Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டுby heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கல்லூரிகளில் இனி ஆங்கிலம் தான் கிடுக்குப்பிடி உத்தரவால் மாணவர்கள் கலக்கம்
+2
ராஜா
balakarthik
6 posters
Page 1 of 1
கல்லூரிகளில் இனி ஆங்கிலம் தான் கிடுக்குப்பிடி உத்தரவால் மாணவர்கள் கலக்கம்
தமிழகம் முழுவதும் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் ஆங்கிலம் தான் இனி பிரதானமாகப்போகிறது. "மாணவ, மாணவியர், ஆங்கில மொழி தொடர்பு திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும், இதனால், அதிக வேலை வாய்ப்புகளை பெற முடியும்' என, நூதனமாக ஒரு காரணத்தைக் கூறி, வரும் கல்வி ஆண்டில் இருந்து, அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளிலும், "அசைன்மென்ட்' மற்றும் தேர்வுகளை, ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ் மொழிக்கு எதிரான, அரசின் இந்த நடவடிக்கைக்கு, மாணவர்களும், ஆசிரியர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் பரிந்துரையின் அடிப்படையில், இந்த உத்தரவை, தமிழக அரசு பிறப்பித்துள்ளது. அதன்படி, வரும் ஜூன் முதல், கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள், "அசைன்மென்ட்' மற்றும் தேர்வுகளை, தமிழில் எழுதக் கூடாது; ஆங்கிலத்தில் தான் எழுத வேண்டும். அரசின் உத்தரவை அடுத்து, இது குறித்த அறிவிப்புகள், கல்லூரி களில் வெளியிடப்பட்டு உள்ளன.
மாணவ, மாணவியரின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, தமிழக அரசு, இந்த நடவடிக்கையை எடுத்தாலும், இது, மாணவர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில், எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி ஆசிரியர்சங்க நிர்வாகிகளும், எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பேராசிரியர் ஒருவர் கூறுகையில், "அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவர்களில், 80சதவீதம் பேர், அவர்களது, "அசைன்மென்ட்'களையும், பல்கலை தேர்வுகளையும், தமிழ் வழியில் தான் எழுதுகின்றனர். இப்போது, திடீரென, ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என, உத்தரவிடுவது, நியாயமாக இருக்காது' என்றார்.
இது குறித்து, மாநில உயர் கல்வி மன்றத்தின் துணைத் தலைவர் சிந்தியா பாண்டியன் கூறியதாவது:அனைத்து பல்கலை
துணைவேந்தர்களிடமும் விவாதித்து, அவர்களின் ஆலோசனைகளை பெற்றுத் தான், இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கையால், மாணவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அவர்கள், படிப்பை முடித்ததும், வேலை வாய்ப்பு பெறவும், இது உதவும்.
ஆசிரியர்களும், ஆங்கிலத்தில், வகுப்புகளை நடத்த வேண்டும் என, உத்தரவிட்டுள்ளோம். இது, மாணவர்களின், ஆங்கில தொடர்பு திறனை வளர்ப்பதற்கு, உதவியாக இருக்கும். மாணவர்கள், இப்போதும், தேர்வை எழுதுவதற்கு, தமிழ் வழியைத் தான் தேர்வு செய்கின்றனர். வணிக ஆங்கிலம் என்ற புதிய பாடத்தை அறிமுகப்படுத்தவும், மாநில உயர் கல்வி மன்றம் முடிவுசெய்துள்ளது. ஆங்கில மொழி அறிவை வளர்த்தல், இலக்கண அறிவை மேம்படுத்துதல் மூலம், மாணவர்கள், ஆங்கிலத்தில் தேர்வை எழுதக்கூடிய ஆற்றலை பெறுவர்.இவ்வாறு, சிந்தியா பாண்டியன் கூறினார்.
சென்னை பல்கலை முன்னாள் துணைவேந்தர் தியாகராஜன் கூறியதாவது:பல ஆண்டுகளாக, மாணவர்கள், தேர்வை, தமிழ் வழியில் எழுதி வருகின்றனர். இதை, பல்கலையும் அனுமதித்துள்ளது. இப்போது, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, ஒரு மாற்றத்தை கொண்டு வந்துள்ளனர். பெரிதுபடுத்துவதற்கு இதில் ஒன்றும் இல்லை.நமது மாணவர்கள், தமிழ் அல்லாத பிற மொழியை படிப்பதில்லை. இதனால், அவர்கள், வேலை வாய்ப்பு என்று வரும் போது, தமிழகம் என்ற எல்லைக்குள், அவர்களது நடவடிக்கை முடங்கி விடுகிறது. இதுவே, ஆங்கில அறிவு இருந்தால், தமிழகம் தாண்டி, பிற மாநிலங்களிலும், நமது மாணவர்களால், வேலை வாய்ப்புகளை பெற முடியும்.இவ்வாறு, தியாகராஜன் கூறினார்.
சென்னை, நந்தனம் அரசு கல்லூரி முதல்வர் பிரபு கூறுகையில், ""தமிழ் வழியில் படிக்கும் கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு, தமிழகத்திற்குள், 1.5 லட்சம் வேலை வாய்ப்புகள் தான் கிடைக்கின்றன.
ஆனால், ஆண்டுக்கு, 7 லட்சம் மாணவர்கள், படிப்பை முடித்து வெளியே வருகின்றனர். அனைத்து மாணவர்களுக்கும் வேலை வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் எனில், ஆங்கில அறிவு அவசியமாக உள்ளது,'' என்றார்.
அரசு தரப்பிலும், கல்வியாளர்கள் தரப்பிலும், புதிய முடிவுவரவேற்கப்பட்டாலும், கல்லூரி ஆசிரியர்கள் தரப்பிலும், ஆசிரியர்சங்க நிர்வாகிகள் தரப்பிலும், எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. அரசின் முடிவால், தோல்வி அடையும் மாணவர் கள் எண்ணிக்கை உயர்வதுடன், படிப்பை பாதியில் விடும் மாணவர்கள் எண்ணிக்கையும் உயரும் என, ஆசிரியர் சங்கங்கள் கூறுகின்றன.
சமூக, பொருளாதார நிலையை கருத்தில் கொள்ளாமல், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அரசின் முடிவு, மாணவர்கள் மத்தியில், வேறுபாட்டை ஏற்படுத்தும்,'' என, அகில இந்திய பல்கலை, ஆசிரியர் சங்க தலைவர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
சென்னை, மாநில கல்லூரி மாணவர்சரவணகுமார் கூறுகையில், ""ஒவ்வொரு செமஸ்டரிலும், ஐந்து தேர்வுகளை, தமிழ் வழியில் தான் எழுதுகிறேன். ஆங்கில தேர்வை எழுதுவதற்காக மட்டும், ஓரளவு தயாராக வேண்டியுள்ளது. பள்ளியில், நான் ஆங்கிலம் படிக்கவில்லை. இப்போது, திடீரென, எல்லாமே ஆங்கிலம் தான் என்று கூறுவது, மிகவும் கடினமாக உள்ளது,'' என்றார்.
நன்றி:- தினமலர்
ரசித்த கமெண்டுக்கள்
[color=#003333]kumaresan.m - hochimin ,வியட்னாம்[/u][/size]
" வரவேற்க தக்க ஒன்று ஆனால் அதற்க்கான தனி பயிற்சியை கிராமப்புறத்தில் படித்த மாணவர்களுக்கு வழங்கல் வேண்டும் "[/quote]
[color=#003333]Yamadharmaraja - chennai,இந்தியா[/u][/size]
கல்வி என்பது ஒருவனை சிந்தித்தல், செயலாற்றுதல் ஆகியவற்றில் மேம்படுத்த வேண்டும். அவனுக்கு என்ன தெரியுமோ அதையே சொல்லிக்கொடுப்பதல்ல கல்வி. அவனுக்கு தெரியாததை சொல்லிக்கொடுக்க வேண்டும், அதுதான் கல்வி. தமிழ் மட்டும்தான் தெரியும், அதிலேயே நான் கற்றுக்கொள்கிறேனே என்றால் அதன் மூலம் முழுமையான கல்வியை பெற முடியாது. இன்று தமிழ் வழிக்கல்வி என்று பேசுபவர்கள் எல்லாம், அன்றாடம் வளர்ந்து வரும் அறிவியலின் வளர்ச்சிக்கேற்ப அதை தமிழில் விளக்க வேண்டும் அதற்கான வழி வகை செய்ய வேண்டும் என்ற எண்ண மில்லாது தமிழை உணர்ச்சி ரீதியாக அணுக மட்டுமே நமக்கு கற்றுத் தந்துள்ளனர். மேலும் தமிழும் கடவுள் பக்தியும் பிரிக்கமுடியாதவை. தமிழ் இலக்கியத்தில் 90 சதவீதம் பக்தி இலக்கியமே. ஆனால் தமிழை வளர்ப்பதாக கூறிக்கொள்பவர்கள் நாத்திகம் பேசாவிட்டாலும், கடவுள் நிந்தனை செய்பவர்கள். (நாத்திகத்தை பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது, என்னை பொருத்தவரை நாத்திகமும் ஒரு மதமே). இவர்கள் திருக்குறளின் முதல் குறளை படிக்காமல் கடைசி குறளை மட்டும் படிப்பவர்கள். எனவே, தமிழை சும்மா விட்டாலே அது இவர்களின் முயற்சி இல்லாமல் தானாகவே வளர்ந்து கொள்ளும். கடந்த 60 ஆண்டுகளில் இவர்கள் தமிழுக்கு செய்த தொண்டு என்ன? ஒன்றுமில்லை. வெறும் சிலைகள் மட்டுமே. செம்மொழி அந்தஸ்து கூட எல்லோருக்கும் மறந்து போய்விட்டது. இந்நிலையில் கல்லூரிகளில் ஆங்கிலத்தில் தான் கட்டுரைகள் எழுதப்பட வேண்டும் என்று ஆணை பிறப்பிப்பதில் தவறில்லை. ஆங்கில வழிக்கல்வி பயிலும் மாணவர்களும் தமிழில் தேர்வு எழுதலாம் என்று இன்றுள்ள நிலையில், ஆங்கிலத்தில் கட்டுரைகளையும் ப்ராஜெக்ட் ரிப்போர்ட் களையும் எழுத வேண்டும் என்று ஆணையிட்டிருப்பது வரவேற்கக்கூடியது. ஆனால் ஆங்கில வழியில் கற்பிக்கவும், assignment, test, report என அனைத்தையும் ஆங்கிலத்தில் மாணவர்கள் எழுத அவற்றை மதிப்பீடு செய்யவும் தற்போதுள்ள ஆசிரியர்கள் பெரும்பான்மையோருக்கு ஆற்றல் போதாது என்பதே கல்லூரி பேராசிரியரான என் கருத்து.[/quote]
தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் பரிந்துரையின் அடிப்படையில், இந்த உத்தரவை, தமிழக அரசு பிறப்பித்துள்ளது. அதன்படி, வரும் ஜூன் முதல், கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள், "அசைன்மென்ட்' மற்றும் தேர்வுகளை, தமிழில் எழுதக் கூடாது; ஆங்கிலத்தில் தான் எழுத வேண்டும். அரசின் உத்தரவை அடுத்து, இது குறித்த அறிவிப்புகள், கல்லூரி களில் வெளியிடப்பட்டு உள்ளன.
மாணவ, மாணவியரின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, தமிழக அரசு, இந்த நடவடிக்கையை எடுத்தாலும், இது, மாணவர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில், எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி ஆசிரியர்சங்க நிர்வாகிகளும், எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பேராசிரியர் ஒருவர் கூறுகையில், "அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவர்களில், 80சதவீதம் பேர், அவர்களது, "அசைன்மென்ட்'களையும், பல்கலை தேர்வுகளையும், தமிழ் வழியில் தான் எழுதுகின்றனர். இப்போது, திடீரென, ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என, உத்தரவிடுவது, நியாயமாக இருக்காது' என்றார்.
இது குறித்து, மாநில உயர் கல்வி மன்றத்தின் துணைத் தலைவர் சிந்தியா பாண்டியன் கூறியதாவது:அனைத்து பல்கலை
துணைவேந்தர்களிடமும் விவாதித்து, அவர்களின் ஆலோசனைகளை பெற்றுத் தான், இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கையால், மாணவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அவர்கள், படிப்பை முடித்ததும், வேலை வாய்ப்பு பெறவும், இது உதவும்.
ஆசிரியர்களும், ஆங்கிலத்தில், வகுப்புகளை நடத்த வேண்டும் என, உத்தரவிட்டுள்ளோம். இது, மாணவர்களின், ஆங்கில தொடர்பு திறனை வளர்ப்பதற்கு, உதவியாக இருக்கும். மாணவர்கள், இப்போதும், தேர்வை எழுதுவதற்கு, தமிழ் வழியைத் தான் தேர்வு செய்கின்றனர். வணிக ஆங்கிலம் என்ற புதிய பாடத்தை அறிமுகப்படுத்தவும், மாநில உயர் கல்வி மன்றம் முடிவுசெய்துள்ளது. ஆங்கில மொழி அறிவை வளர்த்தல், இலக்கண அறிவை மேம்படுத்துதல் மூலம், மாணவர்கள், ஆங்கிலத்தில் தேர்வை எழுதக்கூடிய ஆற்றலை பெறுவர்.இவ்வாறு, சிந்தியா பாண்டியன் கூறினார்.
சென்னை பல்கலை முன்னாள் துணைவேந்தர் தியாகராஜன் கூறியதாவது:பல ஆண்டுகளாக, மாணவர்கள், தேர்வை, தமிழ் வழியில் எழுதி வருகின்றனர். இதை, பல்கலையும் அனுமதித்துள்ளது. இப்போது, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, ஒரு மாற்றத்தை கொண்டு வந்துள்ளனர். பெரிதுபடுத்துவதற்கு இதில் ஒன்றும் இல்லை.நமது மாணவர்கள், தமிழ் அல்லாத பிற மொழியை படிப்பதில்லை. இதனால், அவர்கள், வேலை வாய்ப்பு என்று வரும் போது, தமிழகம் என்ற எல்லைக்குள், அவர்களது நடவடிக்கை முடங்கி விடுகிறது. இதுவே, ஆங்கில அறிவு இருந்தால், தமிழகம் தாண்டி, பிற மாநிலங்களிலும், நமது மாணவர்களால், வேலை வாய்ப்புகளை பெற முடியும்.இவ்வாறு, தியாகராஜன் கூறினார்.
சென்னை, நந்தனம் அரசு கல்லூரி முதல்வர் பிரபு கூறுகையில், ""தமிழ் வழியில் படிக்கும் கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு, தமிழகத்திற்குள், 1.5 லட்சம் வேலை வாய்ப்புகள் தான் கிடைக்கின்றன.
ஆனால், ஆண்டுக்கு, 7 லட்சம் மாணவர்கள், படிப்பை முடித்து வெளியே வருகின்றனர். அனைத்து மாணவர்களுக்கும் வேலை வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் எனில், ஆங்கில அறிவு அவசியமாக உள்ளது,'' என்றார்.
அரசு தரப்பிலும், கல்வியாளர்கள் தரப்பிலும், புதிய முடிவுவரவேற்கப்பட்டாலும், கல்லூரி ஆசிரியர்கள் தரப்பிலும், ஆசிரியர்சங்க நிர்வாகிகள் தரப்பிலும், எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. அரசின் முடிவால், தோல்வி அடையும் மாணவர் கள் எண்ணிக்கை உயர்வதுடன், படிப்பை பாதியில் விடும் மாணவர்கள் எண்ணிக்கையும் உயரும் என, ஆசிரியர் சங்கங்கள் கூறுகின்றன.
சமூக, பொருளாதார நிலையை கருத்தில் கொள்ளாமல், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அரசின் முடிவு, மாணவர்கள் மத்தியில், வேறுபாட்டை ஏற்படுத்தும்,'' என, அகில இந்திய பல்கலை, ஆசிரியர் சங்க தலைவர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
சென்னை, மாநில கல்லூரி மாணவர்சரவணகுமார் கூறுகையில், ""ஒவ்வொரு செமஸ்டரிலும், ஐந்து தேர்வுகளை, தமிழ் வழியில் தான் எழுதுகிறேன். ஆங்கில தேர்வை எழுதுவதற்காக மட்டும், ஓரளவு தயாராக வேண்டியுள்ளது. பள்ளியில், நான் ஆங்கிலம் படிக்கவில்லை. இப்போது, திடீரென, எல்லாமே ஆங்கிலம் தான் என்று கூறுவது, மிகவும் கடினமாக உள்ளது,'' என்றார்.
நன்றி:- தினமலர்
ரசித்த கமெண்டுக்கள்
Kannan Appadurai - al buraidh,சவுதி அரேபியா
இது வரவேற்க பட வேண்டிய விஷயம்.... தாய் மொழி இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது.... அவசியம் மாணவர்களுக்கு வாழ்க்கைக்கு பயன் படும்,,,, அரசியல் வாதிகளே,,,,, இதில் தயவு செய்து மூக்கை நுழைக்க வேண்டாம்.... ஒரு நிமிசம் சிந்தித்து விட்டு இதற்காக போராட முயலுங்கள்.... உங்கள் வாரிசுகளை அரசுபள்ளிகளிலா.... இது நாள் வரை படித்து கொண்டு இருந்தது,,,, உங்களுக்கு மட்டும் எல்லா எழுத்து அறிவும் தேவை.....
sagayanathan - muscat,ஓமன்
பள்ளியிலும் ஆங்கிலம் படிக்க விடமாட்டோம் ... கல்லூரியிலும் ஆங்கிலம் படிக்க விடமாட்டோம் ... நீங்க பாட்டுக்கு ஆங்கிலம் படிச்சிட்டு வேற மாநிலத்துக்கும் , வெளி நாட்டுக்கும் வேலைக்கு போய்ட்டா அப்புறம் யாரு எங்களுக்கு ஒட்டு போடுவாங்க .... இப்படிக்கு தமிழ் , தமிழ் என்று கூறி ஏமாற்றும் தலைவர்கள் .
[color=#003333]kumaresan.m - hochimin ,வியட்னாம்[/u][/size]
" வரவேற்க தக்க ஒன்று ஆனால் அதற்க்கான தனி பயிற்சியை கிராமப்புறத்தில் படித்த மாணவர்களுக்கு வழங்கல் வேண்டும் "[/quote]
[color=#003333]Yamadharmaraja - chennai,இந்தியா[/u][/size]
கல்வி என்பது ஒருவனை சிந்தித்தல், செயலாற்றுதல் ஆகியவற்றில் மேம்படுத்த வேண்டும். அவனுக்கு என்ன தெரியுமோ அதையே சொல்லிக்கொடுப்பதல்ல கல்வி. அவனுக்கு தெரியாததை சொல்லிக்கொடுக்க வேண்டும், அதுதான் கல்வி. தமிழ் மட்டும்தான் தெரியும், அதிலேயே நான் கற்றுக்கொள்கிறேனே என்றால் அதன் மூலம் முழுமையான கல்வியை பெற முடியாது. இன்று தமிழ் வழிக்கல்வி என்று பேசுபவர்கள் எல்லாம், அன்றாடம் வளர்ந்து வரும் அறிவியலின் வளர்ச்சிக்கேற்ப அதை தமிழில் விளக்க வேண்டும் அதற்கான வழி வகை செய்ய வேண்டும் என்ற எண்ண மில்லாது தமிழை உணர்ச்சி ரீதியாக அணுக மட்டுமே நமக்கு கற்றுத் தந்துள்ளனர். மேலும் தமிழும் கடவுள் பக்தியும் பிரிக்கமுடியாதவை. தமிழ் இலக்கியத்தில் 90 சதவீதம் பக்தி இலக்கியமே. ஆனால் தமிழை வளர்ப்பதாக கூறிக்கொள்பவர்கள் நாத்திகம் பேசாவிட்டாலும், கடவுள் நிந்தனை செய்பவர்கள். (நாத்திகத்தை பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது, என்னை பொருத்தவரை நாத்திகமும் ஒரு மதமே). இவர்கள் திருக்குறளின் முதல் குறளை படிக்காமல் கடைசி குறளை மட்டும் படிப்பவர்கள். எனவே, தமிழை சும்மா விட்டாலே அது இவர்களின் முயற்சி இல்லாமல் தானாகவே வளர்ந்து கொள்ளும். கடந்த 60 ஆண்டுகளில் இவர்கள் தமிழுக்கு செய்த தொண்டு என்ன? ஒன்றுமில்லை. வெறும் சிலைகள் மட்டுமே. செம்மொழி அந்தஸ்து கூட எல்லோருக்கும் மறந்து போய்விட்டது. இந்நிலையில் கல்லூரிகளில் ஆங்கிலத்தில் தான் கட்டுரைகள் எழுதப்பட வேண்டும் என்று ஆணை பிறப்பிப்பதில் தவறில்லை. ஆங்கில வழிக்கல்வி பயிலும் மாணவர்களும் தமிழில் தேர்வு எழுதலாம் என்று இன்றுள்ள நிலையில், ஆங்கிலத்தில் கட்டுரைகளையும் ப்ராஜெக்ட் ரிப்போர்ட் களையும் எழுத வேண்டும் என்று ஆணையிட்டிருப்பது வரவேற்கக்கூடியது. ஆனால் ஆங்கில வழியில் கற்பிக்கவும், assignment, test, report என அனைத்தையும் ஆங்கிலத்தில் மாணவர்கள் எழுத அவற்றை மதிப்பீடு செய்யவும் தற்போதுள்ள ஆசிரியர்கள் பெரும்பான்மையோருக்கு ஆற்றல் போதாது என்பதே கல்லூரி பேராசிரியரான என் கருத்து.[/quote]
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: கல்லூரிகளில் இனி ஆங்கிலம் தான் கிடுக்குப்பிடி உத்தரவால் மாணவர்கள் கலக்கம்
ஏற்கனவே இப்படி தானே இருக்கிறது. ஓஹோ இவர் தமிழகத்தில் உள்ள ஒரு சில அரசு கல்லூரிகளை சொல்லுகிறார் போல.தமிழகம் முழுவதும் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் ஆங்கிலம் தான் இனி பிரதானமாகப்போகிறது.
Re: கல்லூரிகளில் இனி ஆங்கிலம் தான் கிடுக்குப்பிடி உத்தரவால் மாணவர்கள் கலக்கம்
அரசு கல்லூரியில் தமிழ் இருந்தா என்ன ஆங்கிலம் இருந்தா என்ன படிக்க மாணவர்கள் இருக்கணுமே நாங்கத்தான் பஸ்ட் ஹவரே கிரவுண்டுக்கும் செகெண்ட் ஹவர் தேட்டருககும் போய்டுவோம் அப்புறம் ஆசிரியர்கள் விட்டத்தை பார்த்து மல்லாக்க படுத்தா பாடம் எடுக்கமுடியும்ராஜா wrote:ஏற்கனவே இப்படி தானே இருக்கிறது. ஓஹோ இவர் தமிழகத்தில் உள்ள ஒரு சில அரசு கல்லூரிகளை சொல்லுகிறார் போல.தமிழகம் முழுவதும் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் ஆங்கிலம் தான் இனி பிரதானமாகப்போகிறது.
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: கல்லூரிகளில் இனி ஆங்கிலம் தான் கிடுக்குப்பிடி உத்தரவால் மாணவர்கள் கலக்கம்
ஆசிரியர்களும், ஆங்கிலத்தில், வகுப்புகளை நடத்த வேண்டும் என, உத்தரவிட்டுள்ளோம். இது, மாணவர்களின், ஆங்கில தொடர்பு திறனை வளர்ப்பதற்கு, உதவியாக இருக்கும். மாணவர்கள், இப்போதும், தேர்வை எழுதுவதற்கு, தமிழ் வழியைத் தான் தேர்வு செய்கின்றனர். வணிக ஆங்கிலம் என்ற புதிய பாடத்தை அறிமுகப்படுத்தவும், மாநில உயர் கல்வி மன்றம் முடிவுசெய்துள்ளது. ஆங்கில மொழி அறிவை வளர்த்தல், இலக்கண அறிவை மேம்படுத்துதல் மூலம், மாணவர்கள், ஆங்கிலத்தில் தேர்வை எழுதக்கூடிய ஆற்றலை பெறுவர்.இவ்வாறு, சிந்தியா பாண்டியன் கூறினார்.
கட்டாயத்தில் , கிடுக்கி பிடி எப்படி எல்லாம் போட்டாலும் , எதையும் விரும்பி படிக்கணுமே விருப்பம் இல்லாமல் திணித்தால் , தேர்வே எழுத மாட்டார்கள் ....
தமிழ் தேர்வு வழியிலே இன்னும் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் முழுமை அடையவில்லை , முற்றிலும் அங்கிலம் என்றால் , தேர்வு எழுதுவோர் , தேர்ச்சி பெறுவோர் விகிதம் வெகுவாக குறையும் ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: கல்லூரிகளில் இனி ஆங்கிலம் தான் கிடுக்குப்பிடி உத்தரவால் மாணவர்கள் கலக்கம்
அதானே... நீங்க என்ன மொழியில வேணாம் பாடம் நடத்துங்கப்பு... எங்களுக்கு இருக்கவே இருக்கு...தியேட்டர், மால், டாஸ்மார்க்balakarthik wrote:அரசு கல்லூரியில் தமிழ் இருந்தா என்ன ஆங்கிலம் இருந்தா என்ன படிக்க மாணவர்கள் இருக்கணுமே நாங்கத்தான் பஸ்ட் ஹவரே கிரவுண்டுக்கும் செகெண்ட் ஹவர் தேட்டருககும் போய்டுவோம் அப்புறம் ஆசிரியர்கள் விட்டத்தை பார்த்து மல்லாக்க படுத்தா பாடம் எடுக்கமுடியும்ராஜா wrote:ஏற்கனவே இப்படி தானே இருக்கிறது. ஓஹோ இவர் தமிழகத்தில் உள்ள ஒரு சில அரசு கல்லூரிகளை சொல்லுகிறார் போல.தமிழகம் முழுவதும் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் ஆங்கிலம் தான் இனி பிரதானமாகப்போகிறது.
Re: கல்லூரிகளில் இனி ஆங்கிலம் தான் கிடுக்குப்பிடி உத்தரவால் மாணவர்கள் கலக்கம்
ஹல்லோ டாஸ்மார்க்கில் எங்களுக்கென்று தனி மொழியே இருக்கு சீக்கிரமே அதுவும் செம்மொழி ஆகிடும்Aathira wrote:அதானே... நீங்க என்ன மொழியில வேணாம் பாடம் நடத்துங்கப்பு... எங்களுக்கு இருக்கவே இருக்கு...தியேட்டர், மால், டாஸ்மார்க்balakarthik wrote:அரசு கல்லூரியில் தமிழ் இருந்தா என்ன ஆங்கிலம் இருந்தா என்ன படிக்க மாணவர்கள் இருக்கணுமே நாங்கத்தான் பஸ்ட் ஹவரே கிரவுண்டுக்கும் செகெண்ட் ஹவர் தேட்டருககும் போய்டுவோம் அப்புறம் ஆசிரியர்கள் விட்டத்தை பார்த்து மல்லாக்க படுத்தா பாடம் எடுக்கமுடியும்ராஜா wrote:ஏற்கனவே இப்படி தானே இருக்கிறது. ஓஹோ இவர் தமிழகத்தில் உள்ள ஒரு சில அரசு கல்லூரிகளை சொல்லுகிறார் போல.தமிழகம் முழுவதும் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் ஆங்கிலம் தான் இனி பிரதானமாகப்போகிறது.
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: கல்லூரிகளில் இனி ஆங்கிலம் தான் கிடுக்குப்பிடி உத்தரவால் மாணவர்கள் கலக்கம்
செம்மொழி நம்மொழிbalakarthik wrote:
ஹல்லோ டாஸ்மார்க்கில் எங்களுக்கென்று தனி மொழியே இருக்கு சீக்கிரமே அதுவும் செம்மொழி ஆகிடும்
Re: கல்லூரிகளில் இனி ஆங்கிலம் தான் கிடுக்குப்பிடி உத்தரவால் மாணவர்கள் கலக்கம்
கல்வி என்பது தெளிவுறக் கற்றல்,
ஒன்றைத் தெரிந்து கொண்டாலும் அதை முழுவதும் தெளிவாகக் கற்க வேண்டும். பழங்காலத்தில் அனைத்துத் தொழிலும் தெளிவுறக் கற்ற பின்னரே சபைக்கு வந்தது. அப்படித் தேர்ந்தவர்கள் கட்டிய கட்டடங்களே இன்றும் வானுயர நிற்கிறது. ஆனால் இதுவரை தமிழில் படித்த நாம் தமிழை எந்த அளவிற்கு கற்றோம், வினைத்தொகைக்கும் பண்புத்தொகைக்கும் வித்தியாசம் எத்தனைப் பேருக்குத் தெரியும்.
ஒரு பேராசிரியர் தமிழில் உள்ள 90 % இலக்கியம் பக்தி இலக்கியம் என்று கூறுவதிலே நாம் கல்வி கற்கவில்லை. யாரோ சொன்னதை காதால் கேட்டு, நினைவில் இருந்ததை மட்டும் வைத்து கொண்டு பிழைப்பு நடத்துகிறோம் என்று தெரிகிறது. உண்மையில் பக்தி இலக்கியங்கள் சங்கக் காலத்தில் வெகு குறைவு, 6-10 நுற்றாண்டுகளில் தான் இவ்வகை இலக்கியங்கள் பெருகியது.
இந்தியாவில் ஆங்கில வழியில் படித்தவர்களும் கூட உலக அரங்கில் மேல்படிப்புக்குச் செல்லும் பொழுது IELTS , TOFEL போன்ற தேர்வுகளை எழுதினால் தான் ஏற்கின்றனர், நாம் கற்கும் ஆங்கில அறிவும் அவ்வளவு தான். தெளிவில்லாத ஆங்கில அறிவும் வீண் தான்.
எந்த மொழியில் கல்வி அமைந்தாலும் கல்வியை கசடற கற்கும் வழியை ஏற்படுத்துங்கள், சிலபஸில் கொடுக்கப்பட்ட பாடத் திட்டமும், அதன் நோக்கமும் புரியாத ஆசியர்கள் தான் இன்று மிகுந்துள்ளனர். LKG குழந்தைக்கும் project work கொடுக்கும் பொழுது அதன் நோக்கம் என்ன என்று அறியாமல், கிளிப் பிள்ளை போல் புத்தகத்தில் உள்ளதை மட்டுமே பார்க்கும் அறிவீலிக் கூட்டமாக இன்றைய ஆசிரியர்கள் பலர் உள்ளனர். இதைவிட பள்ளிகூடங்கள் சொல்லும் செயலை எள்ளவும் யோசிக்காமல் மண்டையை ஆட்டும் பெற்றோரும் பெருகி விட்டனர். இந்நிலையில் மாணவர்களின் நிலை என்ன ?
முதலில் ஆசிரியர்கள் தெளிவுறக் கற்க வழி செய்யுங்கள்..அதன் பிறகு மாணவர்கள் நலனைப் பற்றி யோசிக்கலாம்.
ஒன்றைத் தெரிந்து கொண்டாலும் அதை முழுவதும் தெளிவாகக் கற்க வேண்டும். பழங்காலத்தில் அனைத்துத் தொழிலும் தெளிவுறக் கற்ற பின்னரே சபைக்கு வந்தது. அப்படித் தேர்ந்தவர்கள் கட்டிய கட்டடங்களே இன்றும் வானுயர நிற்கிறது. ஆனால் இதுவரை தமிழில் படித்த நாம் தமிழை எந்த அளவிற்கு கற்றோம், வினைத்தொகைக்கும் பண்புத்தொகைக்கும் வித்தியாசம் எத்தனைப் பேருக்குத் தெரியும்.
ஒரு பேராசிரியர் தமிழில் உள்ள 90 % இலக்கியம் பக்தி இலக்கியம் என்று கூறுவதிலே நாம் கல்வி கற்கவில்லை. யாரோ சொன்னதை காதால் கேட்டு, நினைவில் இருந்ததை மட்டும் வைத்து கொண்டு பிழைப்பு நடத்துகிறோம் என்று தெரிகிறது. உண்மையில் பக்தி இலக்கியங்கள் சங்கக் காலத்தில் வெகு குறைவு, 6-10 நுற்றாண்டுகளில் தான் இவ்வகை இலக்கியங்கள் பெருகியது.
இந்தியாவில் ஆங்கில வழியில் படித்தவர்களும் கூட உலக அரங்கில் மேல்படிப்புக்குச் செல்லும் பொழுது IELTS , TOFEL போன்ற தேர்வுகளை எழுதினால் தான் ஏற்கின்றனர், நாம் கற்கும் ஆங்கில அறிவும் அவ்வளவு தான். தெளிவில்லாத ஆங்கில அறிவும் வீண் தான்.
எந்த மொழியில் கல்வி அமைந்தாலும் கல்வியை கசடற கற்கும் வழியை ஏற்படுத்துங்கள், சிலபஸில் கொடுக்கப்பட்ட பாடத் திட்டமும், அதன் நோக்கமும் புரியாத ஆசியர்கள் தான் இன்று மிகுந்துள்ளனர். LKG குழந்தைக்கும் project work கொடுக்கும் பொழுது அதன் நோக்கம் என்ன என்று அறியாமல், கிளிப் பிள்ளை போல் புத்தகத்தில் உள்ளதை மட்டுமே பார்க்கும் அறிவீலிக் கூட்டமாக இன்றைய ஆசிரியர்கள் பலர் உள்ளனர். இதைவிட பள்ளிகூடங்கள் சொல்லும் செயலை எள்ளவும் யோசிக்காமல் மண்டையை ஆட்டும் பெற்றோரும் பெருகி விட்டனர். இந்நிலையில் மாணவர்களின் நிலை என்ன ?
முதலில் ஆசிரியர்கள் தெளிவுறக் கற்க வழி செய்யுங்கள்..அதன் பிறகு மாணவர்கள் நலனைப் பற்றி யோசிக்கலாம்.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: கல்லூரிகளில் இனி ஆங்கிலம் தான் கிடுக்குப்பிடி உத்தரவால் மாணவர்கள் கலக்கம்
கல்வியை பொருத்த மட்டில் அரசாங்கத்தின் முடிவில் தான் அனைத்தும் அடங்கியிருக்கிறது. உதாரணத்திற்கு அரேபியாவை பாருங்கள் எந்த அரசாங்க விவகாரங்களாகட்டும் விண்ணப்பமானாலும் அரபியில் தான் இருக்கவேன்டும் என்று வைத்துள்ளனர் அதனால் அரபி கற்றவர்கள் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: கல்லூரிகளில் இனி ஆங்கிலம் தான் கிடுக்குப்பிடி உத்தரவால் மாணவர்கள் கலக்கம்
அண்ணே அபுதாபியில் அரபித்தானே இருக்காங்க அவுங்க நாட்டுல அவுங்க சொல்லுரதுத்தானே சட்டம் நமூருல அப்படியா திசைக்கு ஒன்னு வேற மொழிகாரங்க இருக்காங்க நம்ம ஊரு பிச்சக்காரன் பாத்திரம் போல எல்லா சோறும் மிக்ஸ் ஆகி கிடக்குதுஅசுரன் wrote:கல்வியை பொருத்த மட்டில் அரசாங்கத்தின் முடிவில் தான் அனைத்தும் அடங்கியிருக்கிறது. உதாரணத்திற்கு அரேபியாவை பாருங்கள் எந்த அரசாங்க விவகாரங்களாகட்டும் விண்ணப்பமானாலும் அரபியில் தான் இருக்கவேன்டும் என்று வைத்துள்ளனர் அதனால் அரபி கற்றவர்கள் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Similar topics
» கலை அறிவியல் படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம்: கல்லூரிகளில் போட்டி போட்டு விண்ணப்பங்கள் குவிகின்றன
» மருத்துவம்-என்ஜினீயரிங் கல்லூரிகளில் புதுவை மாணவர்கள் 75 சதவீத இடஒதுக்கீடு ரத்து; ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
» ஆங்கிலம் பேசத்தெரியாத இந்திய நர்சிங் மாணவர்கள் வெளியேற்றம்
» ஆங்கிலம் பேசத்தெரியாத இந்திய நர்சிங் மாணவர்கள் வெளியேற்றம்: ஆஸ்திரேலியா.!
» ஆசியாவிலேயே மலேசியாவில் தான் சிறப்பாக ஆங்கிலம் பேசுபவர்கள் இருக்கிறார்கள்!
» மருத்துவம்-என்ஜினீயரிங் கல்லூரிகளில் புதுவை மாணவர்கள் 75 சதவீத இடஒதுக்கீடு ரத்து; ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
» ஆங்கிலம் பேசத்தெரியாத இந்திய நர்சிங் மாணவர்கள் வெளியேற்றம்
» ஆங்கிலம் பேசத்தெரியாத இந்திய நர்சிங் மாணவர்கள் வெளியேற்றம்: ஆஸ்திரேலியா.!
» ஆசியாவிலேயே மலேசியாவில் தான் சிறப்பாக ஆங்கிலம் பேசுபவர்கள் இருக்கிறார்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|