புதிய பதிவுகள்
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:19 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொல் பத்தப்பு (Welding) - வெண்பா பற்றியது  Poll_c10சொல் பத்தப்பு (Welding) - வெண்பா பற்றியது  Poll_m10சொல் பத்தப்பு (Welding) - வெண்பா பற்றியது  Poll_c10 
61 Posts - 47%
heezulia
சொல் பத்தப்பு (Welding) - வெண்பா பற்றியது  Poll_c10சொல் பத்தப்பு (Welding) - வெண்பா பற்றியது  Poll_m10சொல் பத்தப்பு (Welding) - வெண்பா பற்றியது  Poll_c10 
54 Posts - 42%
T.N.Balasubramanian
சொல் பத்தப்பு (Welding) - வெண்பா பற்றியது  Poll_c10சொல் பத்தப்பு (Welding) - வெண்பா பற்றியது  Poll_m10சொல் பத்தப்பு (Welding) - வெண்பா பற்றியது  Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
சொல் பத்தப்பு (Welding) - வெண்பா பற்றியது  Poll_c10சொல் பத்தப்பு (Welding) - வெண்பா பற்றியது  Poll_m10சொல் பத்தப்பு (Welding) - வெண்பா பற்றியது  Poll_c10 
3 Posts - 2%
Shivanya
சொல் பத்தப்பு (Welding) - வெண்பா பற்றியது  Poll_c10சொல் பத்தப்பு (Welding) - வெண்பா பற்றியது  Poll_m10சொல் பத்தப்பு (Welding) - வெண்பா பற்றியது  Poll_c10 
1 Post - 1%
prajai
சொல் பத்தப்பு (Welding) - வெண்பா பற்றியது  Poll_c10சொல் பத்தப்பு (Welding) - வெண்பா பற்றியது  Poll_m10சொல் பத்தப்பு (Welding) - வெண்பா பற்றியது  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சொல் பத்தப்பு (Welding) - வெண்பா பற்றியது  Poll_c10சொல் பத்தப்பு (Welding) - வெண்பா பற்றியது  Poll_m10சொல் பத்தப்பு (Welding) - வெண்பா பற்றியது  Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
சொல் பத்தப்பு (Welding) - வெண்பா பற்றியது  Poll_c10சொல் பத்தப்பு (Welding) - வெண்பா பற்றியது  Poll_m10சொல் பத்தப்பு (Welding) - வெண்பா பற்றியது  Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
சொல் பத்தப்பு (Welding) - வெண்பா பற்றியது  Poll_c10சொல் பத்தப்பு (Welding) - வெண்பா பற்றியது  Poll_m10சொல் பத்தப்பு (Welding) - வெண்பா பற்றியது  Poll_c10 
1 Post - 1%
Guna.D
சொல் பத்தப்பு (Welding) - வெண்பா பற்றியது  Poll_c10சொல் பத்தப்பு (Welding) - வெண்பா பற்றியது  Poll_m10சொல் பத்தப்பு (Welding) - வெண்பா பற்றியது  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சொல் பத்தப்பு (Welding) - வெண்பா பற்றியது  Poll_c10சொல் பத்தப்பு (Welding) - வெண்பா பற்றியது  Poll_m10சொல் பத்தப்பு (Welding) - வெண்பா பற்றியது  Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
சொல் பத்தப்பு (Welding) - வெண்பா பற்றியது  Poll_c10சொல் பத்தப்பு (Welding) - வெண்பா பற்றியது  Poll_m10சொல் பத்தப்பு (Welding) - வெண்பா பற்றியது  Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
சொல் பத்தப்பு (Welding) - வெண்பா பற்றியது  Poll_c10சொல் பத்தப்பு (Welding) - வெண்பா பற்றியது  Poll_m10சொல் பத்தப்பு (Welding) - வெண்பா பற்றியது  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
சொல் பத்தப்பு (Welding) - வெண்பா பற்றியது  Poll_c10சொல் பத்தப்பு (Welding) - வெண்பா பற்றியது  Poll_m10சொல் பத்தப்பு (Welding) - வெண்பா பற்றியது  Poll_c10 
14 Posts - 3%
prajai
சொல் பத்தப்பு (Welding) - வெண்பா பற்றியது  Poll_c10சொல் பத்தப்பு (Welding) - வெண்பா பற்றியது  Poll_m10சொல் பத்தப்பு (Welding) - வெண்பா பற்றியது  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சொல் பத்தப்பு (Welding) - வெண்பா பற்றியது  Poll_c10சொல் பத்தப்பு (Welding) - வெண்பா பற்றியது  Poll_m10சொல் பத்தப்பு (Welding) - வெண்பா பற்றியது  Poll_c10 
9 Posts - 2%
jairam
சொல் பத்தப்பு (Welding) - வெண்பா பற்றியது  Poll_c10சொல் பத்தப்பு (Welding) - வெண்பா பற்றியது  Poll_m10சொல் பத்தப்பு (Welding) - வெண்பா பற்றியது  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சொல் பத்தப்பு (Welding) - வெண்பா பற்றியது  Poll_c10சொல் பத்தப்பு (Welding) - வெண்பா பற்றியது  Poll_m10சொல் பத்தப்பு (Welding) - வெண்பா பற்றியது  Poll_c10 
4 Posts - 1%
Jenila
சொல் பத்தப்பு (Welding) - வெண்பா பற்றியது  Poll_c10சொல் பத்தப்பு (Welding) - வெண்பா பற்றியது  Poll_m10சொல் பத்தப்பு (Welding) - வெண்பா பற்றியது  Poll_c10 
4 Posts - 1%
Rutu
சொல் பத்தப்பு (Welding) - வெண்பா பற்றியது  Poll_c10சொல் பத்தப்பு (Welding) - வெண்பா பற்றியது  Poll_m10சொல் பத்தப்பு (Welding) - வெண்பா பற்றியது  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொல் பத்தப்பு (Welding) - வெண்பா பற்றியது


   
   
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Jun 05, 2013 4:50 pm

ஒரு நாள் காலை ’யாப்பருங்கலக் காரிகை’யைப் புரட்டிக்கொண்டிருந்தேன். திடீரென்று ஏதோ ஒரு பக்கத்தில் ‘இரண்டு உலோகங்களை இணைத்துப் பற்றவைக்கும்போது…’ என்று ஒரு வாக்கியத்தைப் பார்த்தேன்.

இதென்ன இலக்கணப் புத்தகமா, அல்லது பொறியியல் புத்தகமா? மரபுக் கவிதை எழுதச் சொல்லித்தரும் நூலில் பத்தப்பு(வெல்டிங்) மேட்டரெல்லாம் எப்படி நுழைந்தது. குறுகுறுப்பில் அந்தப் பக்கத்தை முழுமையாகப் படித்தேன். அந்த பத்தப்பு சமாசாரம் எத்துணை பொருத்தமாக இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்று வியந்துபோனேன்.அதைச் சொல்வதற்குமுன்னால், வெண்பாபற்றிய சில அடிப்படை விஷயங்களைப் பார்க்கவேண்டும். இல்லாவிட்டால் ‘ பத்தப்பு’ க்கும் இலக்கணத்துக்கும் என்ன சம்பந்தம் என்பது புரியாது.

வெண்பாவில் மிகச் சிறியது, குறள், அதாவது இரண்டே வரிகள், ஏழே வார்த்தை(சீர்)களில் விஷயத்தைச் சொல்லி முடித்துவிடவேண்டும். அதற்குள் எதுகை வேண்டும், மோனை வேண்டும், வெண்பாவுக்கு உரிய மற்ற இலக்கண வரையறைகளுக்கும் கட்டுப்படவேண்டும்.
இதற்கு உதாரணம் தேடி அதிகம் சிரமப்படவேண்டியதில்லை. திருக்குறள்முழுவதுமே குறள் வெண்பாக்களால் ஆனதுதான்.

ஒரு விஷயம், ‘ஏழு வார்த்தை’ என்று ஒரு வசதிக்காகச் சொல்கிறோமேதவிர, உண்மையில் குறள் வெண்பாவில் ஏழைவிடக் குறைவாகவோ அதிகமாகவோ வார்த்தைகள் இருக்கலாம், அவற்றை ஏழு சீர்களாகப் பகுத்துவைப்பார்கள். அவ்வளவுதான்.
உதாரணமாக, ‘கசடற’ என்று திருக்குறளில் வருவது ஒரு சீர், ஆனால் உண்மையில் அது ‘கசடு அற’ என்று இரு வார்த்தைகளாகப் பிரியும்.

இதற்கு நேர் எதிராக, ‘வந்தனையோ’ என்பது ஒரே வார்த்தைதான், ஆனால், மரபுக்கவிதை விதிமுறைகளுக்கேற்ப அது ‘வந்த னையோ’ என்று இரு சீர்களாகப் பிரியக்கூடும்.
ஆக, வார்த்தையும் சீரும் ஒன்றல்ல. அதை இங்கே இன்னும் விரிவாக விளக்க முற்பட்டால், இந்தக் கட்டுரையின் நோக்கம் சிதறிவிடும். ஆகவே, இப்போதைக்கு இதோடு நிறுத்திக்கொள்கிறேன். இதற்குமேல் நான் ‘வார்த்தை’ என்று எங்கே குறிப்பிட்டாலும், அதைச் ‘சீர்’ என்றே எடுத்துக்கொள்ளுங்கள்.

அடுத்தபடியாக, 3 வரி வெண்பா, நாம் அதை சாய்ஸில் விட்டுவிட்டு, நேரடியாக 4 வரிக்குத் தாவுவோம்.நான்கு வரி வெண்பாக்களில் இரண்டு வகை, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா.இதில் இன்னிசை வெண்பாவும் குறள் வெண்பாவும் look alike அண்ணன், தம்பிமாதிரி, அங்கே ஏழு வார்த்தை, இங்கே பதினைந்து வார்த்தை, அது ஒன்றுமட்டும்தான் வித்தியாசம், மற்றபடி எல்லா இலக்கண வழிமுறைகளும் அச்சு அசல் அப்படியே.

உதாரணமாக, நள வெண்பாவிலிருந்து இந்தப் பாடல்:

ஈர மதியே, இளநிலவே, இங்ஙனே
சோர்குழலின் மீதே சொரிவதெவன் மாரன்
பொரவளித்தான் கண்ணி உனக்குப் புலரா
இரவளித்தான் அல்லனோ இன்று


ஒரு பெண் நிலவைப் பார்த்துப் பாடும் இந்தப் பாட்டின் சுருக்கமான பொருள், ’ஏய் நிலாவே, நான்பாட்டுக்கு கெடக்கேன், நீ ஏன் திடீர்ன்னு வந்து என்னைத் தாக்கறே? எனக்குத் தெரியும், அந்த மன்மதன்தான் உன்னை இங்கே அனுப்பிவெச்சிருக்கான்!’

நேரிசை வெண்பாவிலும் அதே பதினைந்து வார்த்தைகள்தான், ஆனால் ஒரு வித்தியாசம், இன்னிசை வெண்பாவைப்போல் அவை ஒரே தொடராக வராது, பதினைந்து வார்த்தைகளும் 7 + 1 + 7 என்று பிரியும்.

அதாவது, முதல் ஏழு, ஒரு குறள் வெண்பா, அப்புறம் ஒரு தனிச்சொல், பின்னர் வரும் அடுத்த ஏழு, இன்னொரு குறள் வெண்பா.

உதாரணமாக, ஔவையாரின் மிகப் பிரபலமான இந்தப் பாடல்:

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீஎனக்குச்
சங்கத் தமிழ்மூன்றும் தா


இதில் முதல் 7 வார்த்தைகள்மட்டும் (பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை / நாலும் கலந்துனக்கு நான்தருவேன்) தனியே ஒரு குறள்மாதிரி இருக்கும், அடுத்த 7 வார்த்தைகள் (துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீஎனக்குச்/ சங்கத் தமிழ்மூன்றும் தா) தனியே இன்னொரு குறள்.

இந்த இரண்டுக்கும் நடுவே, இரட்டைக் கதாநாயகி சப்ஜெக்டில் மாட்டிய பாக்யராஜ்மாதிரி திருதிருவென்று விழித்துக்கொண்டு ‘கோலஞ்செய்’ என்று ஒரு வார்த்தை இருக்கிறதல்லவா? அதைத் ’தனிச்சொல்’ என்பார்கள், இந்தப் பக்கமும் சேராது, அந்தப் பக்கமும் சேராது, ஆனால் இரண்டையும் இணைப்பது அதுதான் (ச்சே, அந்த பாக்யராஜ் உதாரணம் செல்லாது, எச்சில் தொட்டு அழித்துவிடுங்கள்!)

இப்போது, செய்யுள் இலக்கணத்தில் ‘பத்தப்பு’ எப்படி வந்தது என்று புரிந்திருக்கும், முதல் 7 வார்த்தைகள் ஓர் உலோகப் பட்டை, அடுத்த 7 வார்த்தைகள் ஓர் உலோகப்பட்டை, இரண்டையும் சேர்த்துப் பற்றவைக்கிறபோது அதற்கு இன்னோர் உலோகம் தேவைப்படும், அது அந்த இடத்தில் (Welding Beed) சிறு புடைப்புமாதிரி தெரியும். பத்தப்பை பயன்படுத்தி எந்த இரு குறள் வெண்பாக்களையும் இணைத்து நேரிசை வெண்பாவாக்கிவிடலாம்.

உதாரணமாக, இந்த இரு குறள்களைப் பாருங்கள்:

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல்
தலைகாண்பு அரிது

அதாவது, வானத்திலிருந்து மழைத்துளிமட்டும் விழாவிட்டால் போச்சு, பூமியில் ஒரு பசும்புல்லைக்கூடப் பார்ப்பது சிரமம்.

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று
அமையாது ஒழுக்கு

அதாவது, மழை இல்லாவிட்டால் உலகம் இல்லை, மனிதர்களிடையே ஒழுக்கமும் இல்லை.
இந்த ஒரு குறள்களும் ஒன்றோடொன்று தொடர்புடையவைதானே, சும்மா சொல்டிங் செய்து நேரிசை வெண்பாவாக்கிப் பார்ப்போமா?

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது, பசும்பொன்னே
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று
அமையாது ஒழுக்கு

அவ்வளவுதான், வெண்பா இலக்கணத்துக்குப் பொருத்தமாகவும், ‘விசும்பு’, ‘பசும்புல்’க்கு எதுகையாகவும் ’பசும்பொன்னே’ என்கிற ஒரு சொல்லைச் சேர்த்ததும், திருவள்ளுவர் எழுதிய இந்த இரு குறள் பாக்களும் நேரிசை வெண்பாவாகிவிட்டன.

ஆனால், எல்லாக் குறள் வெண்பாக்களையும் இப்படி நேரிசை வெண்பாவாக்கமுடியாது.

உதாரணமாக, இந்தக் குறளைப் பாருங்கள்:

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்த
ுள் எல்லாம் தலை

இந்தக் குறளின் 7வது சொல், ‘தலை’ என்று வருகிறது, இதை ‘ஓரசைச் சீர்’ என்பார்கள், அது வெண்பாவின் நிறைவுச் சொல்லாக வரலாம், நடுவில் வரக்கூடாது.
ஆகவே, நாம் இந்தக் குறளை நேரிசை வெண்பாவின் இரண்டாவது பகுதியாக வைத்தால் பிரச்னையில்லை, அது 15வது சொல்லாக (அதாவது, நிறைவுச் சொல்லாக) சென்று உட்கார்ந்துவிடும்.

ஒருவேளை, நாம் இதை ஆரம்பத்தில்தான் வைப்போம் என்று அடம் பிடித்தால்? ‘தலை’ என்பது நேரிசை வெண்பாவின் நடுவில் (அதாவது 15 சொல் உள்ள வெண்பாவில் 7வது சொல்லாக) வராதே!

அதற்கு, அந்தத் ’தலை’யோடு நாம் வேறெதையாவது சேர்த்து கொஞ்சம்போல் அட்ஜஸ்ட் செய்யவேண்டும். இதோ, இந்தமாதிரி:

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலையாகும், நல்லவனே,
கற்றிலன் ஆயினும் கேட்க அஃதொருவர்க்கு
ஒற்கத்தி
ன் ஊற்றாந் துணை

இங்கே ‘தலை’ வெண்பாவுக்கு மத்தியில் வராது என்பதால், அதற்குப் பக்கத்தில் ‘ஆகும்’ என்று ஒரு எக்ஸ்ட்ரா சொல்லைச் சேர்த்து, அதை வெண்பாவுக்கு மத்தியில் வரச் செய்திருக்கிறோம், கூடவே ‘நல்லவனே’ என்ற சொல்லைச் சேர்த்து சொல்டிங் செய்திருக்கிறோம்.
இந்த ‘ஆகும்’ என்ற எக்ஸ்ட்ரா சொல்லுக்கு, ‘ஆசு’ என்று பெயர்.

தமிழில் ‘ஆசு’ என்றால் குற்றம் என்று அர்த்தம். அதாவது, அந்த இரு உலோகத் துண்டுகள் (குறள்கள்) ஒன்று சேர்வதற்காக, அவற்றினிடையே தேவையில்லாத ஒரு ‘ஆசு’ சேர்க்கப்படுகிறது. ஆகவே, இந்த வெண்பாவுக்கு ‘ஆசிடை நேரிசை வெண்பா’ என்று பெயர்.
இதுபோல, உங்களுக்குப் பிடித்த ஏதேனும் இரண்டு குறள்களைச் சும்மா சேர்த்து விளையாடிப் பாருங்கள், செம ஜாலியாக இருக்கும்!

நன்றி என். சொக்கன் வேர்ல்ட்பிரஸ்



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 05, 2013 10:46 pm

நல்ல பகிர்வு ராஜூ

ஏதோ பட்டி பார்த்து டிங்கரிங் செஞ்சு தெரிஞ்ச தமிழில்
ஓட்டிட்டு இருக்கோம் இதுல வெண்பா வெல்டிங் வேறையா?
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Jun 05, 2013 10:48 pm

ஆமா தல நல்ல புரியும்படி சொல்லிருக்கிறார் இந்த கட்டுரையின் ஆசிரியர் புன்னகை



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 05, 2013 10:52 pm

சொக்கன் வர்ல்ட்ப்ரெஸ் - நம்மள அந்த சொக்கன் தான் காப்பத்தனும்




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Jun 06, 2013 11:36 am

எழுத்து ,அசை , சீர் , அடி , தொடை ,மோனை இப்படியெல்லாம் எங்கேயோ பார்த்த ஞாபகம் ..

வெண்பாவை திரும்ப படிக்க தந்ததற்கு நன்றி சரவணர் .... சூப்பருங்க



[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக