ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரசியா அதிபர் மாளிகையில் தமிழ்! சிந்தியுங்கள்...தமிழர்களே!

4 posters

Go down

ரசியா அதிபர் மாளிகையில் தமிழ்! சிந்தியுங்கள்...தமிழர்களே! Empty ரசியா அதிபர் மாளிகையில் தமிழ்! சிந்தியுங்கள்...தமிழர்களே!

Post by சாமி Fri May 31, 2013 4:38 pm

தமிழ் வளர்ச்சித்துறையின் சேலம் மாவட்ட 'தமிழ் ஆட்சிமொழி பயிலரங்கமும் கருத்தரங்கமும்' சிறுமலர் மேல்நிலை பள்ளியில் நடந்தது.

இந்நிகழ்வுக்கு கிட்டத்தட்ட ௦௦ 400 க்கும் மேற்பட்ட காவல்துறை, அரசு துறை,கல்வித்துறை என அரசு ஊழியர்கள் பங்கு பெற்றனர் இதில் சேலம் மண்டல துணை தலைவர் உயர்திரு ராசேந்திரன் பிழையின்றி தமிழில் எழுதுவது குறித்து கருத்துரை வழங்கினார்.

’’1956 அக் 27 அன்று தமிழ் ஆட்சிமொழி சட்டம் அமுலுக்கு வந்தது; இதற்க்கு காரணம் நமது தந்தை பெரியார். இதற்கு முன் திருச்சி குளித்தலையில் மாபெரும் மாநாடு நடந்தது. அதில்தான் தமிழ் ஆட்சிமொழி ஆகவேண்டும் என தீர்மானம் இயற்றப்பட்டது. அது பெரியாரால் இயற்றப்பட்டது. அதன்பின் முதல்வராக இருந்த அய்யா காமராஜரிடம் இதை கொண்டு போனார் அய்யா பெரியார்.

'இதை அமுலுக்கு கொண்டு வருவது என் தாய்க்கு செய்யும் சேவையை போல கருதி செய்கிறேன்' என ஆர்வத்துடன் சட்டமாக்கினார் காமராஜர். 1957 இல் இச்சட்டம் குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்றது.

ஒரு காலத்தில் ராஜ ராஜ சோழன்,ராஜேந்திர சோழன் போன்ற மன்னர்கள் தமிழ் இனத்தை ஆண்டார்கள். தமிழ் உணர்வை ஆளவில்லை. வேதனைதான்.

சட்டமியற்றி இத்தனை ஆண்டுகள் ஆகியும் பிழையின்றி எழுதுவது குறித்து நாம் பேசிக்கொண்டு இருக்கிறோம் பரவாயில்லை, நம்மால் பிழையின்றி நம் தாய் தமிழை எழுத இயலும்.

அவற்றில் சிலவற்றை காண்போம்.

தமிழில் பிழை வரும் முக்கிய எட்டு எழுத்துக்கள் 'ந, ன,ண, ர,ற,ல,ள,ழ '

இவை தான். அதன்பின் ஒற்றெழுத்து பிழைகள் அதாவது சந்திப்பிழை வருமிடம்.

" க்,ப்,ச்,த் " ஆகியவை.

பிழைகள் இல்லாமல் எப்படி எழுதலாம்?

' ற ' முன்னாடி ஒலித்தால் பின்னாடி ரெண்டு சுழி 'ன ' தான் போடணும்

உதாரணம்: 'வருகின்றான்' என்ற வார்த்தை ' ட' முன்னாடி 'ண' கர ஓசை ஒலித்தால் மூணு சுழி 'ண' தான் போடவேண்டும்

உதாரணம்: 'வேண்டும்', 'கண்டும்',

'த' முன்னால் 'ந' கர ஓசை ஒலித்தால் நாம் 'ந' தான் போடவேண்டும்

உதாரணம்: 'அணிந்தான்' 'அந்தணன்'

இதெல்லாம் சின்ன எடுத்துக்காட்டுகள் தான்.

ஒருமுறை நான் நமது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடன் ரசியா கிரெம்ளின் மாளிகை போயிருந்தேன். அங்கு மேலே அவர்கள் தாய்மொழியில் எழுதி இருந்தனர். அடுத்து சீன மொழியில் எழுதப்பட்டு இருந்தது. எங்கள் அண்டை நாடு என்பதாலும் சீனர்கள் இங்கு நிறைய இருப்பதாலும் எழுதினோம் என்றனர்.

அதற்கு அடுத்து உலகை தொடர்பு கொள்ள என சொல்லி ஆங்கிலத்தில் எழுதி இருந்தனர். நான்காவது மொழியை கண்டு நான் கண் கலங்கிவிட்டேன்.

உலகில் ஆறு மொழிகள் தான் தொன்மையானது . 'கிரேக்கம், லத்தின், எபிரேயம், சீனா, தமிழ், சமஸ்கிரதம் ' என்ற ஆறு மொழிகள் இதில் நான்கு வழக்கில் இல்லை தொன்மையான இலக்கிய, வரலாற்று வளம் மிக்க மொழியில் எழுத எண்ணினோம் .

அதில் எங்களுக்கு உலகின் முக்கிய 642 மொழிகளில் சரியான மொழியாக 'தமிழ்' தான் தென்பட்டது. அதற்கு சிறப்பு செய்யவே தமிழில் 'கிரெம்ளின் மாளிகை' என எழுதினோம் என்றார்.

வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு கூட நம் தமிழின் பெருமை தெரிந்து உள்ளது. ஆனால் நாமோ'தமிழில் எழுதுங்கள் என்பதற்கு ஒரு கருத்தரங்கம் நடத்திக்கொண்டு இருக்கிறோம்'.

சிந்தியுங்கள்........தமிழர்களே......"

-என்றபடியே தன் உரையை முடித்தார். (நீண்ட உரையின் முக்கிய பகுதிகளே இவை" )


டுத்து மதுரை மண்டல உதவி தலைவர் உயர்திரு பசும்பொன் பேச வந்தார். அவர் தமிழ் மொழி குறித்து முக்கிய அரசாணைகளை பட்டியலிட்டார்.

'நேற்று குசராத் நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியது 'அரசு வெளியிடும் அறிக்கைகள் தாய் மொழியில் தான் இருக்கவேண்டும் ' என்று, மேலும் 'இந்தி மொழி தேசிய மொழி அல்ல' என்றும் தீர்ப்பிட்டனர். இது நாடு முழுதும் பொருந்தும். இந்த செய்தியோடு நாம் கருத்துக்களுக்கு செல்வோம்.

'ஒரு சர்வாதிகாரியை போல அதிகாரம் எனக்கு இருந்தால் எல்லா தாய் மொழியையும் இந்திய பயிற்று மொழி ஆக்கி விடுவேன் ' என்றார் மகாத்மா காந்தி.

அந்தளவுக்கு தாய்மொழி அவசியத்தை உணர்ந்தவர். பாரதி நினைவு நாளிற்கு எழுதிய கடிதம் தமிழிலேயே எழுதி 'மோ .க .காந்தி' என தலைபெழுத்து முதற்கொண்டு தமிழிலேயே எழுதி கையெழுத்து இட்டு இருந்தார். அந்தளவுக்கு மொழி தூய்மைக்கு முக்கியத்துவம் தந்தவர் காந்தி.

இந்திய, தென்னிந்திய, சிங்களம் முதற்கொண்ட மொழிகளின் நெடுங்கணக்கு தமிழில் இருந்தே தொடங்குகிறது என்றும் குறிப்பிட்டார். ஆனால் நாம் நம் தமிழை மறந்துவிட்டோம் தமிழ் வளர்ச்சி என்பது ஊர் கூடி தேர் இழுக்கும் செயல்' அதற்கு நாம் போட்ட அரசாணைகளை கடைபிடிப்பதே முதற்கட்டமாய் இருக்கும் 21.6.1978 அரசாணை தமிழில் எழுத வேண்டும் என போடப்பட்டுள்ளது.

1998 இல் போடப்பட்ட அரசாணை தலைப்பெழுத்துக்கள் தமிழில் இடவேண்டும் என உள்ளது. எண்: 371 30.10.86 ஆணை படி கடித போக்குவரத்து தமிழில் தான் இருக்கவேண்டும் என்றும் 13.2.1964 அரசாணை எண் 225 படி பொதுமக்களுக்கு அரசு அறிவிப்புகள் தமிழில் இருக்கவேண்டும் என சொல்கிறது.

5.1.1998 போக்குவரத்து ஆணை எண் 11 படி ஊர்திகளில் தமிழில் எழுதவேண்டும் அதாவது நமது வாகன எண்கள். 3.2.1981 இல் போடப்பட்ட அரசு ஆணை படி திருவள்ளுவர் ஆண்டை குறிக்க வேண்டும். 21.9.1981 இல் போடப்பட்ட அரசாணை எண் 117 படி தமிழகத்தின் சாலைகள்,தெருக்கள் தைழில் பெயரிடப்பட்டு இருக்க வேண்டும்.

19.10.1978 அய்யா பெரியார் நூற்றாண்டை ஒட்டி போடப்பட்ட அரசாணை எண் 1875 படி எழுத்து சீர்திருத்தம் முறையில் எழுத வேண்டும்.

இவை ஓரிரு உதாரணங்கள்தான் இந்த அரசாணைகள் மீறப்பட்டால் ஆட்சிமொழி திட்டத்தின் படி எண் 24 06.01.1982 இல் போடப்பட்ட ஆணை படி துறை ரீதியாக இவர்கள் மேல் அதாவது மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்' . ஆக தமிழ் மொழியில் பேசினால் குறை என்று தாழ்வு மனப்பான்மையை ஒழிக்க வேண்டும் ஆங்கிலம் என்பது மொழி. அது அறிவல்ல அங்கு இங்கிலாந்தில் படிப்பறிவற்றவர் கூட ஆங்கிலத்தில் தான் பேசுகிறார் . அதனால் அவர் அறிவாளி என்று அர்த்தம் ஆகாது எனவே நாம் தாய் மொழியில் பேசி பழகி நம் மொழியை வளர்க்க வேண்டும் மொழி வளர்ச்சியில்

1.புத்தாக்கம் இருக்க வேண்டும்

2.தளப்படுத்த வேண்டும்

3.எழுத்து சீர்திருத்தம் வேண்டும்

மூன்றும் இருந்தால் மொழியை வளர்க்கலாம்

மொழியை வளர்க்க நாம் இனி தமிழிலிலேயே பேசுவோம், தமிழிலிலேயே எழுதுவோம் தமிழ் வளர்ப்போம்" என்றார் உணர்ச்சியோடு.

- சே. த. இளங்கோவன், சேலம் - நன்றி - நக்கீரன்
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

ரசியா அதிபர் மாளிகையில் தமிழ்! சிந்தியுங்கள்...தமிழர்களே! Empty Re: ரசியா அதிபர் மாளிகையில் தமிழ்! சிந்தியுங்கள்...தமிழர்களே!

Post by பூவன் Fri May 31, 2013 4:44 pm

அமெரிக்காவில் தமிழ் , ரஷ்சியாவில் தமிழ் உலகெங்கும் தமிழ் , ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் இல்லை தமிழ் ....

வருந்தபடவேண்டிய விஷயம் .. சோகம் சோகம் சோகம் சோகம்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ரசியா அதிபர் மாளிகையில் தமிழ்! சிந்தியுங்கள்...தமிழர்களே! Empty ரசியா அதிபர் மாளிகையில் தமிழ்! சிந்தியுங்கள்...தமிழர்களே!

Post by Dr.S.Soundarapandian Sat Jun 01, 2013 12:24 pm

சாமி அவர்களின் செய்தி போற்றத்தக்கது ! இராசேந்திரன் கண் கலங்கியது போலவே இதைப் படித்த என் கண்ணும் கலங்கியது ! மக்களுக்குச் சொல்லவேண்டிய செய்தி இது ! சிற்சில வட்டாரங்களின் பிடியில் மாட்டிக்கொண்டு தமிழ் சுருங்கக் கூடாது ! உலகளாவிய நிலையில் பரவ வேண்டும் ! இத் திசையில் நாம் பின்தங்கித்தான் உள்ளோம் !


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

ரசியா அதிபர் மாளிகையில் தமிழ்! சிந்தியுங்கள்...தமிழர்களே! Empty Re: ரசியா அதிபர் மாளிகையில் தமிழ்! சிந்தியுங்கள்...தமிழர்களே!

Post by Muthumohamed Sat Jun 01, 2013 6:58 pm

வாழ்க தமிழ் வெளிநாட்டில்

குருகிக்கொண்டிருக்கும் தமிழ் தமிழ்நாட்டில்



ரசியா அதிபர் மாளிகையில் தமிழ்! சிந்தியுங்கள்...தமிழர்களே! Mரசியா அதிபர் மாளிகையில் தமிழ்! சிந்தியுங்கள்...தமிழர்களே! Uரசியா அதிபர் மாளிகையில் தமிழ்! சிந்தியுங்கள்...தமிழர்களே! Tரசியா அதிபர் மாளிகையில் தமிழ்! சிந்தியுங்கள்...தமிழர்களே! Hரசியா அதிபர் மாளிகையில் தமிழ்! சிந்தியுங்கள்...தமிழர்களே! Uரசியா அதிபர் மாளிகையில் தமிழ்! சிந்தியுங்கள்...தமிழர்களே! Mரசியா அதிபர் மாளிகையில் தமிழ்! சிந்தியுங்கள்...தமிழர்களே! Oரசியா அதிபர் மாளிகையில் தமிழ்! சிந்தியுங்கள்...தமிழர்களே! Hரசியா அதிபர் மாளிகையில் தமிழ்! சிந்தியுங்கள்...தமிழர்களே! Aரசியா அதிபர் மாளிகையில் தமிழ்! சிந்தியுங்கள்...தமிழர்களே! Mரசியா அதிபர் மாளிகையில் தமிழ்! சிந்தியுங்கள்...தமிழர்களே! Eரசியா அதிபர் மாளிகையில் தமிழ்! சிந்தியுங்கள்...தமிழர்களே! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ரசியா அதிபர் மாளிகையில் தமிழ்! சிந்தியுங்கள்...தமிழர்களே! Empty Re: ரசியா அதிபர் மாளிகையில் தமிழ்! சிந்தியுங்கள்...தமிழர்களே!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழர்களே, தமிழர்களே.. இதையெல்லாம் நம்பாதீர்கள்..: கருணாநிதி
» அதிபர் கோத்தபய ராஜபக்ச மாளிகையில் நடந்த அவலங்கள்.
» வெள்ளை மாளிகையில் குத்துவிளக்கேற்றி அதிபர் ஜோ பைடன் தீபாவளி கொண்டாட்டம்
» அமெரிக்க அதிபர் மாளிகையில் அமரபோவது யார்? ஜோசிய குரங்கு கணிப்பு
» தமிழர்களே தமிழர்களே! ஏமாறப் பிறந்த தமிழர்களே !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum