ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குட்டி குட்டி சைக்கிள்!

+4
jenisiva
பாலாஜி
யினியவன்
சிவா
8 posters

Go down

குட்டி குட்டி சைக்கிள்! Empty குட்டி குட்டி சைக்கிள்!

Post by சிவா Mon Jun 03, 2013 6:09 pm



சின்னா ஒரு ஏழைப் பையன். சிறுவயதிலேயே குடும்பத்தை காப்பாற்றும் கடமை அவனுக்கு ஏற்பட்டு விட்டது. அதனால், வேலை செய்யக் கிளம்பிட்டான்.

சின்னா, பக்கத்து ஊரிலிருந்த ஒரு கிழவரின் வீட்டில் வேலை செய்து வந்தான். மாதா மாதம், அவர் கொடுக்கும் சம்பளத்தை ஊருக்கு அனுப்பிவிடுவான். இப்படியே, ஒரு வருஷமாயிற்று.

ஒருநாள் சின்னாவிற்கு, தன் அம்மாவை பார்க்க வேண்டும்போல ஆசையாக இருந்தது. தன் விருப்பத்தை கிழவரிடம் சொன்ன போது, அவர் சின்னாவிடம் வாத்து ஒன்றை கொடுத்து, ""இதன் காதில் நான் சொல்லும் மந்திரத்தைச் சொன்னால், இது உடனே, ஒரு தங்க முட்டையிடும். ஆனால், நடுவழியில் எங்கேயும் தங்காதே... தங்கினாயோ வாத்தை யாராவது தட்டிக்கொண்டு போய்விடுவர்,'' என்று எச்சரித்து அனுப்பினார்.

சின்னாவும் கிளம்பினான். நடுவழியில் அவனுக்கு பசியும், தாகமும் ஏற்பட்டது. அப்போது தூரத்தில் ஒரு சிறுவீடு தென் பட்டது. அதைக் நோக்கிப் போனான். அந்த வீட்டுக்காரன் அப்போதுதான் தோசை வார்த்துக் கொண்டி ருந்தான். அதன் வாசனை சின்னாவை அந்த இடத்தை விட்டு நகரவிடாமல் செய்தது. சின்னா அங்கேயே இளைப்பாற தங்கி விட்டான். தோசை தின்று களைப்பாறிய பிறகு சின்னா, தாத்தாவின் வார்த்தையைப் பரீட்சிக்க, வாத்தை எடுத்து வைத்துக் கொண்டு, அதன் காதில் மந்திரவார்த்தையை சொன்னான். என்ன ஆச்சரியம்? அது "டக்'கென்று ஒரு பொன்முட்டையிட்டது. அதை கதவிடுக்கின் வழியாக கவனித்துக் கொண்டிருந்தான் அந்த வீட்டுக்காரன். சின்னா தூங்கியதும், தன்னிடமிருந்த ஒரு சாதாரண வாத்தை அவன் பக்கத்தில் வைத்துவிட்டு, பொன் முட்டையிடும் வாத்தை எடுத்து ஒளித்து வைத்துக் கொண்டான்.

சின்னா வீட்டுக்குப் போனதும், அம்மாவிடம் தன் அதிசய வாத்தைப் பற்றிச் சொல்லி, பொன் முட்டையிடும் மந்திரத்தை வாத்திடம் கூறினான். ஆனால், வாத்து முட்டையிடவில்லை. அது மந்திர வாத்தாக இருந்தாலல்லவா? தான் தாத்தாவின் வார்த்தையை மறந்து, வழியில் தங்கியதை நினைத்து வருத்தமடைந்து, சின்னா மறுபடியும் தாத்தாவின் வீட்டிற்குப் போனான்.

ஒரு வருஷம் வேலை செய்தான். வருஷக் கடைசியில் ஊருக்குக் கிளம்பும் போது, தாத்தா ஒரு சின்ன சைக்கிள் வண்டியைக் கொடுத்து, ""இது மந்திர சைக்கிள்... நீ ஏறி உட்கார்ந்து, "குட்டி குட்டி சைக்கிளே! நீ என்னைச் சுமந்து ஓடு,ஓடு சைக்கிளே!' என்று சொன்னால் சைக்கிள் தானாக ஓடும். நிற்க வேண்டுமானால், "குட்டி குட்டி சைக்கிளே! நீ ஓட்டமாக ஓடியது போதும், நில்லு!' என்று சொல். ஆனால், போன தடவை போல வழியில் நிற்காதே,'' என்று சொல்லி அனுப்பினார்.

சின்னாவும் மந்திரத்தைச் சொல்லிவிட்டுச் சைக்கிளில் ஏறி உட்கார்ந்தான். சைக்கிள் வெகு வேகமாகப் பறந்து சென்றது.

ஆனால், சின்னாவுக்கு பாதி வழி வந்ததும், பசி காதை அடைத்தது. அதே வீட்டிற்குப் போனான். அந்த மனிதனும் சின்னாவை அடையாளம் கண்டுக் கொண்டு, அவனை ரொம்ப உபசாரத்தோடு வரவேற்று, உணவளித்தான். சின்னா இந்த தடவை தூங்காமல் உடனே சைக்கிளில் ஏறிக்கொண்டான்.

சின்னா மந்திர வார்த்தையைச் சொன்னதும், சைக்கிள் தானாக ஓடுவதை ஒளிந்திருந்து கேட்ட அந்த மனிதன் உடனே வெளியே ஓடி வந்து, ""தம்பி! தம்பி! நேற்றுதான் லட்டு செய்தேன். ரொம்ப ருசியாக இருக்கும். வாங்கிக் கொண்டு போ... வழியில் பசித்தால் உதவியாக இருக்கும்,'' என்றழைத்தான்.

சின்னா, சைக்கிளை விட்டு இறங்கி, உள்ளே போனான். மறு நிமிஷம், சின்னாவின் மந்திர சைக்கிள் மாயமாக மறைந்தது. அந்த இடத்தில் அதேபோல ஒரு சைக்கிளை வைத்து விட்டான் அந்த ஆள். சின்னா மறுபடி வந்து ஏறிக் கொண்டு மந்திரத்தை சொன்னபோது, சைக்கிள் ஓடவில்லை.

பாவம் சின்னா, தன் வீட்டுக்கு கால் வலிக்க, அதை உருட்டிக் கொண்டே போய் சேர்ந்தான். அவனுக்கு அழுகையாக வந்தது. மறுபடி தாத்தாவை பார்க்க வெட்கமாக இருந்தது.

மந்திர சைக்கிளைத் திருடிய மனிதன், சின்னா போனதும், அதன்மேல் ஏறிக் கொண்டு, சின்னா கூறியபடியே அதனிடம் ஓடும்படி கூறினான். சைக்கிள் பறக்க ஆரம்பித்தது. வேகமாக ஓடிற்று. நாடு, நகரம், காடு, மலை எல்லாம் சுற்றி சுற்றி வந்தான். ரொம்ப களைத்துவிட்டான். ஆனால் சைக்கிள் நிற்கவே இல்லை; என்னென்னவோ, செய்து பார்த்தான். உஹூம் அது நிற்கவே இல்லை. நிற்க வைக்கும் மந்திரம் அவனுக்கு தெரிந்தால்தானே. ரொம்பக் களைப்படைந்த அந்த மனிதன் சின்னாவின் வீட்டுக்குச் சைக்கிளை கொண்டு போனான்.

சின்னா வாசலில் நின்று கொண்டிருந்தான். அவனை நெருங்கியதும், ""தம்பி! தம்பி! இந்த சைக்கிளை நிறுத்தச் சொல்லேன். நாள் கணக்கா ஓடிக்கொண்டே இருக்கே!'' என்று சொல்வதற்குள் அவனையும், அவன் வீட்டையும் தாண்டி வெகுதூரம் ஓடிவிட்டது. வெகுநேரம் சென்று, மறுபடி சின்னாவின் வீட்டை வந்து, அதே போல பரிதாபமாக வேண்டினான். இந்தத் தடவை சின்னா, ""நீதானே என் வாத்தையும் திருடிக் கொண்டவன்? வாத்து இருக்குமிடத்தைச் சொல்... சைக்கிளை நிறுத்துகிறேன்,'' என்றான்.

சைக்கிளுடன் ஓடிக் கொண்டே, ""வாத்து என் கொல்லைப்புறத்தில் ஒரு பெட்டிக்குள் இருக்கிறது என்று சொல்லிக்கொண்டே, சைக்கிளுடன் வெகு வேகமாகச் சென்று மறைந்தான் அந்தத் திருடன்.

சின்னா அவன் வீட்டிற்குச் சென்று வாத்தையும், அது இவ்வளவு நாட்களாக போட்டிருந்த பொன்முட்டைகளையும் எடுத்துக்கொண்டு, தன் வீட்டுக்கு வந்த போது, சைக்கிள் மறுபடி இவன் வீட்டுப் பக்கம் வெகுவேகமாக அந்த மனிதனுடன் வந்தது.

சின்னா உடனே, ""குட்டி குட்டி சைக்கிளே! நீ வேகமாக ஓடியது போதும், நில்லு!'' என்றான்.

சைக்கிளும் நின்றது. அந்த மனிதன் பொத்தென்று தரையில் விழுந்து மூர்ச்சையானான். அவனை தன் வீட்டிற்குத் தூக்கிக்கொண்டு போய், அவன் களைப்பைப் போக்கி அனுப்பினான் சின்னா . அந்த மனிதன், "இனி பிறர் பொருளை தொடுவதே இல்லை' என்று சபதம் செய்து கொண்டான்.

சின்னா, வாத்தையும், சைக்கிளையும் எடுத்துக்கொண்டு, மகிழ்ச்சியாக வாழ்ந்தான்.
***
சிறுவர் மலர்


குட்டி குட்டி சைக்கிள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குட்டி குட்டி சைக்கிள்! Empty Re: குட்டி குட்டி சைக்கிள்!

Post by யினியவன் Mon Jun 03, 2013 6:15 pm

சிவாகுள்ள பச்சிளம் பாலகனின் மைண்டுப்பா - நல்ல கதை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குட்டி குட்டி சைக்கிள்! Empty Re: குட்டி குட்டி சைக்கிள்!

Post by பாலாஜி Mon Jun 03, 2013 6:18 pm

நல்ல கதை ... தேங்க்ஸ் அங்கிள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

குட்டி குட்டி சைக்கிள்! Empty Re: குட்டி குட்டி சைக்கிள்!

Post by jenisiva Mon Jun 03, 2013 6:28 pm

கதை சூப்பர் அண்ணா சூப்பருங்க
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Back to top Go down

குட்டி குட்டி சைக்கிள்! Empty Re: குட்டி குட்டி சைக்கிள்!

Post by krishnaamma Tue Jun 04, 2013 7:24 pm

கதை நல்லா இருக்கு சிவா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

குட்டி குட்டி சைக்கிள்! Empty Re: குட்டி குட்டி சைக்கிள்!

Post by றினா Tue Jun 04, 2013 7:30 pm

நல்ல கதை


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

குட்டி குட்டி சைக்கிள்! Empty Re: குட்டி குட்டி சைக்கிள்!

Post by Aathira Fri Jul 12, 2013 11:11 pm

எல்லாம் மொழிபெயர்ப்பு கதைகள்.ஆங்கிலப் புத்தகத்தில் படித்திருக்கிறேன். மூலத்தையும் அவர்கள் சொன்னால் நன்றாக இருக்கும்.


குட்டி குட்டி சைக்கிள்! Aகுட்டி குட்டி சைக்கிள்! Aகுட்டி குட்டி சைக்கிள்! Tகுட்டி குட்டி சைக்கிள்! Hகுட்டி குட்டி சைக்கிள்! Iகுட்டி குட்டி சைக்கிள்! Rகுட்டி குட்டி சைக்கிள்! Aகுட்டி குட்டி சைக்கிள்! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

குட்டி குட்டி சைக்கிள்! Empty Re: குட்டி குட்டி சைக்கிள்!

Post by manikandan.dp Mon Jul 15, 2013 9:55 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 


மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013

http://manikandan89.wordpress.com/

Back to top Go down

குட்டி குட்டி சைக்கிள்! Empty Re: குட்டி குட்டி சைக்கிள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum