Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பார்ப்பனர்.. பார்ப்பனர்.. பார்ப்பனர்.. ப்ளஸ் மனுஷ்யபுத்திரன் !
+5
ராஜு சரவணன்
சதாசிவம்
யினியவன்
பார்த்திபன்
அகல்
9 posters
Page 1 of 5
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
பார்ப்பனர்.. பார்ப்பனர்.. பார்ப்பனர்.. ப்ளஸ் மனுஷ்யபுத்திரன் !
பார்ப்பனர்.. பார்ப்பனர்.. பார்ப்பனர்..
இந்த வார்த்தை ஒலிக்காத சாதிய இணையதளங்களோ, பேஸ்புக், ட்விட்டர் போன்று எந்த சமூக வலைதளங்களோ இல்லை என்றுதான் கூற வேண்டும். அந்த அளவிற்கு அந்த இன மக்கள்மேல் வெறிகொள்ள நமது சமுதாயம் பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறது. இதற்கு எழுத்தாளர்களும் விதிவிலக்கல்ல. ஒரு குறிப்பிட்ட மதத்தின் மீது தீவிரவாத முத்திரை குத்தி அந்த மதத்தையே தவறான கண்ணோட்டத்தில் பார்க்கவைத்த நமது சமூகம் இந்த பார்ப்பனர் என்ற வார்த்தையும் விட்டு வைக்கவில்லை. இவர்கள் சொல்வதுபோல் பார்ப்பனர்கள் கெட்டவர்களாகவே இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் நான் கேட்பது ஒன்றுதான்.
அந்தப் பார்ப்பனர்களை விமர்சிக்கும் நீங்களும் உங்க சாதிக்காரன், மதக்காரன் அனைவரும் உத்தமர்களா ? அந்த பார்ப்பனர்களை வம்புக்கு இழுப்போருக்கு வேறு சாதி பெயரைச் சொல்லி விமர்சிக்க ஏன் தைரியமில்லை ? வேறு சாதியில் கெட்டவர்கள் இல்லை என்பதாலா ? இல்லை. காரணம், வேறு ஒருவனின் சாதியைப் பற்றி வாய்திறந்தாலே, அவன் ஆளைக்கூட்டி பேருந்தை தீ வைத்து கொளுத்துவான், ஒரு கிராமத்தையே எரிப்பன், பொதுச் சொத்துக்களை நாசமாக்குவான். நீங்கள் கூறும் பார்ப்பனன் அதுபோன்ற செயல்களில் எதிர்ப்பைக் காட்ட ஈடுபடமாட்டான் என்பது உங்களுக்குத் தெரியும். அந்த தைரியம்.
பார்ப்பனர்கள்... பார்ப்பனர்கள்... என்று சாதிய வன்முறையை தூண்டிவிட்டு பிழைப்பு நடத்தும் சில எழுத்தாளர்களில் ஒருவரான மனுஷ்யபுத்திரன் நேற்று அமீர் அப்பாஸ் என்பவற்றின் ஒரு முகநூல் ஸ்டேடஸ்யை தனது சுவரில் பகிர்ந்திருந்தார். அந்த ஸ்டேடசையும் அதற்கு நான் அளித்த பின்னூட்டத்தையும் (கமெண்ட்) கீழே பகிர்ந்துள்ளேன். நான் கூறியது சரியென்று உங்களுக்குப் பட்டால் இதைத் பகிர்ந்துகொள்ளவும்.
மனுஷ்யபுத்திரன் ஸ்டேடஸ்
சின்மயி என்கிற பார்ப்பனப் பெண்
”தன்னை அவதூறு பரப்புகிறார்கள்”
புகார் அளித்த போது,
உடனடியாக நடவடிக்கை எடுத்தது
தமிழக காவல் துறை.
ஆனால்,
அதை விடவும் மோசமான பாதிப்பை,
உண்மையான குற்றச்சாட்டை கிஷோர் மீது
புகார் அளித்த கவின்மலர் அவர்களுக்கு,
எவ்வித நடவடிக்கையும்..
இது வரை காவல்துறை எடுக்கவில்லை.
இது பார்ப்பனர்களுக்கு
மட்டுமே..
பணி புரியும் அரசா?
என்ற கேள்விக்கு
பெரியார் மண்ணில்
உரிய பதில் இல்லை.
எனது பின்னூட்டம் (கமெண்ட்)
இந்த சமூகத்தை சீர்குலைப்பது அரசியல்வாதிகள், சாதி, மத வெறி பிடித்தவர்கள் மட்டுமல்ல... அப்படி எந்த வெறியும் இல்லை என்று ஒரு போர்வையில் வாழும் எழுத்தாளர்களும் கூடத்தான். இந்த சாதி வெறியைத் தூண்டிவிட்டு அதில் குளிர்காய்வதில் உங்களைப் போன்றோருக்கு மிகப் பெரிய பங்குண்டு என்பதைச் சுட்டிக்காட்டி எனது பக்கத்தில் பல நாட்களுக்கு முன்னேற ஒரு ஸ்டேடஸ் போட்டேன். அது உண்மை என்று நிருபித்ததற்கு நன்றிகள் மிஸ்டர் மனுஷ்யபுத்திரன். கொஞ்சம் உங்கள் சுயநலவாத எண்ணங்களை கலட்டி வைத்துவிட்டு, விசாலமான பார்வையில் உலகத்தைப் பார்க்கவும்.
பல நாட்களுக்கு முன் நான் பதிவிட்ட ஸ்டேடஸ்:
தமிழகத்தைச் சேர்ந்த பெரும்புள்ளிகளில் சிலர், தமிழ் மக்களுக்கு எதிராக கருத்துக்களைப் பரப்புகிறார்கள் தங்களது ஊடகத்தையும் அதற்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள். இது கட்டாயம் கண்டிக்க வேண்டிய செயல்தான். ஆனால் அவர்களுக்கு எதிரான கருத்துக்களைக் கூறுவதாக நினைத்துக் கொண்டு அவர்களின் சாதியை முகநூல், இணையதளங்கள் என்று எல்லா இடத்திலும் வம்புக்கு இழுக்கிறார்கள். சாதியைக் குறிப்பிட்டு விமர்சிக்க சில எழுத்தாளர்கள் கூட தயங்குவதில்லை.
என்னைப் பொருத்தவரை, ஒரு சாதியைச் சேர்ந்த ஒருவன் தவறு செய்வதால் அந்த சாதியையே விமர்சிப்பதும், ஒரு மதத்தைச் சார்ந்த ஒருவன் குண்டு வைப்பதால் அந்த மதத்தையே விமர்சிப்பதும் அடி முட்டாள் தனம். எல்லோர் சாதியிலும், மதத்திலும் நல்லவர்கள் கெட்டவர்கள் இருவரும் களிமண் கலந்த நீர்போல் கலந்தே இருக்கிறார்கள்.
மற்ற சாதி, மத மக்களை விமர்சனம் செய்பவன் தனது சாதி, மதத்தைச் சேர்ந்த அனைவரும் உத்தமர்கள் என்று எவனாவது சொல்ல முடியுமா ? திருந்துங்கப்பா.
பின் குறிப்பு: 1. நான் நீங்கள் கூறும் பார்ப்பனன் அல்ல, சாதி மதத்தை அடையாளப்படுத்தாமல் மனிதன் என்று அடையாளப்படுத்த விரும்புபவன், உலகத்தில் அனைவரும் சமம் என்று நினைப்பவன் 2. இந்த கமெண்ட்டுக்காக கண்டிப்பாக நான் தடை செய்யப்படுவேன் அல்லது இந்த கமெண்ட் நீக்கப்படும் என்று தெரியும். அப்படி செய்யப்பட்டால் அதைத் துச்சமாக மதிப்பேன். 3. எந்த கட்சியையும், சாதிச் சங்கத்தையும் சார்ந்தவனல்ல, இந்த உலகம் சமத்துவமாய் வாழவேண்டும் என்று நினைக்கும் கடைக்கோடி தமிழன் 4. உங்களுக்கு எதிரியல்ல, சில நாட்களுக்குமுன் உங்களது உடல் குறைபாட்டை விமர்சித்து கருத்துக் கூறியவனை எதிர்த்தவன். நன்றி !
பின்னூட்டம் தாண்டி கடைசியாக எனது மனதில் உதித்த கேள்விகள்
1. சமுதாயத்தில் கீழ்த்தட்டு வர்க்கத்தைச் சார்ந்த பெண்ணாக இருந்தாலும், பெரிய கோடீஸ்வரியாக இருந்தாலும் சாதி, மதம், இனம் கடந்து அவர்களுக்கு வேண்டிய நியாயம் கண்டிப்பாக கிடைக்க வேண்டும். அதனால் கவின்மலர் என்ற பெண்ணிற்கு சரியான நீதி கிடைக்க வேண்டும் என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அதற்காக ஒரு சாதியை ஏன் மக்களுக்கு எதிராக திருப்ப வேண்டும். ஒரு பெண் சம்மந்தமான பிரச்சனையில் ஒரு சாதியை ஏன் புகுத்தவேண்டும்.
இதன் விளைவுகள் என்ன என்பதை அவரின் முகநூல் பக்கத்தில் போய்ப் பார்த்தால் தெரியும். இந்நேரேம் ஒரு சாதியச் சண்டையே நடந்து முடிந்திருக்கும். சமுக நல்லிணக்கத்திற்காக எழுதுகிறோம் என்று சொல்லும் எழுத்தாளர்கள் இதைத்தான் எதிர்பார்க்கிறார்களா ? ஒரு பிரச்சனையை சரியான பாதையில் விவாதித்து தீர்க்காமல் இன்னொரு பிரச்னைக்கு இது வழிவகுக்கும் என்பது இவர்களுக்குத் தெரியாமலா போய்விடும் ?
2. இவர்கள் கூறுவதுபோலவே வைத்துக்கொண்டால், இதுவரை பார்ப்பனர் அல்லாத பெண்களுக்கு நமது நீதித்துறை நீதியே வழங்கியதில்லையா ? இல்லை அத்தனை பார்ப்பனப் பெண்களுக்கும் சரியான நீதி கிடைத்து விட்டதா ? இதுதான் ஒரு சமூகப் பிரச்னையை அணுகும் முறையா ? இதுபோன்ற எண்ணங்கள் உடையோரை ஆதரிப்போர் எனக்கு ஒன்றும் அறியாத அப்பாவிகளாகத் தெரிகிறார்கள்.
3. அது என்ன எப்போது பார்த்தாலும் பெரியாரை மேற்கோள் காட்டியே இந்த பார்ப்பனப்போரை நடத்துகிறீர்கள். நீங்களெல்லாம் பெரியார் கொள்கைப் பிரியர் என்பதாலா ? இல்லை. இதுபோன்ற சாதிய எண்ணங்களைத் தூண்ட உங்களுக்கு இரு காரணம் தேவைப்படுகிறது அதற்கு பெரியாரைப் பயன்படுத்திக் கொள்கிறீர்கள். கடவுள் இருக்கிறார் என்று சொல்வபவன் முட்டாள், அயோக்கியன் என்று பெரியார் சொன்னார். இந்தக் கூற்றையும் இதுபோன்ற முகநூல் ஸ்டேடஸ் போட்ட அமீர் அப்பாஸ் கடவுள் இல்லை என்பதை ஏற்றுக்கொள்வாரா ? இல்லை திராவிடக் கட்சிகளைச் சேர்ந்ததால் இதைப் பகிர்ந்த மனுஷ்யபுத்திரன் தான் பெரிய அறிவாளியா ?
4. இந்த முகநூல் ஸ்டேடஸ்யை போட்ட அமீர் அப்பாஸ் சினிமா துறையில் உதவி இயக்குனர் என்று அவரது பக்கம் காட்டுகிறது. முஸ்லிம் இன மக்களுக்கெதிராக பல தமிழ் திரைப்படங்களில் வசனங்கள் இருந்தது என்பதை மறுக்க முடியாது. இவரின் இந்த ஸ்டேடசை பார்க்கையில் எனது மனதில் ஒரு எண்ணம் ஓடுகிறது. இவர் படம் எடுக்க ஆரம்பித்துவிட்டால், இஸ்லாமியர்களுக்கு எதிராக சிலர் வசனங்களைச் சேர்த்து மதவாத மோதல்களைத் தூண்டியதுபோல் இவர் கூறும் அந்த பார்ப்பன மக்களுக்கு எதிராக கருத்துக்ககளைக் கூறி மற்ற இஸ்லாம் மக்களை தலைகுனிய வைக்கமாட்டார், மதவாத எண்ணங்களைத் தூண்டமாட்டார் என்று என்ன நிச்சயம் ?
5. ஒரு பேனாவை கையில் எடுத்துக்கொண்டு, சில தொலைக்காட்சிகளில் பேட்டி கொடுத்துவிட்டால் தாங்கள் கூறுவதுதான் சரி, தாங்கள் கூறுவதுதான் ஞாயம் என்று சொல்லும் இதுபோன்ற சாதிய, மத வன்முறையைத் தூண்டும் எழுத்தாளர்கள் இந்திய ஒருமைப்பாட்டிருக்கும் மக்கள் நல்லிணக்கத்திற்கும் பாடுபடுவார்கள் என்று நினைக்கிறீர்களா ? அதை வைத்து குளிர் காய்ந்து ஆதாயம் தேட மட்டுமே வருவார்கள் என்பதே நிதர்சனம்.
6. சோகம் என்னவென்றால், பார்ப்பனர் அல்லாத மக்கள் இது போன்ற எழுத்தாளர்களின் ஸ்டேடஸ்யைப் பார்த்துவிட்டு, இவரே சொல்லிவிட்டாரே எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று எண்ணிக்கொண்டு சற்றும் சிந்திக்காமல் அந்த குறிப்பிட்ட சாதி மக்கள் மேல் தங்களை அறியாமல் வெறுப்பை வளர்த்துக் கொள்கிறார்கள். அது சமுதாயப் பிளவிற்கு முக்கிய காரணமாக அமைகிறது.
ஆகையால் இது போன்ற சாதிய/மத வெறிபிடித்தவர்களை இனம் கண்டு ஒடுக்குவது சமுதாயத்திற்கு இன்றியமையாத தேவையாக அமைகிறது. அதுவே சாதி, மதம் கடந்த இந்திய ஒருமைப்பாட்டிற்கு உதவும் என்பது எனது எண்ணம்.
நன்றி !
Original Source : http://kakkaisirakinile.blogspot.in/2013/06/blog-post_6.html
அன்புடன்,
அகல்
http://2.bp.blogspot.com/-K44aVhOtt_w/UbH09DgvrXI/AAAAAAAACPM/v9DxjTaiRpc/s1600/manushyaputhiran_photo_1.jpg
இந்த வார்த்தை ஒலிக்காத சாதிய இணையதளங்களோ, பேஸ்புக், ட்விட்டர் போன்று எந்த சமூக வலைதளங்களோ இல்லை என்றுதான் கூற வேண்டும். அந்த அளவிற்கு அந்த இன மக்கள்மேல் வெறிகொள்ள நமது சமுதாயம் பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறது. இதற்கு எழுத்தாளர்களும் விதிவிலக்கல்ல. ஒரு குறிப்பிட்ட மதத்தின் மீது தீவிரவாத முத்திரை குத்தி அந்த மதத்தையே தவறான கண்ணோட்டத்தில் பார்க்கவைத்த நமது சமூகம் இந்த பார்ப்பனர் என்ற வார்த்தையும் விட்டு வைக்கவில்லை. இவர்கள் சொல்வதுபோல் பார்ப்பனர்கள் கெட்டவர்களாகவே இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் நான் கேட்பது ஒன்றுதான்.
அந்தப் பார்ப்பனர்களை விமர்சிக்கும் நீங்களும் உங்க சாதிக்காரன், மதக்காரன் அனைவரும் உத்தமர்களா ? அந்த பார்ப்பனர்களை வம்புக்கு இழுப்போருக்கு வேறு சாதி பெயரைச் சொல்லி விமர்சிக்க ஏன் தைரியமில்லை ? வேறு சாதியில் கெட்டவர்கள் இல்லை என்பதாலா ? இல்லை. காரணம், வேறு ஒருவனின் சாதியைப் பற்றி வாய்திறந்தாலே, அவன் ஆளைக்கூட்டி பேருந்தை தீ வைத்து கொளுத்துவான், ஒரு கிராமத்தையே எரிப்பன், பொதுச் சொத்துக்களை நாசமாக்குவான். நீங்கள் கூறும் பார்ப்பனன் அதுபோன்ற செயல்களில் எதிர்ப்பைக் காட்ட ஈடுபடமாட்டான் என்பது உங்களுக்குத் தெரியும். அந்த தைரியம்.
பார்ப்பனர்கள்... பார்ப்பனர்கள்... என்று சாதிய வன்முறையை தூண்டிவிட்டு பிழைப்பு நடத்தும் சில எழுத்தாளர்களில் ஒருவரான மனுஷ்யபுத்திரன் நேற்று அமீர் அப்பாஸ் என்பவற்றின் ஒரு முகநூல் ஸ்டேடஸ்யை தனது சுவரில் பகிர்ந்திருந்தார். அந்த ஸ்டேடசையும் அதற்கு நான் அளித்த பின்னூட்டத்தையும் (கமெண்ட்) கீழே பகிர்ந்துள்ளேன். நான் கூறியது சரியென்று உங்களுக்குப் பட்டால் இதைத் பகிர்ந்துகொள்ளவும்.
மனுஷ்யபுத்திரன் ஸ்டேடஸ்
சின்மயி என்கிற பார்ப்பனப் பெண்
”தன்னை அவதூறு பரப்புகிறார்கள்”
புகார் அளித்த போது,
உடனடியாக நடவடிக்கை எடுத்தது
தமிழக காவல் துறை.
ஆனால்,
அதை விடவும் மோசமான பாதிப்பை,
உண்மையான குற்றச்சாட்டை கிஷோர் மீது
புகார் அளித்த கவின்மலர் அவர்களுக்கு,
எவ்வித நடவடிக்கையும்..
இது வரை காவல்துறை எடுக்கவில்லை.
இது பார்ப்பனர்களுக்கு
மட்டுமே..
பணி புரியும் அரசா?
என்ற கேள்விக்கு
பெரியார் மண்ணில்
உரிய பதில் இல்லை.
எனது பின்னூட்டம் (கமெண்ட்)
இந்த சமூகத்தை சீர்குலைப்பது அரசியல்வாதிகள், சாதி, மத வெறி பிடித்தவர்கள் மட்டுமல்ல... அப்படி எந்த வெறியும் இல்லை என்று ஒரு போர்வையில் வாழும் எழுத்தாளர்களும் கூடத்தான். இந்த சாதி வெறியைத் தூண்டிவிட்டு அதில் குளிர்காய்வதில் உங்களைப் போன்றோருக்கு மிகப் பெரிய பங்குண்டு என்பதைச் சுட்டிக்காட்டி எனது பக்கத்தில் பல நாட்களுக்கு முன்னேற ஒரு ஸ்டேடஸ் போட்டேன். அது உண்மை என்று நிருபித்ததற்கு நன்றிகள் மிஸ்டர் மனுஷ்யபுத்திரன். கொஞ்சம் உங்கள் சுயநலவாத எண்ணங்களை கலட்டி வைத்துவிட்டு, விசாலமான பார்வையில் உலகத்தைப் பார்க்கவும்.
பல நாட்களுக்கு முன் நான் பதிவிட்ட ஸ்டேடஸ்:
தமிழகத்தைச் சேர்ந்த பெரும்புள்ளிகளில் சிலர், தமிழ் மக்களுக்கு எதிராக கருத்துக்களைப் பரப்புகிறார்கள் தங்களது ஊடகத்தையும் அதற்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள். இது கட்டாயம் கண்டிக்க வேண்டிய செயல்தான். ஆனால் அவர்களுக்கு எதிரான கருத்துக்களைக் கூறுவதாக நினைத்துக் கொண்டு அவர்களின் சாதியை முகநூல், இணையதளங்கள் என்று எல்லா இடத்திலும் வம்புக்கு இழுக்கிறார்கள். சாதியைக் குறிப்பிட்டு விமர்சிக்க சில எழுத்தாளர்கள் கூட தயங்குவதில்லை.
என்னைப் பொருத்தவரை, ஒரு சாதியைச் சேர்ந்த ஒருவன் தவறு செய்வதால் அந்த சாதியையே விமர்சிப்பதும், ஒரு மதத்தைச் சார்ந்த ஒருவன் குண்டு வைப்பதால் அந்த மதத்தையே விமர்சிப்பதும் அடி முட்டாள் தனம். எல்லோர் சாதியிலும், மதத்திலும் நல்லவர்கள் கெட்டவர்கள் இருவரும் களிமண் கலந்த நீர்போல் கலந்தே இருக்கிறார்கள்.
மற்ற சாதி, மத மக்களை விமர்சனம் செய்பவன் தனது சாதி, மதத்தைச் சேர்ந்த அனைவரும் உத்தமர்கள் என்று எவனாவது சொல்ல முடியுமா ? திருந்துங்கப்பா.
பின் குறிப்பு: 1. நான் நீங்கள் கூறும் பார்ப்பனன் அல்ல, சாதி மதத்தை அடையாளப்படுத்தாமல் மனிதன் என்று அடையாளப்படுத்த விரும்புபவன், உலகத்தில் அனைவரும் சமம் என்று நினைப்பவன் 2. இந்த கமெண்ட்டுக்காக கண்டிப்பாக நான் தடை செய்யப்படுவேன் அல்லது இந்த கமெண்ட் நீக்கப்படும் என்று தெரியும். அப்படி செய்யப்பட்டால் அதைத் துச்சமாக மதிப்பேன். 3. எந்த கட்சியையும், சாதிச் சங்கத்தையும் சார்ந்தவனல்ல, இந்த உலகம் சமத்துவமாய் வாழவேண்டும் என்று நினைக்கும் கடைக்கோடி தமிழன் 4. உங்களுக்கு எதிரியல்ல, சில நாட்களுக்குமுன் உங்களது உடல் குறைபாட்டை விமர்சித்து கருத்துக் கூறியவனை எதிர்த்தவன். நன்றி !
பின்னூட்டம் தாண்டி கடைசியாக எனது மனதில் உதித்த கேள்விகள்
1. சமுதாயத்தில் கீழ்த்தட்டு வர்க்கத்தைச் சார்ந்த பெண்ணாக இருந்தாலும், பெரிய கோடீஸ்வரியாக இருந்தாலும் சாதி, மதம், இனம் கடந்து அவர்களுக்கு வேண்டிய நியாயம் கண்டிப்பாக கிடைக்க வேண்டும். அதனால் கவின்மலர் என்ற பெண்ணிற்கு சரியான நீதி கிடைக்க வேண்டும் என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அதற்காக ஒரு சாதியை ஏன் மக்களுக்கு எதிராக திருப்ப வேண்டும். ஒரு பெண் சம்மந்தமான பிரச்சனையில் ஒரு சாதியை ஏன் புகுத்தவேண்டும்.
இதன் விளைவுகள் என்ன என்பதை அவரின் முகநூல் பக்கத்தில் போய்ப் பார்த்தால் தெரியும். இந்நேரேம் ஒரு சாதியச் சண்டையே நடந்து முடிந்திருக்கும். சமுக நல்லிணக்கத்திற்காக எழுதுகிறோம் என்று சொல்லும் எழுத்தாளர்கள் இதைத்தான் எதிர்பார்க்கிறார்களா ? ஒரு பிரச்சனையை சரியான பாதையில் விவாதித்து தீர்க்காமல் இன்னொரு பிரச்னைக்கு இது வழிவகுக்கும் என்பது இவர்களுக்குத் தெரியாமலா போய்விடும் ?
2. இவர்கள் கூறுவதுபோலவே வைத்துக்கொண்டால், இதுவரை பார்ப்பனர் அல்லாத பெண்களுக்கு நமது நீதித்துறை நீதியே வழங்கியதில்லையா ? இல்லை அத்தனை பார்ப்பனப் பெண்களுக்கும் சரியான நீதி கிடைத்து விட்டதா ? இதுதான் ஒரு சமூகப் பிரச்னையை அணுகும் முறையா ? இதுபோன்ற எண்ணங்கள் உடையோரை ஆதரிப்போர் எனக்கு ஒன்றும் அறியாத அப்பாவிகளாகத் தெரிகிறார்கள்.
3. அது என்ன எப்போது பார்த்தாலும் பெரியாரை மேற்கோள் காட்டியே இந்த பார்ப்பனப்போரை நடத்துகிறீர்கள். நீங்களெல்லாம் பெரியார் கொள்கைப் பிரியர் என்பதாலா ? இல்லை. இதுபோன்ற சாதிய எண்ணங்களைத் தூண்ட உங்களுக்கு இரு காரணம் தேவைப்படுகிறது அதற்கு பெரியாரைப் பயன்படுத்திக் கொள்கிறீர்கள். கடவுள் இருக்கிறார் என்று சொல்வபவன் முட்டாள், அயோக்கியன் என்று பெரியார் சொன்னார். இந்தக் கூற்றையும் இதுபோன்ற முகநூல் ஸ்டேடஸ் போட்ட அமீர் அப்பாஸ் கடவுள் இல்லை என்பதை ஏற்றுக்கொள்வாரா ? இல்லை திராவிடக் கட்சிகளைச் சேர்ந்ததால் இதைப் பகிர்ந்த மனுஷ்யபுத்திரன் தான் பெரிய அறிவாளியா ?
4. இந்த முகநூல் ஸ்டேடஸ்யை போட்ட அமீர் அப்பாஸ் சினிமா துறையில் உதவி இயக்குனர் என்று அவரது பக்கம் காட்டுகிறது. முஸ்லிம் இன மக்களுக்கெதிராக பல தமிழ் திரைப்படங்களில் வசனங்கள் இருந்தது என்பதை மறுக்க முடியாது. இவரின் இந்த ஸ்டேடசை பார்க்கையில் எனது மனதில் ஒரு எண்ணம் ஓடுகிறது. இவர் படம் எடுக்க ஆரம்பித்துவிட்டால், இஸ்லாமியர்களுக்கு எதிராக சிலர் வசனங்களைச் சேர்த்து மதவாத மோதல்களைத் தூண்டியதுபோல் இவர் கூறும் அந்த பார்ப்பன மக்களுக்கு எதிராக கருத்துக்ககளைக் கூறி மற்ற இஸ்லாம் மக்களை தலைகுனிய வைக்கமாட்டார், மதவாத எண்ணங்களைத் தூண்டமாட்டார் என்று என்ன நிச்சயம் ?
5. ஒரு பேனாவை கையில் எடுத்துக்கொண்டு, சில தொலைக்காட்சிகளில் பேட்டி கொடுத்துவிட்டால் தாங்கள் கூறுவதுதான் சரி, தாங்கள் கூறுவதுதான் ஞாயம் என்று சொல்லும் இதுபோன்ற சாதிய, மத வன்முறையைத் தூண்டும் எழுத்தாளர்கள் இந்திய ஒருமைப்பாட்டிருக்கும் மக்கள் நல்லிணக்கத்திற்கும் பாடுபடுவார்கள் என்று நினைக்கிறீர்களா ? அதை வைத்து குளிர் காய்ந்து ஆதாயம் தேட மட்டுமே வருவார்கள் என்பதே நிதர்சனம்.
6. சோகம் என்னவென்றால், பார்ப்பனர் அல்லாத மக்கள் இது போன்ற எழுத்தாளர்களின் ஸ்டேடஸ்யைப் பார்த்துவிட்டு, இவரே சொல்லிவிட்டாரே எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று எண்ணிக்கொண்டு சற்றும் சிந்திக்காமல் அந்த குறிப்பிட்ட சாதி மக்கள் மேல் தங்களை அறியாமல் வெறுப்பை வளர்த்துக் கொள்கிறார்கள். அது சமுதாயப் பிளவிற்கு முக்கிய காரணமாக அமைகிறது.
ஆகையால் இது போன்ற சாதிய/மத வெறிபிடித்தவர்களை இனம் கண்டு ஒடுக்குவது சமுதாயத்திற்கு இன்றியமையாத தேவையாக அமைகிறது. அதுவே சாதி, மதம் கடந்த இந்திய ஒருமைப்பாட்டிற்கு உதவும் என்பது எனது எண்ணம்.
நன்றி !
Original Source : http://kakkaisirakinile.blogspot.in/2013/06/blog-post_6.html
அன்புடன்,
அகல்
http://2.bp.blogspot.com/-K44aVhOtt_w/UbH09DgvrXI/AAAAAAAACPM/v9DxjTaiRpc/s1600/manushyaputhiran_photo_1.jpg
Last edited by அகல் on Fri Jun 07, 2013 9:49 pm; edited 3 times in total
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Re: பார்ப்பனர்.. பார்ப்பனர்.. பார்ப்பனர்.. ப்ளஸ் மனுஷ்யபுத்திரன் !
நியாயமான வாதத்தை முன்வைத்திருக்கிறீர்கள் அகல். பாராட்டுகள். உங்களது கருத்தோடு நானும் உடன்படுகிறேன். மனுஷ்யபுத்திரன், சாருநிவேதா போன்ற எழுத்தாளர்கள் இதுபோன்ற நிறைய நச்சுகளை தங்கள் பேனா வழியே கசியவிடுவதைப் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்?
Re: பார்ப்பனர்.. பார்ப்பனர்.. பார்ப்பனர்.. ப்ளஸ் மனுஷ்யபுத்திரன் !
நன்றி.. உண்மைதான் நண்பரே.. வேதனை என்னவென்றால் இவர்கள் சொல்வதை பகுத்தாராயாமல் அப்படியே எடுத்துக்கொள்ள ஒரு கூட்டம் இருக்கிறது என்பது மிகவும் வேதனையான விடயம்...பார்த்திபன் wrote:நியாயமான வாதத்தை முன்வைத்திருக்கிறீர்கள் அகல். பாராட்டுகள். உங்களது கருத்தோடு நானும் உடன்படுகிறேன். மனுஷ்யபுத்திரன், சாருநிவேதா போன்ற எழுத்தாளர்கள் இதுபோன்ற நிறைய நச்சுகளை தங்கள் பேனா வழியே கசியவிடுவதைப் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்?
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Re: பார்ப்பனர்.. பார்ப்பனர்.. பார்ப்பனர்.. ப்ளஸ் மனுஷ்யபுத்திரன் !
அகல் இதே மாதிரி இந்த அர்த்தமற்ற பேச்சுகளை பேசி எழுதி வரும்
வேடதாரிகளை ரொம்ப சீரியஸா நீங்க எடுத்துகிட்டா
உங்களுக்கு உள்ள நிம்மதியும் போயிடும்
வேடதாரிகளை ரொம்ப சீரியஸா நீங்க எடுத்துகிட்டா
உங்களுக்கு உள்ள நிம்மதியும் போயிடும்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பார்ப்பனர்.. பார்ப்பனர்.. பார்ப்பனர்.. ப்ளஸ் மனுஷ்யபுத்திரன் !
அகல் wrote:நன்றி.. உண்மைதான் நண்பரே.. வேதனை என்னவென்றால் இவர்கள் சொல்வதை பகுத்தாராயாமல் அப்படியே எடுத்துக்கொள்ள ஒரு கூட்டம் இருக்கிறது என்பது மிகவும் வேதனையான விடயம்...பார்த்திபன் wrote:நியாயமான வாதத்தை முன்வைத்திருக்கிறீர்கள் அகல். பாராட்டுகள். உங்களது கருத்தோடு நானும் உடன்படுகிறேன். மனுஷ்யபுத்திரன், சாருநிவேதா போன்ற எழுத்தாளர்கள் இதுபோன்ற நிறைய நச்சுகளை தங்கள் பேனா வழியே கசியவிடுவதைப் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்?
இது மட்டுமல்ல, பல விஷயங்களை யோசிக்காமல் தலை ஆட்டவே நம்மை கல்விக்கூடங்கள் தயார் செய்துள்ளது. பெரியாரும் கடவுளை முழுவதும் எதிர்க்கவில்லை. கடவுள் பெயரில் நடக்கும் கொடுமைகளைத் தான் எதிர்த்தார். பெரியாருக்கு தங்கவாள் கொடுக்க எம் ஆர் ராதா ஏற்பாடு செய்யும் பொழுது அதற்கு தகுந்தவர் என்று தேர்வானவர் குன்றக்குடி அடிகளார். குன்றக்குடி அடிகளாரும், பெரியாரும் இதை எதிர்க்கவில்லை.
ஒவ்வொரு சமூகமும் மதமும் அதன் இருப்பை தக்க வைத்துக் கொள்ள பார்க்கிறது. ஒவ்வொரு தரப்பிலும் வாதப் பிரதிவாதங்கள் இரண்டுமே உண்டு ஒரு பொருளை விற்பவன் எதைச் சொன்னால் மக்கள் வாங்குவார்களே அதைச் சொல்லியே விற்க முயலுகிறான். மக்கள் பிரச்சனைகளையும், சர்ச்சைகளையுமே விரும்புகின்றனர். இது ஆழ் மனத் தேடல். இதற்கு தீனி இடுபவர் புகழ் பெறுகிறார். ஊடகங்கள், எழுத்தாளர்கள் இதையே செய்கின்றனர். ஆகையால் தான் நயன்தாராவைப் பற்றி வரும் செய்தி நம் கண்ணுக்கு பெரிதாக தெரிகிறது. நல்ல விஷயங்கள் கண்கள் கண்டுகொள்வதில்லை. தினசரி செய்தித்தாளில் இருந்து விவாதமாகும் பல விஷயங்கள் உபயோக மற்றவை. ஆயினும் மனம் அதையே நாடுகிறது.
பண்டைய நாட்களில் மக்களின் உடல் உழைப்பிலும், மனம் நற்சிந்தனையில் நிறைந்திருந்தது. ஆனால் இன்று இவை இரண்டுமே இல்லை. கடவுளும், மதமும், அன்னையும் அன்பும் வியாபாரமாகி விட்டது.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: பார்ப்பனர்.. பார்ப்பனர்.. பார்ப்பனர்.. ப்ளஸ் மனுஷ்யபுத்திரன் !
பார்பனர்கள் ஆகட்டும், மற்றவர்கள் ஆகட்டும் யாரும் உத்தமர்கள் இல்லை. தமிழ் இனம் இலங்கையில் அழிந்துகொண்டிருக்கும் போது அதை இந்திய பத்திரிக்கைகளில் பெரிய அளவில் வராமல் பார்த்துகொண்டதில் பார்பனர்களுக்கு முக்கிய பங்கு உண்டு என்றும், அதே பார்பனர்களை சாடும் அய்யா அவர்கள் யுத்தத்தை நிறுத்த வழி இருந்தும் நிறுத்தாமல் அதை வைத்து பிழைப்பு நடத்தியவர் என்பதும் உலகம் அறிந்த உண்மை.
Re: பார்ப்பனர்.. பார்ப்பனர்.. பார்ப்பனர்.. ப்ளஸ் மனுஷ்யபுத்திரன் !
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மைதான் அண்ணே.... ஆனால் அவர்கள் தவறான சிந்தனைகளை சமுகத்தில் விதைக்கிறார்கள் என்பதை சிலருக்காவது புரியவைக்கலாம் அல்லவா அந்த ஒரே எண்ணம் தான் நான் எழுதக் காரணம். சாதி மதப் பிளவுகளும் அதைத்தூண்டுவோரும் தான் நமது சமுதாய முதுகெலும்பை உடைக்க முயல்பவர்கள் என்று ஆழமாக நம்புகிறேன்.. நன்றி அண்ணே...யினியவன் wrote:அகல் இதே மாதிரி இந்த அர்த்தமற்ற பேச்சுகளை பேசி எழுதி வரும்
வேடதாரிகளை ரொம்ப சீரியஸா நீங்க எடுத்துகிட்டா
உங்களுக்கு உள்ள நிம்மதியும் போயிடும்
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Re: பார்ப்பனர்.. பார்ப்பனர்.. பார்ப்பனர்.. ப்ளஸ் மனுஷ்யபுத்திரன் !
அவர்களுக்கு இருக்கும் மீடியா பின்புலம் / பலம் நமக்கு இருக்கா அகல்? இல்லையே அதானே பிரச்சினை.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பார்ப்பனர்.. பார்ப்பனர்.. பார்ப்பனர்.. ப்ளஸ் மனுஷ்யபுத்திரன் !
அப்பட்டமான உண்மை... அதற்கு ப்ளாக், முகநூல் போன்ற ஊடகங்களை பயன்படுத்தி ஓரளவிற்காவது மற்றவர்களை உணரவைக்கும் முயற்சி இது அண்ணா.. எனது முகநூல் பக்கத்தை 15,000+ நண்பர்கள் தொடர்கிறார்கள். அதில் ஆயிரம் பேராவது படிப்பார்கள். 100 பேராவது பகிர்வார்கள். 100 பேராவது சிந்திப்பார்கள். அந்த சிந்தனை மாற்றம் கிடைத்தால், நமது சமுதாயத்தில் ஒரு துளியேனும் மாற்றம் வர நாமும் காரணமாக இருப்போம் என்ற அற்ப ஆசைதான் அண்ணா..யினியவன் wrote:அவர்களுக்கு இருக்கும் மீடியா பின்புலம் / பலம் நமக்கு இருக்கா அகல்? இல்லையே அதானே பிரச்சினை.
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Re: பார்ப்பனர்.. பார்ப்பனர்.. பார்ப்பனர்.. ப்ளஸ் மனுஷ்யபுத்திரன் !
நீங்க எழுதுங்க - கண்டிப்பா எழுதணும் அகல்.
ஒரே ஒரு அட்வைஸ் - பிரச்சனைகளை பற்றி அலசி எழுதுங்கள் அந்த பிரச்சினைக்குள் அறியமாலே சிக்கி உடல் மன நலத்தை பலி கொடுத்து விடாதீர்கள் - அதுவே என் விருப்பம்.
ஒரே ஒரு அட்வைஸ் - பிரச்சனைகளை பற்றி அலசி எழுதுங்கள் அந்த பிரச்சினைக்குள் அறியமாலே சிக்கி உடல் மன நலத்தை பலி கொடுத்து விடாதீர்கள் - அதுவே என் விருப்பம்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» பார்ப்பனர் தமிழரை அடிமையாக்குவதெப்படி?
» முன்னுரைக்குப் பதிலாக- மனுஷ்யபுத்திரன்
» மனுஷ்யபுத்திரன் வசனம் எழுதும் 'ஃபர்ஹானா'!
» ‛மனுஷ்யபுத்திரன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்'
» ரிஸானா… பதற வைக்கும் கொடூரம் – மனுஷ்யபுத்திரன் கட்டுரை
» முன்னுரைக்குப் பதிலாக- மனுஷ்யபுத்திரன்
» மனுஷ்யபுத்திரன் வசனம் எழுதும் 'ஃபர்ஹானா'!
» ‛மனுஷ்யபுத்திரன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்'
» ரிஸானா… பதற வைக்கும் கொடூரம் – மனுஷ்யபுத்திரன் கட்டுரை
Page 1 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|