புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதுமை ஒரு பிரச்சனை அல்ல அது ஒரு வரம்! Poll_c10முதுமை ஒரு பிரச்சனை அல்ல அது ஒரு வரம்! Poll_m10முதுமை ஒரு பிரச்சனை அல்ல அது ஒரு வரம்! Poll_c10 
5 Posts - 63%
heezulia
முதுமை ஒரு பிரச்சனை அல்ல அது ஒரு வரம்! Poll_c10முதுமை ஒரு பிரச்சனை அல்ல அது ஒரு வரம்! Poll_m10முதுமை ஒரு பிரச்சனை அல்ல அது ஒரு வரம்! Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
முதுமை ஒரு பிரச்சனை அல்ல அது ஒரு வரம்! Poll_c10முதுமை ஒரு பிரச்சனை அல்ல அது ஒரு வரம்! Poll_m10முதுமை ஒரு பிரச்சனை அல்ல அது ஒரு வரம்! Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதுமை ஒரு பிரச்சனை அல்ல அது ஒரு வரம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 08, 2013 4:50 pm


ஒவ்வொரு மனிதனுக்கும் பால்யம், இளமை, முதுமை என்று மூன்று நிலைகள் உண்டு. பிள்ளைப் பிராயத்தில் பசி எடுத்தால், அல்லது உடம்புக்கு ஏதாவது உபாதை ஏற்பட்டால் அழுவதும், விளையாட்டு காட்டினால் சிரிப்பதுமாக இருக்கும். கவலையற்ற நிலை. இளம் வயதில் ஆடி, ஓடி, சம்பாதிக்கும் காலத்தில், சுறுசுறுப்பும், துடிதுடிப்புமாகக் காலம் ஓடிக் கொண்டிருக்கும்.

முதுமைக் காலத்தில் உடலும், உள்ளமும் தளர்ந்துபோய், பிரச்சனைகள் தலைதூக்கும். எடுத்ததெற்கெல்லாம் கோபம், தாழ்வு மனப்பான்மை, தான் ஒன்றுக்குமே லாயக்கில்லையோ என்ற மனச்சோர்வு, பயம் என்று இப்படிப் பல்வேறு உணர்ச்சிக் கொந்தளிப்பில் தவிக்க நேரிடுகிறது.

முதுமைக்கு மட்டுமல்ல, வாழ்க்கையின் கடைசிப் பயணத்திற்கும் தம்மைத் தயார் செய்து கொள்ளாததே இதற்குக் காரணம். உண்மையில் முதுமை ஒரு பிரச்சனை அல்ல அது. இறைவன் தந்த வரமே என்பது எத்தனைப் பேருக்குத் தெரிந்திருக்கிறது.

ஆகவே, முதுமையை ஒரு சாபம் என்றோ, சுமையானது என்றோ, வெறுக்கத் தக்கதாகவோ கருத வேண்டாம். நேற்றைய நல்ல நினைவுகளிலிருந்து உங்கள் வாழ்க்கையில் எத்தனையோ நல்ல அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும். அந்த மகிழ்ச்சிகரமான நினைவுகளில் ஆழ்ந்திருக்கலாம். இன்று நடப்பதை மன நிறைவுடன் ஏற்றுக்கொள்ளுங்கள். நாளைய தினத்தைப் பற்றிய கவலையோ, பயமோ இன்றி நம்பிக்கையுடன் எதிர்கொள்ளப் பழகுங்கள்.

சிரிப்பு அருமருந்தாகும். வயதானால் சிரிக்கக் கூடாது. நம்மைப் பிறர் தவறாகப் பார்ப்பார்கள் என்று ஏன் எண்ணுகிறீர்கள். வாய்விட்டுச் சிரியுங்கள். உங்கள் சலிப்பை மட்டுமின்றி, மற்றவர்களுக்கு ஏற்படக்கூடிய சலிப்பையும் விரட்டலாமே.

சோம்பலைத் தூரத் தள்ளுங்கள். வயதானாலும் மனதளவில் சுறுசுறுப்பாக இருக்க முடியுமே. தனிமையைக் கண்டு அஞ்சாமல், அதனை நேசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். ஏன் உங்கள் பேரப் பிள்ளைகளுடன் உள்ளன்புடன் விளையாடலாமே. அவர்களுக்கு நல்ல நல்ல கதைகளைச் சொல்லுங்கள். குழந்தைகளும் கேட்டு ரசிப்பார்கள். உங்களுக்கும் பொழுது குதூகலமாகப் போகும்.

இளைஞர்களுக்குத் தக்க முறையில் வழிகாட்டுங்கள். உங்கள் கடந்தகால அனுபவங்களைக் கூறி அவர்களை வழிநடத்திச் செல்லுங்கள்.

ஒவ்வொரு மனிதனது வாழ்க்கையும் ஒரு இனிய சகாப்தம்தான். எத்தனையோ பேர் வயதான காலத்திலும் சாதிக்கவில்லையா? உங்களது உயரிய விழுமங்களை உங்களது வாரிசுகளும் பெற்றுப் பயன் பெற உதவுங்கள்.

விபரிதமான கற்பனையில் ஏன் மிதக்கின்றீர்கள். எதிர்மறையான சிந்தனைகளுக்கு ஆளாகித் தவிப்பானேன். நல்ல விதமாகவே எண்ணுங்கள். எல்லாம் நல்லபடியே நடக்கும். நம்பிக்கைதான் ஆணிவேர். வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்காமல் அதனால் சோர்வும், தளர்ச்சியும் அடையந்து தவிப்பதைவிட சற்றுக் காற்றாட வாக்கிங் போய் வரலாம். கோவில்களுக்குப் போகலாம். ஆன்மீகச் சொற்பொழிவுகளைக் கேட்கலாம். பஜனையில் கலந்து கொள்ளலாம். இப்படி நேரத்தைப் பயனுள்ளதாக ஆக்கிக் கொண்டு விட்டீர்கள் என்றால், மனச்சோர்வு எப்படி வரும்?

உங்களால் முடிந்த சிறு, சிறு வீட்டு வேலைகளைச் செய்யலாம். பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லித் தரலாம்.

உங்களது வயது ஒத்தவர்களிடம் சற்று நேரம் பேசிப் பொழுதைக் கழிக்கலாம். 58, 60 வயதானதும் ஓய்வு பெறுவது உங்கள் பணிக்கு மட்டும்தான். அதற்கு மேல் உங்கள் உடல்நிலை திடமாக இருந்தால் வேலைக்குச் செல்லுங்கள். அதற்காகச் சுமையான வேலைகளை ஏற்றுக் கொண்டு கஷ்டப்பட வேண்டாம்.

வயதாகி விட்டதே என்று ஒருபோதும் கவலைப்படாதீர்கள். அந்த எண்ணமே உங்கள் முதுமைக் காலத்தில் பெரிதும் உங்களைத் துன்புறுத்தும. உடம்புக்குத்தான் வயதாகி விட்டது. 80, 90 வயதானவர்கள் கூட பெருமளவில் சாதித்திருக்கிறார்கள். மனதில் திடம் இருந்தால் நீங்களும் எதையாவது சாதிக்கலாம். ரிடையரான பின்பு வேலைக்குப் போய்த்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயமில்லை. உங்கள் கடந்த கால அனுபவங்களைப் பிறருக்குப் பயன்படும்படி எடுத்துச் சொல்லலாமே. Counselling என்பதை ரிடையரான பின்பும் கூடச் செய்யமுடியும்.

உங்களை நீங்கள் முழுமையான ஈடுபாட்டுடன் வைத்துக்கொள்ளலாம். உங்களை விட வயது முதிர்ந்தவர்களுக்கு நம்பிக்கையை ஊட்டி உற்சாகப்படுத்தலாம். இளைஞர்களுக்கு உங்களது அனுபவத்தைப் பயன்படும்படி எடுத்துச் சொல்லலாம்.

வயதான காலத்தில்தான் பல்வேறு பிரச்சனைகளை நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால், அதற்காக நீங்கள் மனம் தளர வேண்டாம். நீங்களே பிரச்சனையாகிவிடாமல், பிரச்சனைகளை நுணுக்கமாக ஆராய்ந்து தீர்க்க உதவலாம். குடும்பத்தில் நீங்கள் ஒரு இணைப்புப் பாலமாக இருக்கலாம். சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். பொறுமையாக இருங்கள். எதற்கும் கவலைப்படாமல் அமைதியாக இருங்கள்.

உங்களது இனிய சுபாவத்தாலும், கனிவான பேச்சாலும், பரிவாலும், அன்பாலும் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக, உற்சாக மூட்டுபவர்களாக இருங்கள்.

உங்கள் மகள், மருமகனுக்கு ஏற்படக்கூடிய சிறு சிறு சலசலப்புகள், சங்கடங்கள், பிரச்சனைகளை லாவகமாகத் தீர்த்து, அவர்கள் உங்களிடம் மேலும் பிரியமாக நடந்து கொள்ளும்படி நடந்து கொள்ளுங்கள்.

அமைதியும் கம்பீரமும் உங்கள் முதுமைக்கு மேலும் மெருகூட்டும். ஒரு போதும் சுயப் பச்சாதாபத்துக்கு ஆளாகாதீர்கள் (INFRADIG) அதுதான் உங்கள் முதல் எதிரி என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

முதுமையில் உங்களது பிரியமான வாழ்க்கைத் துணைவியை இழக்க நேரிடும்போது அதனால் உங்களது வாழ்க்கையே இழந்து விட்டதாக ஒருபோதும் நினைத்துக் கொள்ளாதீர்கள். அந்த இயற்கை நிகழ்வை, மாற்ற முடியாத அந்த இழப்பை ஏற்றுக் கொள்ளப் பழகுங்கள்.

குடும்பத்தினருடைய குறைகளை, அவர்கள் மனம் புண்படாதபடி, நயமாக எடுத்துரைத்து, அதனைக் களைய முற்படுங்கள்.

குடும்பத்தாரின் செயல்கள் உங்களை எந்த விதத்தில் பாதித்தாலும், அதனை பெரிது படுத்தாமல் மறந்து விடுங்கள் “சிறியோர் செய்த சிறு பிழையெல்லாம் பெரியோரின் பொறுப்பது கடனே” என்ற மூதுரையை நினைவில் கொள்ளுங்கள்.

உங்களுக்கு சங்கடம் ஏற்படும் விதத்தில் குடும்பத்தார் நடந்து கொண்டாலும் இனி நயமாக எடுத்துரைத்து, அவர்கள் இனி அவ்வாறு நடந்து கொள்ளாமல் கவனமாக இருக்க உதவுங்கள். அதாவது உங்களது உணர்ச்சிகளை அப்படியே கொட்டிவிடாமல் நயமாக எடுத்துரைக்கப் பழகுங்கள்.

மனம் பாரமாக இருந்தால், உங்கள் வயதினரான நண்பர்களுடன் சற்று நேரம் மனம் விட்டுப் பேசினீர்களானால் அந்த மன பாரம் குறைந்து விடும். காலத்திற்கேற்றவாறு நீங்களும் மாறிக்கொள்ளுங்கள். இன்றைய சூழ்நிலையில் உங்களது தேவைகளை உணர்ந்து, அனுசரித்துப் போகும் நிலைமை பெரும்பாலான குடும்பங்களில் இல்லைதான். இந்த நிதர்சனமான உண்மையை புரிந்து கொண்டு, விட்டுக் கொடுத்து, அனுசரித்துப் போகப் பழகுங்கள்.

குடும்பத்தில் இளையவர்களைப் பொறுப்புடன் செயல்பட முழுமனதுடன் அனுமதியுங்கள். ஏதோ நீங்கள் இல்லையென்றால் குடும்பமே நடக்காது என்பது போன்ற தகாத எண்ணங்களை ஒரு போதும் உங்களது மனதில் வளர்த்துக் கொண்டு அவதிப்படாதீர்கள்.

உங்களது அறிவுரையையும், வாழ்க்கை முறையையும் முரண்பாடின்றி இருக்கும் விதமாக உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். உங்களது உடல்நலம் பாதிக்கப்படும் பட்சத்தில், அதைப் பெரும் பிரச்சனையாக்கி விடாமல், தக்க சமயத்தில் எடுத்துரைத்து, தக்க சிகிச்சை பெற்று நிவாரணம் பெறுங்கள். உரிய மருந்துகளை நீங்களே சாப்பிடுங்கள்.

நீங்கள் எதிர்பார்க்கும் கவனம் உங்கள் குடும்ப உறுப்பினரிடமிருந்து கிடைக்கவில்லை என்றால், அவர்கள் உங்களை ஒதுக்கிவிட்டதாக ஒருபோதும் நினைத்துக் கொள்ளாதீர்கள். இந்த ஒரு சிறு சலனமே உங்கள் மனதை மட்டுமல்ல, உங்கள் உடல் நலனையும் பெரிதும் பாதிக்கும்.

சிறு விஷயங்களிலும் நீங்கள் திருப்தி அடைவீர்களானால், மனதளவில் நீங்கள் இளமையாக இருப்பீர்கள்.

வயதானவர்கள் உண்மையில் வீட்டுக்குவீடு காவல் தெய்வம் போன்றவர்கள். மூத்தோர் சொல் முதலில் கசப்பாகத்தான் இருக்கும். பின்னர் புரியும்போது அது இனிக்கவே செய்யும். ஆகவே அதைரியப் படாமல் நல்லவற்றை நயமாக எடுத்துச் சொல்லுங்கள்.

உங்களது வாழக்கையை நீங்கள் தவறவிட்டாலன்றி, பிறர் ஒரு போதும் உங்கள் வாழ்க்கையைத் தட்டிப்பறிக்க முடியாது. உங்களது நிம்மதியையும் குலைக்க முடியாது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

வீணாகும் பொருள்களைக் கொண்டு அரிய கலைப்படைப்புகளைத் தயாரிப்பது போல, நீங்களும், குடும்பத்தாருக்கு ஒரு பெரிய சொத்து என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதற்கேற்ப உங்கள் எண்ணப்போக்கையும், வாழ்க்கை முறையையும் மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள்.

மகிழ்ச்சியற்றபோதெல்லாம், உங்களுக்குக் கிடைதக்காததைவிட, கிடைத்தவற்றை எண்ணிப்பார்த்து சந்தோஷப்படுங்கள்.

மரணம் ஒருநாள் வந்தே தீரும் இன்றோ, நாளையோ என்பது தான் பரம ரகசியம். ஆனா, அதற்காக சாவைப்பற்றியோ நினைத்துக் கொண்டிருப்பானேன்.

நீங்கள் இதுகாறும் வாழ்ந்த வாழ்க்கை, செய்த செயல்கள், புரிந்த சாதனைகள் நினைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.

நேற்று கழிந்த காலம் நாளை நமது கையில் இல்லை. இன்றைய நாளை மட்டும் நிறைவாகச் செலவிடுங்கள்.

ஒருபோதும் உங்களுக்குப் பின் உங்கள் சந்ததியினரை, நீங்கள் இன்றிச் செயல்பட முடியாதவாறு முடக்கி வைத்து விடாமல், அவர்களே பொறுப்பை உணர்ந்து செயல்படும்படிச் செய்யுங்கள். அந்த விஷயத்தில் அவர்களுக்குப் பெரிதும் உதவி செய்யுங்கள்.

நீங்கள் யாருக்கும் பாரமல்ல, பிரச்சனையல்ல. மாறாக உங்களது இழப்பு பெரும் பாரம் என்று எண்ணுங்கள். அதற்கேற்றாற்போல் உங்களது வாழ்க்கையை எதிர் கொள்ளுங்கள்.

நீங்கள் தான் வேர்கள். உங்கள் சந்ததியினர் முளைத்து, அரும்புவிட்டு, துளிர்த்து, பூத்து, காய்த்து, கனியாகும் மரமாக வளரவிடுங்கள்.

Please Don’t Grow old. Only when they cease grow they become old. யாரும் முதியவர் ஆவதில்லை. அவர்கள் வளர்வதை நிறுத்திக்கொள்ளும்போது தான் வயதானவர்கள் ஆகிறார்கள் என்று எமர்சன் என்ற தத்துவ ஞானி கூறியதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.

உங்களது முதுமை வாழ்க்கை உங்களுக்கு ஒருபோதும் சுமையாக இராமல், வரமாக, மகிழ்ச்சியாக அமைவதை நீங்கள் உணரலாம்.

தன்னம்பிக்கை



முதுமை ஒரு பிரச்சனை அல்ல அது ஒரு வரம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 08, 2013 5:05 pm

முதுமை பற்றிய பகிர்வில் முதிர்ச்சி சூப்பருங்க

முதுமை பருவம் வந்தவுடன் உங்களுக்கும் முதிர்ச்சி வந்தது அருமை புன்னகை

இளைஞர்கள் எங்களுக்கு ரொம்பவே உதவும் சிவா உங்கள் அனுபவம்.
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 08, 2013 5:08 pm

முதுமை ஒரு பிரச்சனை அல்ல அது ஒரு வரம்! 943133_503963279676774_1670648369_n



முதுமை ஒரு பிரச்சனை அல்ல அது ஒரு வரம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 08, 2013 5:13 pm

யினியவன் wrote:முதுமை பற்றிய பகிர்வில் முதிர்ச்சி சூப்பருங்க
.

இந்தப் பதிவே உங்களுக்காகத்தானே! படித்துப் பயன்பெற வாழ்த்துகள் தல!



முதுமை ஒரு பிரச்சனை அல்ல அது ஒரு வரம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 08, 2013 5:15 pm

இளைஞனாய் இருக்கையிலேயே நீ முதுமையை நேசி
முதுமையை நேசிக்கும் இளைஞர்கள் வழி வழியாய் வந்திடுவர்




avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Jun 08, 2013 7:02 pm

அப்படீங்கிறீங்க, சரி ஏற்றுக் கொள்ளுவோம்.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Jun 08, 2013 7:37 pm

முதுமை பற்றிய பதிவு சூப்பருங்க

ஆனாலும் முதுமையில் பலரும் படும் கஷ்டம் இருக்கிறதே சொல்லி மாளாது சோகம் சோகம் சோகம்




முதுமை ஒரு பிரச்சனை அல்ல அது ஒரு வரம்! Mமுதுமை ஒரு பிரச்சனை அல்ல அது ஒரு வரம்! Uமுதுமை ஒரு பிரச்சனை அல்ல அது ஒரு வரம்! Tமுதுமை ஒரு பிரச்சனை அல்ல அது ஒரு வரம்! Hமுதுமை ஒரு பிரச்சனை அல்ல அது ஒரு வரம்! Uமுதுமை ஒரு பிரச்சனை அல்ல அது ஒரு வரம்! Mமுதுமை ஒரு பிரச்சனை அல்ல அது ஒரு வரம்! Oமுதுமை ஒரு பிரச்சனை அல்ல அது ஒரு வரம்! Hமுதுமை ஒரு பிரச்சனை அல்ல அது ஒரு வரம்! Aமுதுமை ஒரு பிரச்சனை அல்ல அது ஒரு வரம்! Mமுதுமை ஒரு பிரச்சனை அல்ல அது ஒரு வரம்! Eமுதுமை ஒரு பிரச்சனை அல்ல அது ஒரு வரம்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 08, 2013 7:40 pm

சிவா wrote:இந்தப் பதிவே உங்களுக்காகத்தானே! படித்துப் பயன்பெற வாழ்த்துகள் தல!
இளைஞனா இருக்கறப்பவே என்ன கத்துக்க சொல்ற உங்க அன்பே அன்பு சிவா




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 08, 2013 8:02 pm

ரொம்ப நல்ல பதிவு சிவா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக