள்
அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின், 60 ஆண்டு கால சாதனை பயணத்தில் முக்கிய அம்சங்கள்:கடந்த, 1954ம் ஆண்டு, தென்னிந்தியாவில் முதல் முறையாக, ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சை மையமாக, அடையாறு புற்றுநோய் மருத்துவமனை துவங்கப்பட்டது.
இந்தியாவில் முதல்முறையாக, 1956ம் ஆண்டு, இங்கு,
கதிரியக்க புற்றுநோய் மருத்துவத் துறை ஏற்படுத்தப்பட்டது.
1960ம் ஆண்டு, இந்தியாவில் முதல் முறையாக, குழந்தை
களுக்கான புற்றுநோய் சிகிச்சை மையம் துவங்கப்பட்டது.
1971ம் ஆண்டு, புற்றுநோய்க்கான மருந்து முறை சிகிச்சை பிரிவு துவங்கப்பட்டது.
1974ம் ஆண்டு, இம்மருத்துவமனையை, புற்றுநோய் ஆய்வு மற்றும் சிகிச்சைக்கான மண்டல மையமாக, மத்திய அரசு அறிவித்தது.
ஐ.ஓ.ஆர்.டி., எனும், கதிரியக்க சிகிச்சை தொழிற்நுட்பம், 1995ம் ஆண்டு, அறிமுகப்படுத்தப்பட்டது.
2002ம் ஆண்டு, உலக சுகாதார நிறுவனம் சார்பில், புகையிலை ஒழிப்பு மையம், இம்மருத்துவமனை வளாகத்தில் துவங்கப்பட்டது. 2005ம் ஆண்டு, ஆசியாவின் உயர்ந்த விருதான, "மகசேசே' விருதை, இம்மருத்துவ நிறுவனம் பெற்றது.
நன்றி : தினமலர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 60 ஆண்டு சேவையில் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை உயர்தர சிகிச்சை தருவதால் அபார வளர்ச்சி!
சிறப்பான சேவையை இந்நிறுவனம் வழங்குவதாக கேள்விப்பட்டிருக்கிறேன். தொடரட்டும் சேவையை.
(புற்று நோய் சிகிச்சையும் வளருது அதை விட புற்று நோயும் அதிகமாக வளர்வதே வேதனைக்குரிய விஷயம்)
(புற்று நோய் சிகிச்சையும் வளருது அதை விட புற்று நோயும் அதிகமாக வளர்வதே வேதனைக்குரிய விஷயம்)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Similar topics
» அடையாறு புற்றுநோய் மையத்திற்கு 40 ஏக்கர் நிலத்தை வழங்கிய தம்பதி
» கரோனா சிகிச்சை: 500 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை சென்னையில் தொடக்கம்
» வயிற்று வலிக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளித்த எய்ம்ஸ் மருத்துவமனை
» இறந்தவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை: ரமணா பாணியில் நடந்த கொடூரம்!
» அமெரிக்க புற்றுநோய் மருத்துவமனையில் சோனியா காந்திக்கு தீவிர சிகிச்சை-காங்கிரஸார் கவலை
» கரோனா சிகிச்சை: 500 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை சென்னையில் தொடக்கம்
» வயிற்று வலிக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளித்த எய்ம்ஸ் மருத்துவமனை
» இறந்தவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை: ரமணா பாணியில் நடந்த கொடூரம்!
» அமெரிக்க புற்றுநோய் மருத்துவமனையில் சோனியா காந்திக்கு தீவிர சிகிச்சை-காங்கிரஸார் கவலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|