ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாதுக்களுக்கும் , இரந்து( பிச்சை எடுத்து )உண்பவர்களும் ஒன்றா

3 posters

Go down

சாதுக்களுக்கும் , இரந்து( பிச்சை எடுத்து )உண்பவர்களும் ஒன்றா Empty சாதுக்களுக்கும் , இரந்து( பிச்சை எடுத்து )உண்பவர்களும் ஒன்றா

Post by mohu Mon Jun 03, 2013 7:34 pm

சாதுக்களுக்கும் , இரந்து( பிச்சை எடுத்து )உண்பவர்களும் ஒன்றா தகுந்த விளக்கம் தரவும் .

நன்றி
mohu
mohu
பண்பாளர்


பதிவுகள் : 125
இணைந்தது : 11/01/2012

http://www.dhuruvamwm.blogspot.com

Back to top Go down

சாதுக்களுக்கும் , இரந்து( பிச்சை எடுத்து )உண்பவர்களும் ஒன்றா Empty Re: சாதுக்களுக்கும் , இரந்து( பிச்சை எடுத்து )உண்பவர்களும் ஒன்றா

Post by சதாசிவம் Tue Jun 04, 2013 3:40 pm

இருவருக்கும் வேறுபாடுகள் உண்டு. தங்கள் கேள்வியின் பின்புலம் என்னவென்று கூறினால் மேலும் விளக்குவதற்கு வசதியாய் இருக்கும்.


சதாசிவம்
சாதுக்களுக்கும் , இரந்து( பிச்சை எடுத்து )உண்பவர்களும் ஒன்றா 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

சாதுக்களுக்கும் , இரந்து( பிச்சை எடுத்து )உண்பவர்களும் ஒன்றா Empty Re: சாதுக்களுக்கும் , இரந்து( பிச்சை எடுத்து )உண்பவர்களும் ஒன்றா

Post by balakarthik Tue Jun 04, 2013 4:04 pm

சதாசிவம் wrote:இருவருக்கும் வேறுபாடுகள் உண்டு.
அதெத்தான் நானும் சொல்ல நினைத்தேன் சாதுக்களுக்கு உணவென்பது பெரிய விஷயம் இல்லை ஒருவேளை அது கிடைக்காவிட்டாலும் அவர்கள் அதற்காக கவலைப்படமாட்டார்கள் (உண்மையான சாதுக்கள் , சித்தர்கள் போன்றவர்கள் , நித்யானந்தா கோஷ்டியினர் இல்லை) அவர்களின் நோக்கம் உணவல்ல இறைவன் மட்டுமே ஆனால் இரந்து கேட்பவர்களுக்கு அப்படி இல்லை உணவுக்காகவும் காசுக்காகவும் மட்டுமே அவர்கள் பிச்சை எடுக்கிறார்கள் (இதிலும் நிறையா போலிகள் உண்டு , மேலும் ரவுடிகளால் நடத்தப்படும் தொழிலில் இவர்கள் கட்டாயமாகவும் பிச்சை எடுக்கவைக்கபடுகிரார்கள்) இவர்களின் நோக்கம் உயிர்வாழ்வதே அன்றி வேறெதுவும் இல்லை


ஈகரை தமிழ் களஞ்சியம் சாதுக்களுக்கும் , இரந்து( பிச்சை எடுத்து )உண்பவர்களும் ஒன்றா 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சாதுக்களுக்கும் , இரந்து( பிச்சை எடுத்து )உண்பவர்களும் ஒன்றா Empty Re: சாதுக்களுக்கும் , இரந்து( பிச்சை எடுத்து )உண்பவர்களும் ஒன்றா

Post by mohu Tue Jun 04, 2013 4:20 pm

சதாசிவம் wrote:இருவருக்கும் வேறுபாடுகள் உண்டு. தங்கள் கேள்வியின் பின்புலம் என்னவென்று கூறினால் மேலும் விளக்குவதற்கு வசதியாய் இருக்கும்.
சமீபத்தில் ஒரு வார இதழில் இருவரையும் ஒன்று போல் சித்தரித்து கதை பிரசுரம் ஆகீருந்தது ..
கதையின் சாராம்சம் ((குழந்தை இல்லாத பெண்ணொருத்தி இருபது பிச்சைக்காரர்களுக்கு உணவளிக்க விரும்புகிறாள், ஆனால் ஐம்பது சாதுக்கள் சாப்பிட வந்துவிட்டார்கள் என்பதாக கதையின் பாதை செல்கிறது)) அது தான் கேட்டேன், நன்றி .


Last edited by mohu on Tue Jun 04, 2013 4:35 pm; edited 2 times in total
mohu
mohu
பண்பாளர்


பதிவுகள் : 125
இணைந்தது : 11/01/2012

http://www.dhuruvamwm.blogspot.com

Back to top Go down

சாதுக்களுக்கும் , இரந்து( பிச்சை எடுத்து )உண்பவர்களும் ஒன்றா Empty Re: சாதுக்களுக்கும் , இரந்து( பிச்சை எடுத்து )உண்பவர்களும் ஒன்றா

Post by mohu Tue Jun 04, 2013 4:29 pm

balakarthik wrote:
சதாசிவம் wrote:இருவருக்கும் வேறுபாடுகள் உண்டு.
அதெத்தான் நானும் சொல்ல நினைத்தேன் சாதுக்களுக்கு உணவென்பது பெரிய விஷயம் இல்லை ஒருவேளை அது கிடைக்காவிட்டாலும் அவர்கள் அதற்காக கவலைப்படமாட்டார்கள் (உண்மையான சாதுக்கள் , சித்தர்கள் போன்றவர்கள் , நித்யானந்தா கோஷ்டியினர் இல்லை) அவர்களின் நோக்கம் உணவல்ல இறைவன் மட்டுமே ஆனால் இரந்து கேட்பவர்களுக்கு அப்படி இல்லை உணவுக்காகவும் காசுக்காகவும் மட்டுமே அவர்கள் பிச்சை எடுக்கிறார்கள் (இதிலும் நிறையா போலிகள் உண்டு , மேலும் ரவுடிகளால் நடத்தப்படும் தொழிலில் இவர்கள் கட்டாயமாகவும் பிச்சை எடுக்கவைக்கபடுகிரார்கள்) இவர்களின் நோக்கம் உயிர்வாழ்வதே அன்றி வேறெதுவும் இல்லை
மிக்க நன்றி . ஆனால் இன்னும் தெளிவான விளக்கம் எதிர்பார்க்கிறேன்.
mohu
mohu
பண்பாளர்


பதிவுகள் : 125
இணைந்தது : 11/01/2012

http://www.dhuruvamwm.blogspot.com

Back to top Go down

சாதுக்களுக்கும் , இரந்து( பிச்சை எடுத்து )உண்பவர்களும் ஒன்றா Empty Re: சாதுக்களுக்கும் , இரந்து( பிச்சை எடுத்து )உண்பவர்களும் ஒன்றா

Post by balakarthik Tue Jun 04, 2013 4:35 pm

mohu wrote:மிக்க நன்றி . ஆனால் இன்னும் தெளிவான விளக்கம் எதிர்பார்க்கிறேன்.
அடடே உங்களுக்கும் தெரிஞ்சுபோச்சா நான் இன்னும் தெளியலேன்னு காத்திருங்க நம்ம சதாசிவம் ஐயா , சாமி ஐயா போன்றோர் மிக தெளிவான விளக்கங்களை கொடுப்பார்கள்


ஈகரை தமிழ் களஞ்சியம் சாதுக்களுக்கும் , இரந்து( பிச்சை எடுத்து )உண்பவர்களும் ஒன்றா 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சாதுக்களுக்கும் , இரந்து( பிச்சை எடுத்து )உண்பவர்களும் ஒன்றா Empty Re: சாதுக்களுக்கும் , இரந்து( பிச்சை எடுத்து )உண்பவர்களும் ஒன்றா

Post by சதாசிவம் Sat Jun 08, 2013 9:43 am

முதலில் நாம் ஏன் பிச்சை இட வேண்டும் என்று சிந்தித்தால், சாதுக்களுக்கு, சாதாரண மனிதர்களுக்கு உள்ளே இடைவெளியை நன்கு உணரலாம். உங்கள் கேள்விக்கு சற்று விரிவாக விடையளிப்பது, இதில் இருந்து கிளைக்கும் வேறு பல கேள்விகளுக்கும் விடையளிக்கும் என்ற நம்பிக்கையில் இவ்விரிவான விளக்கம்.

நவீன அறிவியலில் eco-system/ecology என்ற பெயரில் ஒரு உயிர் மற்றொரு உயிரை சார்ந்து வாழும் சூழல் உணரப்பட்டுள்ளது. அது போல் பண்டைய வாழ்வியல் முறையில் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும் சூழல் இயல்பாக அமைக்கப்பட்டது. மனித சமூக அமைப்பில் ஒருவருக்கு ஒருவர் உதவ வேண்டியது அவசியம், அதை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் எல்லா மதமும் வலியுறுத்துகிறது. இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

வடமொழியில் பிக்ஷா, யாசகம் என்ற இரண்டு சொல் உண்டு. இவை இரண்டும் நவீன காலத்தில் ஒரே பொருளில் ஆளப்பட்டாலும், ஒன்று போல் மற்றொன்று தோன்றினாலும் அடிப்படையில் வேறு ,வேறு பொருள் கொண்டவை. யாசகம் என்ற வார்த்தைக்கு இணையான தமிழ் வார்த்தை இரத்தல், இரந்து கோரல் என்று பொருள் கொள்ளலாம். பிக்ஷா என்ற வார்த்தைக்கு அறம், தொண்டு, சேவை என்ற பொருள் கொள்வது சரியெனப்படுகிறது. “தயதி பிக்ஷாம் தேஹி” என்ற சொல்லுக்கு “அம்மா பிச்சை இடுங்கள்” என்று பொருள் கொள்ளப்படுவதை விட “நீங்கள் அறம் செய்யுங்கள்” என்றே பொருள் கொள்ள வேண்டும்.

அனைத்தையும் துறந்திருப்பவரைத் தான் துறவி, சாது, இறையடியார்கள் என்று பலவாறு அழைக்கிறோம். பலநேரெங்களில் இவர்கள் இறைவனின் புகழ் பாடுபவர்கள் என்று நாம் எண்ணுகிறோம். ஆனால் இவர்களின் முக்கியவேலை மக்களிடம் இருக்கும் அறியாமையை விளக்கி மெய்ப்பொருள் உணர்த்துவது தான். அனைத்து இறைத்தூதர்களும் இதைத் தான் செய்தனர். இப்படி அனைத்தையும் துறந்தவர், உணவுக்காக பிறரை நம்பி இருக்கும் சூழல் நிலவுவதற்கு இரண்டு காரணங்கள் கூறப்படுகிறது. ஒன்று மக்கள் தொடர்பில் நற்கருத்தை பரப்பி, அவர்களின் குறைகளையும், பாவங்களையும் கரைக்கும் பொருட்டு (தானம் பெறுவதன் மூலம்), மற்றொன்று இவர்களுக்கும் தான் என்ற அகந்தை வராமல் இருக்கவும், சுயத் தூய்மைக்கும் இது வலியுறுத்தப்படுகிறது. பல மதங்களிலும் இவ்வழக்கம் உள்ளது
.

இந்து மதம்

இந்து மத தர்மத்தில் மனிதனின் வாழ்க்கையில் நான்கு நிலைகள் உள்ளன. அவை பிரமச்சரியம் (ஒருவர் கல்வி கற்கும் காலம்), கிரகஸ்தம் (இல்லற வாழ்க்கை), வானப்பிரஸ்தம் (பொறுப்புகளை அடுத்த சந்ததியினரிடம் கொடுத்த புண்ணிய யாத்திரை செல்லுதல்), ஸந்யாஸம் (பற்றுகளைத் துறந்த நிலை). இதில் இல்வாழ்க்கை வாழ்பவன் மற்ற மூவரையும் காக்க வேண்டும் என்று வலியுறுப்பட்டது. திருக்குறளும்

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை


ஸந்யாஸம் அல்லது துறவறம் இந்நான்கில் மிகவும் உயர்வாக கருத்தப்பட்டது. வள்ளுவனும் இதை

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக் கொண் டற்று
– என்று பெருமைபடுத்துகிறார்.

தானம் இடுவது, அறம் செய்வது நாம் செய்த பாவங்களை போக்கும் என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. என்ன என்ன தானம் கொடுக்கும் பொழுது என்ன என்ன பலன் கிடைக்கும் என்று புராணங்கள் விளக்குகிறது. இதை அடிப்படையாக கொண்டு ஜோதிடம் ஒரு படி மேலே போய் என்ன என்ன பிரச்சனைக்கு என்ன என்ன தானம் செய்ய வேண்டும் என்று பெரிய பட்டியலே போடுகிறது. தாங்கள் சொன்ன சிறுகதையும் இவ்வழியே.


இஸ்லாம்

இஸ்லாமின் ஐந்து தூண்களில் ஒன்றாக கருத்தப்படுவது ஜாகத் (ZAKAT) என்று சொல்லப்படும் அறம் செய்தல். இல்லாதவருக்கு இருப்பவர் கண்டிப்பாக கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. தேவைக்கு அதிகமாக உள்ள பொருள்களை (கோதுமை, பசு, ஆடு, ஒட்டகம், பிற உணவுப் பொருள்கள்) இல்லாதவருக்கு கொடுக்க வேண்டும் என்றும் அதற்கான வழிமுறைகளையும் அழகாகச் சொல்லியுள்ளது. இருப்பவர் கொடுப்பது அவர்களின் கருணை அல்ல, இல்லாதவரின் உரிமை என்றும் புகல்கிறது. இது மட்டுமல்லாமல் KHUMS என்ற அறமும் போதிக்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு உபரியாக வரும் வருமானம், லாபத்தில் இருந்து எடுத்து செய்யப்படவேண்டியவை. இது பெரும்பாலும் மதகுருமார்களிடம் கொடுக்கப்படுகிறது. இப்பணம் கல்வி மற்றும் வேறு பல பயனுள்ள சமூக செலவீனங்களுக்குப் பயன்படுத்தப்படும். இது போன்ற தர்ம காரியங்கள் ஒருவரை சுத்தப்படுத்தும், அவர்களின் பாவங்களை போக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

நபியே அவர்களுடைய செல்வங்களிலிருந்து தர்மத்தை (ஜகாத்தை) எடுப்பீராக, அதனால் அவர்களை நீர் சுத்தப்படுத்தி, அவர்களின் அங்கங்களை தூய்மையாக்கி வைப்பீராக. மேலும், அவர்களுக்கு பிராத்தனை செய்வீராக. நிச்சயமாக உமது பிராத்தனை அவர்களுக்கு நிம்மதி அளிப்பதாகும். மேலும் அல்லாஹ் செவியேற்கிறவன், மிக்க அறிகிறவன்” –(திருமறை வசனம் 9:103)

புத்த மதம்

புத்த மதத்திலும் பிட்சு (MONK) என்ற சொல் பிக்ஷா என்ற சொல்லில் இருந்து கிளைத்தவையே. இந்த பிட்சுகள் உணவுக்கு மக்களிடம் சென்று கேட்கும் வழக்கம் இன்றும் ஜப்பான், சீனா, தைவான், இலங்கை போன்ற நாடுகளில் நடைமுறையில் உள்ளது. மக்கள் இவர்களுக்கு உணவிடுவதை சேவையாகவே கருதுகிறார்கள். இது பிச்சை இல்லை.

கிருத்துவம்

மத்திய கால கிருத்துவத்தில் இறைச்சேவையாளர்கள், பரப்பாளர்கள் இருந்தனர். இவர்களை Friar, Mendicent என்ற பெயரில் அழைக்கப்பட்டனர். RC வழியில் பிரிவுகளுக்கும், பொறுப்புக்கும் தகுந்து White friar, Black friar, Grey friar, Augustinian friar என்று வெவ்வேறு வகை அங்கிகள் அணிந்த துறவிகள் இருந்தனர். இவர்கள் அவர்களுக்கென்று பொருளோ, பணமோ, சொத்தோ சேர்க்கக்கூடாது என்ற விதிமுறையும் இருந்தது. பிறரின் தானத்தை மட்டும் நம்பி வாழும் சூழல் அவர்களுக்கு விதிக்கப்பட்டது.


ஒரு பெரிய ஆலமரத்தில் பல பறவைகள் வாழ்கிறது, ஆயினும் அந்த ஆலமர விதை ஒரு இடத்தில் இருந்து வேறு இடம் செல்ல சிறிய பறவைகள் தேவைப்படுகிறது. அதுபோல் நற்கருத்துகள் பரவுவதற்கு மகான்களும் மக்களும் தேவைப்பட்டனர். அதுபோல் தான் சாதுக்களுக்கு நாம் செய்வது. இது தொண்டு, சேவை. இது பிச்சை இல்லை ஒரு பறவை மற்றொரு பறவைக்கு உதவுவது போல் பிற மனிதருக்கு உதவுவது தான் நாம் பிச்சைக்காரனுக்கு இடுவது.

ஆக அறம் செய்ய வேண்டும் என்று அனைத்து மதங்களும் கூறுகிறது. வள்ளுவனும் அறம் செய்பவர் பல்லக்கில் பயணம் செய்பவர் போல் சுகமாக இருப்பர். செய்யாதவர் பல்லக்கை சுமக்கும் நபர் போல் சிரமப்படுவர் என்று கூறுகிறார்.

நாம் பல்லக்கில் பயணம் செய்ய முயலுவோம்.


சதாசிவம்
சாதுக்களுக்கும் , இரந்து( பிச்சை எடுத்து )உண்பவர்களும் ஒன்றா 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

சாதுக்களுக்கும் , இரந்து( பிச்சை எடுத்து )உண்பவர்களும் ஒன்றா Empty Re: சாதுக்களுக்கும் , இரந்து( பிச்சை எடுத்து )உண்பவர்களும் ஒன்றா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum