புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகம் முழுதும் 900 நர்சரி பள்ளிகள் மூடல் Poll_c10தமிழகம் முழுதும் 900 நர்சரி பள்ளிகள் மூடல் Poll_m10தமிழகம் முழுதும் 900 நர்சரி பள்ளிகள் மூடல் Poll_c10 
20 Posts - 65%
heezulia
தமிழகம் முழுதும் 900 நர்சரி பள்ளிகள் மூடல் Poll_c10தமிழகம் முழுதும் 900 நர்சரி பள்ளிகள் மூடல் Poll_m10தமிழகம் முழுதும் 900 நர்சரி பள்ளிகள் மூடல் Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகம் முழுதும் 900 நர்சரி பள்ளிகள் மூடல் Poll_c10தமிழகம் முழுதும் 900 நர்சரி பள்ளிகள் மூடல் Poll_m10தமிழகம் முழுதும் 900 நர்சரி பள்ளிகள் மூடல் Poll_c10 
62 Posts - 63%
heezulia
தமிழகம் முழுதும் 900 நர்சரி பள்ளிகள் மூடல் Poll_c10தமிழகம் முழுதும் 900 நர்சரி பள்ளிகள் மூடல் Poll_m10தமிழகம் முழுதும் 900 நர்சரி பள்ளிகள் மூடல் Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
தமிழகம் முழுதும் 900 நர்சரி பள்ளிகள் மூடல் Poll_c10தமிழகம் முழுதும் 900 நர்சரி பள்ளிகள் மூடல் Poll_m10தமிழகம் முழுதும் 900 நர்சரி பள்ளிகள் மூடல் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
தமிழகம் முழுதும் 900 நர்சரி பள்ளிகள் மூடல் Poll_c10தமிழகம் முழுதும் 900 நர்சரி பள்ளிகள் மூடல் Poll_m10தமிழகம் முழுதும் 900 நர்சரி பள்ளிகள் மூடல் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகம் முழுதும் 900 நர்சரி பள்ளிகள் மூடல்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 10, 2013 1:22 pm


தமிழகம் முழுதும் 900 நர்சரி பள்ளிகள் மூடல்



சென்னை: அரசு பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கை குறைந்துள்ள நிலையில், அடிப்படை வசதிகள் இன்மையை காரணம் காட்டி, 900 நர்சரி பள்ளிகளை மூட, அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளிகள், இன்று துவங்கியுள்ள நிலையில், மாற்று ஏற்பாடு குறித்து அரசு அறிவிக்காததால், பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில், 7,000த்திற்கும் மேற்பட்ட நர்சரி, பிரைமரி பள்ளிகளும், 4,500க்கும் அதிகமான மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன. இவற்றில், லட்சக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.தனியார் பள்ளிகளின் தரம் குறித்து ஆய்வு செய்ய, பள்ளிக் கல்வித் துறை இயக்குனர், தேவராஜன் தலைமையில், "தனியார் பள்ளி நிலம் பற்றாக்குறை தீர்க்கும் வல்லுனர் குழு' அமைக்கப்பட்டது. இக்குழு, சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில், பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தியது. மூன்று மாதங்களாகியும் குழு சார்பில், முடிவாக எந்தவித அறிக்கையும் அரசுக்கு சமர்ப்பித்ததாக தெரியவில்லை.இச்சூழலில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட, 30 மாவட்டங்களில் செயல்பட்டு வந்த, 900 நர்சரி பள்ளிகளில், கட்டமைப்பு வசதியின்மை, ஆசிரியர் பற்றாக்குறை, நிலம் குறைவாக இருத்தல் போன்ற காரணங்களைத் தெரிவித்து, பள்ளிகளை மூட உத்தரவிட்டனர்.சென்னை, கடலூர், கோவையில் செயல்பட்டு வந்த, 300க்கும் மேற்பட்ட நர்சரி பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், மற்ற மாவட்டங்களிலும் அடிப்படை வசதிகள் இல்லாத, நர்சரி பள்ளிகளை மூடவும், "நோட்டீஸ்' அனுப்பப்பட்டு உள்ளன. விரைவில், இப்பள்ளிகளும் மூடப்படும் எனத் தெரிகிறது.

"தனியார் பள்ளிகளின் தரத்தை ஆய்வு செய்த குழு, அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்காத நிலையில், "இலவச கட்டாய கல்வி சட்டம் - 2009'யை காரணம் காட்டி, நர்சரி பள்ளிகளை மூடி வருவது கண்டத்துக்குரியது' என, நர்சரி பள்ளி நிர்வாகத்தினர் கருத்து தெரிவித்தனர்; கல்வித் துறை கெடுபிடி செய்வதாக சிலர் புகார் கூறினர்.பள்ளி கட்டணங்களைச் செலுத்தி, நர்சரி பள்ளியில் சேர ஆயிரக்கணக்கான மாணவர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், தொடர்ந்து பள்ளிகள் மூடப்படப்பட்டு வருவதால், பெற்றோரும், மாணவர்களும் பீதியில் உறைந்துள்ளனர். அரசு சார்பில், எவ்வித மாற்று ஏற்பாடுகளும் அறிவிக்கப்படவில்லை.பல மாவட்டங்களில், பள்ளி நிர்வாகத்திற்கும், பெற்றோருக்கும் இடையே மோதல்களும் அரங்கேறி வருகின்றன. தற்போது பள்ளிகளும் துவங்கி விட்டதால், மற்ற பள்ளிகளில் சேர,இம்மாணவர்களுக்கு உடனே இடம் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இப்பள்ளிகளில் கல்விக் கட்டணம் கட்டிய பெற்றோரின் பணம், என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

இதுகுறித்து, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி சங்கத் தலைவர், நந்தகுமார் கூறியதாவது:கடந்தாண்டு, அரசு பள்ளிகளின் மாணவர் சேர்க்கை, 1.50 லட்சம் வரை குறைந்துள்ளது. அரசு பள்ளிகளின் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, தேவையற்ற காரணம் காட்டி, மிரட்டி, நர்சரி பள்ளிகளை, அரசு மூடி வருகிறது.அடிப்படை கட்டமைப்பு வசதிகள் அறவே இன்றி, நூற்றுக்கணக்கான அரசு பள்ளிகள் செயல்படுகின்றன. அப்பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, அரசு எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை.நர்சரி, பிரைமரி பள்ளிகளுக்கு, மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை, ஒப்புதல், புதுப்பித்தல் ஆணை வழங்கப்பட வேண்டும். இதற்காக, அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் கொண்ட, நர்சரி பள்ளிகள் விண்ணப்பித்த போதும், உடனே ஒப்புதல், புதுப்பித்தல் ஆணை வழங்கப்படுவதில்லை. நர்சரி, பிரைமரி பள்ளிகளின் விதிமுறைகளின்படி, இப்பள்ளிகளைத் துவங்க, இவ்வளவு பரப்பளவு இடம் இருக்க வேண்டும் என, எங்கும் வரையறுக்கப்படவில்லை. மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி துவங்குவதற்கு மட்டுமே, இடத்தின் பரப்பளவு குறித்த வரையறை உள்ளது.எனவே, இடம் குறித்து எவ்வித விதிமுறையும் வரையறுக்கப்படாத நிலையில், நிலம் குறைவாக இருப்பதாகக் கூறி, நர்சரிபள்ளிகளை மூடுவது, கண்டிக்கத்தக்கது. தற்போது மூடப்பட்டுள்ள, 900 பள்ளிகளில், 5,000த்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உள்ளனர்; அவர்கள் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு நந்தகுமார் கூறினார்.

ஆணைக்காக காத்திருக்கும் 2,000 மெட்ரிக் பள்ளிகள் :

தமிழகத்தில், 4,500க்கும் மேற்பட்ட மெட்ரிகுலேஷன் பள்ளிகள் செயல்படுகின்றன. அரசாணை, 48ன் படி, குறைவான நிலம் என்ற காரணம் காட்டி, இரண்டு ஆண்டுகளுக்காக, பள்ளி அங்கீகாரத்தை புதுப்பித்தல் ஆணையை, அரசு வழங்காமல் உள்ளது.மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில், அனைத்து கட்டமைப்பு வசதிகள் இருந்தும், 2,000த்திற்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு புதுப்பித்தல் ஆணையும் வழங்கப்படவில்லை. இப்பள்ளிகளில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்கள் உள்ளன. புதுப்பித்தல் ஆணை இல்லாத காரணத்தால், பள்ளி வாகனங்களுக்கான தகுதிச் சான்று பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தினமலர்




தமிழகம் முழுதும் 900 நர்சரி பள்ளிகள் மூடல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 10, 2013 1:32 pm

அது என்னவோ தெரியல மாணவர்களின் எதிர்காலத்தை கெடுக்கற
அவசர முடிவுகளைத் தான் இந்தம்மா எப்பவுமே செய்றாங்க.

முன்பு சமச்சீர் கல்வி இப்ப இதுவா? கல்லூரி மாணவர்களை போன வருடம் தான் அனைத்து அரசு பல்கலை கழகங்களையும் இணைத்து பாடாப் படுத்தினாங்க.

தொடருங்கள் அம்மா தொடருங்கள்.
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Jun 10, 2013 5:24 pm

புற்றீசல் போல பெருகி வரும் நர்சரி பள்ளிகளை கவனிக்கப்பட வேண்டும், கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று தினசரிகள் எழுதுகின்றன. அரசு நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தால் இவர்களுக்கு எதிராக அரசு இயங்குகிறது என்றும் குரல் எழுப்புகிறது.

ஊரு இரண்டானால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் தான்.



சதாசிவம்
தமிழகம் முழுதும் 900 நர்சரி பள்ளிகள் மூடல் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 10, 2013 5:33 pm

பள்ளிகள் திறந்தபின் அவசரகால நடவடிக்கை எடுத்தால் குழந்தைகள் எங்கே செல்வார்கள்?

வேறு பள்ளிகளுக்கு அவர்களை மாற்ற ஏற்பாடு செய்துவிட்டல்லவா இவற்றை மூடனும்.

நடவடிக்கையில் குறை இல்லை அதை நடைமுறை படுத்தியதில் தான் தவறு.

ஒரு நர்சரியில் 100 குழந்தைகள் என்று கணக்கு வைத்தாலும் மொத்தம் 90,000 குழந்தைகளை எங்கே சேர்ப்பது????

மற்ற பள்ளிகளுக்கு வசூல் மழை தான்.




சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Jun 10, 2013 5:52 pm

யினியவன் wrote:பள்ளிகள் திறந்தபின் அவசரகால நடவடிக்கை எடுத்தால் குழந்தைகள் எங்கே செல்வார்கள்?

வேறு பள்ளிகளுக்கு அவர்களை மாற்ற ஏற்பாடு செய்துவிட்டல்லவா இவற்றை மூடனும்.

நடவடிக்கையில் குறை இல்லை அதை நடைமுறை படுத்தியதில் தான் தவறு.

ஒரு நர்சரியில் 100 குழந்தைகள் என்று கணக்கு வைத்தாலும் மொத்தம் 90,000 குழந்தைகளை எங்கே சேர்ப்பது????

மற்ற பள்ளிகளுக்கு வசூல் மழை தான்.

தங்கள் கருத்தை ஏற்கிறேன் இனியவன். மக்கள் மீண்டுமொரு தவறிணை செய்யாதிருக்க வேண்டும்.

ஒரு பள்ளிக்கு அடிப்படை தகுதி என்ன என்ன தேவை என்று அவர்கள் உணர வேண்டும். படிப்புடன் விளையாட இடமிருக்கும் பள்ளிகளுக்கும், பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பள்ளிகளுக்கும் முன்னுரை அளிக்க வேண்டும்.



சதாசிவம்
தமிழகம் முழுதும் 900 நர்சரி பள்ளிகள் மூடல் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 10, 2013 6:10 pm

சதாசிவம் wrote:தங்கள் கருத்தை ஏற்கிறேன் இனியவன். மக்கள் மீண்டுமொரு தவறிணை செய்யாதிருக்க வேண்டும்.

ஒரு பள்ளிக்கு அடிப்படை தகுதி என்ன என்ன தேவை என்று அவர்கள் உணர வேண்டும். படிப்புடன் விளையாட இடமிருக்கும் பள்ளிகளுக்கும், பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பள்ளிகளுக்கும் முன்னுரை அளிக்க வேண்டும்.
அம்மா சில விஷயம் ரொம்ப தைரியமா பண்ணுவாங்க ஆனால் அவசரப்பட்டு செய்வதால் கெட்ட பெயரே வருகிறது.

போன முறை ஆட்சியில் இருந்த பொழுது அபாரமான சட்டம் ஒன்று போட்டார்கள் - வேலை நிறுத்தம் செய்யும் அனைத்து அரசு ஊழியர்களும் பனி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று. தமிழ்நாடே மிரண்டு விட்டது - அத்துணை அரசு ஊழியர்களும் எமெர்ஜென்சி சமயத்தில் வேலை செய்ததுபோல் ஒழுங்காக வேலை செய்தார்கள்.

தொடர்ந்து வந்த உள்ளாட்சி தேர்தலில் என்று நினைக்கிறேன் - படு தோல்வி அடைந்தவுடன் அந்த சட்டத்தை வாபஸ் பெற்று விட்டார்கள்.

மெய்யாகவே அது மிக நல்ல சட்டம் என்று எனக்கு தோன்றியது - ஆனால் பதவி ஆசையில் அது போயே போய் விட்டது.




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 10, 2013 6:24 pm

யினியவன் wrote:
போன முறை ஆட்சியில் இருந்த பொழுது அபாரமான சட்டம் ஒன்று போட்டார்கள் - வேலை நிறுத்தம் செய்யும் அனைத்து அரசு ஊழியர்களும் பனி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று. தமிழ்நாடே மிரண்டு விட்டது - அத்துணை அரசு ஊழியர்களும் எமெர்ஜென்சி சமயத்தில் வேலை செய்ததுபோல் ஒழுங்காக வேலை செய்தார்கள்.

தொடர்ந்து வந்த உள்ளாட்சி தேர்தலில் என்று நினைக்கிறேன் - படு தோல்வி அடைந்தவுடன் அந்த சட்டத்தை வாபஸ் பெற்று விட்டார்கள்.

மெய்யாகவே அது மிக நல்ல சட்டம் என்று எனக்கு தோன்றியது - ஆனால் பதவி ஆசையில் அது போயே போய் விட்டது.

ஆம், பெரும்பாலோனோர் இதனைப் பாராட்டினார்கள், ஆனால் கூட இருக்கும் அல்லக்கைகளின் தொந்தரவும் இருக்கத்தானே செய்யும்!



தமிழகம் முழுதும் 900 நர்சரி பள்ளிகள் மூடல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Mon Jun 10, 2013 8:37 pm

உண்மை கசக்கவே செய்யும் .



தமிழகம் முழுதும் 900 நர்சரி பள்ளிகள் மூடல் Pதமிழகம் முழுதும் 900 நர்சரி பள்ளிகள் மூடல் Oதமிழகம் முழுதும் 900 நர்சரி பள்ளிகள் மூடல் Sதமிழகம் முழுதும் 900 நர்சரி பள்ளிகள் மூடல் Iதமிழகம் முழுதும் 900 நர்சரி பள்ளிகள் மூடல் Tதமிழகம் முழுதும் 900 நர்சரி பள்ளிகள் மூடல் Iதமிழகம் முழுதும் 900 நர்சரி பள்ளிகள் மூடல் Vதமிழகம் முழுதும் 900 நர்சரி பள்ளிகள் மூடல் Eதமிழகம் முழுதும் 900 நர்சரி பள்ளிகள் மூடல் Emptyதமிழகம் முழுதும் 900 நர்சரி பள்ளிகள் மூடல் Kதமிழகம் முழுதும் 900 நர்சரி பள்ளிகள் மூடல் Aதமிழகம் முழுதும் 900 நர்சரி பள்ளிகள் மூடல் Rதமிழகம் முழுதும் 900 நர்சரி பள்ளிகள் மூடல் Tதமிழகம் முழுதும் 900 நர்சரி பள்ளிகள் மூடல் Hதமிழகம் முழுதும் 900 நர்சரி பள்ளிகள் மூடல் Iதமிழகம் முழுதும் 900 நர்சரி பள்ளிகள் மூடல் Cதமிழகம் முழுதும் 900 நர்சரி பள்ளிகள் மூடல் K
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 10, 2013 10:29 pm

positivekarthick wrote:உண்மை கசக்கவே செய்யும் .

எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது.... ஆனால் பள்ளிகள் திறக்கும் போது சொல்லாமல் கொஞ்சம் முன்னாலே சொல்லி இருந்தால் புத்தகம் வாங்குவது , சீருடை தைப்பது போன்ற வேலைகளை இருமுறை செய்ய வேண்டி வராது இல்லையா? ( எவ்வளவு செலவாகும் ? அது ஒன்று இருக்கே? )



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Jun 10, 2013 10:35 pm

krishnaamma wrote:
positivekarthick wrote:உண்மை கசக்கவே செய்யும் .

எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது.... ஆனால் பள்ளிகள் திறக்கும் போது சொல்லாமல் கொஞ்சம் முன்னாலே சொல்லி இருந்தால் புத்தகம் வாங்குவது , சீருடை தைப்பது போன்ற வேலைகளை இருமுறை செய்ய வேண்டி வராது இல்லையா? ( எவ்வளவு செலவாகும் ? அது ஒன்று இருக்கே? )

நீங்க சொல்றதும் யோசிக்க வேண்டியது தான் ஒரு தடவை செலவு செய்வதே கஷ்டம் இதுல இரண்டு தடவை வேறு அநியாயம் அநியாயம் அநியாயம்




தமிழகம் முழுதும் 900 நர்சரி பள்ளிகள் மூடல் Mதமிழகம் முழுதும் 900 நர்சரி பள்ளிகள் மூடல் Uதமிழகம் முழுதும் 900 நர்சரி பள்ளிகள் மூடல் Tதமிழகம் முழுதும் 900 நர்சரி பள்ளிகள் மூடல் Hதமிழகம் முழுதும் 900 நர்சரி பள்ளிகள் மூடல் Uதமிழகம் முழுதும் 900 நர்சரி பள்ளிகள் மூடல் Mதமிழகம் முழுதும் 900 நர்சரி பள்ளிகள் மூடல் Oதமிழகம் முழுதும் 900 நர்சரி பள்ளிகள் மூடல் Hதமிழகம் முழுதும் 900 நர்சரி பள்ளிகள் மூடல் Aதமிழகம் முழுதும் 900 நர்சரி பள்ளிகள் மூடல் Mதமிழகம் முழுதும் 900 நர்சரி பள்ளிகள் மூடல் Eதமிழகம் முழுதும் 900 நர்சரி பள்ளிகள் மூடல் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக