புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_c10விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_m10விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_c10விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_m10விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_c10 
5 Posts - 14%
heezulia
விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_c10விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_m10விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_c10விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_m10விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_c10விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_m10விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_c10 
2 Posts - 6%
Raji@123
விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_c10விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_m10விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_c10விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_m10விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_c10விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_m10விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_c10விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_m10விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_c10விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_m10விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_c10விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_m10விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_c10விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_m10விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_c10 
8 Posts - 2%
prajai
விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_c10விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_m10விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_c10விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_m10விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_c10விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_m10விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_c10விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_m10விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_c10 
4 Posts - 1%
mruthun
விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_c10விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_m10விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது?


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Jun 05, 2013 7:52 pm

இருநாள்களுக்கு முன்பு தஞ்சாவூரில் புதை சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை நீக்குவதற்காக உள்ளே இறங்கிய இரண்டு துப்புரவுத் தொழிலாளர்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்தனர். தமிழ்நாட்டில் இத்தகைய மரணங்கள் அடிக்கடி நடந்துகொண்டே இருக்கின்றன.

இந்த மரணங்கள், "விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' என்பதாகத்தான் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. அதாவது இவை தொழிற்சாலை விபத்து போன்ற உணர்வை ஏற்படுத்திவிடுகின்றது. இவர்கள் தொழிலாளர்கள் என்றாலும்கூட, ஒரு தொழிற்கூடத்தில் ரசாயனத் தொட்டியைக் கழுவும்போது ஏற்படும் விபத்தையும் சாக்கடையைத் துப்புரவு செய்வதையும் ஒன்றுபோல எப்படிக் கருத முடியும்? முதலாவது

எதிர்பார்க்காத தொழிற்சாலை விபத்து என்றால், சாக்கடைக்குள் மனிதர் இறங்குவதால் ஏற்படும் மரணம், சமுதாய அலட்சியத்தால், அதிகாரிகள் அரசு அறிவுறுத்தலைப் புறக்கணிப்பதால் ஏற்படும் ஒன்று.

கடந்த இரு ஆண்டுகளில் ஆங்காங்கே ஒருவர், இருவர் என இருபதுக்கும் மேற்பட்டோர் சாக்கடை அல்லது "செப்டிக் டேங்க்' பணிகளின்போது மரணமடைந்துள்ளனர். ஆனால், இவர்களுக்கு எத்தகைய காப்பீடு உள்ளது அல்லது இவர்களது குடும்பத்துக்கு எத்தகைய இழப்பீடு வழங்கப்படுகிறது என்பது அதிர்ச்சியளிக்கும் ஒன்றாக இருக்கிறது. நகராட்சி அல்லது மாநகராட்சி துப்புரவுப் பணியாளராக இருந்தால், குடும்ப நலநிதியாக ரூ.1.5 லட்சம் உடனடியாக வழங்கப்படும்.

தஞ்சை சம்பவத்தைப் பொருத்தவரையில், இவர்கள் தஞ்சை மாநகராட்சியின் துப்புரவு ஊழியர்கள் அல்லர். அயல்பணி ஒப்பந்தத்தில் இந்தப் பணி தனியார் நிறுவனத்துக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் கூலிக்கு வேலை செய்யும் நபர்கள்தான் மரணமடைந்த இருவரும். ஆகவே, அரசு இந்த மரணத்துக்குப் பொறுப்பேற்காது. அயல்பணி ஒப்பந்தத்தில் இத்தகைய மரணங்கள் நேர்ந்தால் பெரும்பாலான நகரங்களில் இவர்களுக்கு சில ஆயிரம் ரூபாய் கொடுத்து கதையை முடித்துவிடுகிறார்கள் என்பதே உண்மை.

இத்தகைய மரணங்களில் அயல்பணி ஒப்பந்ததாரர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஒப்பந்தங்களில் தெளிவாகக் குறிப்பிடப்படுவதே இல்லை.

அயல்பணி ஒப்பந்தம் என்றாலும்கூட, புதை சாக்கடை அடைப்புக்கு உள்ளானால் அதனை இயந்திரம் வைத்துதான் துப்புரவு செய்ய வேண்டும். தவிர்க்க முடியாத தருணங்களில், புதை சாக்கடைக்குள் இறங்குபவர், இது குறித்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிந்திருப்பவராக இருக்க வேண்டும். தஞ்சையில், இவர்கள் இறக்க நேர்ந்த புதை சாக்கடையில் மீட்புப் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினர், முதலில் எரியும் விளக்கை உள்ளே இறக்கி, அது அணைந்துபோனதால், ஆக்ஸிஜன் குழாய்களுடன் இறங்கியுள்ளனர் என்று சொன்னால், இறந்த தொழிலாளர்களுக்கு எந்தவித முன்னெச்சரிக்கை பயிற்சியும் அளிக்கப்படவில்லை என்பது தெரிகிறது.

பணியின்போது இதுபோன்ற துப்புரவுப் பணியாளர்கள் இறக்க நேரிட்டால் அவர்களுக்காக எத்தகைய இழப்பீடு தரப்படும் என்பது போன்ற நிபந்தனைகள் இந்த ஒப்பந்தங்களில் சட்டப்பூர்வமாக வலியுறுத்தப்படுவதில்லை. அப்படிப்பட்ட நிலையில் தனியார் நிறுவனங்களிடம் அயல்பணி ஒப்பந்தமாக இதுபோன்ற வேலைகளை ஒப்படைப்பது ஈவிரக்கமில்லாத செயலாகத்தான் இருக்க முடியும்.

இப்போதெல்லாம் எல்லா மாநகராட்சிகளிலும் துப்புரவுப் பணிகள் அனைத்தும் அயல்பணி ஒப்பந்தமாக மாற்றப்பட்டு வருகின்றன. பாதிக்கும் மேற்பட்டோர் அயல்பணி ஒப்பந்த நிறுவனத்தின்கீழ், வாரச் சம்பளம், அல்லது மாதச் சம்பளம் பெறுவோராக இருக்கின்றனர். இவர்களுக்கு எந்தச் சலுகைகளும் கிடையாது. துப்புரவுத் தொழிலுக்குரிய கருவிகள், கையுறைகள், பிரத்யேக ஆடைகள் அந்தந்த நாளுக்கு தரப்பட்டு திரும்பப் பெறப்படுகின்றன. வேறு எந்தவிதமான காப்பீடு திட்டமும், எதிர்கால வைப்புநிதியும் இவர்களுக்குக் கிடையாது.

திறந்த கழிவுறைகள் ஒழிப்புக்கு 1993-ஆம் ஆண்டு சட்டம் கொண்டு வரப்பட்டது. மனித மலத்தை மனிதர் அள்ளும் அவலநிலை முடிவுக்கு வந்ததாகப் பேசப்பட்டது. ஆனால், அவ்வாறாக இல்லை. இன்னும் பல இடங்களில் அது நடந்துகொண்டுதான் இருக்கின்றது. மிக அப்பட்டமாக நாம் காணக்கூடிய இடம் ரயில் நிலையம். ரயில்நிலைய தண்டவாளங்களில் மலத்தை அகற்றும் தொழிலில் மனிதர்கள்தான் இன்றும் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். இவர்கள் ரயில்வே ஊழியர்கள் அல்லர். அயல்பணி ஒப்பந்ததாரர்களிடம் பணிபுரிபவர்களே, தண்டவாளங்களுக்கு இடையே தூய்மை செய்யும் பணியை மேற்கொள்கின்றனர்.

இந்த வேலையை இவர்கள் செய்யாவிட்டால், வேறு யாரைக் கொண்டு செய்வது? வேறுஎப்படி சாக்கடையைச் சுத்தப்படுத்த முடியும்? இது அவர்களுக்கு ஒரு தொழில் என்றெல்லாம் பலர் வாதிடுகின்றனர். துப்புரவுப் பணியை அறிவியல்பூர்வமாக, ஆபத்து இல்லாமல் நடைமுறைப்படுத்த முடியும், அதற்கான வாய்ப்புகள் இருக்கும்போது நாம் ஏன் அதைப் பயன்படுத்துவதே இல்லை என்பதுதான் நமது கேள்வி.

புதைசாக்கடை, அல்லது தொழிற்சாலையின் ரசாயானத் தொட்டி என எதுவாக இருந்தாலும், இயந்திரத்தால் முடியாது அதை மனித உழைப்பின் மூலம்தான் செய்ய முடியும் என்ற கட்டாயச் சூழ்நிலையில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்கின்ற நிபந்தனைகள் உருவாக்கப்பட வேண்டும். இந்தப் பணியைத் தொடங்கும் முன்பாக, அந்த இடத்தில் மனிதர் இறங்கலாமா? ஆக்ஸிஜன் உள்ளதா? என்பதை சோதிக்க ரசாயன வல்லுநர்களை அங்கே நிறுத்தவும், உள்ளே இறங்குபவர் போதுமான மூச்சுக்கவசங்களுடன் பணியில் ஈடுபடவும் செய்வதில் என்ன பெருஞ்செலவு ஏற்படப் போகிறது!

அடித்தட்டு மக்கள்தானே என்கிற அலட்சியப் போக்கு நமக்கு எப்போதுதான் மாறுமோ? இறைவனுக்குத்தான் வெளிச்சம்!
நன்றி-தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக