ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'

Go down

'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Empty 'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'

Post by சாமி Fri Jun 07, 2013 11:10 am

சோழர்கள் காலத்தில் நாடு பல மண்டலங்களாககவும், கோட்டங்களாகவும், நாடுகளாகவும் பிரிக்கப்பட்டிருந்தது. ஜயங்கொண்ட சோழ மண்டலத்து புலியூர் கோட்டத்து குன்றத்தூரில் "இராமதேவன்' என்ற இயற்பெயருடைய வேளாளர் ஒருவர் இருந்தார். இவரது குடும்பமே சிவன்பால் சித்தத்தை வைத்து வாழ்ந்த குடும்பம். "சே' என்றால் காளை எனப் பொருள்படும். உழவுத் தொழிலைச் செய்து வந்த குடியில் வாழ்ந்த குடும்பம் ஆதலால் சே+கிழார் குடும்பம் என அழைக்கப்பட்டது. மேலும் சிவன்பால் சித்தம் கொண்டவராக இருந்ததால், சிவனுக்கு ஊர்தியாக விளங்குபவர்கள் - சிவனைத் தாங்குபவர்கள் என்பதால் சேக்கிழார் குடி என அழைக்கப்பட்டனர்.

இராமதேவனுக்கு இன்னொரு பெயர் அருண்மொழித் தேவன் என்னும் இராசராச சோழனின் பெயராகும். அருண்மொழித் தேவன் கல்வி - கேள்விகளில் சிறந்து விளங்கினார். சைவத்தில் மிக்க ஈடுபாடு கொண்டவர். அவரது தகுதியையும் திறமையையும் கேள்விப்பட்ட இரண்டாம் குலோத்துங்க சோழன் அவரை தனது அவையில் அமைச்சர் ஆக்கினான். மேலும் அவருக்கு "உத்தம சோழப் பல்லவன்' என்னும் பட்டமும் அளித்து கௌரவித்தான்.

அரசு நிர்வாகம், நாட்டு நிர்வாகம் ஆகியவற்றை திறம்பட நடத்தி இரண்டாம் குலோத்துங்கனுக்கு நற்பெயர் ஈட்டித் தந்தார் அருண் மொழித்தேவன்.

சிறந்த சிவ பக்தனாக இருந்ததால் சோழ சாம்ராஜ்யத்தின் அனைத்து சிவாலயங்களையும் கண்டு தரிசித்து வரும் வழக்கம் இருந்தது. அவ்வகையில் கும்பகோணத்தை அடுத்த திருநாகேச்சுவரம் மீது அதிக ஈடுபாடு கொண்டவரானார். அதனைப் போலவே ஒரு ஆலயம் தன் சொந்த ஊரில் கட்டி சிறப்பிக்க வேண்டுமென விரும்பினார்.

மன்னன் அநபாயன் சமண இலக்கிய ஈடுபாட்டில் இருந்தான். சமண மதப் புலவர்கள் சிந்தாமணியின் கதையை எடுத்தியம்பி கதை - பொருள் விளக்கம் சொல்வார்கள். அதனில் மனம் லயிப்பான். அவை மன்னனை உலக வாழ்வில் இருந்து மாற்றி விடும் என நினைத்தனர். எனவே அவன் மனதை மாற்ற எண்ணினர்.

"இம்மை - மறுமை நலன் பயக்கக்கூடிய பல வரலாறு இருக்கும்போது சொல், பொருள், இன்பம் மட்டும் தரும் வரலாற்றைப் பேசி மகிழ்ச்சி அடைகின்றீர்களே. அந்தக் கதைகளை விட்டு இந்த வரலாறுகளைக் கேட்டு உணருங்கள்'' எனக் கூறி சைவ - அடியார்களின் வரலாறுகளை எடுத்து இயம்பலானார் அருண்மொழித் தேவன். சொல்லும் பொருளை சுவைபட அருண்மொழித் தேவன் என்னும் உத்தம சோழப் பல்லவராயர் சொல்ல, அடியார்கள் வரலாறுகளில் தன் மனதைக் கொடுத்த மன்னன் அதனை எழுத்தில் இலக்கிய வடிவம் ஆக்க வேண்டினான்.

திருநாகேச்சுவரம் மீது இருந்த ஈடுபாட்டைப் போலவே, தில்லையம்பலவாணன் மீதும் ஈடுபாடு கொண்ட அருண்மொழித் தேவர், பொன்னம்பலவாணன் முன் நின்று, தான் வரலாற்றைத் துவங்க முழு சக்தியை வழங்க வேண்டினார். பொன்னம்பல வாணனோ "உலகெலாம்' என்ற சொல்லை அசரீரியாக ஒலித்து புராணம் எழுத அடியெடுத்துக் கொடுத்தார்.

உணர்ச்சி மேலிட்ட அருண்மொழித் தேவனும் "உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்' எனத் தொடங்கும் இறைவனின் அடியார்களின் வரலாறுகளைக் கூறும் திருத்தொண்டர் புராணத்தை எழுதி அரங்கேற்றினார். இன்னும் தனது சைவப்பணி இருப்பதைக் கருத்தில்கொண்டு தன் சொந்த ஊரான சென்னைக்கு அருகில் உள்ள குன்றத்தூரை அடைந்து மீண்டும் திருநாகேச்சுவரரை வேண்டி ஒரு புதிய கோயிலைக் கட்டத் தொடங்கினார். அங்கேயும் திருநாகேச்சுவரத்தை எழுந்தருள்வித்து குடமுழுக்கு செய்ததால் அத்திருக்கோயில் தற்போதும் குன்றத்தூருக்கு அருகில் உள்ள "திருநாகேச்சுவரம்' என்ற பெயரோடே வழங்கி வருகின்றது.

சேக்கிழார் என பின்னர் அழைக்கப்பட்ட அருண்மொழித் தேவன் சித்திரை திருவாதிரையில் புராணத்தை சிதம்பரத்தில் விரித்துரைக்கத் தொடங்க, மீண்டும் அடுத்த ஆண்டு சித்திரைத் திருவாதிரையில் முடிவு பெற்றது.

அதற்காக மன்னன் உரிய மரியாதைகள் செய்து அவருக்கு "தொண்டர் சீர் பரவுவார்'' என்ற பட்டம் அளித்து சிறப்புச் செய்தார். அதுமுதல் சேக்கிழாரின் பெரிய புராணம் பன்னிரண்டாவது திருமுறையாக சேர்க்கப்பட்டு மொத்த திருமுறைகள் பன்னிரண்டு என்ற நிலையை அடைந்தது.

அவர் சைவத்திற்கு செய்த பணியாலும், திருநாகேச்சுவரம் கோயிலைக் கட்டி குடமுழுக்கு செய்த காரணத்தாலும் ஒவ்வோர் ஆண்டும் அவர் முக்தி அடைந்த வைகாசி பூசத்தினை (வருகிற 12ஆம் தேதி) இறுதி நாளாகக் கொண்டு 10 தினங்கள் சேக்கிழார் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

நன்றி-தினமணி
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum