ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முருகனின் பிறந்த நாள்!

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

முருகனின் பிறந்த நாள்! Empty முருகனின் பிறந்த நாள்!

Post by சிவா Fri May 24, 2013 8:55 am



வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திர நாள், முருகப் பெருமான் அவதரித்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. இதனை வேனில் விழா என்றும் கூறுவர். சிம்மாசலம் என்னும் ஊரில் குன்றின் மேல் நரசிம்மர் கோயில் கொண்டுள்ளார். ஆண்டுதோறும் வைகாசி விசாகத்தன்றுதான் அப்பெருமானைக் காண இயலும். பிறகு சந்தனப் பூச்சு பூசி வைத்து விடுவார்கள். வைகாசி விசாகம் புத்தர் அவதரித்த நாளாகவும் கூறப்படுகிறது. சித்தார்த்தர் புத்தரானதும், நிர்வாணமடைந்ததும் இதே நாளன்றுதான். எமதர்மன் அவதரித்த நாளும் வைகாசி விசாகம் தான் என்பார்கள். இந்நாளில் எமனுக்குத் தனி பூஜை உண்டு. எம பூஜை செய்வதால் நோய்கள் நீங்கி நீண்ட ஆயுளுடன் வாழலாம் என்பது மக்களின் நம்பிக்கை. வைகாசி விசாகத்தினை ஒட்டி காஞ்சி வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் கருட சேவை நடைபெறும். இந்திரன் வைகாசி விசாகத்தன்று சுவாமிமலை முருகனை வழிபட்டு ஆற்றல் பெற்றான். திருமழபாடியில் ஈசன் வைகாசி விசாக நாளில் திருநடனம் புரிகிறார். நம்மாழ்வார் அவதரித்த நாள், வைகாசி விசாகம் என்று ஆழ்வார்திருநகரியில் வெகு விமரிசையாக விழா கொண்டாடப்படுகிறது. திருச்செந்தூரில் வைகாசி விசாகம் பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. வைகாசி விசாகத்தன்று முருகனைத் தொழுதால் பகை விலகும். துன்பம் நீங்கும். இந்நாளில் குடை, செருப்பு, மோர், பானகம், தயிர்சாதம் முதலியவற்றைத் தானம் செய்தால் மணப்பேறு கிட்டும். மகப்பேறு உண்டாகும். குலம் தழைத்து ஓங்கும் என்பது நம்பிக்கை.

ஆறுமுகப்பெருமான் அவதரித்த தினமாதலின் விசாகம் விசேஷ தினமாகக் கொண்டாடப் படுகின்றது. எனவே, உலகத்து உயிர்கள் யாவும் உய்யும் பொருட்டு எம்பிரானே தந்திருவிளையாடலாற் குழந்தையான நாளாதலின் சைவமக்கள் வழிபாட்டிற்கு இந்நாள் மிகவும் சிறந்ததாகும். இத்தினத்தில் கோயில்களில் வசந்தோற்சவமும், பிரமோற்சவமும் நடைபெறும், இத்தினம் பலசமயத்தாருக்கும் ஒரு புனித நாளாகும்.வைணவத்தில் நம்மாழ்வார் அவதார நாளாகவும் இந்நாள் கொண்டாடப்படுகின்றது. இந்நாளில் திருசெந்தூரில் மிகவும் சிறப்பான வழிபாடு நடக்கும். புத்தன் (சித்தார்த்தன்) அவதரித்ததும்(பிறப்பு) புத்தாரனதும், (திருவருள்) நிருவாணமடைந்ததும்(மறைவு) இதே திதியிற்தான் என்பர்.

விசாகம், வைகாசி, அனிலநாள், சோதிநாள் எனவும்படும். இருபத்தேழு நட்சத்திரங்களில் விசாகமும் ஒன்று. சூரபதுமன் முதலான அசுரர்களின் கொடுமைகளைத் தாங்கலாற்றாத தேவர்கள் சிவபெருமானிடம் சென்று தமது குறைகளை முறையிட்டனர். கருணையங்கடலாகிய சிவபிரான் அசுரர்களுடைய கொடுமைகளினின்று அவர்களைக் காத்தருள விரும்பினார். தமது நெற்றிக்கண்ணின்றும் ஆறு தீப்பொறிகளைத் தோற்றுவித்தார். அவ்வாறு பொறிகளும் வாயு, அக்கினி, தேவர்களினால் கங்கையில் கொண்டு விடப்பட்டன. கங்கை சரவணப் பொய்கையில் கொண்டு சேர்த்தது. சரவணப் பூந்தடாகத்திலே ஆறு பொறிகளும் ஆறு திருக்குழந்தைகளாகி விளங்கின. விஷ்ணுமூர்த்தி கார்த்திகை முதலிய கன்னியர்கள் மூலமாக அக்குழந்தைகட்குப் பாலூட்டுவித்தார். ஆறு பொறிகளும் திருக்குழந்தைகளான தினம் வைகாசிமாதத்து விசாகநாள் ஆகும்.

பன்னிரு கரங்களின் பணி: முருகனின் பன்னிரு கரங்கள் செய்யும் பணிகள் என்னவென்று தெரியுமா? இரு கைகள் தேவரையும் முனிவரையும் காக்கிறது. மூன்றாவது கை அங்குசத்தைச் செலுத்துகிறது. மற்றொரு கை ஆடை உடுத்திய தொடையில் இருக்கிறது. ஐந்து மற்றும் ஆறாவது கைகள் வேலைச் சுழற்றுகின்றன. ஏழாவது கை முனிவர்களுக்கு அருள்பொருளை உணர்த்துகிறது. எட்டாவது கை மார்பில் உள்ள மாலையோடு விளங்குகிறது. ஒன்பதாவது கை வளைகளோடு சுழன்று வேள்வியை ஏற்கின்றது. பத்தாவது கை மணியை ஒலிக்கின்றது (அருளோசை). பதினோராவது கை மழையை அருள்கிறது. பன்னிரண்டாவது கை மணமாலை சூட்டுகிறது.


முருகனின் பிறந்த நாள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முருகனின் பிறந்த நாள்! Empty Re: முருகனின் பிறந்த நாள்!

Post by சாமி Fri May 24, 2013 10:08 am

சிவா wrote:வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திர நாள், முருகப் பெருமான் அவதரித்த நாளாகக் கொண்டாடப்படுகிறது.

வணக்கம் சிவா!
முருகனுக்கு பிறந்த நாள் எதுவும் இருக்க முடியாது. அதே போல் சிவனுக்கும் இருக்காது. இருவரும் பரம்பொருள். பிறப்பு இறப்பு கிடையாது.
யார் ஒருவர் பிறந்தாலும் இறந்துதான் ஆக வேண்டும்.

சிவன்தான் முருகன். முருகன்தான் சிவன். இருவருக்கும் வேறுபாடு காணக்கூடாது. இது பாம்பன் சுவாமிகள் சொன்னது. உயிர்களுக்கு அருள்புரிய சிவன் எளிய வடிவில் வந்ததே முருகன்.

பரம்பொருள் சிவன் ஒவ்வொரு முறை உலகைப்படைக்கும்போதும் பிரம்மா, விஷ்ணு போன்ற வேலையாட்களை பணிக்கு அமர்த்துகிறார். அவர்கள் நம்மைப்போல உயிர்களே. ஆனால் நம்மிலும் மேம்பட்ட ஆன்மாக்கள் அவர்கள். ஒவ்வொருமுறையும் வேறுவேறு விஷ்ணுக்களும் பிரம்மாக்களும் தோன்றுகின்றனர். பின்னர் நம்மைப்போலவே அவர்களும் அழிகின்றனர்.

ஒவ்வொரு பிறவியில் பிறந்தும் விஷ்ணு இறக்கிறார். அதைப்போலவே மற்ற தேவர்களும்.
(எ.கா) இராமராக பிறந்து கடைசியில் சரயு நதிக்கரையில் குதித்து தன் உயிர்விடுகின்றார்.
கிருஷ்ணனாக பிறந்து வேடுவன் அம்பால் கொல்லப்படுகிறார்.
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

முருகனின் பிறந்த நாள்! Empty Re: முருகனின் பிறந்த நாள்!

Post by krishnaamma Fri May 24, 2013 10:29 am

சாமி wrote:

பரம்பொருள் சிவன் ஒவ்வொரு முறை உலகைப்படைக்கும்போதும்

பிரம்மா தானே படைக்கும் கடவுள் சாமி புன்னகை காக்கும் கடவுள் விஷ்ணு ; அழிக்கும் கடவுள் சிவன் ஆயிற்றே !

பிரம்மா, விஷ்ணு போன்ற வேலையாட்களை பணிக்கு அமர்த்துகிறார். கூடாது கூடாது கூடாது

நிறைய உலகங்களும் பிரம்மாக்களும் உண்டு ஆனால் விஷ்ணு ஒருவர்தான் புன்னகை பூமி இல் பிறக்கும் ஒவ்வொரு பிறவியிலும் விஷ்ணு வின் அம்சம் பிறக்கிறது அதனால் இறப்பும் உண்டு. ஆனால் விஷ்ணு விற்கு இறப்பு கிடையாது புன்னகை


இதைப்பாருங்கள் சாமி புன்னகை

ஞான மலர்க் கண்ணா ஆயர் குல விளக்கே
வானும் கடலும் வார்த்தெடுத்த பொன்னுருவே
கானத்தில் உயிரினத்தைக் கட்டுவிக்கும் கண்ணா...
தானே உலகாகிக் தனக்குள்ளே தானடங்கி
மான குல மாதர் மஞ்சள் முகம் பார்த்து
வாழ்விப்பாய் என்று மலர்த்தாள் கரம் பற்றி
நானும் தொழுதேன் நம்பி பரந்தாமா...
உன் நாமம் உரைக்கின்ற நல்லோர் நலம் வாழியவே!


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

முருகனின் பிறந்த நாள்! Empty Re: முருகனின் பிறந்த நாள்!

Post by சாமி Fri May 24, 2013 11:40 am

krishnaamma wrote:பரம்பொருள் சிவன் ஒவ்வொரு முறை உலகைப்படைக்கும்போதும். பிரம்மா தானே படைக்கும் கடவுள் சாமி புன்னகை காக்கும் கடவுள் விஷ்ணு ; அழிக்கும் கடவுள் சிவன் ஆயிற்றே ! நிறைய உலகங்களும் பிரம்மாக்களும் உண்டு ஆனால் விஷ்ணு ஒருவர்தான் புன்னகை பூமி இல் பிறக்கும் ஒவ்வொரு பிறவியிலும் விஷ்ணு வின் அம்சம் பிறக்கிறது அதனால் இறப்பும் உண்டு. ஆனால் விஷ்ணு விற்கு இறப்பு கிடையாது

உங்கள் கருத்துக்கு நன்றி அம்மா!
சிந்தனையின் உச்சத்தை அடைந்து கடவுள் கொள்கையை உருவாக்கியவர்கள் நாம் அதாவது தமிழர்களாகிய நாம்.

நமது கொள்கையின்படி "ஒன்றே குலம்; ஒருவனே தேவன்"

அந்த ஒருவன் சிவபெருமான்.

அவன் செய்யும் தொழில்கள் ஐந்து.
அவை
படைத்தல்,
காத்தல்
ஒடுக்குதல் (அழித்தல்)
மறைத்தல்
அருளல்.

இவை ஒவ்வொன்றிற்கும் ஒரு பணியாள்.
அவர்கள் முறையே
பிரம்மா,
விஷ்ணு,
உருத்திரன்,
மகேசுவரன்,
சதாசிவன்
ஆகும்.

உலகை ஒவ்வொருமுறை ப டை க்கும்போதும் இவர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள்.
இதைத்தான் அப்பர் சுவாமிகள்.

நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்
ஆறு கோடி நாராயண ரங்ஙனே
ஏறு கங்கை மணலெண்ணி லிந்திரர்
ஈறி லாதவன் ஈச னொருவனே.

பொருள்:
நூறுகோடி பிரமர்கள் அழிந்தனர் ; ஆறுகோடி திருமால்களும் அங்ஙனமே ஆயினார்கள் ; நீர் பொங்கிப்பெருகும் கங்கையாற்று மணலைவிட எண்ணிக்கையற்ற இந்திரர் நிலையும் அவ் வண்ணமே ; முடிவற்றவனாய்த் திகழ்பவன் ஒப்பற்றவனாகிய இறைவன் சிவன் மட்டுமே.

இது முழுக்க முழுக்க சைவசித்தாந்தம் சொல்லுவது.

(பின் குறிப்பு: எந்த ஒரு மதத்தையும் "அதன் கொள்கைகளின் அடிப்படையில் ஆராய்ந்தால் உண்மை நமக்கு எளிதில் புரியும். நம்பிக்கையின் அடிப்படையில் பார்த்தால் உண்மை விளங்காது. இப்போது நம்மிடம் உள்ள பிரச்சினையே பெரும்பாலோனார் நம்பிக்கை அடிப்படையில் கடவுளை அணுகுவதே )

(தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள். இது அறிவுப் பூர்வமான விவாதம் மட்டுமே. யாரையும் புண்படுத்த அல்ல.)

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

முருகனின் பிறந்த நாள்! Empty Re: முருகனின் பிறந்த நாள்!

Post by Muthumohamed Fri May 24, 2013 12:05 pm

நல்ல தகவல்கள் பகிர்ந்த அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி



முருகனின் பிறந்த நாள்! Mமுருகனின் பிறந்த நாள்! Uமுருகனின் பிறந்த நாள்! Tமுருகனின் பிறந்த நாள்! Hமுருகனின் பிறந்த நாள்! Uமுருகனின் பிறந்த நாள்! Mமுருகனின் பிறந்த நாள்! Oமுருகனின் பிறந்த நாள்! Hமுருகனின் பிறந்த நாள்! Aமுருகனின் பிறந்த நாள்! Mமுருகனின் பிறந்த நாள்! Eமுருகனின் பிறந்த நாள்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

முருகனின் பிறந்த நாள்! Empty Re: முருகனின் பிறந்த நாள்!

Post by krishnaamma Fri May 24, 2013 12:43 pm

சாமி wrote:

இது முழுக்க முழுக்க சைவசித்தாந்தம் சொல்லுவது.
(தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள். இது அறிவுப் பூர்வமான விவாதம் மட்டுமே. யாரையும் புண்படுத்த அல்ல.)


இதில் தவறாக எடுத்துக்கொள்ள எதுவுமே இல்லைபுன்னகை நீங்கள் சொல்வது சைவ சித்தாந்தம் . நான் சொல்வது வைணவ சித்தாந்தம். இதில் எல்லாமே கிருஷ்ணர் தான். எங்க பாகவதம் அப்படித்தான் சொல்கிறது புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

முருகனின் பிறந்த நாள்! Empty Re: முருகனின் பிறந்த நாள்!

Post by சாமி Fri May 24, 2013 12:50 pm

krishnaamma wrote:
சாமி wrote:இது முழுக்க முழுக்க சைவசித்தாந்தம் சொல்லுவது.
(தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள். இது அறிவுப் பூர்வமான விவாதம் மட்டுமே. யாரையும் புண்படுத்த அல்ல.)

இதில் தவறாக எடுத்துக்கொள்ள எதுவுமே இல்லைபுன்னகை நீங்கள் சொல்வது சைவ சித்தாந்தம் . நான் சொல்வது வைணவ சித்தாந்தம். இதில் எல்லாமே கிருஷ்ணர் தான். எங்க பாகவதம் அப்படித்தான் சொல்கிறது புன்னகை

புரிதலுக்கு நன்றி அம்மா!
விஷ்ணு ஒரு சிறந்த சிவனடியார்.
ராமர், கிருஷ்ணர் அனைவருமே சிவனை வணங்கியவர்கள்தான்
இதைப்பற்றி பல புராணக்கதைகள் உள்ளன.
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

முருகனின் பிறந்த நாள்! Empty Re: முருகனின் பிறந்த நாள்!

Post by krishnaamma Fri May 24, 2013 1:34 pm

சாமி wrote:
புரிதலுக்கு நன்றி அம்மா!
விஷ்ணு ஒரு சிறந்த சிவனடியார்.
ராமர், கிருஷ்ணர் அனைவருமே சிவனை வணங்கியவர்கள்தான்
இதைப்பற்றி பல புராணக்கதைகள் உள்ளன.

ஆமாம் சாமி அவர்களே புன்னகை அதே போல சிவன் தான் தலை சிறந்த வைஷ்ணவர் என்று சொல்வார்கள் புன்னகை
.
ஹரியும் சிவனும் ஒண்ணு....... ....................மீதி உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

முருகனின் பிறந்த நாள்! Empty Re: முருகனின் பிறந்த நாள்!

Post by அசுரன் Fri May 24, 2013 1:50 pm

சித்தாந்தங்கள் அறியப்படாமலே பேரானந்தம் அடையலாம். அருமையான தகவல்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

முருகனின் பிறந்த நாள்! Empty Re: முருகனின் பிறந்த நாள்!

Post by சாமி Fri May 24, 2013 4:15 pm

krishnaamma wrote:
சாமி wrote:புரிதலுக்கு நன்றி அம்மா!
விஷ்ணு ஒரு சிறந்த சிவனடியார்.ராமர், கிருஷ்ணர் அனைவருமே சிவனை வணங்கியவர்கள்தான் இதைப்பற்றி பல புராணக்கதைகள் உள்ளன.
ஆமாம் சாமி அவர்களே புன்னகை அதே போல சிவன் தான் தலை சிறந்த வைஷ்ணவர் என்று சொல்வார்கள் புன்னகை ஹரியும் சிவனும் ஒண்ணு....... ....................மீதி உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறன் புன்னகை

விஷ்ணு ஒரு சிறந்த சிவனடியார். சிவன் தலை சிறந்த வைஷ்ணவர் என்று எங்கும் கேள்விப்பட்டதில்லை. ஒருவேளை இது 'கிருஷ்ணாம்மா சித்தாந்தம்' ஆக இருக்கலாம்.
விஷ்ணு சிவபூஜை செய்துதான், சிவனிடம் இருந்து சக்கரத்தைப் பெற்றார்.

சிவன் கோயில்களில் பரிவாரங்களில் ஒருவராக விஷ்ணு இருப்பதைப் பார்க்கலாம். இதைபோல விஷ்ணு கோயிலில் சிவன் இருக்க மாட்டார்.

அரியும் சிவனும் ஒன்று...அறியாதவர் வாயில் மண்ணு என்பது மிகப் பெரிய தத்துவம்
அது என்னவெனில்:

ஒரு உதாரணத்துடன் சொல்கிறேன்.

அரசாங்க உத்தரவு ஒன்று வருகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதில் தமிழக முதல்வரின் உத்தரவுப்படி என்று இருக்கும். அந்த உத்தரவை தமிழக முதல்வர் பார்த்துக்கூட இருக்க மாட்டார். ஆனால் தமிழகத்தின் முதல்வர் அவர் என்பதால் அவருடைய பெயரை அந்த உத்தரவு தாங்கியிருக்கும்.

அதே போல் இந்த அண்ட சராசரங்களுக்கு முதல்வன் பரம்பொருள் சிவபெருமான். அவரது காத்தல் என்கிற ஒரு தொழிலைச் செய்பவர் அரி என்கிற விஷ்ணு. என்னதான் விஷ்ணு செய்தாலும் வேலை சிவபெருமானுக்கு உரியது.

அதனால்தான் அரியும் சிவனும் ஒன்று என்றார்கள்.

அரி வேறு யாருமல்ல. சிவனின் வேலையைச் செய்யும் அவரது அடியார்களில் ஒருவர் என்பது அதன் பொருள்.
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

முருகனின் பிறந்த நாள்! Empty Re: முருகனின் பிறந்த நாள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் செல்ல மருமகள் வர்ஷாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் திரு ர‌மணியன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum