Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னை புழல் கைதிகளிடம் 500 போலீசார் அதிரடி சோதனை!: பெருகும் கொலைகளை தடுக்க சிறைகளில் வேட்டை
5 posters
Page 1 of 1
சென்னை புழல் கைதிகளிடம் 500 போலீசார் அதிரடி சோதனை!: பெருகும் கொலைகளை தடுக்க சிறைகளில் வேட்டை
சிறைகளில் இருந்தே, வெளியில் நடக்கும், கொலைச் சம்பவங்களுக்கான திட்டங்கள் உருவாவதாக, தகவல் கிடைத்ததால், புழல் சிறையில், நேற்று போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர்.தமிழகத்தில், கூலிப் படையைக் கொண்டு நடத்தப்படும் கொலைச் சம்பவங்களுக்கான திட்டங்கள், சிறைக்குள் உருவாகுவதாகவும், மொபைல் போன்கள் மூலம், திட்டமிடப்படுவதாகவும், சிறைத் துறை ஏ.டி.ஜி.பி., திரிபாதிக்குத் தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து, பெருகும் கொலைகளைத் தடுக்க, சிறைகளில் சோதனையிட அவர் உத்தரவிட்டார்.
புழலில் சோதனை :
இந்நிலையில், சென்னை புழல் மத்திய சிறையில், வடக்கு மண்டல இணை கமிஷனர் ஸ்ரீதர் தலைமையில், மாதவரம் (பொறுப்பு), அம்பத்தூர் துணை கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், போலீசார் உட்பட, 500 பேர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சிறைத் துறை, டி.ஐ.ஜி., மவுரியா மற்றும் சிறைக் கண்காணிப்பாளர்கள், ஜெயிலர்கள் உடன் இருந்தனர்.
20 பீடி கட்டுகள்:
தண்டனை சிறையில், காலை, 6:45 முதல் 7:30 மணி வரையிலும், விசாரணை சிறையில், காலை, 8:30 மணி வரையிலும், சோதனைகள் நீடித்தன. மகளிர் சிறையில் சோதனை செய்யப்படவில்லை. இரு சிறைகளிலும் நடந்த சோதனையில், நான்கு மொபைல் போன்கள், இரண்டு கத்தரிகள், 20க்கும் மேற்பட்ட பீடி கட்டுகள், 10 பிளேடுகள் மற்றும் கூர்மையான சில கம்பிகள் சிக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.இது தொடர்பாக, எந்த கைதியின் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. சோதனையில் வேறு எதுவும் சிக்கவில்லை என, சிறைத் துறை அதிகாரிகள் கூறினர்.
ஏமாற்றம்:
மூவாயிரம் கைதிகள் வரை அடைக்கக் கூடிய வசதி கொண்ட இங்கு, நேற்றைய நிலவரப்படி, விசாரணை சிறையில், 1,500 பேர், தண்டனை சிறையில், 640 பேர், மகளிர் சிறையில், 130 பேர் அடைக்கப்பட்டு உள்ளனர். நேற்று காலை சிறையில் நடந்த திடீர் சோதனை காரணமாக, வழக்கம் போல் குழந்தைகளுடன் வந்த, விசாரணை சிறைக் கைதிகளின் உறவினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.இதனால், பலரும் ஏமாற்றத்துடன் திரும்பினர். ஆனால், தண்டனை கைதிகளை சந்திக்கும் பார்வையாளர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.
எல்லாம் தாராளம்:
தமிழக சிறைகளில், மூன்றடுக்குப் பாதுகாப்பு, கண்காணிப்பு மற்றும் தீவிர சோதனைகள் தொடர்ந்தாலும், தடை செய்யப்பட்ட போதை மற்றும் தகவல் தொடர்புப் பொருட்கள் எளிதாகக் கிடைப்பது வழக்கமாகி விட்டது.தமிழகத்தில், ஒன்பது மத்தியசிறைகள், மூன்று பெண்களுக்கான சிறப்புச் சிறைகள், 12 சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகள், ஐந்து சிறப்புச் சிறைகள், ஒன்பது மாவட்ட சிறைகள், 94 கிளை சிறைகள், இரண்டு திறந்த வெளி சிறைகள் என, 134 சிறைகள் உள்ளன.இவற்றில், புழல், வேலூர், திருச்சி, கோவை, மதுரை, பாளையங்கோட்டை சிறைகளில் மொபைல் போன்கள், சிம் கார்டு, "சிடி', கஞ்சா, போதை மாத்திரை உள்ளிட்ட, தடை
செய்யப்பட்ட பொருட்கள் கைதிகளுக்கு, தாராளமாகக் கிடைத்து வருகின்றன.
கூலிப் படை தொடர்பு:
மேலும், ரவுடிகள் சிலர், சிறைக்குள் இருந்தே, தன் ஆட்கள் மூலம் கட்டப் பஞ்சாயத்து செய்வது; கடத்தி, பணம் பறிப்பது; தொழிலுக்கு இடையூறாக இருந்தால், "போட்டு' தள்ளுவது போன்ற குற்றங்களில் ஈடுபடுகின்றனர்.வேலையை, "கச்சிதமாக' முடிக்கும் கூலிப் படையினர், "அசைன்மென்ட்' கொடுத்த ரவுடி இருக்கும் சிறைக்கு வரும் வகையில், அருகில் இருக்கும் கோர்ட்டில் சரணடைகின்றனர். இதன் காரணமாக, ரவுடிகளையும், கூலிப் படையினரையும் அடிக்கடி வெவ்வேறு சிறைகளுக்கு அதிகாரிகள் மாற்றுகின்றனர்.அப்படி இருந்தும், மொபைல் போன் உதவியால், உத்தரவுகள் தரப்படுவதாகக் கூறப்படுகிறது. மதுரை, "பொட்டு' சுரேஷ் கொலையில், கைதான, "அட்டாக்' பாண்டியின் மைத்துனர் விஜயபாண்டி, சேலம் சிறையில் இருந்த போது, மொபைல் போனில் பேசும்போது பிடிபட்டார். இதேபோல், அனைத்து சிறைகளிலும் கைதிகள் சுதந்திரமாகப் பேசி வருகின்றனர் என்ற புகார் பரவலாக உள்ளது.
பின்னணிஎன்ன?
தமிழகத்தில், சமீபத்தில் கூலிப் படையினரால், நிகழ்த்தப்பட்ட, "கடத்தல் நாடகம்' ஒன்றில், போலீசார் நடவடிக்கை எடுத்தபோது, மொபைல் போன் ஒன்று சிக்கியுள்ளது. இந்த மொபைல் போனை ஆய்வு செய்த போது, சிறையில் இருந்து சிக்னல்கள் கிடைத்து உள்ளது தெரியவந்து உள்ளது. இந்த சம்பவமே, திடீர் சோதனைக்கு மூல காரணம் என, கூறப்படுகிறது.
போலீசார் உஷார்:
இதைத் தொடர்ந்தே, சோதனை நடத்தப்பட்டு உள்ளது. இதேபோல், மதுரை, சேலம், பாளையங்கோட்டை உட்பட, ஒன்பது மத்திய சிறைகளிலும் சோதனை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும், சென்னை உட்பட, தமிழகம் முழுவதும், கூலிப் படையினரை கண்காணிக்கும் பிரிவையும், முடுக்கி விட்டுள்ளனர்.சென்னையில், ஏ.டி.எஸ்.பி., ஒருவர் தலைமையில், கூலிப் படையினரை கண்காணிக்கும் பிரிவு பலப்படுத்தப்பட்டு வருகிறது. இது தவிர, திட்டமிட்ட குற்றங்கள் நுண்ணறிவுப் பிரிவும், உஷார் படுத்தப்பட்டு உள்ளது.
நன்றி :- தினமலர்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: சென்னை புழல் கைதிகளிடம் 500 போலீசார் அதிரடி சோதனை!: பெருகும் கொலைகளை தடுக்க சிறைகளில் வேட்டை
தற்பொழுதைய செய்தி
புழலில் சோதனை இனியவன் தலைமறைவு
புழலில் சோதனை இனியவன் தலைமறைவு
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: சென்னை புழல் கைதிகளிடம் 500 போலீசார் அதிரடி சோதனை!: பெருகும் கொலைகளை தடுக்க சிறைகளில் வேட்டை
உள்ளயும் நம்மள நிம்மதியா தொழில் பண்ண விட மாட்டேங்கறாங்க!!!!
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: சென்னை புழல் கைதிகளிடம் 500 போலீசார் அதிரடி சோதனை!: பெருகும் கொலைகளை தடுக்க சிறைகளில் வேட்டை
யினியவன் wrote:உள்ளயும் நம்மள நிம்மதியா தொழில் பண்ண விட மாட்டேங்கறாங்க!!!!
தலைமறைவான தல தெரிவதாக தகவல் வெளிவருகின்றன ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: சென்னை புழல் கைதிகளிடம் 500 போலீசார் அதிரடி சோதனை!: பெருகும் கொலைகளை தடுக்க சிறைகளில் வேட்டை
பாலாஜி wrote:தற்பொழுதைய செய்தி
புழலில் சோதனை இனியவன் தலைமறைவு
அவர் தலைமறைவு தலைவரா ?
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Similar topics
» கூகுள் அலுவலகத்தில் போலீசார் அதிரடி சோதனை
» அதிமுக இன்னொரு முன்னாள் எம்எல்ஏ வீட்டில் சோதனை: லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி..!
» பரமக்குடியில் அதிரடி சோதனை: லஞ்ச பணம் ரூ.17 ஆயிரத்தை குப்பையில் வீசிய சார்பதிவாளர்; போலீசார் கைப்பற்றி விசாரணை
» கெளரவக் கொலைகளை தடுக்க விரைவில் சட்டம்: ப.சிதம்பரம்
» கெளரவக் கொலைகளை தடுக்க விரைவில் சட்டம்: சிதம்பரம்
» அதிமுக இன்னொரு முன்னாள் எம்எல்ஏ வீட்டில் சோதனை: லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி..!
» பரமக்குடியில் அதிரடி சோதனை: லஞ்ச பணம் ரூ.17 ஆயிரத்தை குப்பையில் வீசிய சார்பதிவாளர்; போலீசார் கைப்பற்றி விசாரணை
» கெளரவக் கொலைகளை தடுக்க விரைவில் சட்டம்: ப.சிதம்பரம்
» கெளரவக் கொலைகளை தடுக்க விரைவில் சட்டம்: சிதம்பரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|