புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குற்றம் நடந்தது என்ன – கிரிக்கெட் கற்பனை கலாட்டா Poll_c10குற்றம் நடந்தது என்ன – கிரிக்கெட் கற்பனை கலாட்டா Poll_m10குற்றம் நடந்தது என்ன – கிரிக்கெட் கற்பனை கலாட்டா Poll_c10 
5 Posts - 63%
heezulia
குற்றம் நடந்தது என்ன – கிரிக்கெட் கற்பனை கலாட்டா Poll_c10குற்றம் நடந்தது என்ன – கிரிக்கெட் கற்பனை கலாட்டா Poll_m10குற்றம் நடந்தது என்ன – கிரிக்கெட் கற்பனை கலாட்டா Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
குற்றம் நடந்தது என்ன – கிரிக்கெட் கற்பனை கலாட்டா Poll_c10குற்றம் நடந்தது என்ன – கிரிக்கெட் கற்பனை கலாட்டா Poll_m10குற்றம் நடந்தது என்ன – கிரிக்கெட் கற்பனை கலாட்டா Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

குற்றம் நடந்தது என்ன – கிரிக்கெட் கற்பனை கலாட்டா


   
   
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu May 30, 2013 10:12 pm

குற்றம் நடந்தது என்ன – கிரிக்கெட் கற்பனை கலாட்டா Download2lo

குற்றம் – நடந்தது என்ன?

இடம்: ஐ.பி.எல்.அலுவலகம்

ஹர்பஜன் சிங்கும் ஸ்ரீசாந்தும் தே.மு.தி.கவிலிருந்து அ.தி.மு.கவுக்குத் தாவிய எம்.எல்.ஏக்களைப் போல, தலைகுனிந்து, கைகட்டி நின்று கொண்டிருக்கிறார்கள். ஐ.பி.எல்.சேர்மன் ராஜீவ் சுக்லா உள்ளே நுழைகிறார்.

சுக்லா: என்னப்பா இதெல்லாம்? நல்லாத்தானே போயிட்டிருக்கு? இப்போ எதுக்குத் தேவையில்லாம டிவிட்டருலே போயி ’ட்வீட்’ பண்ணறீங்க?

ஸ்ரீசாந்த்: ட்விட்டருலே ட்வீட் பண்ணாம ’ஸ்வீட்டா’ பண்ண முடியும்?

சுக்லா: வரவர காங்கிரஸ் மந்திரிங்கன்னாலே யார்தான் நக்கல் பண்ணறதுன்னு ஒரு வெவஸ்தையே இல்லாமப் போயிட்டிருக்கு! ஏம்பா ஸ்ரீசாந்த், எதுக்காக அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நடந்ததை இப்போ நடக்கலேன்னு சொல்றே?

ஸ்ரீசாந்த்: நீங்க அஞ்சு வருசத்துக்கு முன்னாடி சொன்னதை சொல்லவேயில்லேன்னு இப்போ பார்லிமெண்டுலே பேசலியா?

சுக்லா: ஐயோ, எந்த பவுன்ஸர் போட்டாலும் சிக்சர் அடிக்கிறானே? யோவ், இப்போ உனக்கு என்னதான் பிரச்சினை? ஹர்பஜன் சிங் உன்னை அடிச்சான். நீ அழுதே; நாங்க விசாரிச்சு ஹர்பஜனை ஆடவிடாமப் பண்ணினோம்; உங்கிட்டே மன்னிப்பும் கேட்க வைச்சோம். இப்போ எல்லாம் பொய்ன்னு சொல்றியா?

ஸ்ரீசாந்த்: எல்லாம் உண்மைதான்; ஆனா, அன்னிக்கு ஹர்பஜன் என்னை அடிக்கவேயில்லை.

சுக்லா: அடிக்கவேயில்லையா? என்னய்யா, விட்டா புளுகறதுலே எங்க நாராயணசாமியையே மிஞ்சிடுவே போலிருக்கே? தம்பி ஹர்பஜன், நீயாவது சொல்லுப்பா! நீ ஸ்ரீசாந்தை அடிச்சியா?

ஹர்பஜன்: ஆமா சார்! அடிச்சேன்!

ஸ்ரீசாந்த்: சுக்லா சார், அவன் சொல்றதை நம்பாதீங்க! அவன் ஒரு புளுகுமூட்டை; கருங்காலி; நம்பிக்கைத்துரோகி!

சுக்லா: நிறுத்துப்பா! பேசிட்டே போறியே? நீ சொல்றமாதிரி ஹர்பஜன் புளுகுமூட்டையா, கருங்காலியா, துரோகியா இருந்திருந்தா இதுக்குள்ளே காங்கிரஸுலே வந்து சேர்ந்திருக்க மாட்டானா? இல்லாட்டிப்போனா, நாங்களே கூட கூப்பிட்டுச் சேர்த்திருக்க மாட்டோமா? அபாண்டமாப் பேசாதே!

ஹர்பஜன்: ஸ்ரீசாந்த்! அன்னிக்கு உன்னை நான் அடிச்சேன்தானே? பொய் சொல்லாதே! சத்தியமா உன்னை நான் அடிச்சேன்! ஓங்கி அடிச்சேன்! இப்போ திடீர்னு நான் அடிக்கவேயில்லைன்னு சொன்னா, என்னோட இமேஜ் டோட்டலா டேமேஜ் ஆயிரும்! இதுக்காகவா இவ்வளவு கஷ்டப்பட்டேன்?

சுக்லா: ஆமா ஸ்ரீசாந்த்! பாரு உன்னாலே ஹர்பஜன் அழுதுருவான் போலிருக்கு! தயவு செய்து அவன் அடிச்சதை ஒத்துக்கப்பா! நீ கிரிக்கெட்டுலேருந்து ரிட்டயர் ஆனதுக்கப்புறம் எங்க கட்சிலே சேர்ந்துக்கிட்டு தாராளமா பல்டி அடி! இப்போ ஒத்துக்கப்பா, உன்னை ஹர்பஜன் அன்னிக்கு பளார்னு கன்னத்துலே அடிச்சானா இல்லையா?

ஸ்ரீசாந்த்: எண்டே குருவாயூரப்பா! எந்து ஒரு புத்திமட்டு! சார், அவன் என்னை அடிக்கலே சார்; இடிச்சான்!

ஹர்பஜன்: பொய்! பொய்! இடிக்கலே சார்; அடிச்சேன்!

சுக்லா: ஸ்டாப் இட்! ஐ.பி.எல் அதிகாரின்னா கோட்டுப்போட்டுக்கிட்டு கோலா குடிக்கிறவங்கன்னு நினைச்சீங்களா? நம்ம ஐ.பி.எல். வைஸ் பிரெசிடெண்ட் அருண் ஜேட்லி வந்திருக்காரு! சுப்ரீம் கோர்ட் லாயர்! குடைகுடைன்னு குடைஞ்சு உண்மையை வரவழைச்சிருவாரு! நீங்க ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் வெளியே இருங்க! போரடிச்சா நிறைய தூண் இருக்கு. அதுலே தலையை முட்டிக்குங்க! அடிக்கவோ, இடிக்கவோ கூடாது சொல்லிட்டேன்!

(ஹர்பஜனும் ஸ்ரீசாந்தும் வெளியே போக, அருண் ஜேட்லி உள்ளே வருகிறார்)

ஜேட்லி: என்ன ஆச்சு?

சுக்லா: ஸ்ரீசாந்த் ஹர்பஜன் அடிக்கவேயில்லை; இடிச்சான்னு சொல்றான். அதான் உங்களை விசாரிக்க விடலாம்னு பார்க்கிறேன். நீங்கதானே இடிக்கிறதுலே எக்ஸ்பர்ட்டு?

ஜேட்லி: ஹர்பஜன், ஸ்ரீசாந்த், உள்ளே வாங்க!

(இருவரும் திரும்ப உள்ளே நுழைய…)

ஜேட்லி: ஹர்பஜன், நீ ஸ்ரீசாந்தை அடிச்சியா?

ஹர்பஜன்: ஆமா, அடிச்சேன்!

ஸ்ரீசாந்த்: இல்லை; அடிக்கலை; இடிச்சான்!

ஜேட்லி: உன்கிட்டே கேட்டேனா? எதுக்கு திக்விஜய்சிங் மாதிரி சம்மன் இல்லாம ஆஜர் ஆகுறே?

ஹர்பஜன்: நான் சாப்புடுற மக்காச்சோள ரொட்டி, சர்ஸோன் கா ஸாத் மேலே சத்தியமா சொல்றேன். நான் ஸ்ரீசாந்தை அடிச்சேன்.

ஸ்ரீசாந்த்: நான் சாப்புடுற கட்டங்காப்பி, கப்பக்கிழங்கு மேலே சத்தியமா சொல்றேன். அவன் என்னை இடிச்சான்.

ஜேட்லி: சுக்லாஜி! பேசாம இஞ்ஜினீயரைக் கூப்பிடலாமா?

சுக்லா: எதுக்கு, அடிச்சானா இடிச்சானான்னு டேப் வைச்சு அளந்து பார்க்கவா? அஞ்சு வருசத்துக்கப்புறமும் வீங்கியா இருக்கும்? அது என்ன பணவீக்கமா?

ஜேட்லி: கடவுளே, நான் ஃபரூக் இஞ்ஜினீயரைச் சொன்னேன். அவருதானே அன்னிக்கு மேட்ச் ரெஃபரியா இருந்தாரு!

ஹர்பஜன்: கேளுங்க சார், அப்படியே ஹேமாவதி கிட்டேயும் கேளுங்க சார்! அவருதானே எங்க ரெண்டு பேரையும் விசாரிச்சாரு?

சுக்லா: கஷ்டம்! யோவ் ஹர்பஜன்! அவரு ஜஸ்டிஸ் நானாவதி; ஹேமாவதி இல்லைய்யா! நீ வேறே புதுசாக் குழப்பத்தை உண்டாக்காதே!

ஜேட்லி: ஸ்ரீசாந்த், உன்னை ஹர்பஜன் அடிக்கலே; இடிச்சான்னு சொல்றே? இடிச்சதுக்கா நீ அன்னிக்கு அப்படி அழுதே?

ஸ்ரீசாந்த்: ஒருவாட்டி அவன்கிட்டே இடிபட்டாத்தான் தெரியும். பஜ்ஜி, சாருக்கு ஒரு சாம்பிள் காட்டு!

சுக்லா: அதெல்லாம் ஒண்ணும் வேணாம்! எம்புட்டு அடிபட்டாலும் இடிபட்டாலும் நாங்கல்லாம் அழ மாட்டோம். எங்களை என்னான்னு நினைச்சீங்க? அதெல்லாம் சூடு,சொரணை உள்ளவங்ககிட்டே வைச்சிக்கோங்க!

ஹர்பஜன்: சார், நான் அடிச்சது உண்மை சார்! என் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கணும்னே இப்படி ஸ்ரீசாந்த் பொய் சொல்றான் சார்!

ஸ்ரீசாந்த்: பஜ்ஜி, நீ என்னை அடிக்கலே! இடிச்சே. நல்லா யோசிச்சுப்பாரு!

ஜேட்லி: வேறே வழியே இல்லை. நான் மோடிக்குப் போன் போட்டுப் பேசறேன்.

சுக்லா: என்னது? வரவர பா.ஜ.க.காரங்க சுஸ்ஸூ போறதுக்குக்க் கூட, மோடி மோடின்னு பறக்கறீங்க? குஜராத்துலே இருந்தவருக்கு இந்தச் சண்டையைப் பத்தி என்னய்யா தெரியும்?

ஜேட்லி: ஐயோ நீர் வேற, நான் லலித் மோடியைச் சொன்னேன்யா! அப்போ அவர்தானே ஐ.பி.எல்.சேர்மனா இருந்தாரு! லண்டனுக்கு போன் போட்டுக் கேட்கறேன்.

சுக்லா: கேட்டா சொல்லுவாரா?

ஜேட்லி: நாம என்ன அவரு சுருட்டின பணத்தைப் பத்தியா கேட்கப்போறோம்?

சுக்லா: அதுவும் சரிதான், முடிஞ்சா எப்படி அவ்வளவு பணம் சுருட்டினாருன்னு கேட்டுத் தெரிஞ்சு வைச்சுக்கோங்க! அடுத்த வருஷம் எலெக்‌ஷன் வருதில்லே!

(ஜேட்லி லலித் மோடியோடு பேசுகிறார். பேசி முடித்து விட்டு…)

ஜேட்லி: சுக்லாஜி! மோடி கிட்டே சி.டியே இருக்காம்!

சுக்லா: நல்லதாப்போச்சு! நமக்கு ஒரு காப்பி அனுப்பச் சொல்லுங்க! கிடைக்கிற அமவுண்ட்டுலே அவருக்கும் ஒரு பர்ஸண்டேஜ் கொடுத்திரலாம்.

ஜேட்லி: நாசமாப் போச்சு! யோவ், ஹர்பஜன் ஸ்ரீசாந்தை அடிச்ச சி.டி அவருகிட்டே இருக்காம்யா!

சுக்லா: அதைத் தெளிவா சொல்றதில்லையா? எதுக்கு பி.சிதம்பரம் மாதிரி சுத்தி வளைச்சுப் பேசறீங்க?

ஜேட்லி: ஸ்ரீசாந்த்! நீ சொல்றதெல்லாம் பொய்! அன்னிக்கு நீ ஹர்பஜன் கிட்டே அடிவாங்கியிருக்கே! அதுக்கான ஆதாரம் மோடிகிட்டே இருக்கு!

ஸ்ரீசாந்த்: ஐயையோ, அவன் என்னை அடிக்கலே சார். இடிச்சான் சார்!

ஹர்பஜன்: புளுகறான் சார், நான் சத்தியமா அடிச்சேன் சார்! வேணும்னா ஜஸ்டிஸ் மாயாவதிகிட்டே கேளுங்க!

ஜேட்லி: அது ஜஸ்டிஸ் மாயாவதி இல்லை; ஜஸ்டிஸ் நானாவதி!

சுக்லா: இவங்களோட பெரிய பாடாவதியா இருக்கே ஜேட்லிஜீ!

ஸ்ரீசாந்த்: என்னை நம்புங்க சார், அவன் என்னை அடிக்கலை; இடிச்சான்!

ஜேட்லி: அவன் இடிச்சதுக்கா அப்படி அழுதே நீ? ஹர்பஜன், அவனை ஒருவாட்டி இடி; அழுறானா பார்க்கலாம்!

ஹர்பஜன்: சார், எனக்கு இடிக்கவே தெரியாது சார்! நல்லா உறைக்கிறா மாதிரி அடிப்பேன் சார்! என்னைப் போயி புதுசா இடிக்கச் சொன்னா எப்படி சார்?

சுக்லா: சரிப்பா, நீ ஆஃப் ஸ்பின்னர், அப்பப்போ கூக்ளி போடுறதில்லையா? அந்த மாதிரி நினைச்சுக்கிட்டு ஸ்ரீசாந்தை ஒருவாட்டி இடிச்சுத்தான் பாரேன்! நல்லா வரும்! பிற்காலத்துலே உனக்கே உதவலாம்பா!

ஹர்பஜன்: கொஞ்சம் நெட் ப்ராக்டீஸ் பண்ணிட்டு வரட்டுமா?

ஜேட்லி: என்னது, விட்டா மைக் டைஸனைக் ஓவர்சீஸ் கோச்சா அப்பாயிண்ட் பண்ணச் சொல்லுவே போலிருக்கே? ஒரே ஒரு இடி இடிக்கிறதுக்கா இம்புட்டு அழும்பு?

ஹர்பஜன் தயங்கி, பிறகு ஸ்ரீசாந்தை முழங்கையால் இடிக்க…

ஸ்ரீசாந்த்: சார், கிச்சுக்கிச்சு முட்டுறான் சார்!

ஜேட்லி: என்னய்யா, சின்னப்புள்ளத்தனமா இருக்கே!

சுக்லா: ஜேட்லிஜி, இது சரிப்பட்டு வராது! உங்க கையாலே ஒரு வாட்டி இடியுங்க!

ஜேட்லி: இதோ…

சுக்லா: ஐயோ…யோவ், என்னை இடிக்கச்சொல்லலைய்யா! ஸ்ரீசாந்தை இடிக்கச் சொன்னேன்!

ஜேட்லி: ரெண்டு பேருமே ஆளுக்கு ஒரு இடி கொடுத்தா என்ன? ஒருமித்த கருத்து ஏற்பட வசதியா இருக்குமே?

சுக்லா: வெரிகுட்!

சுக்லாவும், ஜேட்லியும் ஸ்ரீசாந்தை ஆளுக்கு ஒரு இடி இடிக்க, ஸ்ரீசாந்த் அசைவற்று அப்படியே நிற்க…

ஜேட்லி: ஏம்பா ஸ்ரீசாந்த், ஹர்பஜன் ஒரு இடி இடிச்சதுக்கு அப்படி ஓன்னு அழுதியே! இப்போ நாங்க ரெண்டு பேரு ரெண்டு இடி இடிச்சும் இடிச்ச புளியாட்டம் நிக்கிறியே! அப்போ வந்த அழுகை இப்போ ஏன் வரலே? சொல்லு! ஏன் அழலை?

ஸ்ரீசாந்த்: எப்படி சார் அழுகை வரும்? எப்படி வரும்? அன்னிக்கு ப்ரீத்தி ஜிந்தா இருந்தாங்க! நான் அழுதபோது ஒவ்வொருத்தரா வந்து கட்டிப்புடிச்சாங்க. நானும் அழுதிட்டேயிருந்தேன். கடைசியிலே ப்ரீத்தி ஜிந்தா வந்து கட்டிப்புடிச்சதும்தான் அழுறதை நிறுத்தினேன். நீங்க வேண்ணா ப்ரீத்தி ஜிந்தாவைக் கூட்டிட்டு வந்து என்னை இடிச்சுப்பாருங்க! அப்புறம் பாருங்க… நான் எப்படி அழுறேன்னு…..ஆமாம்…

ஜேட்லியும், சுக்லாவும் இடிவிழுந்தது போல அதிர்ந்து போய் நிற்க, ஹர்பஜன் மூர்ச்சையாகிறார்.

- பின்குறிப்பு : இந்தக் கட்டுரையில் வந்தவை அனைத்தும் கற்பனையே. யாரையும் புண்படுத்த அல்ல. –

நன்றி அதீதம்.காம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu May 30, 2013 10:23 pm

அய்யய்யோ இதை படிச்சு நம்ம ராஜாவும், பாலாஜியும் இடி வாங்க லைன் கட்டி நிக்கப் போறாங்களே!!! சிரிப்பு சிப்பு வருது

ப்ரீத்தி கட்டிபுடி வைத்தியம் பண்ணுவாங்கன்னு புன்னகை




avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu May 30, 2013 10:29 pm

யினியவன் wrote:அய்யய்யோ இதை படிச்சு நம்ம ராஜாவும், பாலாஜியும் இடி வாங்க லைன் கட்டி நிக்கப் போறாங்களே!!! சிரிப்பு சிப்பு வருது

ப்ரீத்தி கட்டிபுடி வைத்தியம் பண்ணுவாங்கன்னு புன்னகை

ஏன் தல நம்ம மட்டும் விதிவிலக்க, நம்மளும் வரிசையில் நிப்போம். புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu May 30, 2013 10:31 pm

ராஜு சரவணன் wrote:ஏன் தல நம்ம மட்டும் விதிவிலக்க, நம்மளும் வரிசையில் நிப்போம். புன்னகை
அடக் கொடுமையே ஐபிஎல் மேட்ச் மாதிரி ஸ்டேடியத்துல டிக்கட் வித்து வசூல் பண்ணுவானுங்க அடுத்த வருஷம் BCCI இந்த கட்டிபுடி விளையாட்டுக்கு புன்னகை




Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu May 30, 2013 11:01 pm

செம நகைச்சுவை பதிவு சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க




குற்றம் நடந்தது என்ன – கிரிக்கெட் கற்பனை கலாட்டா Mகுற்றம் நடந்தது என்ன – கிரிக்கெட் கற்பனை கலாட்டா Uகுற்றம் நடந்தது என்ன – கிரிக்கெட் கற்பனை கலாட்டா Tகுற்றம் நடந்தது என்ன – கிரிக்கெட் கற்பனை கலாட்டா Hகுற்றம் நடந்தது என்ன – கிரிக்கெட் கற்பனை கலாட்டா Uகுற்றம் நடந்தது என்ன – கிரிக்கெட் கற்பனை கலாட்டா Mகுற்றம் நடந்தது என்ன – கிரிக்கெட் கற்பனை கலாட்டா Oகுற்றம் நடந்தது என்ன – கிரிக்கெட் கற்பனை கலாட்டா Hகுற்றம் நடந்தது என்ன – கிரிக்கெட் கற்பனை கலாட்டா Aகுற்றம் நடந்தது என்ன – கிரிக்கெட் கற்பனை கலாட்டா Mகுற்றம் நடந்தது என்ன – கிரிக்கெட் கற்பனை கலாட்டா Eகுற்றம் நடந்தது என்ன – கிரிக்கெட் கற்பனை கலாட்டா D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu May 30, 2013 11:09 pm

யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:ஏன் தல நம்ம மட்டும் விதிவிலக்க, நம்மளும் வரிசையில் நிப்போம். புன்னகை
அடக் கொடுமையே ஐபிஎல் மேட்ச் மாதிரி ஸ்டேடியத்துல டிக்கட் வித்து வசூல் பண்ணுவானுங்க அடுத்த வருஷம் BCCI இந்த கட்டிபுடி விளையாட்டுக்கு புன்னகை

அது தான் பாஸ் கிரி கட்டு

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu May 30, 2013 11:14 pm

ராஜு சரவணன் wrote:
யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:ஏன் தல நம்ம மட்டும் விதிவிலக்க, நம்மளும் வரிசையில் நிப்போம். புன்னகை
அடக் கொடுமையே ஐபிஎல் மேட்ச் மாதிரி ஸ்டேடியத்துல டிக்கட் வித்து வசூல் பண்ணுவானுங்க அடுத்த வருஷம் BCCI இந்த கட்டிபுடி விளையாட்டுக்கு புன்னகை

அது தான் பாஸ் கிரி கட்டு

நீங்க போய் காட்டி பிடிங்க நான் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை




குற்றம் நடந்தது என்ன – கிரிக்கெட் கற்பனை கலாட்டா Mகுற்றம் நடந்தது என்ன – கிரிக்கெட் கற்பனை கலாட்டா Uகுற்றம் நடந்தது என்ன – கிரிக்கெட் கற்பனை கலாட்டா Tகுற்றம் நடந்தது என்ன – கிரிக்கெட் கற்பனை கலாட்டா Hகுற்றம் நடந்தது என்ன – கிரிக்கெட் கற்பனை கலாட்டா Uகுற்றம் நடந்தது என்ன – கிரிக்கெட் கற்பனை கலாட்டா Mகுற்றம் நடந்தது என்ன – கிரிக்கெட் கற்பனை கலாட்டா Oகுற்றம் நடந்தது என்ன – கிரிக்கெட் கற்பனை கலாட்டா Hகுற்றம் நடந்தது என்ன – கிரிக்கெட் கற்பனை கலாட்டா Aகுற்றம் நடந்தது என்ன – கிரிக்கெட் கற்பனை கலாட்டா Mகுற்றம் நடந்தது என்ன – கிரிக்கெட் கற்பனை கலாட்டா Eகுற்றம் நடந்தது என்ன – கிரிக்கெட் கற்பனை கலாட்டா D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 31, 2013 5:56 am

யினியவன் wrote:அய்யய்யோ இதை படிச்சு நம்ம ராஜாவும், பாலாஜியும் இடி வாங்க லைன் கட்டி நிக்கப் போறாங்களே!!! சிரிப்பு சிப்பு வருது

ப்ரீத்தி கட்டிபுடி வைத்தியம் பண்ணுவாங்கன்னு புன்னகை
இப்படி சொல்லிட்டு முதல் ஆளா நீங்க வந்து நிக்குறீங்க ..



குற்றம் நடந்தது என்ன – கிரிக்கெட் கற்பனை கலாட்டா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 31, 2013 10:34 am

சிவா wrote:இப்படி சொல்லிட்டு முதல் ஆளா நீங்க வந்து நிக்குறீங்க ..
என்ன பாஸ் எனக்கு ஒரு ஆயிரத்த வெட்டி உங்களுக்கு டோக்கன் வாங்கத்தானே அனுப்பினீங்க - மறந்துட்டீங்களே புன்னகை




பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri May 31, 2013 10:43 am

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக