ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குமரகுருபரர் குருபூஜை

+2
Dr.S.Soundarapandian
சிவா
6 posters

Go down

குமரகுருபரர் குருபூஜை Empty குமரகுருபரர் குருபூஜை

Post by சிவா Sun May 26, 2013 9:28 am



கடவுளின் அருள் இருந்தால் நடக்காததும் நடக்கும். இதற்கு குமரகுருபரரின் வாழ்க்கை வரலாறு உதாரணம். திருநெல்வேலி அருகிலுள்ள ஸ்ரீவைகுண்டம் பிரசித்தி பெற்ற ஆன்மிகத்தலம். இங்கு சண்முகசிகாமணி கவிராயர், சிவகாமி சுந்தரி தம்பதியர் வசித்தனர். இவர்கள் தங்கள் குலதெய்வமாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமியை வழிபட்டு வந்தனர். இவர்களுக்கு பிறந்த மகனுக்கு, முருகனின் ஒரு பெயரான குமரகுருபரன் என்ற பெயரைச் சூட்டினர். குமரன் எனறால் இளைஞன். அவர் தந்தைக்கே குரு. பரன் என்றால் தெய்வம். இளைஞனும், குருவுமாக இருக்கும் அந்த முருகப் பெருமானின் அருளால் குமரகுருபரன் சிறப்புடன் வளர்க்கப் பட்டான்.

ஆனால், பெற்றோருக்கு அதிர்ச்சி. ஐந்து வயதாகியும் குழந்தை பேசவில்லை. "பேசும் திறனற்ற குழந்தையைக் கொடுத்து விட்டாயே...' என அவர்கள் முருகனிடம் முறையிட்டனர். திருச்செந்தூர் சென்று அங்கேயே தங்கி விரதமிருந்தனர். ஒருநாள், குழந்தையுடன் கோவிலுக்குள் சென்று "குழந்தையை பேச வைத்தால் தான் வெளியேறுவோம். எங்கள் பக்திக்கு மதிப்பு கொடு...' என்று வாதாடினர்.

செந்தூர் முருகனின் கடைக்கண் பார்வை மட்டும், ஒருவர் மீது பட்டாலே போதுமே... நடக்காதது என நினைத்த காரியம் எல்லாம் நடந்து விடும். அதற்கேற்ப, குழந்தை ஏதோ பேசியது போல் அவர்கள் காதில் விழுந்தது. அடுத்து, மடை திறந்த வெள்ளமாய் குமரகுருபரன் வாயில் இருந்து கவிமழை பொழிந்தது. முருகனைக் குறித்த இந்த பாடல்களை தான் "கந்தர் கலிவெண்பா' என்ற நூலாகத் தொகுத்தனர். ஊரே ஆச்சரியப் பட்டது. பெற்றோர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

முருகனால் பேச வைக்கப்பட்ட அந்த சிறுவனை, மக்கள் "குமரகுருபர சுவாமி' என்று மரியாதையுடன் அழைத்தனர். அவர் மதுரை வந்து அன்னை மீனாட்சியை வழிபட்ட போது, அம்பாள் மீது அவர் பாடிய பாடல்கள் தான் "மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்' என்ற நூல்.

அப்போது, மதுரையை ஆட்சி செய்த திருமலை நாயக்கரின் கனவில் தோன்றிய மீனாட்சி, "என் குழந்தை குமரகுருபரன் மதுரைக்கு வந்திருக் கிறான். அவன் இயற்றிய பாடலை நான் கேட்க வேண்டும், ஏற்பாடு செய்...' என்று கூறி மறைந்தாள். அதன்படியே நாயக்கரும், கோவில் மண்டபத்தில் நூல் அரங்கேற்றத்துக்கு ஏற்பாடு செய்தார். குமரகுருபரர் பாடிக் கொண்டிருந்த போது, கோவில் அர்ச்சகரின் மகளான சிறுமி உள்ளே வந்தாள். நாயக்கரின் மடியில் அமர்ந்தாள். அரங்கேற்றம் முடிந்ததும், மன்னர் கழுத்தில் கிடந்த மணிமாலையை கழற்றி, குமர குருபரனுக்கு அணிவித்தாள். கர்ப்பகிரகத்தில் சென்று மறைந்து விட்டாள். அதன்பிறகே, அர்ச்சகர் மகள் வடிவில் வந்தது மீனாட்சி என்பது தெரிய வந்தது.

காசியில் சுல்தான் ஆட்சி நடந்த வேளையில், சுல்தானை சந்தித்து, அவர் மொழியில் பேசினார் குமரகுரு. இது கண்டு வியந்த சுல்தான், மடம் கட்ட இடம் கொடுத்தான் என்பது வரலாறு. எவ்வளவு சோதனை வந்தாலும், கடவுளை நிஜமான பக்தியுடன் அணுகுங்கள்; நடக்காது என்று கைவிட்டது கூட நடந்து விடும்.

தி. செல்லப்பா


குமரகுருபரர் குருபூஜை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குமரகுருபரர் குருபூஜை Empty Re: குமரகுருபரர் குருபூஜை

Post by Dr.S.Soundarapandian Sun May 26, 2013 9:41 am

சிவா அவர்களின் குமரகுருபரர் பற்றிய இடுகை தேவையானதே ! தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்து ‘Tamil civilization’ என்ற ஆய்விதழில் குமரகுருபரரின் சித்த மருத்துவ அறிவை ஆய்ந்து ஒரு கட்டுரை எழுதியுள்ளேன் ! இன்னும் பல ஆய்வுகள் வரட்டும் !


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

குமரகுருபரர் குருபூஜை Empty Re: குமரகுருபரர் குருபூஜை

Post by சதாசிவம் Sun May 26, 2013 9:45 am

பதிவுக்கு நன்றி,,,, சூப்பருங்க

வடநாட்டு சுல்தானிடம் ஹிந்துஸ்தாணியில் பேச கலைவாணியிடம் அவர் வேண்டிப் பாடிய பாடல் தான் சகலகலாவல்லி மாலை . படிக்கும் குழந்தைகள் படித்து பயனுற சிறந்த நூல் இது.

பாலகுமாரனின் சிம்மாசனம் என்ற நாவல் குமரகுருபரின் வாழ்க்கை வரலாறை அருமையாக எடுத்துரைக்கும்.


சதாசிவம்
குமரகுருபரர் குருபூஜை 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

குமரகுருபரர் குருபூஜை Empty Re: குமரகுருபரர் குருபூஜை

Post by சாமி Tue Sep 17, 2013 10:10 pm

நல்ல பதிவு!
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

குமரகுருபரர் குருபூஜை Empty Re: குமரகுருபரர் குருபூஜை

Post by ராஜு சரவணன் Wed Sep 18, 2013 11:15 am

நல்ல பகிவுக்கு ....நன்றி தல புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

குமரகுருபரர் குருபூஜை Empty Re: குமரகுருபரர் குருபூஜை

Post by mbalasaravanan Wed Sep 18, 2013 11:21 am

தெரிந்த விஷயத்திலும் தெரியாத விஷயம் இருக்கிறது நல்ல பதிவு
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

குமரகுருபரர் குருபூஜை Empty Re: குமரகுருபரர் குருபூஜை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum