புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சமுதாய அலட்சியம் I_vote_lcap சமுதாய அலட்சியம் I_voting_bar சமுதாய அலட்சியம் I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
 சமுதாய அலட்சியம் I_vote_lcap சமுதாய அலட்சியம் I_voting_bar சமுதாய அலட்சியம் I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
 சமுதாய அலட்சியம் I_vote_lcap சமுதாய அலட்சியம் I_voting_bar சமுதாய அலட்சியம் I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமுதாய அலட்சியம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 02, 2013 12:04 pm



இருநாள்களுக்கு முன்பு தஞ்சாவூரில் புதை சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை நீக்குவதற்காக உள்ளே இறங்கிய இரண்டு துப்புரவுத் தொழிலாளர்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்தனர். தமிழ்நாட்டில் இத்தகைய மரணங்கள் அடிக்கடி நடந்துகொண்டே இருக்கின்றன.

இந்த மரணங்கள், "விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' என்பதாகத்தான் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. அதாவது இவை தொழிற்சாலை விபத்து போன்ற உணர்வை ஏற்படுத்திவிடுகின்றது. இவர்கள் தொழிலாளர்கள் என்றாலும்கூட, ஒரு தொழிற்கூடத்தில் ரசாயனத் தொட்டியைக் கழுவும்போது ஏற்படும் விபத்தையும் சாக்கடையைத் துப்புரவு செய்வதையும் ஒன்றுபோல எப்படிக் கருத முடியும்? முதலாவது

எதிர்பார்க்காத தொழிற்சாலை விபத்து என்றால், சாக்கடைக்குள் மனிதர் இறங்குவதால் ஏற்படும் மரணம், சமுதாய அலட்சியத்தால், அதிகாரிகள் அரசு அறிவுறுத்தலைப் புறக்கணிப்பதால் ஏற்படும் ஒன்று.

கடந்த இரு ஆண்டுகளில் ஆங்காங்கே ஒருவர், இருவர் என இருபதுக்கும் மேற்பட்டோர் சாக்கடை அல்லது "செப்டிக் டேங்க்' பணிகளின்போது மரணமடைந்துள்ளனர். ஆனால், இவர்களுக்கு எத்தகைய காப்பீடு உள்ளது அல்லது இவர்களது குடும்பத்துக்கு எத்தகைய இழப்பீடு வழங்கப்படுகிறது என்பது அதிர்ச்சியளிக்கும் ஒன்றாக இருக்கிறது. நகராட்சி அல்லது மாநகராட்சி துப்புரவுப் பணியாளராக இருந்தால், குடும்ப நலநிதியாக ரூ.1.5 லட்சம் உடனடியாக வழங்கப்படும்.

தஞ்சை சம்பவத்தைப் பொருத்தவரையில், இவர்கள் தஞ்சை மாநகராட்சியின் துப்புரவு ஊழியர்கள் அல்லர். அயல்பணி ஒப்பந்தத்தில் இந்தப் பணி தனியார் நிறுவனத்துக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் கூலிக்கு வேலை செய்யும் நபர்கள்தான் மரணமடைந்த இருவரும். ஆகவே, அரசு இந்த மரணத்துக்குப் பொறுப்பேற்காது. அயல்பணி ஒப்பந்தத்தில் இத்தகைய மரணங்கள் நேர்ந்தால் பெரும்பாலான நகரங்களில் இவர்களுக்கு சில ஆயிரம் ரூபாய் கொடுத்து கதையை முடித்துவிடுகிறார்கள் என்பதே உண்மை.

இத்தகைய மரணங்களில் அயல்பணி ஒப்பந்ததாரர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஒப்பந்தங்களில் தெளிவாகக் குறிப்பிடப்படுவதே இல்லை.

அயல்பணி ஒப்பந்தம் என்றாலும்கூட, புதை சாக்கடை அடைப்புக்கு உள்ளானால் அதனை இயந்திரம் வைத்துதான் துப்புரவு செய்ய வேண்டும். தவிர்க்க முடியாத தருணங்களில், புதை சாக்கடைக்குள் இறங்குபவர், இது குறித்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிந்திருப்பவராக இருக்க வேண்டும். தஞ்சையில், இவர்கள் இறக்க நேர்ந்த புதை சாக்கடையில் மீட்புப் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினர், முதலில் எரியும் விளக்கை உள்ளே இறக்கி, அது அணைந்துபோனதால், ஆக்ஸிஜன் குழாய்களுடன் இறங்கியுள்ளனர் என்று சொன்னால், இறந்த தொழிலாளர்களுக்கு எந்தவித முன்னெச்சரிக்கை பயிற்சியும் அளிக்கப்படவில்லை என்பது தெரிகிறது.

பணியின்போது இதுபோன்ற துப்புரவுப் பணியாளர்கள் இறக்க நேரிட்டால் அவர்களுக்காக எத்தகைய இழப்பீடு தரப்படும் என்பது போன்ற நிபந்தனைகள் இந்த ஒப்பந்தங்களில் சட்டப்பூர்வமாக வலியுறுத்தப்படுவதில்லை. அப்படிப்பட்ட நிலையில் தனியார் நிறுவனங்களிடம் அயல்பணி ஒப்பந்தமாக இதுபோன்ற வேலைகளை ஒப்படைப்பது ஈவிரக்கமில்லாத செயலாகத்தான் இருக்க முடியும்.

இப்போதெல்லாம் எல்லா மாநகராட்சிகளிலும் துப்புரவுப் பணிகள் அனைத்தும் அயல்பணி ஒப்பந்தமாக மாற்றப்பட்டு வருகின்றன. பாதிக்கும் மேற்பட்டோர் அயல்பணி ஒப்பந்த நிறுவனத்தின்கீழ், வாரச் சம்பளம், அல்லது மாதச் சம்பளம் பெறுவோராக இருக்கின்றனர். இவர்களுக்கு எந்தச் சலுகைகளும் கிடையாது. துப்புரவுத் தொழிலுக்குரிய கருவிகள், கையுறைகள், பிரத்யேக ஆடைகள் அந்தந்த நாளுக்கு தரப்பட்டு திரும்பப் பெறப்படுகின்றன. வேறு எந்தவிதமான காப்பீடு திட்டமும், எதிர்கால வைப்புநிதியும் இவர்களுக்குக் கிடையாது.

திறந்த கழிவுறைகள் ஒழிப்புக்கு 1993-ஆம் ஆண்டு சட்டம் கொண்டு வரப்பட்டது. மனித மலத்தை மனிதர் அள்ளும் அவலநிலை முடிவுக்கு வந்ததாகப் பேசப்பட்டது. ஆனால், அவ்வாறாக இல்லை. இன்னும் பல இடங்களில் அது நடந்துகொண்டுதான் இருக்கின்றது. மிக அப்பட்டமாக நாம் காணக்கூடிய இடம் ரயில் நிலையம். ரயில்நிலைய தண்டவாளங்களில் மலத்தை அகற்றும் தொழிலில் மனிதர்கள்தான் இன்றும் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். இவர்கள் ரயில்வே ஊழியர்கள் அல்லர். அயல்பணி ஒப்பந்ததாரர்களிடம் பணிபுரிபவர்களே, தண்டவாளங்களுக்கு இடையே தூய்மை செய்யும் பணியை மேற்கொள்கின்றனர்.

இந்த வேலையை இவர்கள் செய்யாவிட்டால், வேறு யாரைக் கொண்டு செய்வது? வேறுஎப்படி சாக்கடையைச் சுத்தப்படுத்த முடியும்? இது அவர்களுக்கு ஒரு தொழில் என்றெல்லாம் பலர் வாதிடுகின்றனர். துப்புரவுப் பணியை அறிவியல்பூர்வமாக, ஆபத்து இல்லாமல் நடைமுறைப்படுத்த முடியும், அதற்கான வாய்ப்புகள் இருக்கும்போது நாம் ஏன் அதைப் பயன்படுத்துவதே இல்லை என்பதுதான் நமது கேள்வி.

புதைசாக்கடை, அல்லது தொழிற்சாலையின் ரசாயானத் தொட்டி என எதுவாக இருந்தாலும், இயந்திரத்தால் முடியாது அதை மனித உழைப்பின் மூலம்தான் செய்ய முடியும் என்ற கட்டாயச் சூழ்நிலையில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்கின்ற நிபந்தனைகள் உருவாக்கப்பட வேண்டும். இந்தப் பணியைத் தொடங்கும் முன்பாக, அந்த இடத்தில் மனிதர் இறங்கலாமா? ஆக்ஸிஜன் உள்ளதா? என்பதை சோதிக்க ரசாயன வல்லுநர்களை அங்கே நிறுத்தவும், உள்ளே இறங்குபவர் போதுமான மூச்சுக்கவசங்களுடன் பணியில் ஈடுபடவும் செய்வதில் என்ன பெருஞ்செலவு ஏற்படப் போகிறது!

அடித்தட்டு மக்கள்தானே என்கிற அலட்சியப் போக்கு நமக்கு எப்போதுதான் மாறுமோ? இறைவனுக்குத்தான் வெளிச்சம்!

தினமணி தலையங்கம்



 சமுதாய அலட்சியம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Jun 02, 2013 1:01 pm

இந்த மாதிரி உயிர் இழப்பை தடுக்க மாற்று வழி இல்லையா ?

அடித்தட்டு மக்கள்தானே என்கிற அலட்சியப் போக்கு நமக்கு எப்போதுதான் மாறுமோ? இறைவனுக்குத்தான் வெளிச்சம்!

பலரின் மனதில் இந்த கருத்து ஆழமாக பதிந்துள்ளது




 சமுதாய அலட்சியம் M சமுதாய அலட்சியம் U சமுதாய அலட்சியம் T சமுதாய அலட்சியம் H சமுதாய அலட்சியம் U சமுதாய அலட்சியம் M சமுதாய அலட்சியம் O சமுதாய அலட்சியம் H சமுதாய அலட்சியம் A சமுதாய அலட்சியம் M சமுதாய அலட்சியம் E சமுதாய அலட்சியம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக