ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்ணன் சிறையில், தம்பியோ துணை அமைச்சர் பதவியில்!

2 posters

Go down

அண்ணன் சிறையில், தம்பியோ துணை அமைச்சர் பதவியில்! Empty அண்ணன் சிறையில், தம்பியோ துணை அமைச்சர் பதவியில்!

Post by சிவா Thu Jun 06, 2013 8:28 am

உதயகுமாருக்கு 30 மாதங்கள் சிறை தண்டனை!

தேச நிந்தனைக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் ஹிண்ட்ராப் நிறுவனர் உதயகுமாருக்கு 30 மாதங்கள் சிறை தண்டனை விதித்து கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் தேதிக்கும், டிசம்பர் மாதம் 8 ஆம் தேதிக்கும் இடையே, அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுனுக்கு உதயக்குமார் எழுதிய கடிதத்தில், மலேசியாவில் ஏழை இந்திய சமுதாயம் சமூக ரீதியில் ‘இன ஒழிப்பு’ செய்யப்படுவதாக குறிப்பிட்டிருந்தார். இதனால் அவர் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

நீதிபதி அகமட் சம்ஸானி முன்னிலையில் நடைபெற்ற இவ்வழக்கு விசாரணையில், தனது பக்கம் இருக்கும் நியாயத்தை எடுத்துரைக்க உதயக்குமாருக்கு இரண்டு முறை வாய்ப்பளிக்கப்பட்டும் அவர் மௌனம் காத்தார்.

மலேசியாவில் இந்திய சமுதாயத்திற்கு எதிராக நடத்தப்படும் இனவாதக் கொள்கைகளை எதிர்த்தும், இவ்வழக்கின் சந்தர்ப்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும் தான் மௌனம் காப்பதாக நீதிமன்றத்தில் உதயக்குமார் தெரிவித்தார்.

இதனையடுத்து இன்று பிற்பகல் இவ்வழக்கில் அவருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோலாலம்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேல் முறையீடு செய்யும் திட்டம் இல்லை

நீதிமன்றத்தில் உதயகுமாருக்கு சிறை தண்டனை விதித்துத் தீர்பளித்ததும், அங்கு கூடியிருந்த அவரது ஆதரவாளர்கள் “அம்னோ இனவாதம் நிறைந்தது” என்று கூச்சலிட்டனர்.

எனவே உதயகுமார் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் வேறு வாயில் வழியாக வெளியே கொண்டு செல்லப்பட்டார்.

உதயகுமாரின் வழக்கறிஞரான எம்.மனோகரனிடம், தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்படுமா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, இதுவரை மேல் முறையீடு செய்வது தொடர்பாக எந்த ஒரு தகவலும் தனக்குக் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

காஜாங் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள உதயகுமாரின் தண்டனை காலம் இன்று முதல் தொடங்குகிறது.

அண்ணன் சிறையில், தம்பியோ துணை அமைச்சர் பதவியில்

ஹிண்ட்ராப் இயக்கத்தின் நிறுவனரான உதயகுமார் இன்று சிறை செல்லப்படும் அதே வேளையில், அவரது உடன் பிறந்த தம்பியும், ஹிண்ட்ராப் இயக்கத்தின் தலைவர்களுள் ஒருவருமான வேதமூர்த்தி இன்று பிற்பகல் பிரதமர் துறையின் துணையமைச்சராகப் பதவி ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


அண்ணன் சிறையில், தம்பியோ துணை அமைச்சர் பதவியில்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அண்ணன் சிறையில், தம்பியோ துணை அமைச்சர் பதவியில்! Empty Re: அண்ணன் சிறையில், தம்பியோ துணை அமைச்சர் பதவியில்!

Post by சிவா Thu Jun 06, 2013 8:29 am

இந்தியர்களின் உரிமைக்காகப் போரடிய உதயகுமாருக்கு அளிக்கப்பட்ட 30 மாத சிறை தண்டனை தர்மத்தை குழி தோண்டி புதைத்து விட்டது என சாடுகிறார் சுவராம் மனித உரிமை இயக்கத் தலைவர் கா. ஆறுமுகம்.

2007-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுனுக்கு எழுதிய கடிதத்தில் மலேசிய அரசு தனது இனவாத கொள்கையின் வழி சமூக இனஅழிப்பு செய்வதாக உதயக்குமார் சாடியிருந்தார்.

உதயாவின் சாடலில் உள்ள உண்மைகளை அரசாங்கம் செவிமடுத்த போதும், அவருக்கு இந்த தண்டணையை வழங்கியிருப்பது அவரின் கூற்றை மூடி மறைக்க முயலுவதோடு, நீதி நியாயம் கோருபவர்களின் பேச்சுரிமைக்குப் பூட்டு போடுவதாக இது அமைந்துள்ளது என்கிறார் வழக்கறிஞருமான கா. ஆறுமுகம்.

Aru2001 ஆம் ஆண்டில் நடந்த கம்போங் மேடன் வன்முறையின் போது ஆறு நபர்கள் கொல்லப்பட்டதோடு தொன்னூருக்கும் அதிகமானோர் கொடூரமாக தாக்கப்பட்டனர். இது பற்றிய அரசு விசாரணையை பலமுறை கோரியவர் உதயகுமார். அதோடு அது சார்பாக சுகாக்காம் மீது வழக்கும் தொடுத்தவர். ஆனால், அந்தச் சம்பவம் அப்படியே மூடி மறைக்கப்பட்டது.

இந்திய இளைஞர்கள் போலிசாரால் சுட்டு கொல்லப்பட்டதையும், சிறையில் மாண்டவர்களைப் பற்றியும் அதிகமாக எழுதியவர்- பேசியவர்- போரடியவர் உதயகுமார்தான் என்கிறார் ஆறுமுகம்.

அரசமைப்புச் சட்டம் வழங்கும் பேச்சுரிமையைக் கண்டிக்க அரசாங்கத்திற்கு உரிமை கிடையாது. தேச நிந்தனைச் சட்டம் என்பது ஒரு காட்டு மிராண்டித்தனமான சட்டம். அதை கட்டு கோப்பாக கடைப் பிடிக்க இயலாது என்பதை இந்த வழக்கு நிரூபித்துள்ளது.

ஜனநாயகம் வளர இது போன்ற சட்டங்கள் அகற்றப்பட வேண்டும். இல்லையென்றால் சர்வதிகாரம் வளரவே அவை பயன் படுத்தப்படும் என எச்சரிக்கிறார் ஆறுமுகம்.


அண்ணன் சிறையில், தம்பியோ துணை அமைச்சர் பதவியில்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அண்ணன் சிறையில், தம்பியோ துணை அமைச்சர் பதவியில்! Empty Re: அண்ணன் சிறையில், தம்பியோ துணை அமைச்சர் பதவியில்!

Post by சிவா Thu Jun 06, 2013 8:30 am

உதயகுமாருக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து முன்னாள் ஹிண்ட்ராப் தலைவர்கள் வருத்தம்

கோலாலம்பூர், ஜூன் 6 – ஹிண்ட்ராப் நிறுவனர் பி. உதயகுமாருக்கு விதிக்கப்பட்டிருக்கும் தண்டனை குறித்து அவ்வியக்கத்தின் முன்னாள் தலைவர்கள் தங்களை அதிர்ச்சியையும், அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

உதயகுமாருக்கு நேற்று தண்டனை வழங்கப்பட்ட அதே வேளையில், அவரது உடன் பிறந்த தம்பியும், ஹிண்ட்ராப் இயக்கத்தின் தலைவர்களுள் ஒருவருமான வேதமூர்த்திக்கு பிரதமர் துறையின் துணையமைச்சராக பதவிப் பிரமாணம் செய்யப்பட்டது.

இது குறித்து ஹிண்ட்ராப் இயக்கத்தின் தகவல் தொடர்புத் தலைவரான எஸ்.ஜெயதாஸ்(படம் – இடது) கூறுகையில் “ஹிண்ட்ராப்பை வழிநடந்த வந்தவருக்கு அமைச்சரவையில் இடம், ஆனால் ஹிண்ட்ராப் உருவாகக் காரணமானவருக்கு சிறை தண்டனை. இது தான் விதியின் விளையாட்டு” என்று தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.v_s_ganapathi_rao

மேலும் “கடந்த 2007 ஆம் ஆண்டு ஹிண்ட்ராப் இயக்கத்தின் சார்பாக நடைபெற்ற வரலாற்றுப் பேரணி உருவாகக் காரணமாக இருந்தவர் உதயகுமார். அவரைத் தவிர வேறு யாரும் அப்படி ஒரு பேரணியை உருவாக்கியிருக்க முடியாது.” என்றும் ஜெயதாஸ் தெரிவித்துள்ளார்.

மற்றொரு ஹிண்ட்ராப் இயக்கத்தின் முன்னாள் தலைவரான வி.கணபதி ராவ் (படம் – வலது), உதயகுமாருக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை குறித்து தனது அதிர்ச்சியையும், வருத்தத்தையும் தெரிவித்துள்ளார். தன்னால் அவரைப் பாதுகாக்க முடியவில்லை என்றும் கணபதிராவ் மன்னிப்பு கோரியுள்ளார்.

சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழுவில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்களில் கணபதிராவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

செல்லியல் & செம்பருத்தி!


அண்ணன் சிறையில், தம்பியோ துணை அமைச்சர் பதவியில்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அண்ணன் சிறையில், தம்பியோ துணை அமைச்சர் பதவியில்! Empty Re: அண்ணன் சிறையில், தம்பியோ துணை அமைச்சர் பதவியில்!

Post by சிவா Thu Jun 06, 2013 12:47 pm

“அதிர்ச்சி அடைகின்றேன்! ஆனாலும் கணவருக்காக பெருமைப்படுகின்றேன்” – உதயகுமார் மனைவி

அடுத்த இரண்டரை வருடங்களுக்கு கணவரோடு குடும்பம் நடத்த முடியாது, உடன் வாழ முடியாது என்ற சோகம் ஒரு புறம் இருந்தாலும் தனது கணவரின் உறுதியான, சோரம் போகாத மனத் திண்மையை எண்ணித் தான் பெருமைப்படுவதாக அவரது மனைவி எஸ்.இந்திரா தேவி கூறியுள்ளார்.

மலேசியாகினி இணைய செய்தித் தளத்துக்கு வழங்கிய குறுகிய நேர தொலைபேசி நேர்காணலின்போது இந்திரா இதனைத் தெரிவித்தார்.

ஒரு நியாயமான காரணத்துக்காக நடத்திய போராட்டத்திற்காகத்தான் அவர் சிறை செல்கின்றார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“அவர் என்ன செய்கின்றார் என்பது அவருக்குத் தெரியும். அவரது போராட்டம் இறுதிவரை தொடரும். இந்தியர்களைப் பாதிக்கும் பிரச்சனைகளுக்காக அவர் தன்னால் இயன்ற அளவுக்கு போராட்டம் நடத்தி வருகின்றார்” என்று சோகத்துடனும், கண்ணீர் விசும்பல்களுக்கும் இடையிலும் இந்திரா கூறினார்.

நேற்று வழக்கு நடைபெறும் போது இந்திராதேவி நீதிமன்றத்திற்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று நடைபெற்ற வழக்கின்போது தனக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு எதிர்வாதம் செய்யாமல் மௌனத்தை மட்டுமே பதிலாக வழங்கிய காரணத்தால், 30 மாத சிறைத்தண்டனை உதயகுமாருக்கு வழங்கப்பட்டது.

தனது தண்டனையை எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்யவும் முன்வராத காரணத்தால், அவர் உடனடியாக காஜாங் சிறைச்சாலைக்கு கொண்டு போகப்பட்டார்.

அந்த தீர்ப்பைக் கேட்டதும் தான் அதிர்ச்சி அடைந்ததாகக் கூறிய இந்திரா இருப்பினும் உதயகுமார் உடனடியாக சிறைச்சாலைக்கு கொண்டு போகப்படுவார் என தான் எதிர்பார்க்கவில்லை என்றும் கூறினார்.

ஆதரவுக்கு நன்றி

கடந்த சில ஆண்டுகளாக தனது கணவர் இந்திய சமுதாயத்திற்காக நடத்தி வரும் போராட்டங்களுக்கு குறிப்பாக தடுப்புக் காவல் மரணங்கள், நாடற்ற மக்களின் பிரச்சனைகள் போன்றவற்றுக்கு துணை நின்று ஆதரவு கொடுத்த ஆதரவாளர்களுக்கு தான் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் இந்திரா குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், உதயகுமாருக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யும் முடிவு எதனையும் இப்போதைக்கு செய்யவில்லை என்றும் அவரது வழக்கறிஞர் மனோகரன் மலையாளம் கூறியுள்ளார்.

செல்லியல்!


அண்ணன் சிறையில், தம்பியோ துணை அமைச்சர் பதவியில்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அண்ணன் சிறையில், தம்பியோ துணை அமைச்சர் பதவியில்! Empty Re: அண்ணன் சிறையில், தம்பியோ துணை அமைச்சர் பதவியில்!

Post by Muthumohamed Thu Jun 06, 2013 5:26 pm

உங்க ஊரு சேதியா நானும் என்னமோ ஏதோனு பதறி போய்டேன் போங்க



அண்ணன் சிறையில், தம்பியோ துணை அமைச்சர் பதவியில்! Mஅண்ணன் சிறையில், தம்பியோ துணை அமைச்சர் பதவியில்! Uஅண்ணன் சிறையில், தம்பியோ துணை அமைச்சர் பதவியில்! Tஅண்ணன் சிறையில், தம்பியோ துணை அமைச்சர் பதவியில்! Hஅண்ணன் சிறையில், தம்பியோ துணை அமைச்சர் பதவியில்! Uஅண்ணன் சிறையில், தம்பியோ துணை அமைச்சர் பதவியில்! Mஅண்ணன் சிறையில், தம்பியோ துணை அமைச்சர் பதவியில்! Oஅண்ணன் சிறையில், தம்பியோ துணை அமைச்சர் பதவியில்! Hஅண்ணன் சிறையில், தம்பியோ துணை அமைச்சர் பதவியில்! Aஅண்ணன் சிறையில், தம்பியோ துணை அமைச்சர் பதவியில்! Mஅண்ணன் சிறையில், தம்பியோ துணை அமைச்சர் பதவியில்! Eஅண்ணன் சிறையில், தம்பியோ துணை அமைச்சர் பதவியில்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

அண்ணன் சிறையில், தம்பியோ துணை அமைச்சர் பதவியில்! Empty Re: அண்ணன் சிறையில், தம்பியோ துணை அமைச்சர் பதவியில்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கானாவின் விளையாட்டு துறை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
» அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்த ஆளுநர்
» அமைச்சர் பதவியில் இருந்து மம்தா பானர்ஜி விலகுகிறார்: மத்திய மந்திரி சபை அடுத்த மாதம் மாற்றம்
» வென்றது ஆரியம் துணை நின்றது திராவிடம்-சிறையில் சீமான்
» ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்-அமைச்சர் ஆகிறார்; அ.தி.மு.க. அணிகள் இன்று இணைகின்றன

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum