ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_c10விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_m10விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_c10 
Dr.S.Soundarapandian
விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_c10விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_m10விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_c10 
heezulia
விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_c10விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_m10விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_c10 
i6appar
விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_c10விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_m10விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது?

Go down

விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Empty விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது?

Post by சாமி Wed Jun 05, 2013 7:52 pm

இருநாள்களுக்கு முன்பு தஞ்சாவூரில் புதை சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை நீக்குவதற்காக உள்ளே இறங்கிய இரண்டு துப்புரவுத் தொழிலாளர்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்தனர். தமிழ்நாட்டில் இத்தகைய மரணங்கள் அடிக்கடி நடந்துகொண்டே இருக்கின்றன.

இந்த மரணங்கள், "விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' என்பதாகத்தான் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. அதாவது இவை தொழிற்சாலை விபத்து போன்ற உணர்வை ஏற்படுத்திவிடுகின்றது. இவர்கள் தொழிலாளர்கள் என்றாலும்கூட, ஒரு தொழிற்கூடத்தில் ரசாயனத் தொட்டியைக் கழுவும்போது ஏற்படும் விபத்தையும் சாக்கடையைத் துப்புரவு செய்வதையும் ஒன்றுபோல எப்படிக் கருத முடியும்? முதலாவது

எதிர்பார்க்காத தொழிற்சாலை விபத்து என்றால், சாக்கடைக்குள் மனிதர் இறங்குவதால் ஏற்படும் மரணம், சமுதாய அலட்சியத்தால், அதிகாரிகள் அரசு அறிவுறுத்தலைப் புறக்கணிப்பதால் ஏற்படும் ஒன்று.

கடந்த இரு ஆண்டுகளில் ஆங்காங்கே ஒருவர், இருவர் என இருபதுக்கும் மேற்பட்டோர் சாக்கடை அல்லது "செப்டிக் டேங்க்' பணிகளின்போது மரணமடைந்துள்ளனர். ஆனால், இவர்களுக்கு எத்தகைய காப்பீடு உள்ளது அல்லது இவர்களது குடும்பத்துக்கு எத்தகைய இழப்பீடு வழங்கப்படுகிறது என்பது அதிர்ச்சியளிக்கும் ஒன்றாக இருக்கிறது. நகராட்சி அல்லது மாநகராட்சி துப்புரவுப் பணியாளராக இருந்தால், குடும்ப நலநிதியாக ரூ.1.5 லட்சம் உடனடியாக வழங்கப்படும்.

தஞ்சை சம்பவத்தைப் பொருத்தவரையில், இவர்கள் தஞ்சை மாநகராட்சியின் துப்புரவு ஊழியர்கள் அல்லர். அயல்பணி ஒப்பந்தத்தில் இந்தப் பணி தனியார் நிறுவனத்துக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் கூலிக்கு வேலை செய்யும் நபர்கள்தான் மரணமடைந்த இருவரும். ஆகவே, அரசு இந்த மரணத்துக்குப் பொறுப்பேற்காது. அயல்பணி ஒப்பந்தத்தில் இத்தகைய மரணங்கள் நேர்ந்தால் பெரும்பாலான நகரங்களில் இவர்களுக்கு சில ஆயிரம் ரூபாய் கொடுத்து கதையை முடித்துவிடுகிறார்கள் என்பதே உண்மை.

இத்தகைய மரணங்களில் அயல்பணி ஒப்பந்ததாரர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஒப்பந்தங்களில் தெளிவாகக் குறிப்பிடப்படுவதே இல்லை.

அயல்பணி ஒப்பந்தம் என்றாலும்கூட, புதை சாக்கடை அடைப்புக்கு உள்ளானால் அதனை இயந்திரம் வைத்துதான் துப்புரவு செய்ய வேண்டும். தவிர்க்க முடியாத தருணங்களில், புதை சாக்கடைக்குள் இறங்குபவர், இது குறித்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிந்திருப்பவராக இருக்க வேண்டும். தஞ்சையில், இவர்கள் இறக்க நேர்ந்த புதை சாக்கடையில் மீட்புப் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினர், முதலில் எரியும் விளக்கை உள்ளே இறக்கி, அது அணைந்துபோனதால், ஆக்ஸிஜன் குழாய்களுடன் இறங்கியுள்ளனர் என்று சொன்னால், இறந்த தொழிலாளர்களுக்கு எந்தவித முன்னெச்சரிக்கை பயிற்சியும் அளிக்கப்படவில்லை என்பது தெரிகிறது.

பணியின்போது இதுபோன்ற துப்புரவுப் பணியாளர்கள் இறக்க நேரிட்டால் அவர்களுக்காக எத்தகைய இழப்பீடு தரப்படும் என்பது போன்ற நிபந்தனைகள் இந்த ஒப்பந்தங்களில் சட்டப்பூர்வமாக வலியுறுத்தப்படுவதில்லை. அப்படிப்பட்ட நிலையில் தனியார் நிறுவனங்களிடம் அயல்பணி ஒப்பந்தமாக இதுபோன்ற வேலைகளை ஒப்படைப்பது ஈவிரக்கமில்லாத செயலாகத்தான் இருக்க முடியும்.

இப்போதெல்லாம் எல்லா மாநகராட்சிகளிலும் துப்புரவுப் பணிகள் அனைத்தும் அயல்பணி ஒப்பந்தமாக மாற்றப்பட்டு வருகின்றன. பாதிக்கும் மேற்பட்டோர் அயல்பணி ஒப்பந்த நிறுவனத்தின்கீழ், வாரச் சம்பளம், அல்லது மாதச் சம்பளம் பெறுவோராக இருக்கின்றனர். இவர்களுக்கு எந்தச் சலுகைகளும் கிடையாது. துப்புரவுத் தொழிலுக்குரிய கருவிகள், கையுறைகள், பிரத்யேக ஆடைகள் அந்தந்த நாளுக்கு தரப்பட்டு திரும்பப் பெறப்படுகின்றன. வேறு எந்தவிதமான காப்பீடு திட்டமும், எதிர்கால வைப்புநிதியும் இவர்களுக்குக் கிடையாது.

திறந்த கழிவுறைகள் ஒழிப்புக்கு 1993-ஆம் ஆண்டு சட்டம் கொண்டு வரப்பட்டது. மனித மலத்தை மனிதர் அள்ளும் அவலநிலை முடிவுக்கு வந்ததாகப் பேசப்பட்டது. ஆனால், அவ்வாறாக இல்லை. இன்னும் பல இடங்களில் அது நடந்துகொண்டுதான் இருக்கின்றது. மிக அப்பட்டமாக நாம் காணக்கூடிய இடம் ரயில் நிலையம். ரயில்நிலைய தண்டவாளங்களில் மலத்தை அகற்றும் தொழிலில் மனிதர்கள்தான் இன்றும் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். இவர்கள் ரயில்வே ஊழியர்கள் அல்லர். அயல்பணி ஒப்பந்ததாரர்களிடம் பணிபுரிபவர்களே, தண்டவாளங்களுக்கு இடையே தூய்மை செய்யும் பணியை மேற்கொள்கின்றனர்.

இந்த வேலையை இவர்கள் செய்யாவிட்டால், வேறு யாரைக் கொண்டு செய்வது? வேறுஎப்படி சாக்கடையைச் சுத்தப்படுத்த முடியும்? இது அவர்களுக்கு ஒரு தொழில் என்றெல்லாம் பலர் வாதிடுகின்றனர். துப்புரவுப் பணியை அறிவியல்பூர்வமாக, ஆபத்து இல்லாமல் நடைமுறைப்படுத்த முடியும், அதற்கான வாய்ப்புகள் இருக்கும்போது நாம் ஏன் அதைப் பயன்படுத்துவதே இல்லை என்பதுதான் நமது கேள்வி.

புதைசாக்கடை, அல்லது தொழிற்சாலையின் ரசாயானத் தொட்டி என எதுவாக இருந்தாலும், இயந்திரத்தால் முடியாது அதை மனித உழைப்பின் மூலம்தான் செய்ய முடியும் என்ற கட்டாயச் சூழ்நிலையில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்கின்ற நிபந்தனைகள் உருவாக்கப்பட வேண்டும். இந்தப் பணியைத் தொடங்கும் முன்பாக, அந்த இடத்தில் மனிதர் இறங்கலாமா? ஆக்ஸிஜன் உள்ளதா? என்பதை சோதிக்க ரசாயன வல்லுநர்களை அங்கே நிறுத்தவும், உள்ளே இறங்குபவர் போதுமான மூச்சுக்கவசங்களுடன் பணியில் ஈடுபடவும் செய்வதில் என்ன பெருஞ்செலவு ஏற்படப் போகிறது!

அடித்தட்டு மக்கள்தானே என்கிற அலட்சியப் போக்கு நமக்கு எப்போதுதான் மாறுமோ? இறைவனுக்குத்தான் வெளிச்சம்!
நன்றி-தினமணி
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics
» சவூதி அரேபியாவில் விஷவாயு தாக்கி 2 இந்தியர்கள் பலி
» தொடரும் பெண் சிசுக்கொலைகள் - தீர்வு எப்போது?
» சூர்யா பிறந்தநாள்; பேனர் வைக்கும்போது மின்சாரம் தாக்கி 2 ரசிகர்கள் மரணம்
» வீட்டில் தெளிக்கப்பட்ட பூச்சி கொல்லியில் இருந்து விஷ வாயு தாக்கி இளம் தம்பதியினர் மரணம்
» துபாயில், பக்கத்து வீட்டில் கொசு மருந்து அடித்தபோது புகை தாக்கி ஐடி நிறுவன ஊழியர் மரணம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum