ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம்

3 posters

Go down

பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Empty பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம்

Post by சாமி Thu Jun 06, 2013 3:39 pm

பெற்றோர் தங்களது குழந்தைகள் ஆங்கில வழிக் கல்வி பயிலவே விரும்புகின்றனர். அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி இல்லை. போதிய மாணவர் சேர்க்கை இல்லை. பல பள்ளிகளை மூடும் நிலை ஏற்படுகிறது. உயர் படிப்புகள் அனைத்தும் ஆங்கிலத்தில் இருக்கின்றன. அதனால், அரசுப் பள்ளிகளில் ஆங்கிலக் கல்வி வகுப்புகள் தொடங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

பன்மொழிக் கல்வி நமது கற்பனை மற்றும் சிந்தனைத் திறனை விரிவடையச் செய்கிறது. ஒரு குழந்தை பன்மொழிகளைக் கற்பதற்கான, வலுவான அடித்தளமாக தாய்மொழி விளங்குகிறது. தாய்மொழிக் கல்வி, பன்மொழி எழுத்தறிவு பெறுவதை எளிதாக்குகிறது என்று "யுனெஸ்கோ' அமைப்பு கூறுகிறது.

உயர் கல்வியில் பாடங்கள் ஆங்கிலத்தில் இருப்பதால், பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளைத் தொடங்குவதாக தமிழக அரசு கூறுகிறது. தமிழ் மற்றும் ஆங்கில வழியில் கற்பிக்கப்படும் அறிவியல், கணிதப் பாடநூல்களில் உள்ள அறிவியல் சொல்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் இல்லை. லத்தீன் அல்லது கிரேக்க மொழிகளில்தான் உள்ளன.

தமிழ்வழிப் பாடநுல்களில் அறிவியல் சொற்கள் தடித்த எழுத்துகளில், அடைப்புக் குறிக்குள் ஆங்கிலத்தில் இடம் பெற்றிருக்கும். உயர் கல்வியில் ஆங்கில நடையில் படிக்கும்போது, அதில் வரும் அறிவியல் சொற்களைப் புரிந்து கொள்வதற்காகத்தான் அவ்வாறு அச்சிடப்பட்டுள்ளது. அறிவியல் சொற்களை கற்றுக் கொண்ட மாணவனுக்கு இப்போது தேவைப்படுவது, ஆங்கில மொழி நடை மட்டுமே. அது பள்ளிக் கல்வியில் ஒரு பாடமாக உள்ள ஆங்கிலப் பாடத்தை, முறைப்படி கற்றுக்கொடுத்தாலே கிடைத்துவிடும்.

தமிழகத்தில் ஊராட்சிப் பள்ளிகளில் 5-ஆம் வகுப்பு மாணவனால் 2-ஆம் வகுப்புப் பாடநூலைப் படிக்க முடியவில்லை என்ற தகவல் அண்மையில் வெளியாகி, அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் தோலுரிக்கப்பட்டது. பெரும்பாலும், தமிழ் வழியில் படித்த ஆசிரியர்கள், தமிழ்ப் பாடங்களை நடத்திய நிலையில், மாணவர்களின் கல்வித் தரம் இவ்வாறு உள்ளது. ஆங்கில வழியில் படிக்காத ஆசிரியரைக் கொண்டு, ஆங்கில வழிக் கல்வியைச் சிறப்பாக எப்படி வழங்க முடியும்?

ஆங்கிலவழிக் கல்வி வெற்றிபெற, முழு நேரமும், மாணவரின் செவியில் ஆங்கில உரையாடல்கள் ஒலித்துக்கொண்டிருக்கும் சூழல் அவசியம். அது அரசுப் பள்ளிகளில் சாத்தியம் இல்லை.

உலகில் முதன் முதலில் மொழி தோன்றியது. அதன் பின்னர் தான், அதற்கான இலக்கணம் தோன்றியது. ஒரு குழந்தை அஞ்சல் வழி மூலமாகவோ, பயிற்சி மையங்கள் மூலமாகவோ தமிழைக் கற்பதில்லை. தாயும் சுற்றத்தாரும் பேசும் சொற்களைக் கவனித்து, அதைத் திரும்பச் சொல்லிக் கற்கிறது.

அதுபோல, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட குழந்தை முதலில் தமிழ் படிக்க வேண்டும். அதன் பின்னர்தான் அவர்களுக்கு அயல் மொழியைக் கற்பிக்க வேண்டும். அப்போதுதான், குழந்தைகளின் கற்றல் எளிதாக இருக்கும்.

கர்நாடக மாநிலத்தில் 5-ஆம் வகுப்பு வரை அவரவர் தாய்மொழியில் மட்டுமே கல்வி கற்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. 5-ஆம் வகுப்பு வரை ஆங்கில வழியில் பாடம் நடத்தத் தனியார் பள்ளிகளுக்கு கர்நாடக அரசு அனுமதி வழங்குவதில்லை. அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஒரு பாடம் ஆங்கிலமாக இருக்கும் இன்றைய நிலையில், ஆங்கிலத் தேர்வின்போது 35 மதிப்பெண்களுக்கான விடைகளை, பள்ளியில் உள்ள கரும்பலகைகளில் ஆசிரியர்கள் எழுதி, அதை விடைத்தாள்களில் எழுதுமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்துகின்றனர். இப்படித்தான், அரசுப் பள்ளி மாணவர்கள், ஆங்கிலப் பாடத்தில் "தேர்ச்சி' பெறுகின்றனர்!

ஆங்கிலப் பாடங்கள் உள்ளிட்ட எந்த பாடங்களையும் ஆசிரியர்கள் முறையாக நடத்தி முடிப்பதில்லை. போதிய வேலைநாள்கள் இல்லை என்று காரணம் கூறுகின்றனர். குறிப்பாக, ஆங்கிலப் பாடங்களில், பின் பகுதியில் வரும் இலக்கணம் உள்ளிட்ட பயிற்சிகளை நடத்துவதே இல்லை. இதை அரசும் கண்டுகொள்வதில்லை. நடைமுறையில் உள்ள ஆங்கிலப் பாடத்தை முறையாக நடத்துவதற்கான வழிவகைகளைச் செய்தாலே, அரசுப் பள்ளி மாணவர்கள் நல்ல ஆங்கில அறிவைப் பெறுவார்கள்.

அரசுப் பள்ளி மாணவர்களை ஆங்கிலத்தில் பேசவைப்பதற்காக, அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ், பெங்களூரில் உள்ள மத்திய அரசின், மண்டல ஆங்கிலக் கல்வி மையம் (தென்னிந்தியா) தயாரித்த "ஹலோ இங்கிலீஷ்' என்ற 20 பாடங்கள் கொண்ட காட்சி டிவிடி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டது. "சிம்ப்ளி இங்கிலீஷ்' என்ற சிடிக்களும் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பள்ளியிலும் அதைப் பயன்படுத்தி, பலனடைந்ததாகத் தெரியவில்லை. அரசும் கண்காணிக்கவில்லை.

ஆண்டுக்கொரு முறை, பணியிட மாற்றக் கலந்தாய்வு. வீட்டுக்கு அருகிலேயே பணி செய்யும் வாய்ப்பை அரசு வழங்குகிறது. அரசுத் தரப்பில் ஆசிரியர்களுக்கு எந்தக் குறையையும் வைக்கவில்லை. பாடத் திட்டத்திலும் எந்த குறையும் இல்லை. பாடத்தை நடத்தும் ஆசிரியர்களிடம்தான் குறை. அதனால், ஆசிரியர்களிடம்தான் மாற்றம் தேவை.

(ச.கார்த்திகேயன்-நன்றி-தினமணி)
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Empty Re: பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம்

Post by ராஜு சரவணன் Thu Jun 06, 2013 5:45 pm

தன் குழந்தை வாய் நிறைய ஆங்கிலத்தில் பேசினால் பெற்றோர்கள் அவர்களின் பிறவிபயனை அடைந்துவிட்டாதாக நினைகின்றனர். இந்த ஒரு காரணம் தான் குழந்தைகளை ஆங்கில வழிகல்வி பாடசாலையில் சேர்பதற்கு காரணம்.மற்ற எந்த சரியான காரணங்களும் இல்லை.

உங்கள் குழந்தை அறிவாளியாக வளரவேண்டும் என்று உண்மையில் அக்கறை இருந்தால் குழந்தைகளை தமிழ்வழி கல்வியில் சேர்த்துவிடுங்கள். என் குழந்தை இங்கிலீஷ் பேசுகிறது என்று பந்தா பண்ணுவதற்கு உங்கள் குழந்தைகளை ஆங்கிலவழி பள்ளிகளில் சேர்த்து பலிகட ஆகாதீர்கள். வெளிநாட்டில் பிச்சைகாரன் கூட இங்கிலீசில் தான் பேசுவான்.உங்கள் குழந்தைகளை இங்கிலீஷ் பேசும் பிச்சைகாரனாக மாற்றாதீர்கள்.

எந்த ஒரு குழந்தையும் வேற்று மொழிகளில் பயிற்றுவிக்கும் பாடங்களை முதல் தன் தாய்மொழி மூலம் தான் புரிந்து கொள்ளும். My Name is Saravanan என்று ஆங்கிலத்தில் சொன்னாலும் அதை கேட்கும் குழந்தை மனதில் "ஒ இவருடைய பெயர் சரவணன்" என்று தன் தாய்மொழியில் தான் உள்வாங்கிகொள்ளும். அதே போல் எந்த ஒரு செய்தியை எந்த மொழிகளில் சொன்னால் கூட முதலில் சொல்லபோகும் செய்தி தொகுப்பு தன் தாய்மொழியில் தான் மூளையை சென்றடையும்.அறிவை உள்வாங்குவது, சிந்திப்பது, செயல்படுத்துவது எல்லாமே அவரவர் தாய்மொழியில் தான் நடக்கும். இது தான் விதி.

செய்யபோகும் வேலைக்கு ஆங்கில புலமை அவசியம் தான் அதற்காக அதில் டாக்டர் பட்டம் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. மாணவர்கள் அவர்களுது கல்லுரிபடிப்பை படிக்கும் போது ஆங்கிலத்தில் பேசுவது எழுதுவது என்று தானாக வந்துவிடும். அப்படியும் இல்லையா ஒரு வருடம் சிறப்பு வகுப்பு மூலம் ஆங்கிலம் பேச சிறப்பு பயிற்சி கொடுங்கள் போதும். உங்கள் குழந்தை ஆங்கிலத்தில் கவிதை கட்டுரை எழுதியா சம்பாதிக்க போகுது, அப்புறம் ஏன் இந்த வெட்டி பந்தா?.

இப்படியே போய்கொண்டிருந்தால் ஒரு நாளில் தமிழன் சிந்திக்க தெரியாத மரமாகிவிடுவான்.

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Empty Re: பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம்

Post by சிவா Thu Jun 06, 2013 5:54 pm

முற்றிலும் உண்மை சரா! நாம் எளிதில் மற்ற மொழிகளைக் கற்றுக் கொள்ளலாம், ஆனால் மற்றவர்கள் நம் தமிழ் மொழியைக் கற்றுக் கொள்வதென்பது சுலபமானதல்ல.!


பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Empty Re: பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum