புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழுவில் இரண்டு இந்தியர்கள் இருக்க வேண்டும்’ Poll_c10‘சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழுவில் இரண்டு இந்தியர்கள் இருக்க வேண்டும்’ Poll_m10‘சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழுவில் இரண்டு இந்தியர்கள் இருக்க வேண்டும்’ Poll_c10 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
‘சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழுவில் இரண்டு இந்தியர்கள் இருக்க வேண்டும்’ Poll_c10‘சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழுவில் இரண்டு இந்தியர்கள் இருக்க வேண்டும்’ Poll_m10‘சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழுவில் இரண்டு இந்தியர்கள் இருக்க வேண்டும்’ Poll_c10 
2 Posts - 6%
heezulia
‘சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழுவில் இரண்டு இந்தியர்கள் இருக்க வேண்டும்’ Poll_c10‘சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழுவில் இரண்டு இந்தியர்கள் இருக்க வேண்டும்’ Poll_m10‘சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழுவில் இரண்டு இந்தியர்கள் இருக்க வேண்டும்’ Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
‘சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழுவில் இரண்டு இந்தியர்கள் இருக்க வேண்டும்’ Poll_c10‘சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழுவில் இரண்டு இந்தியர்கள் இருக்க வேண்டும்’ Poll_m10‘சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழுவில் இரண்டு இந்தியர்கள் இருக்க வேண்டும்’ Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
‘சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழுவில் இரண்டு இந்தியர்கள் இருக்க வேண்டும்’ Poll_c10‘சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழுவில் இரண்டு இந்தியர்கள் இருக்க வேண்டும்’ Poll_m10‘சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழுவில் இரண்டு இந்தியர்கள் இருக்க வேண்டும்’ Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

‘சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழுவில் இரண்டு இந்தியர்கள் இருக்க வேண்டும்’


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 31, 2013 7:03 am

‘சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழுவில் இரண்டு இந்தியர்கள் இருக்க வேண்டும்’ Selang10

பொதுத் தேர்தல் முடிந்து கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்குப் பின்னர் இன்று (30.05.2013) சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அப்பட்டியலில் ஒரே ஒரு இந்தியர் மட்டுமே இடம் பெற்றுள்ளார். இது பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது என்று இன்று பின்னேரத்தில் கோலாலம்பூரில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டத்தில் வலியுறுத்திக் கூறப்பட்டது.

“சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழுவில் ஓர் இந்தியருக்கு மட்டும் இடம் அளித்திருப்பது பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது”, என்று செய்தியாளர் கூட்டத்தில் பேசிய மனித உரிமைக் கழகமான சுவாராம் தலைவர் கா. ஆறுமுகம் கூறினார்.

அன்றைய வாக்குறுதி என்னவாயிற்று?

கடந்த 12 ஆவது பொதுத் தேர்தலின் போது சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழுவில் இரு இந்தியர்களுக்கு இடமளிக்கப்படும் என்ற பக்கத்தானின் வாக்குறுதியை நினைவு கூர்ந்த ஆறுமுகம், அப்போது மனோகரன் மலையாளம் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்ததால் அது நிறைவேற்றப்பட இயலாமல் போய் விட்டது. ஆனால், அந்த வாக்குறுதியை இப்போது ஏன் நிறைவேற்றவில்லை என்று அவர் வினவினார்.

டிஎபியின் சட்டமன்ற உறுப்பினரான வி.கணபதி ராவுக்கு ஆட்சிக் குழுவில் இடம் அளித்திருப்பதை வரவேற்ற ஆறுமுகம், “நாங்கள் கணபதி ராவுக்கு வாழ்த்துகள் கூறுகிறோம். அவரின் நியமனத்தை மனதார மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்”, என்றாரவர்.

கணபதி ராவுக்கு ஆட்சிக் குழுவில் இடம் அளிக்காமல் இருந்திருந்தால் நாங்கள் இதே போன்ற கண்டனத்தை தெரிவித்திருப்போம்” என்பதை வலியுறுத்திய ஆறுமுகம், “எங்களுடையக் குறிக்கோள் சிலாங்கூர் ஆட்சிக் குழுவில் இந்தியர்களுக்கு இரண்டு இடங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பதுதான். அவர்கள் பக்கத்தான் கூட்டணியின் எந்தக் கட்சியிலிருந்து வர வேண்டும் என்பதல்ல”, என்பதை ஆறுமுகம் உறுதிப்படக் கூறினார்.

பிரதமர் நஜிப்பின் அமைச்சரவையில் இந்தியர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் பிரதிநிதித்துவ எண்ணிக்கையைச் சுட்டிக் காட்டிய ஆறுமுகம், “அதை வரவேற்கிறோம்” என்றார்.

பக்கத்தான் வெற்றியில் இந்தியர்கள் பங்கு

நஜிப்பின் அமைச்சரவை உறுப்பினர்கள், குறிப்பாக இந்திய உறுப்பினர்கள், குறைபாடுகளை அங்கீகரித்து அவற்றைக் கலைவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு தங்களுடைய செயல் திறனை விரைந்து வெளிப்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இந்தியர்களிடையே காணப்படும் எல்லையற்ற பிரச்னைகளைக் கவனித்து தகுந்த நடவடிக்கைகளைப் பரிந்துரைத்து அவற்றுக்குத் தீர்வு காண ஆட்சிக் குழுவில் அதிகமான இந்தியர்கள் இருக்க வேண்டும்.

சிலாங்கூர் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 14 விழுக்காட்டினர், அதாவது 800,000 பேர், இந்தியர்கள். அது மலேசிய இந்திய மக்களின் எண்ணிக்கையில் 40 விழுக்காடாகும் என்பதைச் சுட்டிக் காட்டி, ” சிலாங்கூர் மாநில இந்தியர்களின் சமூக, பொருளாதார, அரசியல் மேம்பாட்டிற்கு வழி அமைத்தால், அது அனைத்து இந்திய மலேசியர்களுக்கும் செல்திசையாக, வழிகாட்டியாக அமையும் என்பதை ஆறுமுகம் வலியுறுத்தினார்.”

இந்தியர்கள் சமூக, பொருளாதார, அரசியல் மேம்பாடு அடைவதற்கு சிலாங்கூர் மாநில என்ன செய்யப் போகிறது என்பதன் மீது நாங்கள் கவனம் செலுத்துகிறோம்.”

“நாம் விரும்பிய மாற்றங்களின் முதல் கட்டம் சிலாங்கூரில் நடந்துள்ளது. பாரிசானிலிருந்து பக்கத்தானுக்கு மாற்றம் ஏற்பட்டுள்ளது. மூன்றில் இரண்டு பங்கு வெற்றி பெற்றுள்ளோம். இந்த வெற்றியில் சிலாங்கூர் இந்தியர்களின் பங்கு மிகப் பெரியது என்றால் அது மிகையாகாது. அடுத்த நமது எதிர்பார்ப்பு: பக்கத்தான் ரக்யாட்டின் செயல் நிறைவேற்றம்”, என்று ஆறுமுகம் கூறினார்.

பக்கத்தான் ரக்யாட்டின் செயல் நிறைவேற்றம் மீதான நமது எதிர்பார்ப்பு சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழுவு உறுப்பினர்களின் இன அடிப்படையிலான பிரதிநிதித்துவம் குறித்து சிந்திக்கத் தூண்டுகிறது.

தற்போது, சிலாங்கூர் மாநிலத்தில் 13 பதவிகள் இருக்கின்றன. ஒரு மந்திரி புசார், ஓர் அவைத் தலைவர், ஒரு துணை அவைத் தலைவர் மற்றும் பத்து ஆட்சிக் குழு உறுப்பினர்கள் இருக்கின்றனர். அதாவது 8 மலாய்க்காரர்கள், 4 சீனர்கள் மற்றும் ஓர் இந்தியர். இவற்றில் இன்னும் ஒன்றை கூடுதலாக இந்தியர்களுக்கு கொடுக்க முன்வராதிருப்பது ஏன் என்று ஆறுமுகம் வினவினார்.

இனவாதம்தான் நடைமுறையாக இருக்கிறது

“இக்கோரிக்கை ஒன்றும் புதிதல்ல. 2008 ஆண்டிலேயே இதற்கான வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதை நிறைவேற்றுவதன் வழி இவர்களால் இந்தியர்களின் மேம்பாட்டை உறுதி செய்ய கொள்கை அளவில் வழி பிறக்க வாய்ப்புள்ளது, இதைக்கூட செய்ய மறுத்தால் எப்படி?”, என்று ஆறுமுகம் கேட்டார்.

பக்கத்தானின் நிலைப்பாட்டை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. மந்திரி புசாரின் நிலைப்பாட்டை, மனப்பாங்கை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை”, என்று வருத்தமுடன் ஆறுமுகம் கூறினார்.

“நாம் இனவாதத்தை ஆதரிக்கவில்லை. ஆனால், அதுதான் நடைமுறையாக இருந்து வருகிறது.

“சிலாங்கூர் மாநிலத்தை பக்கத்தான் ஆட்சி செய்கிறது. ஆனால், அந்த 24 மாடி கட்டடத்தில் ஓர் இலாகாவில் கூட மலாய்க்காரர் அல்லாத இயக்குனரைக் காண முடியாது.

“சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிகளுக்கான இருக்கைகள் கூட இன அடிப்படையில்தான் ஒதுக்கப்படுகிறது. இது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. ஆனால், அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.

“சிலாங்கூர் மாநில சுல்தான் மலாய்க்காரர்களுக்கு ஆறு இடம் ஆட்சிக் குழுவில் கொடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்ததாக மந்திரி புசார் கூறியுள்ளார். இது இனவாதம்.

“இச்சூழ்நிலையில் இந்தியர்கள் ஆட்சிக் குழுவில் கூடுதல் இடம் கேட்பதில் தவறு இல்லை”, என்று ஆறுமுகம் வாதிட்டார்.

சுல்தானை முன்வைத்து ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை அடைய எத்தனிப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என்று அவர் மேலும் கூறினார்.

உரிமைக்கான போராட்டம் தொடரும்

“இந்தியர்களைப் புறக்கணிக்கும் நோக்கம் கொண்டதாக காணப்படும் பக்கத்தான் தலைவர்களுக்கு ஒன்றை நினைவுறுத்த விரும்புகிறேன். 13 ஆவது பொதுத் தேர்தலில் எப்படியாவது சிலாங்கூர் மாநிலத்தைக் கைப்பற்ற வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு இந்திய வாக்காளர்களின் வாக்குகளை அடித்துச் செல்வதற்காக பாரிசான் பொழிந்த பண மழையில் இந்தியர்கள் அடித்துச் செல்லப்பட்டிருந்தால், இன்று சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிம்மாக இருந்திருக்க முடியாது என்பதை திட்டவட்டமாகக் கூறுகிறேன்”, என்றார் ஆறுமுகம்.

பிகேஆரில் இருக்கும் உயர்மட்ட இந்திய தலைவர்கள் திருவாய் மலர வேண்டும். வாய் திறந்து பேசுங்கள், உரிமைக்காக மலாய்க்காரர்களைப் போல் போராடுங்கள். மௌனியாக இருக்காதீர்கள் என்று ஆறுமுகம் அவர்களைக் கேட்டுக் கொண்டார்.

“நாங்கள் மௌனமாக இருக்கப் போவதில்லை. போராடத் தயாராக இருக்கிறோம். முதல் கட்டமாக. பக்கத்தான் தலைவர் அன்வார் இப்ராகிம் மற்றும் சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிம் ஆகியோருடன் தனிப்பட்ட சந்திப்பு நடைபெறவிருக்கிறது. இதில் இந்தியர் விவகாரங்கள் குறித்து பேசப்படும்.

“நல்லதோர் வழி காணப்படவில்லை என்றால், உரிமைக்கான போரட்டங்கள் தொடரும்”, என்று ஆறுமுகம் இறுதியாகக் கூறினார்.

இச் செய்தியாளர் கூட்டத்தில் கா. உதயசூரியன், எல். சேகரன் மற்றும் ஜி. குணராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

செம்பருத்தி.காம்



‘சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழுவில் இரண்டு இந்தியர்கள் இருக்க வேண்டும்’ Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri May 31, 2013 10:23 am

இங்கு போல் தான் அங்கும் பொய் வாக்குறுதி தானா ?




‘சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழுவில் இரண்டு இந்தியர்கள் இருக்க வேண்டும்’ M‘சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழுவில் இரண்டு இந்தியர்கள் இருக்க வேண்டும்’ U‘சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழுவில் இரண்டு இந்தியர்கள் இருக்க வேண்டும்’ T‘சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழுவில் இரண்டு இந்தியர்கள் இருக்க வேண்டும்’ H‘சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழுவில் இரண்டு இந்தியர்கள் இருக்க வேண்டும்’ U‘சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழுவில் இரண்டு இந்தியர்கள் இருக்க வேண்டும்’ M‘சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழுவில் இரண்டு இந்தியர்கள் இருக்க வேண்டும்’ O‘சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழுவில் இரண்டு இந்தியர்கள் இருக்க வேண்டும்’ H‘சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழுவில் இரண்டு இந்தியர்கள் இருக்க வேண்டும்’ A‘சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழுவில் இரண்டு இந்தியர்கள் இருக்க வேண்டும்’ M‘சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழுவில் இரண்டு இந்தியர்கள் இருக்க வேண்டும்’ E‘சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழுவில் இரண்டு இந்தியர்கள் இருக்க வேண்டும்’ D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக