ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெங்களூர்: பட்டதாரி பெண்ணை 4 ஆண்டுகள் வீட்டில் சிறை வைத்த கொடுமை

5 posters

Go down

ஈகரை பெங்களூர்: பட்டதாரி பெண்ணை 4 ஆண்டுகள் வீட்டில் சிறை வைத்த கொடுமை

Post by Muthumohamed Wed Jun 05, 2013 9:52 am

பெங்களூர்: பட்டதாரி பெண்ணை 4 ஆண்டுகள் வீட்டில் சிறை வைத்த கொடுமை 8d3a34a6-89c6-4124-90b7-696608ef9e12_S_secvpf

பெங்களூர், ஜூன்.5-

'ஹை-டெக் சிட்டி', 'சிலிக்கான் நகரம்', 'தகவல் தொழில்நுட்ப நகரம்', 'பூங்கா நகரம்' என்று பல்வேறு சிறப்பு பெயர்களை பெற்றுள்ள பெங்களூர் நகரில் சமீப காலமாக குற்ற செயல்களும் அதிகரித்து வருகின்றன. கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, தற்கொலை உள்ளிட்ட சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன.

இந்த நிலையில், இளம்பெண் ஒருவரை 4 ஆண்டுகளாக வீட்டில் சிறை வைத்து சித்ரவதை செய்த கொடூர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. பரிதாபத்துக்கு உரிய அந்த அபலைப் பெண்ணின் பெயர் ஹேமாவதி (வயது 30). பெங்களூர் மல்லேசுவரம் 16-வது கிராஸ் பகுதியை சேர்ந்த ரேணுகப்பா, புட்ட கவுரம்மா தம்பதிகளின் மகள். பி.காம். பட்டதாரி.

ஹேமாவதியை வீட்டில் பூட்டி சிறை வைத்து இருப்பதாக அந்தப் பகுதியை சேர்ந்த தன்னார்வ தொண்டு அமைப்பினருக்கு நேற்று தகவல் கிடைத்தது. உடனே, வாலிபர்கள் சிலர் அந்த வீட்டுக்கு சென்று பார்க்க முயன்றனர். ஆனால், அவர்களை ஹேமாவதியின் பெற்றோர் வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை.

வீட்டில் யாரும் சிறை வைக்கப்படவில்லை என்று கூறி அவர்களை வெளியே செல்லும்படி திட்டி அனுப்பினார்கள். அப்போது, அந்த வீட்டுக்குள் இருந்து ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டது. இதனால் வாலிபர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுபற்றி அவர்கள் உடனடியாக மல்லேசுவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

மேலும் சுகாதாரத்துறை மந்திரி யு.டி.காதருக்கும் தகவல் தெரிவித்தனர். உடனடியாக மந்திரி யு.டி.காதரும், போலீசாரும், மருத்துவ குழுவினருடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். வீட்டுக்குள் சென்ற அவர்கள், அங்கு இளம்பெண் ஹேமாவதி கிடந்த நிலையை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மந்திரி யு.டி.காதர் கண் கலங்கினார்.

ஹேமாவதி ஒரு மூலையில் முடங்கிப்போய் கிடந்தார். அவரது தலை முடி சிக்கல், சிக்கலாக காணப்பட்டது. உடல் வலுவிழந்த நிலையில் சுருண்டு போய் படுத்து இருந்தார். கை, கால்களில் நகங்கள் வெட்டப்படாமல் தாறுமாறாக வளர்ந்து கோரமாக காட்சி அளித்தது. சரியான உடைகூட கொடுக்கப்படாமல், அரைகுறை ஆடையுடன் அலங்கோலமாகக் கிடந்தார்.

ஒரு பட்டதாரி பெண்ணுக்கா இப்படி ஒரு நிலை என்று கூறும் அளவுக்கு ஹேமாவதியின் நிலை பரிதாபமாக இருந்தது. அவரை 4 ஆண்டுக்கும் மேலாக அவரது பெற்றோர் வீட்டில் சிறை வைத்திருக்கலாம் என்று தெரிகிறது. இருளிலேயே பல ஆண்டுகளை கழித்ததால் அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்றும் தெரிகிறது.

ஹேமாவதியின் நிலைமையை பார்த்து மனம் உடைந்து போன மந்திரி யு.டி.காதர் கனத்த இதயத்துடன் அவரிடம் பேச முயன்றார். ஆனால், மந்திரியின் பேச்சை உணரக்கூடிய நிலையில் ஹேமாவதியின் உடல் வலிமையும், மனநலமும் இல்லை. இதனால் ஹேமாவதியின் தந்தை ரேணுகப்பாவிடம் மந்திரி சில விவரங்களை கேட்டு அறிந்தார்.

அதன்பிறகு ஹேமாவதிக்கு வீட்டில் வைத்தே மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் ஹேமாவதியை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கும்படி மந்திரி கேட்டுக்கொண்டார். அதை ஏற்று, ஹேமாவதியை தேசிய மனநல ஆஸ்பத்திரிக்கு (நிமான்ஸ்) கொண்டு சென்று சேர்த்தனர்.

அங்கு அவருக்கு முதலில் ரத்த பரிசோதனை செய்து, பின்னர் மனநலம் தொடர்பான சிகிச்சையை டாக்டர் குழுவினர் அளித்து வருகிறார்கள். ஹேமாவதியின் சோக வாழ்க்கை பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளது. ஹேமாவதி படிப்பில் கெட்டிக்காரர். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 'ரேங்க்' பெற்றவர்.

பி.யூ.சி. பரீட்சையிலும் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்த அவர், 'பி.காம்.' பட்டப் படிப்பிலும் சிறப்பான தேர்ச்சி பெற்றவர். ஹேமாவதியின் திறமையை பார்த்த 'சார்ட்டர்டு அக்கவுண்டன்ட்' ஒருவர், அவரை தன்னிடம் வேலைக்கு சேர்த்து பயிற்சி அளித்ததாக கூறப்படுகிறது.

ஆனால், அதில் ஹேமாவதியின் பெற்றோருக்கு விருப்பம் இல்லாததால், அவரை வேலைக்குச் செல்ல வேண்டாம் என்று அவர்கள் நிறுத்தியதாக தெரிகிறது. ஹேமாவதி வாலிபர் ஒருவரை காதலித்ததாகவும், அதில் பெற்றோருக்கு விருப்பம் இல்லாததால், அந்தக் காதலை கைவிடும்படி அவர்கள் கூறியதை ஹேமாவதி கேட்கவில்லை என்றும், இதனால் அவரை வீட்டில் சிறை வைத்ததாகவும் அக்கம், பக்கத்தினர் கூறுகிறார்கள்.

ஆனால், ஹேமாவதியை தான் வீட்டில் சிறை வைக்கவில்லை என்று தந்தை ரேணுகப்பா மறுத்தார். ''எங்கள் மகளை நாங்கள் சிறை வைக்கவில்லை. அவளுக்கு உடல் நலம் சரியில்லை. அவளது கை, கால்களில் உணர்வு இல்லை. இதற்கு வேறு அர்த்தம் எதுவும் கற்பிக்க வேண்டாம்'' என்று அவரது தந்தை கூறினார்.

ஹேமாவதியின் தம்பி சோமசேகர் கூறும்போது, ''எனது அக்காள் நன்றாக இருந்தார். கடந்த 4 1/2 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு பல ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளித்தோம். இதனால் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. பின்னர் அவரை வீட்டுக்கு அழைத்து வந்தோம்'' என்றார்.

ஹேமாவதி அவரது பெற்றோரால் சிறை வைக்கப்பட்டாரா? அல்லது அவரது தந்தை கூறுவது போல் உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளாரா? என்பது குறித்து உடனடியாக தகவல் எதுவும் தெரியவில்லை.

ஆனால், பள்ளி, கல்லூரி வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவித்த அவர் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக வெளிச்சத்தையே பார்க்காமல் வீட்டுக்குள் முடங்கி கிடந்து, அதனால் மனம் பாதித்த சம்பவம் அந்த பகுதியில் மட்டும் அல்லாமல் கர்நாடகம் முழுவதும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்துக்கு இந்திய மனித உரிமைகள் ஆணையமும், இந்திய மகளிர் ஆணையமும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. இந்த கொடூர சித்ரவதை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகிறார்கள்.

தகவல் தளம்



பெங்களூர்: பட்டதாரி பெண்ணை 4 ஆண்டுகள் வீட்டில் சிறை வைத்த கொடுமை Mபெங்களூர்: பட்டதாரி பெண்ணை 4 ஆண்டுகள் வீட்டில் சிறை வைத்த கொடுமை Uபெங்களூர்: பட்டதாரி பெண்ணை 4 ஆண்டுகள் வீட்டில் சிறை வைத்த கொடுமை Tபெங்களூர்: பட்டதாரி பெண்ணை 4 ஆண்டுகள் வீட்டில் சிறை வைத்த கொடுமை Hபெங்களூர்: பட்டதாரி பெண்ணை 4 ஆண்டுகள் வீட்டில் சிறை வைத்த கொடுமை Uபெங்களூர்: பட்டதாரி பெண்ணை 4 ஆண்டுகள் வீட்டில் சிறை வைத்த கொடுமை Mபெங்களூர்: பட்டதாரி பெண்ணை 4 ஆண்டுகள் வீட்டில் சிறை வைத்த கொடுமை Oபெங்களூர்: பட்டதாரி பெண்ணை 4 ஆண்டுகள் வீட்டில் சிறை வைத்த கொடுமை Hபெங்களூர்: பட்டதாரி பெண்ணை 4 ஆண்டுகள் வீட்டில் சிறை வைத்த கொடுமை Aபெங்களூர்: பட்டதாரி பெண்ணை 4 ஆண்டுகள் வீட்டில் சிறை வைத்த கொடுமை Mபெங்களூர்: பட்டதாரி பெண்ணை 4 ஆண்டுகள் வீட்டில் சிறை வைத்த கொடுமை Eபெங்களூர்: பட்டதாரி பெண்ணை 4 ஆண்டுகள் வீட்டில் சிறை வைத்த கொடுமை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: பெங்களூர்: பட்டதாரி பெண்ணை 4 ஆண்டுகள் வீட்டில் சிறை வைத்த கொடுமை

Post by முத்துராஜ் Wed Jun 05, 2013 9:54 am

நானும் செய்திதாளில் இந்த செய்தியை படித்தேன் சோகம்


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

பெங்களூர்: பட்டதாரி பெண்ணை 4 ஆண்டுகள் வீட்டில் சிறை வைத்த கொடுமை Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

ஈகரை Re: பெங்களூர்: பட்டதாரி பெண்ணை 4 ஆண்டுகள் வீட்டில் சிறை வைத்த கொடுமை

Post by ஹாசிம் Wed Jun 05, 2013 10:25 am

கொடுமையிலும் கொடுமை இப்படியெல்லாம் நடக்குறிதே மண்டையில் அடி


நேசமுடன் ஹாசிம்
பெங்களூர்: பட்டதாரி பெண்ணை 4 ஆண்டுகள் வீட்டில் சிறை வைத்த கொடுமை Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஈகரை Re: பெங்களூர்: பட்டதாரி பெண்ணை 4 ஆண்டுகள் வீட்டில் சிறை வைத்த கொடுமை

Post by krishnaamma Wed Jun 05, 2013 1:34 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை Re: பெங்களூர்: பட்டதாரி பெண்ணை 4 ஆண்டுகள் வீட்டில் சிறை வைத்த கொடுமை

Post by உமா Wed Jun 05, 2013 1:44 pm

மிகவும் வேதனையான செய்தி. சோகம்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஈகரை Re: பெங்களூர்: பட்டதாரி பெண்ணை 4 ஆண்டுகள் வீட்டில் சிறை வைத்த கொடுமை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum